வியாழன், 29 நவம்பர், 2012

கோட்சார ரீதியாக ராகு கேது பெயர்ச்சி பலன்களை எவ்வாறு அறிவது?




கேள்வி :

கோட்சார ரீதியாக ராகுகேது பெயர்ச்சி பலன்களை எவ்வாறு அறிவது? ஜெனன லக்கினத்தை அடிப்படையாக கொண்டு தான் கணிக்க வேண்டுமா? 

பதில் :

நிச்சயமாக , ராகு கேது பெயர்ச்சி பலன்களை , ராசியை வைத்து பலன் காண இயலாது மேலும் ராசியை வைத்து பலன் காணுவது ஜாதகத்தில் சரியான , துல்லியமான பலன்களை காண நிச்சயம் உதவாது . 

சுய ஜாதக அமைப்பில்  கிரகங்களின் கோட்சார ரீதியான பலன்களை தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும் எனில் முதலில் நமது ஜாதகத்தில் லக்கினம் என்ன வென்று தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும் , அதன் பிறகு , தற்பொழுது நடக்கும் திசை மற்றும் புத்தி என்ன வென்று தெரிந்து கொள்ள வேண்டும் , தற்பொழுது நடக்கும் திசை மற்றும் புத்தி எந்த பாவகத்தின்  பலனை நடத்துகிறது, அந்த பாவகத்துடன் கோட்சார கிரகங்களின்  தொடர்பு ஏற்ப்படுகிறத ? இல்லையா ? என்பதை தெரிந்து கொள்வது  சுய ஜாதக ரீதியான கோட்சார பலன்களை சரியாக காண உதவி புரியும் .

எடுத்துகாட்டாக :

ஒரு ரிஷப இலக்கின ஜாதகருக்கு தற்பொழுது குரு திசை நடை பெறுவதாக வைத்துகொண்டால் , நடை பெரும் குரு திசை ஜாதகருக்கு எந்த பாவகங்களின்  பலனை தருகிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும் , ரிஷப லக்கினத்திற்கு 6 மற்றும் 12 ம் பாவக பலனை தற்பொழுது நடத்துவதாக இருந்தால்  தற்பொழுது நடை பெற இருக்கும் ராகு கேது பெயர்ச்சி ஜாதகருக்கு  கோட்சார  ரீதியான பலன்களை தரும் , 12 ம் வீட்டுடன் தொடர்பு பெரும் கேது ஜாதகருக்கு  சர நெருப்பு தத்துவ அமைப்பில் இருந்து நன்மையான பலன்களை  வாரி வழங்கும் , ஏனெனில் 12 ம் பாவகம் ( இந்த இடத்தில் 12 ம் பாவகத்தை கேந்திர வீடாக  பாவிக்க  வேண்டும் ) கேந்திர அதிபதி செவ்வாய் பகவானின் வீடாக  வருவது அது கேந்திர பாவகமாக இருப்பதால் 12 ம் பாவக வழியில் இருந்து ஜாதகர்  100 சதவிகித யோக பலன்களை அனுபவிப்பார் , அதாவது ஜாதகர்  மூதலீடு செய்வதால் நிறைய வருமானம் பெற முடியும் , வெளிநாடுகளில் இருந்து  அபரிவிதமான செல்வாக்கு உண்டாகும் , திடீர் அதிர்ஷ்டத்தின்  மூலம் வாழ்க்கையில் ஜாதகர் செல்வந்தர் ஆகும் யோகம் உண்டாகும் .

அதே சமயம் ஜாதகருக்கு 6 ம் பாவகதுடன் சம்பந்தம் பெரும் ராகு மிகுந்த இன்னல்களை  தருவார் , ஏனெனில் 6 ம் பாவகம் கேந்திர பாவகம் இதன் அதிபதி கோண அதிபதியாக வருவதால் , 100 சதவிகித தீமையான பலன்களை தருவார் ராகு , ஒரு பக்கத்தில் கேது பகவானால் ஜாதகர் சுறு சுறுப்பாக பாடு பட்டு  சேர்த்த பொருளை , ராகு பகவான் 6 ம் பாவகதுடன் தொடர்பு பெரும் ராகு பகவானால்  இழந்து கொண்டு இருப்பார் , ஏனெனில் துலாம் ராசி சர காற்று ராசியாக வருவதால் , ஜாதகர் வீண் ஆடம்பரத்திலும் , கேளிக்கை , மற்றவரிடம்  ஏமாறும் சூழ்நிலையை தந்து விடும் , எனவே ஜாதகர் தான் ஈட்டும்  பொருள் வரவினை சேமித்து வைக்க வேண்டும் இல்லை எனில் இருக்கும் அனைத்தையும்  இழக்கும் சூழ்நிலையை தரும் , ஜாதகர் உடல் நிலையம் வெகுவாக  பாதிக்கும்.

ஒரு வேலை மேற்கண்ட ஜாதகருக்கு நடக்கும் குரு திசை 5 மற்றும் 11 ம் பாவக பலனை  செய்கிறது என்று வைத்துகொள்ளுங்கள் தற்பொழுது நடக்கும் ராகு  கேது பெயர்சி எவ்வித நன்மை தீமை பலனையும் செய்யாது , மேற்கண்ட 5,11 ம் பாவகத்துடன் சம்பந்தம் பெரும் கோட்சார கிரகங்களினால் வரும் நன்மை தீமை பலன்களை மட்டுமே  ஜாதகர் அனுபவிக்க நேரிடும் , எனவே ஒரு  திசை எந்த பாவகத்தின் பலனை தருகிறதோ அந்த பாவகதுடன் சம்பந்தம் பெரும்  கோட்சார கிரகங்கள் நன்மை தீமை பலனை செய்ய தகுதி உண்டு , அந்த பாவக்துடன் எவ்விதத்திலும் சம்பந்தம் பெறாத கிரகங்களினால் ஜாதகர் எவ்வித  நன்மை தீமை பலனையும் அனுபவிக்க மாட்டார் , எனவே நடை முறையில்  பலன் தந்து கொண்டு இருக்கும் பாவகதுடன் சம்பந்தம் பெறாதா கிரகங்களின் பெயர்ச்சியை பற்றி நாம் எவ்வித கவலையும் கொள்ள தேவை இல்லை  என்பதே உண்மை .

கிரகங்களின் பெயர்ச்சியை லக்கினத்தை அடிப்படையாக வைத்து பலன் காணும் பொழுது  பலன்கள் மிகவும் துல்லியமாக சரியாகவும் இருக்கும் , நன்மை நடக்கிறது என்றால் ஜாதகர் வரும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொள்ளலாம் , தீமை நடக்கிறது என்றால் விழிப்புணர்வுடன் இருந்து கவனமாக வாழ்க்கையை நடத்தலாம் .


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

1 கருத்து: