திங்கள், 5 நவம்பர், 2012

சுய ஜாதகத்தில் ஐந்தில் கேது , குரு பார்வை நலம் தருமா ? புத்திர பாக்கியம் உண்டா ?




பொதுவாக ஒருவருடைய ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகத்தில் ராகு அல்லது கேது அமர்ந்தால் ஜோதிடர்கள் சொல்லும் முதல் வார்த்தை குழந்தை பாக்கியத்தை தடை செய்யும் என்பதாகவே இருக்கிறது , கிழ்க்கண்ட  ரிஷப இலக்கின ஜாதகருக்கு கன்னியில் அமர்ந்த கேது தரும் பலன்கள் பற்றி , இதற்க்கு முன் பார்த்த ஜோதிடர்கள் சொன்ன கருத்துகள் பின் வருமாறு :



1 ) ரிஷப லக்கினத்தில் இருந்து ஐந்தில் கேது ( அதாவது கன்னியில் ) அமர்வதால் ஜாதகருக்கு புத்திர பாக்கியம் இல்லை என்றும் , இதற்க்கு பரிகாரம் செய்தால் மட்டுமே நன்மை உண்டு , மேலும் புத்திர பாக்கியம் கிடைப்பது அரிது என்று பலன் சொல்லியிருக்கிறார் .

2 ) மற்றொரு ஜோதிடர் ஐந்தில் கேது அமர்ந்தாலும் , அந்த பாவகதிர்க்கு குரு பார்வை இருப்பதால் , நன்மை விளையும் , புத்திர சந்தானம் கிட்டும் என்றும் , குரு பார்வை ஜாதகருக்கு புத்திர சந்தானத்தை வழங்கும் கவலை பட தேவையில்லை என்று கூறியிருக்கிறார்கள் . மேலும் பல ஜோதிடர்கள் பலவாறு சொல்லி ஜாதகரையும் அவர்களை சார்ந்தவர்களையும் குழப்பி  இருக்கின்றனர் என்பது வேறு விஷயம் .

மேற்கண்ட வாறு ஐந்தாம் பாவக பலனை நிர்ணயம் செய்வதில் இருவேறு கருத்து ஜோதிடர்களிடையே நிலவும் பொழுது , ஜாதகம் காண வந்தவர்கள் நிலை என்ன ? குழந்தை பாக்கியம் உண்டா ? இல்லையா ? ஒருவர் குழந்தை பாக்கியம் இருக்கும் என்கிறார் , ஒருவர் குழந்தை பாக்கியம் இல்லை என்கிறார் எதை நம்புவது என்ற நிலைக்கு தள்ளபடுவார்கள் என்பதே உண்மை , இதில்  ஜோதிட தீபம் தரும் சரியான பலன் என்னவென்பதை  இனி காண்போம் .

மேற்கண்ட ஜோதிடர்கள் சொன்ன பலன்கள் யாவும் தவறு என்பதே ஜோதிட தீபத்தின் கருத்து , முதலில் ராகு கேது கிரகத்தின் தனி தன்மையை இந்த இடத்தில் பதிவு செய்ய விரும்புகிறது ஜோதிட தீபம் , அது ராகு கேது கிரகங்கள் ஒரு பாவகத்தில் அமரும் பொழுது அந்த பாவகத்தின் பலனை முழுவதும் தாமே எடுத்துகொண்டு நன்மை தீமை பலன்களை தவறாமல் செய்யும் என்பதே உண்மை , இதில் எவ்வித சந்தேகமும் இல்லை , மேலும் இந்த பாவகத்தை எந்த கிரகங்கள் பார்வை செய்தாலும் , அந்த பார்வை எவ்வித நன்மை தீமை பலனையும் செய்யாது , அல்லது ராகு கேது உடன் சேர்ந்து அமரும் கிரகங்களும் எவ்வித நன்மை தீமை பலனையும் செய்ய இயலாது , நன்மையோ தீமையோ ராகு கேது இரு கிரகங்களே பொறுப்பு ஏற்று பலனை வழங்கும் , ஆக ராகு கேது கிரகங்கள் அமர்ந்த பாவகத்தை பார்க்கும் கிரகங்களுக்கும் , சேர்ந்து அமர்ந்த கிரகங்களுக்கும் எவ்வித நன்மை தீமை பலனை தரும் வலிமை இல்லை என்பதை இந்த இடத்தில் பதிவு செய்வதில் ஜோதிட தீபத்திற்கு இரு வேறு கருத்துகள் இல்லை .

அடுத்து மேற்கண்ட ஜாதகத்தில் ஜோதிடர்கள் நிர்ணயம் செய்த பலன்கள் சரியா ? என்பதை ஜோதிட தீபம் ஆய்வுக்கு எடுத்துகொள்கிறது , அதாவது ஜோதிடர்கள் சொன்ன அனைத்தும் தவறான பலன்கள் என்பதை தெளிவாக ஜோதிட தீபம் உரைக்க விரும்புகிறது , உண்மையில் கேது அமர்ந்த பாவகம் எது என்பதை தெரியாமலே ஜோதிடர்கள் பலன் கண்டுள்ளனர் என்பதை தெளிவு படுத்த விரும்புகிறது .

அதாவது இந்த ரிஷப இலக்கின ஜாதகருக்கு லக்கினம் என்பது ரிஷப ராசியில் 56 .00 பாகையில் ஆரம்பித்து, மிதுன ராசியில் 82 .02 பாகையில் முடிவடைகிறது , அதேபோல் ஜாதகரின் ஐந்தாம் பாவகம் என்பது கன்னியில் 172 .09 பாகையில் ஆரம்பித்து துலாம் ராசியில் 205 .13 பாகையில் முடிவடைகிறது , ஆக ஜாதகருக்கு பூர்வ புண்ணியம் , குழந்தை பாக்கியம் எனும் ஐந்தாம் பாவகத்திர்க்கு உட்ப்பட்ட பாகைக்குள் கேது இருக்கிறாரா என்பதை கணிதம் செய்து கண்டு பலன் சொல்வதே சரியான பலனாக இருக்கும் , ஜாதகருக்கு ஐந்தாம் பாவகம் ஆரம்பிக்கும் பாகை கன்னியில் 172 .09 பாகையில் , எனவே இந்த 172 .09  பாகைக்கு மேல் 205 .13 பாகைக்குள் கேது அமர்ந்தால் மட்டுமே கேது ஐந்தில் அமர்வதாக எடுத்து கொள்ள இயலும் , ஆனால் கேது 167 .43  அமர்ந்து விடுவதால் கேது கன்னியில் இருக்கும் நான்காம் பாவகதில் அமர்வதாக எடுத்துகொண்டு பலன் சொல்வதே சரியான பலனாக இருக்கும் , மேலும் கேது என்ற கிரகத்திற்கும், ஐந்தாம் பாவகதிர்க்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பது இதன் மூலம் உறுதி ஆகிறது .

அடுத்த கேள்வி இந்த ஜாதகருக்கு புத்திர சந்தானம் உண்டா ? இல்லையா ? என்பது , ஐந்தாம் பாவகதிர்க்கு அதிபதியான புதன் என்ற கிரகத்தை வைத்தும் , ஐந்தாம் பாவகதுடன் சம்பந்தம் பெரும் கிரகங்களை வைத்தும், குழந்தை பாக்கியத்தை நிர்ணயம் செய்யலாம் , ஐந்தாம் பாவக அதிபதியும் சம்பந்தம் பெரும் கிரகங்களும் , ஐந்தாம் பாவகத்திர்க்கு நன்மையை தருவதால் ஜாதகருக்கு நிச்சயம் புத்திர பாக்கியம் உண்டு என்பதை உறுதி செய்யலாம் , இதே போன்ற ஐந்தாம் பாவகம் வலிமை பெற்ற அமைப்பு உள்ள பெண்ணை ஜாதகர் திருமணம் செய்து கொண்டால் நிச்சயம் ஆண் வாரிசு உண்டு என்பதை 100 சதவிகிதம் உறுதியாக சொல்ல இயலும் .

ஒரு பாவக பலனை நிர்ணயம் செய்யும் பொழுது , அந்தபாவகம் ஆரம்பிக்கும் பாகை அடிப்படையாக வைத்து பலன் கண்டால் நிச்சயம் ஜாதக பலன்களை தெளிவாக சொல்ல  உறுதுணை புரியும் , மேலும் அந்த பாவகதிர்க்கு உட்பட்ட பாகைக்குள் சம்பந்தம் பெரும் கிரகங்கள் தரும் பலன்களை அடிப்படையாக வைத்து பலன் காணுவதே ஜாதக பலன்களை சரியாக சொல்ல எதுவாக இருக்கும் , மேற்க்கண்டவாறு குத்து மதிப்பாக பலன் கண்டால் ஜோதிடரை நம்பி வந்து பலன் கேட்டு அதன் படி நடக்கும் நபர்களின் நிலை பெரிய கேள்வி குறியாக மாறிவிட வாய்ப்பு உண்டு .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696
jothidadeepam@gmail.com  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக