வெள்ளி, 4 மே, 2012

ஜோதிட ஆலோசனை !





நண்பருக்கு வணக்கம் தங்களின் ஜாதக அமைப்பில் இருந்து தெரிந்துப் கொள்ள வேண்டியவைகளும் , பலன்களும் பின் வருமாறு :

நடந்துகொண்டு இருக்கும் குரு திசை தரும் பலன்கள் : ( 18 /06 /1996 முதல் 18 /06 /2012 வரை )


9 வீடு,   9 ம் வீட்டு பலனை நடத்துகிறது .

6 ,12 ம் வீடுகள் ,  12 ம் வீட்டு பலனை நடத்துகிறது .
 

ஜாதகருக்கு நடந்து கொண்டு இருக்கும் குரு திசை மேற்கண்ட வீடுகளின் பலனை மட்டுமே நடத்தி கொண்டு இருக்கிறது , இதன் காரணமாக ஜாதகர் , செய்யும் சில பொது காரிங்கள்  மட்டும் நன்மை தரும் , தனக்காக செய்யும் காரியங்கள் தடைகளையும் தாமதங்களையும்  , இழப்புகளையும் கொடுக்க வாய்ப்பு அதிகம் உள்ளது .  பொதுவாகவே 8 ம் வீடு 8 ம் வீட்டுடன் தொடர்பு பெறுவது அவ்வளவு நன்மை தருவதில்லை , மேலும் திடீர் இழப்புகளை ஜாதகர் சந்திக்க வேண்டி இருக்கும் , மேலும் உடல் நிலையில் அதிக கவனம் செலுத்துவது நன்மையை தரும் . நடந்த குரு திசையில் ஜீவன மேன்மை என்பதை பெறுவது குதிரை கொம்பாகவே இருந்திருக்க கூடும் , வருமானம்  ஒரு வகையில் இருந்தாலும் சிந்தனை செய்யாமல் செய்யும் செலவுகாளால், பொருளாதார ரீதியாக சில சிக்கல்களை சந்தக்க வேண்டி இருந்திருக்கும் . வருவாய் இழப்பு , திடீர் இழப்பு இரண்டையும் தவிர்க்க இயலாது , மேலும் ரிஷபம் மண் தத்துவ , ஸ்திர ராசி  வண்டி வாகனம் மூலம் பாதிப்பு , உடல் நிலை பாதிப்புகளையும் ஜாதகர் சந்தித்து இருக்க கூடும் , இந்த குரு திசை ஜாதகருக்கு எவ்வித நன்மையையும் தரவில்லை என்பதே உண்மை .

இது 18 /06 /2012 வரையிலும் தான் .இதற்க்கு பிறகு நடக்கும் சனிதிசையினை பற்றி இனி நாம் பார்ப்போம் .


சனிதிசை : ( 18 /06 /2012 முதல் 19 /06 /2031 வரை )


8 ம் வீடு 8 ம் வீட்டு பலனையும் .

1 ,5 ,7 ,11 ம் வீடுகள் 11 வீட்டு பலனையும் நடத்துகிறது .

ஜாதகருக்கு இந்த கால கட்டங்களே பொன்னான காலம் ஆகும் .


1 ,5 ,7 ,11 ம் வீடுகள் 11 வீட்டு பலனை நடத்துவது மிகசிறந்த நன்மைகளை ஜாதகருக்கு வழங்க இருக்கிறது மேலும் மேஷம் சர தத்துவத்திலும் , நெருப்பு  ராசியாகவும் வருவதால் ஜாதகர் அனைத்து விதமான டெக்னிகல் சம்பந்த பட்ட தொழில்களில் அதிக வருவாயினை பெறும் யோகம் ஏற்ப்படும்.

 

தனது பூர்வீகத்தை வீட்டு 100 கிலோ மீட்டருக்கு அப்பால் ஜாதகர் சென்றுவிட  கூடாது காரணம் யோக பங்கம் ஏற்ப்பட வாய்ப்பு அதிகம் , தனது பூர்வீகத்திலேயே இருப்பது 100 சதவிகித வெற்றியை வாரி வழங்கும், மேலும் கூட்டு தொழில் செய்வதால் அபார வளர்ச்சியினை ஜாதகர் பெறுவார்  என்பது உறுதி , மேலும் நீடித்த அதிர்ஷ்டம் இந்த சனி திசை முழுவதும் நடை பெரும் , நல்ல உடல் ஆரோக்கியம் , அதிக வருமானம் , சொத்து சுக சேர்க்கை , என நன்மையான பலன்கள் இந்த சனி திசை வாரி வழங்கும் .

சனிபகவானின் கருணையினால் , தலை முறைகளுக்கு அழியாத சொத்து சுகங்களை பெற ஜாதகருக்கு வாய்ப்பு அதிகம் உண்டு, ஜாதகர்  தனது பூர்வீகத்த்தை மட்டும் விட்டு விட்டு வெளியில் செல்வது சகல யோகங்களையும் கெடுத்து விடும் தன்மை ஏற்ப்படும்.


இந்த ஜாதகருக்கு சனி பகவானால் ஏற்ப்படும் யோகங்கள் அனைத்தும் நீடித்தது வழங்கும் என்பது உறுதி , 1 ,5 ,7 ,11 இந்த பாவக வழியில் இருந்து ஜாதகர் அணைத்தது யோகங்களையும் அனுபவிக்கும் தன்மை ஏற்ப்படும் .

இவர் கவனத்தில் கொள்ள வேண்டியது ஒன்று மட்டுமே ,8 ம் வீடு 8 ம் வீட்டு பலனை நடத்துவது மட்டுமே தீமையை செய்யும் எனவே ஜாதகருக்கு இதன் வழியில் இருந்து மட்டுமே தொல்லை ஏற்ப்பட வாய்ப்பு அதிகம், இந்த எட்டாம்  வீடு சர மண் தத்துவமாகவும் , மகர ராசியாக வரும் காரணத்தால் , தான் செய்யு காரிங்கள் அனைத்தையும் அரசு சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடத்துவது நன்மை பயக்கும் .

 இல்லை எனில் அரச கோபத்துக்கு ஆளாக வேண்டியிருக்கும் , மேலும் வண்டி வாகனங்களில் செல்லும் பொழுது அதிக கவனமாகவும் , விழிப்புணர்வுடன் இருப்பது ஆவசியம் , இல்லை எனில் தேவையில்லாமல் பண இழப்பை சந்திக்க வேண்டி வரும் , பொருளாதார முன்னேற்றம் சிறப்பாக இருக்கும் இந்த சனி திசை சில இழப்புகளையும் தரும் என்பது உண்மை எனவே ஜாதகர் கவனமுடன் இருப்பது நலம் தரும் .

சிறப்பான எதிகாலத்தை இறை நிலை உங்களுக்கு வழங்க இருக்கிறது, யோக 
பங்கம் ஏற்ப்படாமல் பார்த்து கொள்ளுங்கள் .

வாழ்த்துக்கள் 

வாழ்க வளமுடன் 

ஜோதிடன் வர்ஷன் 
9443355696


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக