வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

பங்கு வர்த்தகத்தில் லாபம் ஈட்டும் யோக ஜாதக நிலை !





பொதுவாக அதிர்ஷ்டம் என்ற வார்த்தையை விரும்பாத நபர்களே இல்லை எனலாம், அதிர்ஷ்டம் மூலம் வாழ்க்கையில் செல்வ வளமும், பொருளாதார முன்னேற்றமும் அடையும் அன்பர்களை கொடுத்து வைத்தவர்கள் என்று சொல்வதுண்டு, யார் செய்த புண்ணியமோ ஜாதகர் சகல நலன்களும் பெற்று வாழ்க்கையில் சிறப்பாக இருக்கிறார் என்று பெரியோர்கள் சொல்ல கேட்டதுண்டு, ஆக ஒருவருக்கு அதிர்ஷ்ட வாய்ப்பை வாரி வழங்குவதில் முதன்மை வகிப்பது பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகமே என்றால் அது மிகையில்லை, ஒருவரின் அதிர்ஷ்ட வாழ்க்கையை நிர்ணயம் செய்வதில் 5ம் பாவகத்திர்க்கு முக்கிய பங்கு உள்ளது.

 குறிப்பாக ஜோதிட ஆலோசனை பெற வரும் பல அன்பர்கள் எனக்கு பங்கு வர்த்தகத்தில் வருமானம் ஈட்டும் யோகம் உண்ட என்று கேட்பது வாடிக்கையானதே, இதற்க்கு உண்டான பதில் ஒருவருடைய சுய ஜாதகத்தில் 5ம் பாவகமும் 11ம் பாவகமும் நல்ல நிலையில் இருந்தால் ஜாதகர் பங்கு வர்த்தகத்தில் கை நிறைவான வருமானத்தை பெரும் யோகம் உண்டாகும் என்பது உறுதியான விஷயம்.

சுய ஜாதகத்தில் 5ம் வீடு 5,11ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றாலோ, 11ம் வீடு  5,11ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றாலோ, ஜாதகர் பங்கு வர்த்தகம் சார்ந்த எந்த ஒரு தொழில் செய்தாலும் வெற்றி மேல் வெற்றி உண்டாகும், நினைத்து பார்க்க இயலாத லாபம் கிடைப்பது உறுதி, 5,11ம் பாவகம் வலிமை பெரும் பொழுது ஜாதகர் தனது நுண் அறிவு திறனால் பங்குவர்த்தகத்தில் லாபம் ஈட்டும் யோகத்தை தரும் .

குறிப்பாக மிதுன இலக்கின ஜாதகருக்கு துலாமும்,மேஷமும் 5,11ம் பாவகமாக வரும், மிதுன லக்கினத்திற்கு துலமும்,மேஷமும் வலிமை பெரும் பொழுது ஜாதகர் பொது மக்கள் வாயிலாகவும், தனது சுய திறனை கொண்டும் லாபம் ஈட்டும் தன்மை உண்டாகும், குறிப்பாக ஜாதகருக்கு பங்குவர்த்தக துறையில் தினசரி முதலீடு செய்வதால் தொடர்ந்து வருமானம் ஈட்டும் யோகம் உண்டாகும், நடை பெரும் திசை மற்றும் புத்தி 5,11ம் பாவகத்தின் பலனை செய்தால் ஜாதகருக்கு இரட்டிப்பு யோகம் உண்டாவது நிச்சயம்.

கன்னி இலக்கின ஜாதகருக்கு மகரமும், கடகமும் 5,11ம் பாவகமாக வரும், கன்னி லக்கினத்திற்கு மகரமும் கடகமும் வலிமை பெரும் பெரும் பொழுது ஜாதகர் செய்யும் தொழில் துறை சார்ந்த நிலைகளில் இருந்தும், சொத்து சுக அமைப்பில் இருந்தும் தனது அதிர்ஷ்டத்தின் மூலம் லாபம் ஈட்டும் தன்மையை தரும், குறிப்பாக ஜாதகர் பங்குவர்த்தக துறையை சுய தொழிலாகவே ஏற்று நடத்தலாம் 100 சதவிகித வெற்றியை தரும், மேலும் நடை பெரும் திசை மற்றும் புத்தி 5,11ம் பாவகத்தின் பலனை செய்தால், ஜாதகரின் அதிர்ஷ்ட வாழ்க்கையை யாராலும் தடுத்து நிறுத்த இயலாது.

தனுசு இலக்கின ஜாதகருக்கு மேஷமும்,துலாமும் 5,11ம் பாவகமாக வரும், தனுசு இலக்கின ஜாதகருக்கு மேஷமும்,துலமும் வலிமை பெரும் பொழுது ஜாதகர் தனது நண்பர்கள் வழியிலும், கூட்டு தொழில் அமைப்பில் இருந்தும் தனது சுய திறமையால் லாப வாய்ப்பை பெரும் யோகத்தை தரும் குறிப்பாக, ஜாதகருக்கு சம்பந்தம் இல்லாமலேயே பல இடங்களில் இருந்து வருமானம் வந்துகொண்டே இருக்கும், பங்கு வர்த்தக துறையில் முதலீடு செய்வதால் ஜாதகருக்கு பன்மடங்கு லாபம் உண்டாகும், மேலும் நடை பெரும் திசை மற்றும் புத்தி 5,11ம் பாவகத்தின் பலனை செய்தால், ஜாதகர் தனது சுய திறமையால் அதிர்ஷ்ட வாய்ப்பினை பெரும் யோகத்தை 100 சதவிகிதம் தரும்.

மீன இலக்கின ஜாதகருக்கு கடகமும்,மகரமும் 5,11ம் பாவகமாக வரும், மீன இலக்கின ஜாதகருக்கு கடகமும், மகரமும் வலிமை பெரும் பொழுது ஜாதகர் தனது தன்னிகரற்ற தொழில் திறனை கொண்டும், சிறப்பாக கற்ற கல்வி அறிவை கொண்டும் அதிர்ஷ்ட வாய்ப்பினை பெரும் யோகம் உண்டாகும், பங்கு வர்த்தக துறையில் ஆலோசனை சொல்லும் சிறப்பு திறமையை ஜாதகர் இயற்கையாகவே பெற்றிருப்பர், இவர் சொல்லும் கணிப்புகள் யாவும் 100 சதவிகித வெற்றியை பங்குவர்த்தக துறையில் குறைவின்றி தரும். மேலும் நடை பெரும் திசை மற்றும் புத்தி 5,11ம் பாவகத்தின் பலனை செய்தால், ஜாதகர் குறுகிய  காலத்தில் பங்கு வர்த்தக துறையில் கொடி கட்டி பறக்கும் யோகத்தை தரும்.

மேற்கண்ட மிதுனம்,கன்னி,தனுசு,மீனம் எனும் உபய இலக்கின ஜாதகர்களுக்கு 5,11ம் பாவகங்கள் சர ராசியாக அமைவதால் 100 சதவிகித யோகத்தை மேற்கண்ட அமைப்பில் இருந்து வாரி வழங்கும், ரிஷபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் எனும் ஸ்திர இலக்கின ஜாதகர்களுக்கு 5,11ம் பாவகங்கள்   ராசியாக அமைவதால் 35 சதவிகித யோகத்தை மேற்கண்ட அமைப்பில் இருந்து வாரி வழங்கும், மேஷம்,கடகம்,துலாம்,மகரம் எனும் சர இலக்கின ஜாதகர்களுக்கு 5,11ம் பாவகங்கள் ஸ்திர  ராசியாக அமைவதால் 70 சதவிகித யோகத்தை மேற்கண்ட அமைப்பில் இருந்து வாரி வழங்கும்.

ஆக அன்பர்களே ! பங்கு வர்த்தகத்தில் ஜாதகர் வருமானம் பெற வேண்டும் எனில் சுய ஜாதகத்தில் 5,11ம் பாவகம் வலிமையுடன் இருப்பது அவசியமாகிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9842421435
9443355696

சனி, 8 பிப்ரவரி, 2014

மேஷ லக்கினம் - இலக்கின வழியில் இருந்து ஜாதகர் பெரும் நன்மைகள் !




ஒருவரின் பிறந்த சரியான நேரம், இடம், நாள் ஆகியவற்றை 
அடிப்படையாக கொண்டு கணிக்கப்படும் லக்கினம் வலிமையுடன் இருக்கும் பொழுது ஜாதகர் இலக்கின வழியில் இருந்து பெரும் யோகம் மற்றும் நன்மைகளை பற்றி இந்த பதிவில் சற்றே சிந்திப்போம் அன்பர்களே !

கால புருஷ தத்துவத்திற்கு முதல் வீடான மேஷ ராசியை லக்கினமாக கொண்ட ஜாதகருக்கு லக்கினம் வலிமை பெரும் பொழுது ஜாதகர் அடையும் நன்மைகளை பற்றி ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் , மேஷ ராசி காலபுருஷ தத்துவத்திற்கு முதல் வீடாகவும், சர இயக்கம் கொண்ட நெருப்பு ராசியாக இருப்பதால் ஜாதகரின் செயல்பாடுகள் யாவும் மிகவும் துரிதமாகவும், சுறுசுறுப்பு நிறைந்தவராகவும் காணப்படுவார், மேஷ லக்கினத்திற்கு அதிபதியாக செவ்வாய் வருவதால், ஜாதகர் தனது செயல்களை திறம்பட செய்து வெற்றிகாணும் தன்மையை இயற்கையாகவே பெற்று இருப்பார், தான் செய்யும் காரியங்கள் யாவிலும் ஒரு நேர்த்தியையும், ஒழுக்கத்தையும் எதிர்ப்பார்க்கும் குணத்தை கொண்டு இருப்பார், லட்சியமுடன் ஒரு காரியத்தில் இறங்கி இரவு பகல் பாராமல் உழைக்கும் தன்மையை பெற்று இருப்பார்.

 ஜாதகரின் தோற்றம் என்பது மிகவும் கம்பீரம் நிறைந்த திடகாத்திரமான உடலமைப்பை இயற்கையாக பெற்று இருப்பார், அனைவரையும் வசீகரிக்கும் முக அமைப்பு மற்றும் தேசஸ் ஜாதகரிடம் இயற்கையாகவே குடிகொண்டு இருக்கும், சுய கட்டுபாடு , நேர்மை தவறாமை, தனக்கு சரியென பட்டத்தை துணிவாக வெளிபடுத்து தன்மை, தம்மை நாடி வந்தவரை காக்கும் வல்லமை, எந்த ஒரு காரியத்தையும் நினைத்தவாறு செய்து முடிக்கும் பேராற்றல், தனக்கும் தன்னை சார்ந்தவருக்கும் நன்மை செய்யும் குணம், பொது வாழ்வில் தூய்மையாக செயலாற்றும் யோக அமைப்பு, பிரதி பலன் பாராமல் உழைக்கும் தன்மை மற்றும் உதவும் மனப்பான்மை ஜாதகருக்கு இயற்கையாக அமைந்து இருக்கும். 

மேஷ ராசியை லக்கினமாக பெற்று லக்கினம் வலிமையுடன் அமையும் பொழுது ஜாதகருக்கு பூரண ஆயுள் அமைந்துவிடும், மேலும் அதித மனவலிமை இயற்கையாக ஜாதகருக்கு அமைந்திருக்கும், கடுமையான சூழ்நிலைகளை தாங்கும் உடல் மற்றும் மன வலிமை படைத்தவராக ஜாதகர் காணப்படுவார், தனது முன்னேற்றத்தில் ஜாதகருக்கு தீவிர ஆர்வம் இருக்கும் எந்த ஒரு சந்தர்ப்பத்தையும் தவற விடாமல் முறையாக பயன்படுத்தி தனது முன்னேற்றத்தை செழுமையாக அமைத்தது கொண்டு வாழ்க்கையில் மற்றும் சமுகத்தில் நல்ல அந்தஸ்த்தை விரைவில் பெரும் தன்மையை பெறுவார்.

கால புருஷ தத்துவத்திற்கு முதல் ராசியாக மேஷம் வருவதால், ஜாதகரின் லக்கினம் வலிமை பெரும் பொழுது ஜாதகர் இலக்கின வழியில் இருந்து 100 சதவிகித யோகத்தை தங்கு தடையின்றி விரைவாக பெரும் யோகத்தை தரும், மற்றவர்களின் செயல் திறனுக்கும், ஜாதகரின் செயல் திறனுக்கும் பன்மடங்கு வித்தியாசம் இருக்கும், எங்கும் வேகம் எதிலும் வேகம் என்ற தன்மையை ஜாதகரின் உடலமைப்பிற்கு தந்துவிடும், ஜாதகருக்கு உடல் நிலையில் பாதிப்பு ஏற்ப்படும் பொழுது அதிலிருந்து விரைவாக குணம் பெரும் மன ஆற்றலை தரும், வலியை தாங்கும் உடல் அமைப்பை ஜாதகர் பெற்று இருப்பது விசேஷமான ஒன்றாக கருதலாம், மேலும் ஜாதகர் எந்த ஒரு பிரச்சனையும் எதிர்கொண்டு வெற்றி பெரும் மன வலிமை கொண்டவராக காணப்படுவார்.

 மேஷ ராசியை லக்கினமாக கொண்டு லக்கினம் வலிமை பெரும் அமைப்பை பற்றி  இனி பார்ப்போம் மேஷ  ராசியை லக்கினமாக பெற்றவர்களின் சுய ஜாதகத்தில் லக்கினம் எனும் முதல் வீடு 1,2,3,4,5,7,9,10 பாவகங்களுடன் தொடர்பு பெரும் பொழுது ஜாதகர், சம்பந்தபட்ட பாவக அமைப்பில் இருந்து யோக பலன்களை அனுபவிக்கும் தன்மை உண்டாகும், 6,8,12ம் பாவகங்களுடன் தொடர்பு பெரும் பொழுது ஜாதகர், சம்பந்தபட்ட பாவக வழியில் இருந்து தீய பலன்களை அனுபவிக்கும் நிலை உண்டாகும். பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது ஜாதகர் சம்பந்தபட்ட பாவக  வழியில் இருந்து 200 மடங்கு தீய பலன்களை அனுபவிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளபடுவார்.

ஆக மேஷ லக்கினமாக உள்ள ஜாதகருக்கு லக்கினம் 6,8,12 பாவகத்துடனும், பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடனும் சம்பந்தம் பெறுவது மட்டுமே அதிக தீமைகளை செய்யும் இலக்கின வழியில் இருந்து, மற்ற பாவகங்களான 1,2,3,4,5,7,9,10 ம் பாவகங்களுடன் தொடர்பு பெறுவது மிகுந்த நன்மையே தரும் இலக்கின வழியில் இருந்து ஜாதகர் யோக வாழ்க்கையை அனுபவிக்கும் தன்மையை தரும்.

குறிப்பு : 

 லக்கினம் எந்த பாவகத்துடன் தொடர்பு பெறுகிறது என்பதை ஜாதகரின் சுய ஜாதகத்தை வைத்தே நிர்ணயம் செய்ய வேண்டும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

திங்கள், 3 பிப்ரவரி, 2014

நான்காம் பாவகம் வலிமை பெரும் பொழுது ஜாதகர் பெரும் சுக வாழ்வும், வசதி மிக்க இருப்பிடமும்!




சுய ஜாதகத்தில் லக்கினத்திற்கு நான்காம் பாவகமான சுக ஸ்தானம் வலிமை பெரும் பொழுது, ஜாதகர் பெரும் பொழுது ஜாதகர் சம்பந்தபட்ட பாவக வழியில் இருந்து பெரும் நன்மைகளையும், சுப யோக வாழ்க்கையை பற்றி இந்த பதிவில் ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே!

  சுய ஜாதகத்தில் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 4ம் வீடான கடகம் வலிமை பெரும் பொழுதும், லக்கினத்திற்கு 4ம் பாவகம் வலிமை பெரும் பொழுது ஜாதகர் முதலில் தனது தாய் வழியில் இருந்து நிறைவான யோகத்தை பெறுபவராக இருப்பார், குறிப்பாக சிறு வயது முதல் தாயின் அரவணைப்பில் வளரும் சூழ்நிலையை தரும், அன்பு பாசம் நிறைந்த குழந்தை பருவத்தை ஜாதகருக்கு தந்துவிடும், "எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அவர் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பதிலே" என்ற புலமை பித்தன் வரிகளுக்கு பொருத்தமாக, ஜாதகர் நல்ல குணங்களை பெறுவதற்கும், பரந்த மனதை பெறுவதற்கும் இந்த நான்காம் பாவகமே முழு காரணமாக அமைகிறது.

 பொதுவாக ஒருவரின் சுய ஜாதகத்தில் நீர் ராசிகள் வலிமை பெரும் பொழுது ஜாதகரின் மனம் மிகவும் நல்ல நிலையில் இருக்கும், சிறந்த நல்ல எண்ணங்களால் சூழப்பட்ட சூழ்நிலையில் வளரும் தன்மையை தரும், பறந்து விரிந்த மன ஆற்றலின் காரணமாக ஜாதகர் நினைக்கும் எண்ணங்கள் யாவும் நிறைவேறும், ஜாதகர் மன ஆற்றல் மிக சிறப்பாக செயல் படும், தன்னம்பிக்கை மற்றும் சுய கட்டுப்பாட்டை நிறைவாக நிலையாக தரும்.

 ஆக சுய ஜாதகத்தில் நான்காம் பாவகம் மேற்கண்ட நன்மைகளை தரும் பொழுது ஜாதகருக்கு பொருளாதார முன்னேற்றம் என்பது ஜாதகரின் மன இயல்புக்கு ஏற்றவாறு அமைந்துவிடும், பொதுவாக நான்காம் பாவகம் சுக ஸ்தானம் என்று வர்ணிக்க படுகிறது, எங்கே சுகம் நிறைந்து நிற்கும் எங்கு மனம் ஒரு நிலை படுகிறதோ அங்கெ சுகம் நிறைந்து நிற்கும் என்பதற்கு இணங்க ஜாதகரின் நான்காம் பாவகம் வலிமை பெரும் பொழுது ஜாதகர் மனம் ஒரு நிலையாக ஒடுங்கி நிற்கும், ஒரு நிலையான மனம் சகல வெற்றிகளுக்கும் காரணமாக அமையும், நினைத்ததை அனைத்தும் பெரும் யோகத்தை தரும்.

சுய ஜாதகத்தில் நான்காம் பாவகம் வலிமை பெரும் பொழுது ஜாதகர் முதலில் நல்ல தாய் அன்பையும் அரவணைப்பையும் பெரும் யோகத்தை தரும், இதனால் ஜாதகரின் மனம் பண்பட்டதாக மாறும், அடுத்து ஜாதகரின் வளரும் சூழ்நிலையில் நல்ல நண்பர்களின் ஆலோசனையை பெரும் யோகத்தை தரும், இளமை பருவத்தில் சிறந்த கல்வியை பெரும் யோகத்தை வாரி வழங்கும், தனது வளரும் காலத்தில் அடிப்படை வசதிகளை குறைவின்றி பெரும்  யோகத்தை தரும், கேட்க்கும் பொருட்கள் யாவும் ஜாதகருக்கு தடையின்றி கிடைக்கும்.

 மனிதனுக்கு அடிப்படை தேவைகளில் முதன்மையானது, குடியிருப்பதற்கு தேவையான நல்ல வசதி மிக்க ஒரு வீடு, ஜாதகத்தில் நான்காம் பாவகம் வலிமை பெரும் பொழுது ஜாதகருக்கு இயற்கையாக சகல வசதிகளும் நிறைந்த வீடு சிறு வயதிலேயே அமைந்துவிடும், இதன் காரணமாக ஜாதகருக்கு வளரும் பருவத்தில் கல்வியிலே அல்லது சுகமான வாழ்க்கையிலோ எவ்வித தடையும் இன்றி நிறைவான சுக வாழ்வை தங்கு தடையின்றி தரும், அடிப்படையில் நல்ல வீடு ஒருவருக்கு அமைந்துவிட்டால் ஜாதகருக்கு சகல தேவைகளும் பூர்த்தியாகும்.

 " இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே " என்ற கவிஞரின் வரிகளுக்கு ஏற்ப, சுக ஸ்தானம் வலிமை பெரும் பொழுது நல்ல வசதி மிக்க வீடு அமைந்து, ஜாதகரின் வாழ்க்கையில் சகல ஐஸ்வர்யங்களையும் வாரி வழங்க ஆரம்பித்து விடும்.

 ஒருவரின் சுய ஜாதகத்தில் நான்காம் பாவகம் லக்கினத்துடன் தொடர்ப்பு பெரும் பொழுது ஜாதகருக்கு "கிழக்கு திசை" வாயிற்படி கொண்ட வீட்டில் குடியிருந்தால் வாழ்க்கையில் சகல நிலைகளில் இருந்தும் முன்னேற்றம் உண்டாகும், வாழ்க்கையில் சகல செல்வங்களையும் பெரும் யோகத்தை தரும்.
 ஒருவரின் சுய ஜாதகத்தில் நான்காம் பாவகம் சுக ஸ்தானமான 4ம் வீட்டுடன் தொடர்பு  பெரும் பொழுது ஜாதகருக்கு "வடக்கு திசை" வாயிற்படி கொண்ட வீட்டில் குடியிருந்தால் வாழ்க்கையில் சகல நிலைகளில் இருந்தும் முன்னேற்றம் உண்டாகும், வாழ்க்கையில் சகல செல்வங்களையும் பெரும் யோகத்தை தரும்.

ஒருவரின் சுய ஜாதகத்தில் நான்காம் பாவகம் களத்திர ஸ்தானமான 7ம் வீட்டுடன் தொடர்பு  பெரும் பொழுது ஜாதகருக்கு "மேற்கு  திசை" வாயிற்படி கொண்ட வீட்டில் குடியிருந்தால் வாழ்க்கையில் சகல நிலைகளில் இருந்தும் முன்னேற்றம் உண்டாகும், வாழ்க்கையில் சகல செல்வங்களையும் பெரும் யோகத்தை தரும்.

ஒருவரின் சுய ஜாதகத்தில் நான்காம் பாவகம் ஜீவன ஸ்தானமான 10ம் வீட்டுடன் தொடர்பு  பெரும் பொழுது ஜாதகருக்கு "தெற்கு திசை" வாயிற்படி கொண்ட வீட்டில் குடியிருந்தால் வாழ்க்கையில் சகல நிலைகளில் இருந்தும் முன்னேற்றம் உண்டாகும், வாழ்க்கையில் சகல செல்வங்களையும் பெரும் யோகத்தை தரும்.

 எந்த ஒரு ஜாதகத்திலும் சுக ஸ்தானமான நான்காம் பாவகம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு நன்மை தருவதில்லை, குறிப்பாக குடியிருக்க நல்ல வீடு அமைவதில்லை, நல்ல வண்டி வாகன யோகத்தை தருவதில்லை, சொத்து சுக அமைப்பை தருவதில்லை, இதே போன்று சுக ஸ்தானம் 5,6,8,12ம் வீட்டுடன் தொடர்பு பெறுவதும் நல்லதல்ல, ஜாதகரின் சுகமான வாழ்க்கை என்பது பெரிய கேள்வி குறியாக மாறிவிடுகிறது .

குறிப்பு :
 சுய ஜாதக ரீதியாக ஒருவரின் நான்காம் பாவகம் எந்த வீட்டுடன் தொடர்பு பெறுகிறதோ அந்த திசையை குறிக்கும் வாயிர்ப்படி அமைத்த வீட்டில் ஜாதகர் குடியிருக்கும் பொழுது, சகல செல்வங்களையும், படிப்படியான முன்னேற்றங்களையும், வண்டி வாகன யோகத்தையும் பெற்று நிறைவாக வாழும் யோகத்தை தருகிறது .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696
9842421435