சனி, 3 டிசம்பர், 2016

நடைபெறும் புதன் திசை, எதிர்வரும் கேது மற்றும் சுக்கிரன் திசை ஆகியவற்றில் சுப பலன்களை தரும் திசை எது ?


 சுய ஜாதகங்களில் நடைபெறும் நவ கிரகங்களின் திசாபுத்திகள், தனிப்பட்ட முறையில் ஜாதகருக்கு யோகங்களையோ அவயோகங்களையோ வழங்குவதில்லை, சுய ஜாதகத்தில் பாவகங்கள் பெற்ற வலிமையையே நவகிரகங்கள் தனது திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமத்தில் ஏற்று நடத்துகிறது, சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவகங்களின் பலனை ஏற்று நடத்தும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஜாதகருக்கு ஏற்று நடத்தும் பாவக வழியில் இருந்து யோகம் மற்றும்  நன்மைகளையும், வலிமை அற்ற பாவகங்களின் பலனை ஏற்று நடத்தும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஜாதகருக்கு ஏற்று நடத்தும் பாவக வழியில் இருந்து அவயோகம் மற்றும் தீமைகளையும் தருகின்றது, பெரும்பாலும் சுய ஜாதகத்தில் நடைபெறும் திசை தனது காலங்களில் நீடித்த நன்மை தீமை பலன்களை தருவதில் முதலிடம் பெறுகிறது, புத்தி மத்திம கால நன்மை தீமை பலன்களை தருவதில் இரண்டாம் இடமும், அந்தரம் குறுகிய கால நன்மை தீமை பலன்களை தருவதில் மூன்றாம் இடமும், சூட்சமம் மிக குறுகிய கால நன்மை தீமை பலன்களை தருவதில் நான்காம் இடமும் பெறுகின்றது, இத்துடன் நவ கிரகங்களின் கோட்சார சஞ்சார நிலை தரும் யோக அவயோக நிகழ்வுகளும் கருத்தில் கொண்டு பலன் காண, சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு தெளிவான பலாபலன்கள் நிச்சயம் கிடைக்க பெறலாம்.

தங்களின் கேள்விகளுக்கு உண்டான பதில்கள் கீழ்வருமாறு :

1) தற்போழுது நடைபெறும் புதன் திசை தங்களுக்கு சுப பலன்களை தரவில்லை எனலாம், ஏனெனில் தற்போழுது நடைபெறும் புதன் திசை தங்களுக்கு 3,4,6,9,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 4,6,12ம் பாவகங்களின் பலன்களை ஏற்று நடத்துகிறது, இது தங்களுக்கு உகந்த அமைப்பு அல்ல, எனவே தங்கள் வீடு,வண்டி வாகனம், கடன், எதிரி தொந்தரவு, மறைமுக எதிர்ப்புகள், தொழில் முடக்கம், எடுக்கும் காரியங்களில் இன்னல்கள் மற்றும் முயற்சிகள் தோல்வி அடையும் சூழ்நிலை, மற்றும் உறக்கமின்மை, சிந்தனை திறன் குறைவு, மனநிம்மதி இன்மை, குழப்பம், தெளிவின்மை, ஆகியவற்றால் இன்னலுற அதிக வாய்ப்பு உண்டு, புதன் திசை தங்களுக்கு விரைய ஸ்தான பலனையே தருவது தங்களுக்கு நிச்சயம் மேற்கண்ட பாவகவழியில் இன்னல்களை தரும்.

புதன் திசையில் தற்போழுது நடைபெறும் சனி புத்தியும் ( 04/06/2014 முதல் 11/02/2017 வரை ) தங்களுக்கு 4,12ம்  பாவக பலனையே ஏற்று நடத்துவது சிறப்பான விஷயம் அல்ல, விரைய ஸ்தான வழியில் தங்கள் வெகுவான இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலையை தரும், எனவே தற்போழுது நடைபெறும் புதன் திசையும் தங்களுக்கு சுப பலன்களை தரவில்லை, புதன் திசையில் நடைபெறும் சனி புத்தியும் சுப பலன்களை தரவில்லை, என்பதே உண்மை நிலை.

2) எதிர்வரும் கேது திசை ( 11/02/2017 முதல் 12/02/2024 வரை ) தங்களுக்கு 5,8,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் நன்மைகளை தருவது வரவேற்க தக்கது, மேலும் தங்களின் லாப ஸ்தானம் சர ராசி மண் தத்துவத்தில் அமைவது 100% சதவிகித யோக பலன்களை தரும் அமைப்பாகும், எனவே தாங்கள் எதிர்வரும் கேது திசை காலங்களில் தங்களின் வாழ்க்கையில் 5ம் பாவக வழியில் சுய அறிவு திறனால் லாபம், அதிர்ஷ்டம், கற்ற கல்வி மற்றும் கலை மூலம் யோகம், அதிபுத்திசாலித்தனத்தால் யோக வாழ்க்கை பெறுதல், குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் மகிழ்க்கரமாக வாழும் சூழ்நிலை, தமது குழந்தைகள் வழியில் இருந்து வரும் யோக வாழ்க்கை என்ற வகையிலும், 8ம் பாவக வழியில் இருந்து புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கை, எண்ணம் மற்றும் லட்சியங்கள் நிறைவேறுதல், நெடுநாள் ஆசை பரிபூர்ணமாக நிறைவேறும் யோகம், வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் பொருளாதர முன்னேற்றம், நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் வழியில் இருந்து வரும் லாபங்கள், எதிர்பாராத செல்வ சேர்க்கை, திடீர் அதிர்ஷ்டம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் லாபம் என்ற வகையில் நன்மைகள் உண்டாகும்,

11ம் பாவக வழியில் இருந்து எடுக்கும் அனைத்து காரியங்களிலும் தங்களுக்கு வெற்றியும் முன்னேற்றமும் உண்டாகும், லாபங்கள் அபரிவிதமான வந்து சேரும், மனதில் நினைக்கும் காரியங்கள் யாவும் நடைமுறைக்கும் வரும், தன்னம்பிக்கை மற்றும் உற்சாகம் அதிகரிக்கும், பரிபூர்ண யோக வாழ்க்கைக்கு யாதொரு தடையும் ஏற்படாது, சிறப்பான இடத்தில் திருமணம் நடைபெறும், வாழ்க்கை துணை வழியில் இருந்து லாபம் மற்றும் அதிர்ஷ்டங்களை அனுபவிக்கும் யோகத்தை தரும், தற்போழுது நடைபெறும் புதன் திசையை விட எதிர்வரும் கேது திசை தங்களின் வாழ்க்கையில் 5,8,11ம் பாவக வழியில் இருந்து அதிர்ஷ்டங்களை வாரி வழங்கும், என்பதில் மாற்று கருத்து இல்லை ( பொதுவாக கேது திசை அனைவருக்கும் இன்னல்களை தரும் என்று சொல்வதுண்டு, இது தங்களின் சுய ஜாதகத்திற்கு சிறிதும் பொருந்தாது என்பதை நினைவில் கொள்க )

3) கேது திசைக்கு அடுத்து வரும் சுக்கிரன் திசை ( 12/02/2024 முதல் 12/02/2044 வரை ) தங்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு பலனையும் தரும் திசையாக விளங்கும் என்பதில் சந்தேகம் இல்லை அன்பரே  ஏனெனில் சுக்கிரன் திசை தங்களுக்கு வலிமை பெற்ற 1,5,7,8,11 வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவக தொடர்பை பெற்று யோக பலன்களை தருவது மேற்கண்ட பாவக வழியில் இருந்து 100% சதவிகித யோக பலன்களை தங்கு தடையின்றி வாரி வழங்கும், லக்கின வழியில் இருந்து அதிக லாபம் மற்றும் எதிர்பாராத அதிர்ஷ்டம், திடீர் தனசேர்க்கை, மற்றும் பொருளாதார தன்னிறைவு, அனைவரின் ஆதரவை பெரும் யோகம், வருமுன் உணர்ந்து செயல்படும் தன்மை, எண்ணம் நிறைவேறும் யோகம், குழந்தைகள் மூலம் யோக வாழ்க்கை, தன்னம்பிக்கை மிக்க மனநிலை, சோர்வு அறிய யோக வாழ்க்கை, ஆசைகள் அனைத்தும் நிறைவேறுதல் என தங்களின் வாழ்க்கையில் சகல யோகமும் சுக்கிரன் திசையில்  நடைமுறைக்கு வரும்.

 மேலும் களத்திர ஸ்தான வழியில் இருந்து நன்மைகள், வாழ்க்கை துணையின் ஆதரவு, பொருளாதார இன்னல்களில் இருந்து விடுபடும் யோகம், பொதுமக்களின் ஆதரவு, அரசியலில் வெற்றி, நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் மூலம் வாழ்க்கையில் சகல நிலைகளிலும் சுப யோக பலன்களை அனுபவிக்கும் தன்மை, எதிர்ப்புகள் அனைத்தும் தங்களுக்கு சாதகமாக மாறும் யோகம், வியாபாரம் மூலம் அதிர்ஷ்டம், வெளிநாடு மற்றும் வெளியூரில் இருந்து வரும் யோக வாழ்க்கை, கூட்டு முயற்சி மற்றும் கூட்டு தொழில் மூலம் தங்களின் வாழ்க்கையில் பெரும் முன்னேற்றம் என்ற வகையில் சுக்கிரன் திசை தங்களுக்கு சுபயோக பலன்களை வாரி வழங்கும், மேலும் சுக்கிரன் திசை காலத்தில் கேது திசையில் நடைபெற்ற 5,8,11ம் பாவக யோக பலாபலன்களும் நடைமுறைக்கு வரும் என்பது கவனிக்கத்தக்கது.

எனவே தங்களுக்கு தற்போழுது நடைபெறும் புதன் திசை அவயோக பலன்களையே வழங்கி உள்ளது, எதிர்வரும் கேது மற்றும் சுக்கிரன் திசை சிறப்பான சுபயோக பலன்களை வழங்க தயாராக உள்ளது என்பது மட்டும் உறுதி எதிர்வரும் கேது,சுக்கிரன் திசை தரும் யோக பலன்களை அனுபவிக்க தங்கள் சரியான திட்டமிடுதல்களுடன் செயல்படுவது உகந்ததாக அமையும் என்பது சரியானதாக இருக்கும் "வாழ்த்துக்கள்" அன்பரே!

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக