கேள்வி :
திருமண வாழ்க்கை பருவத்தே அமையாமல் காலம் தாழ்த்தி கொண்டே செல்லும் ஜாதக அமைப்பை சேர்ந்த ஆணாக இருந்தாலும் , அல்லது பெண்ணாக இருந்தாலும், அவர்களுக்கு திருமணம் விரைவில் அமைய என்ன வழி ?
பதில் :
சம்பந்தப்பட்ட ஜாதக அமைப்பை நன்றாக ஆய்வு செய்து பார்த்தோம் நிச்சயம் குடும்பம் , களத்திரம் எனும் இருபாவங்கள் பதிப்பை பெற்று இருக்கும், மேலும் அது எந்த வகையில் பதிப்பை பெற்று இருக்கிறது என்று தெளிவாக தெரிந்து கொண்டால், நிச்சயம் அவர்களுக்கு சரியான தீர்வு சொல்லிவிட முடியும், மேலும் திருமண வாழ்க்கை விரைவில் இனிதே அமைய சரியான தீர்வினையும் மிக எளிதாக, சொல்லி அவர்களுக்கு நிச்சயம் நல்ல வாழ்க்கையினை அமைத்து தந்துவிட முடியும் .
இரண்டாம் பாவம் மற்றும் ஏழாம் பாவம் சர தத்துவமாக அமைந்து பாதிப்படைந்து இருந்தால் ஜாதகருக்கு ஏற்ப்படும் திருமண வாழ்க்கை தடைக்கு, ஜாதகரே காரணமாக இருப்பார், ஜாதகரின் மனதில் தனது வாழ்க்கை துணையாக வேறு ஒருவரை நினைத்துக்கொண்டு , அமையும் வது / வரன்களை எல்லாம் தட்டிக்களிப்பார் , தனது பிடிவாத குணத்தினால் இனிமையாக அமையும் நல்ல வது / வரன்களை எல்லாம் தவிர்த்துவிட்டு பொருத்தம் இல்லாத துணையை தேர்ந்தெடுத்து விட்டு தமது வாழ்க்கைக்கு தாமே கெடுத்துக்கொள்வார்.
இரண்டாம் பாவம் மற்றும் ஏழாம் பாவம் ஸ்திர தத்துவமாக அமைந்து பாதிப்படைந்து இருந்தால், நிச்சயம் ஜாதகருக்கு ஏற்ப்படும் திருமண வாழ்க்கை தடைக்கு தமது உறவினர் அல்லது ஜாதகரின் பெற்றோரே காரணமாக இருப்பார்கள் , ஜாதகருக்கு அமையும் நல்ல வாழ்க்கையை ஏதாவது காரணம் சொல்லி திருமணம் அமையாமல் செய்து விடுவார்கள் , அல்லது ஜாதகரை பற்றி தவறான கருத்துக்களை பரப்பி அதனால் திருமண தாமதத்தை உண்டாக்கி வாழ்வை கெடுத்து விடுவார்கள் . இந்த அமைப்பை பெற்ற ஜாதகர் அனைவரும் தாமே சுயமாக முடிவு எடுப்பது நலம் தரும்.
இரண்டாம் பாவம் மற்றும் ஏழாம் பாவம் உபய தத்துவமாக அமைந்து பாதிப்படைந்து இருந்தால், ஜாதகருக்கு ஏற்ப்படும் திருமண வாழ்க்கை தடைக்கு சந்தர்ப்பமும் சூழ்நிலையும் காரணமாக அமைந்து விடும், மேலும் இந்த அமைப்பை பெற்றவர்கள், நல்ல நேரம் காலம் அறிந்து திருமணத்தை பற்றி பேசி முடிவெடுப்பது திருமணம் இனிதே அமைய வாய்ப்பளிக்கும், இவர்களது திருமண வாழ்க்கை அமைவதில் முக்கிய மற்றும் அதிக பங்கு வகிப்பது காலமும் நேரமும் ஆகும், நல்ல நேரம் அறிந்து செயல்பட்டால் நிச்சயம் திருமணம் சிறப்பாக அமைந்துவிடும் .
திருமணம் செய்து இதே அமைப்பை சார்ந்து இல்லற வாழ்வில் இனிமையான அமைப்பை பெற இயலாத தம்பதியினர், சம்பந்தப்பட்ட பாவங்களின் அதிபதியை தெரிந்து கொண்டு அந்த கிரக சக்தியினை தவ வழிமையால் பெற்றால் அவர்களது வாழ்க்கையும் சிறப்பாக இனிமையானதாக அமையும் என்பது உறுதி, அல்லது கிரக சக்தியினை உடலில் ஏற்றுக்கொள்ளும் வழிமுறையினை தெரிந்துகொண்டு அதன் மூலம் நலம் பெறலாம்.
குறிப்பு :
ஜாதகத்தில் பாதிப்படைந்த கிரக சக்தியினை மற்றும் பெற்றால் போதும் .
ஜோதிடன் வர்ஷன்
9842421435
9443355696
சூப்பர் ..இதுதான் கேள்வி... அனைவருக்கும் உபயோகம் உள்ளதும்கூட .
பதிலளிநீக்குமேலும் விளக்கம் அருமை ....
பரிகார முறையை மேலும் விளக்கமாக கூறியிருந்தால் நன்று