வெள்ளி, 16 நவம்பர், 2012

இயல் இசை நாடகம் மற்றும் கலை துறையில் சிறந்து விளங்கும் ஜாதக அமைப்பு !




ஒருவருடை ஜாதகத்தில் லக்கினம் சர ராசியில் அமைந்து , லக்கினத்திற்கு ஐந்தாம் பாவகமான பூர்வ புண்ணியம் ஸ்தானம் ஜீவன ஸ்தானதுடன் சம்பந்தம் பெற்றால் , ஜாதகர் கலை துறையில் சிறந்து விளங்கும் யோகம் உண்டாகும் அல்லது ஜீவன ஸ்தானம் பூர்வ புண்ணிய ஸ்தானம் எனும் ஐந்தாம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றாலும் மேற்கண்ட அமைப்பில் கலை  சிறந்து விளங்கும் யோகம் உண்டாகும்.

இந்த முறையில் பூர்வ புண்ணியம் ஜீவன ஸ்தானதுடன் சம்பந்தம் பெற்று ஜீவன ஸ்தானம் மேஷ ராசியாக இருப்பின் , ஜாதகர் சிறந்த இயக்குனாராக இருக்க வாய்ப்பு அதிகம் , மேலும் தனது படைப்பாற்றல் மூலம் மற்றவர்களிடம் இருந்து தனித்து தெரியும் தன்மை  உண்டாகும் , சிறந்த கதை அம்சம் கொண்ட திரை படத்தையோ , நாடகத்தையோ ஜாதகர் தனக்கே உரிய பாணியில் எடுக்கும் ஆற்றல் அதிகமாக இருக்கும் , அந்த படைப்புகள் அனைத்தும் மக்களிடையே மிகவும் சிறப்பாக பேசப்படும் , மேலும் மக்கள் மனதில் தெளிவான சிந்தனையையும் , விழிப்புணர்வையும் நிச்சயம் ஏற்ப்படுத்தும் , சிறந்த முறையில் கட்சி அமைப்புகளுக்காக இடப்படும் செட்டுகளை சிறப்பாக வடிவமைக்கும் திறமையை ஜாதகர் பெற்றிருப்பார் , சண்டை கட்சிகளை வடிவமைப்பதில் சிறந்து விளங்கும் தன்மை பெற்றவர்களின்,  ஜாதக அமைப்பிலும் மேற்கண்ட பூர்வ புண்ணியம் ஜீவன ஸ்தானதுடன் சம்பந்தம் பெற்று இருக்கும் , இதன் மூலம் ஜாதகருக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் வந்து குவியும் , இயக்கம் சம்பந்த பட்ட துறையில் ஜாதகர் சிறந்து விளங்குவதை மேற்கண்ட பாவக தொடர்பு இருப்பின் நிச்சயம் அந்த ஜாதகர் சிறந்த இயக்குனராக வருவார் என்பதில் சந்தேகம் இல்லை .

இதுவே பூர்வ புண்ணியம் ஜீவன ஸ்தானதுடன் சம்பந்தம் பெற்று ஜீவன ஸ்தானம் கடக  ராசியாக இருப்பின் , ஜாதகருக்கு இயற்கையாகவே இசை ஞானம் அமைந்திருக்கும் , இசை துறையில் சாதிக்கும் அன்பர்களின் ஜாதக அமைப்பில் நிச்சயம் இந்த நிலை இருக்கும் , குறிப்பாக வாத்தியங்களில் சிறந்து விளங்கும் தன்மை உண்டாகும் , இசை கருவிகளை சிறப்பாக கையாளும் தன்மை  ஜாதகருக்கு இயற்கையாக அமையபெரும் , நல்ல கற்பனை வளம் ஜாதகருக்கு சிறப்பாக அமைந்து விடும் , கவி புனையும் திறமை , இசை கோர்க்கும் தனி திறமை , தனது இனிமையான குரலின் தன்மையால் மக்களை கட்டி போடும் தன்மை , சங்கீதத்தில் சிறந்து விளங்கும் ஆற்றல் , தனது கற்பனையால் மக்கள் விரும்பும் படைப்புகளை சிறப்பாக வடிவமைக்கும் ஆற்றல் , நகை சுவை திறமையால் மக்களை மகிழ்ச்சி அடைய செய்யும் ஆற்றல் , கலை நயம் மிக்க படைப்பாற்றல் மூலம் மக்களை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும்  ஆற்றல் என திரை இசை துறையில் உலக புகழ் பெரும் அளவிற்கு  ஜாதகரை மிக பெரிய இடத்திற்கு எடுத்து செல்லும் அமைப்பாக இருக்கும் மேற்கண்ட பாவக தொடர்பு  இருந்தால் .  

இதுவே பூர்வ புண்ணியம் ஜீவன ஸ்தானதுடன் சம்பந்தம் பெற்று ஜீவன ஸ்தானம் துலாம் ராசியாக இருப்பின் , ஜாதகர் தனது நடிப்பு ஆற்றலினால் உலக மக்கள் அனைவரையும்  கவரும் தன்மை ஏற்ப்படும் , நடிப்பு மற்றும் நடன திறமையினால் மக்களை தன்பால் ஈர்க்கும் வல்லமை பெற்றவராக ஜாதகர் இருப்பார் , மேலும் நடிப்பில் பல பரிமாணங்களை காட்டும் திறமை இயற்கையாக  ஜாதகரின் பிறவியிலேயே அமைத்து விடும் , கலை துறைக்காக தன்னை அர்ப்பணிக்கும் ஆற்றல் கொண்டவர் , ஜாதகர் செய்யும் ஒவ்வொரு புதிய விஷயங்களும் பொது மக்களால்  விரும்பப்படும் , ஜாதகரின் நடிப்பு திறமைக்கு பல விருதுகளை பெரும் யோகம் உண்டாகும் , இதன் மூலம் ஜாதகருக்கு அபரிவிதமான செல்வாக்கும் , முன்னேற்றமும் உண்டாகும்  , காலங்கள் மறைந்தாலும் , ஜாதகரின் புகழ் என்றும் மறையாமல் நிலைத்து நிற்கும் யோகம் உண்டாகும் , மேலும் இது துலாம் ராசியாக இருப்பதால் ஜாதாகர் எப்பொழுதும் புதுமை  விரும்பியாக காணப்படுவார் , புதிய விஷயங்களை மக்களுக்கு எடுத்து செல்வதில் ஜாதகருக்கு எப்பொழுதும் அதிக ஆர்வம் மேலோங்கி நிற்கும் .

இதுவே பூர்வ புண்ணியம் ஜீவன ஸ்தானதுடன் சம்பந்தம் பெற்று ஜீவன ஸ்தானம் மகர  ராசியாக இருப்பின் , ஜாதகர் திரை துறை சார்ந்த தொழில்கள் அனைத்தும் செய்யும் யோகம் பெற்றவர்  , பொழுது போக்கு விஷயங்களை வைத்து பணம் ஈட்டுவதில் வல்லவராக காணப்படுவார் , கலைத்துறை சம்பந்தபட்ட அனைத்து விஷயங்களையும் நிர்வாகிக்கும் ஆற்றல் ஜாதகர் பெற்றிருப்பார்  , இருப்பினும் நேர்மை மாறாமல் நடந்து கொள்ளும் சுபாவம் ஜாதகருக்கு இயற்கையாக அமைத்திருக்கும் , கலை துறையில் அதிக முதலீடுகளை செய்து அளவில்லா  வருமானத்தை குறுகிய காலங்களில் பெரும் யோகம் ஜாதகருக்கு நிச்சயம் சுய ஜாதகத்தில் அமைந்திருக்கும் , வெளிநாடு , மற்றும் வெளியிடங்களில் சென்று திரை காவியங்களை  படைக்கும் ஆற்றல் ஜாதகருக்கு உண்டு , மேலும் வியாபார யுக்தி ஜாதகருக்கு மற்றவரிடம் இருந்து சற்றே வித்தியாசமாக காணப்படும் , தோல்வி நிலையில் இருக்கும் திரை படங்களை  கூட ஜாதகர் தனது வியாபார யுக்தியினால் மிகப்பெரிய வெற்றியை பெறும் அளவிற்கு செய்யும் ஆற்றல் பெற்றவராக கானப்படுவார் மேலும் இவற்றை நம்பி வருபவர்கள்  அனைவரும் நன்மையே அடைவார்கள் என்பது உறுதி .

மேற்கண்ட பலன்கள் எல்லாம் சுய ஜாதகத்தில் ஜாதகருக்கு சரியான வயதில் பலனை தர வேண்டும் அப்பொழுதுதான் , மேற்கண்ட பலன்கள் நடை முறைக்கு வரும் , ஒரு ஜாதகருக்கு மேற்கண்ட யோக அமைப்புகள்  இருந்தாலும் பலன்கள் திசை புத்தி அந்தரம் சூட்சமத்தில் நடை முறைக்கு வரவில்லை என்றால் நிச்சயம் எவ்வித பலன்களும் நடை பெறாது , எனவே நடப்பு திசை  மேற்கண்ட வீடுகளின் பலனை நடத்தினால் , சம்பந்த பட்ட ஜாதகர் திரை துறையில் சிறந்து விளங்கும் யோகம் நிச்சயம் உண்டு .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443306969

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக