புதன், 31 ஆகஸ்ட், 2016

சுக்கிரன் திசை வழங்கிய அவயோகமும், ஜாதகரின் கலைத்துறை மோகமும் !




சுய ஜாதகத்தில் ஒருவருக்கு சுக்கிரன் திசை நடைமுறைக்கு வரும் பொழுது, சம்பந்த பட்ட ஜாதகருக்கு, ஆலோசனை வழங்கும் அன்பர்கள் சிறப்பான நன்மைகளையும் யோகங்களையும் இனி வரும் காலங்களில் ஜாதகர் பெறுவார் என்றும், அவரது கனவுகளும் லட்சியங்களும் தங்கு தடையின்றி நிறைவேறும் என்றும், வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் அனுபவிக்கும் யோக நிலை சுக்கிரன் திசை காலங்களில் ஜாதகருக்கு ஏற்படும் என்று சொல்வது உண்டு, பொதுவாக பார்க்கும் பொழுது சுக்கிர திசை நடைமுறையில் உள்ள அன்பர்களுக்கு இது பெரும் மகிழ்வையும் பேரானந்தத்தையும் நிச்சயம் தரும், இதை வேத வாக்காக கொண்டு சுய ஜாதக வலிமையை அறியாமல் சம்பந்தப்பட்ட ஜாதகர் சில முடிவுகளை மேற்கொண்டால், எதிர்பாராத இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலையை தரும், ஒருவேளை நடைபெறும் சுக்கிரன் திசை ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால், ஏற்று நடத்தும் பாவக வழியில் இருந்து நன்மைகளும் யோகங்களும் நிச்சயம் தரும், மாறாக பாதிக்கப்பட்ட பாவக பலனையே, பாதக ஸ்தான பலனையே நடைபெறும் சுக்கிரன் திசை ஏற்று நடத்தினால் ஜாதகர் கதி அதோ கதிதான்.

சுக்கிரன் திசை தரும் நன்மை மற்றும் தீமையை பற்றி கீழ்கண்ட ஓர் உதாரண ஜாதகம் கொண்டு ஆய்வு செய்வோம் அன்பர்களே !


லக்கினம் : கடகம் 
ராசி : மீனம் 
நட்ஷத்திரம் : உத்திரட்டாதி 3ம் பாதம் 

ஜாதகரின் லட்சியம் கலை துறையில் இயக்குனராக பிரகாசிப்பது, சுய ஜாதக வலிமை நிலை அதற்க்கு முரணாக அமைந்துள்ளது, ஒருவர் கலை துறையில் பிரகாசிக்க சுய ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் எனும் 5ம் பாவகமும், லாப ஸ்தானம் எனும் 11ம் பாவகமும், நீர் தத்துவ ராசிகளும் மிகவும் வலிமை பெற்று இருப்பது அவசியம், மேலும் ஜாதகர் கலை துறையில் முயற்ச்சி செய்யும் காலத்தில் அப்பொழுது நடைமுறையில் உள்ள திசை மற்றும் புத்திகள் வலிமை பெற்ற 5,11ம் பாவக பலனை ஏற்று நடத்துவது, ஜாதகரை குறுகிய காலத்தில் தனது லட்ச்சியங்களை  அடைவதற்கு வழிவகுக்கும், மேலும் இயக்குனராக பிரகாசிக்க சுய ஜாதகத்தில் 1,4,7,10ம் பாவகங்களும் மிக மிக வலிமை பெறுவது அவசியமாகிறது, மேலும் ஜாதகர் கலை துறையில் முயற்ச்சி செய்யும் காலத்தில் நடைமுறையில் உள்ள திசா புத்திகள் ஜாதகருக்கு சாதகமான அமைப்பில் இருப்பின் ஜாதகரின் வெற்றி நிச்சயம், மாறாக நடைபெறும் திசாபுத்திகள் ஜாதகருக்கு பாதகமாக இருந்து விட்டால் ஜாதகரின் முயற்ச்சிகள் யாவும் வீண் விரையமாக மாறிவிட வாய்ப்புண்டு.

மேற்கண்ட ஜாதகர் கலை துறையில் முயற்ச்சி செய்த காலகட்டங்களில் நடைமுறையில் சுக்கிரன் தனது திசையை ( 03/02/1994 முதல் 03/02/2014 வரை ) நடத்தியுள்ளார், மேலும் சுக்கிரன் தான் ஏற்று நடத்திய பாவக தொடர்பானது 6,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று விரைய ஸ்தான பலனை முழு வீச்சில் வழங்கி உள்ளது, ஜாதகரின் விரைய ஸ்தானம் ( மிதுன ராசியில் 81:39:17 பாகையில் ஆரம்பித்து கடக ராசியில் 110:43:48 பாகையில் முடிவடைகிறது ) மிதுனம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு வீரியம் மற்றும் முயற்ச்சி ஸ்தானமாக அமைந்து பாதிக்கப்படுவதும், கடகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு சுக ஸ்தானமாக அமைந்து பாதிக்கப்படுவதும் ஜாதகருக்கு சாதகமான விஷயம் அல்ல என்பதை கருத்தில் கொள்வது நல்லது, மேலும் ஜாதகரின் 12ம் பாவகம் மிதுனம் மற்றும் கடகம் எனும் இரண்டு ராசிகளில் வியாபித்து இருப்பது உபய கற்று தத்துவ ராசியான மிதுனத்தில் 12ம் பாவாகம் அமைவது ஜாதகர் எடுக்கும் முயற்ச்சியில் தோல்வியையும், சர நீர் தத்துவ ராசியான கடகத்தில் 12ம் பாவகம் வியாபித்து இருப்பது ஜாதகரின் கற்பனை வளத்தில் குறைவையும் தருகிறது, மேலும் இது சார்ந்த விஷயங்களில் ஜாதகர் ஈடுபடும் பொழுது வீண் விரையத்தை சந்திக்கும் சூழ்நிலையை தருகிறது.

சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகம் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதால் ஜாதகர் தனிப்பட்ட சுய தொழில் மூலம் வெற்றி பெற இயலாது என்பதை தெளிவு படுத்துகிறது, மேலும் கவுரவம் அந்தஸ்து மற்றும் சுய மரியாதை ஜாதகருக்கு வெகுவாக பாதிக்கப்படும், என்பதால் ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் வலிமை உள்ள பாவகம் எதுவென்று அறிந்து அது சார்ந்த முயற்ச்சிகளை மேற்கொள்வது சகல நன்மைகளையும் தரும், மேற்கண்ட ஜாதகருக்கு நடைபெற்ற சுக்கிரன் திசை 6,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று விரைய ஸ்தான பலனை வழங்கி இருக்கின்றது, தற்போழுது நடைமுறையில் உள்ள சூரியன் திசை ( 03/02/2014 முதல் 03/02/2020 வரை ) 10ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று விரைய ஸ்தான பலனையே வழங்கி கொண்டு இருப்பது ஜாதகர் பெரும் ஜீவன வழியிலான இன்னல்களை தெளிவாக்குகிறது, மேலும் சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவகங்களான குடும்பம் மற்றும் வீரிய ஸ்தான வழியில் இருந்து ஜாதகர் நன்மைகளை பெறுவதற்கு முயற்ச்சிகளை மேற்கொள்ளலாம்.

 1,2,4,7,9,11ம் வீடுகள் வாக்கு ஸ்தானமான 2ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது வரவேற்க தக்கது, மேலும் 3ம் வீடு வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மிக சிறந்த யோக அமைப்பாகும்,  இதனால் ஜாதகருக்கு வாக்கு,குடும்பம் மற்றும் வியாபாரம், ஏஜென்சி தொடர்புகள் வழியில் இருந்து நல்ல முன்னேற்றம் உண்டாகும், ஜாதகருக்கு வலிமை பெற்ற 2,3ம் பாவக பலனை ஏற்று நடத்தும் திசாபுத்திகள் யாதென்று அறிந்து அந்த காலகட்டங்களில் 2,3ம் பாவக வழியில் இருந்து வரும் நன்மைகளை பெற முயற்ச்சிப்பதே உகந்ததாக அமையும், சுய ஜாதக வலிமைக்கு உகந்த ஜீவனங்களை ஜாதகர் தேடும்பொழுது ஏமாற்றங்கள் நிச்சயம் வர வாய்ப்பில்லை என்பதை ஜாதகர் உணர்வது அவசியமாகிறது, விரைய ஸ்தான பாவகத்திற்கு ஒரு வலிமை உண்டு, மிதமிஞ்சிய கற்பனைகளை வாரி வழங்கும் வல்லமை பெற்றது, சுய ஜாதகத்தில் 12ம் பாவகம் வலிமை பெரும் பொழுது ஜாதகரின் கற்பனை திறன் மூலம் பல அறிய நிகழ்வுகளை நிகழ்த்த இயலும், 12ம் பாவகம் வலிமை அற்று இருப்பின் வீண் கற்பனைகளையும், நிறைவேறாத கனவுகளையும் ஜாதகர் வாழ்நாள் முழுவதும் சுமக்கும் நிலையை தந்து விடும்.

மேற்கண்ட ஜாதகருக்கு 5,8ம் வீடுகள் சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 6,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் ஜாதகரை கலை துறையில் பிரகாசிக்க இயலாத சூழ்நிலையை தந்து விட்டது, மேலும் நடந்த சுக்கிரன் திசை தற்போழுது நடைமுறையில் உள்ள சூரியன் திசை இரண்டும் ஜாதகருக்கு பாதிக்கப்பட்ட 12ம் பாவக பலனையே ஏற்று நடத்துவது, ஜாதகரின் முயற்ச்சிகள் யாவற்றையும் கானல்நீர் ஆக மாறிவிட்டது, இருப்பினும் சுய ஜாதகத்தில் 2,3ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு ஸ்திரமான நன்மைகள் நடைமுறைக்கு வரும் என்பதை ஜாதகர் கவனத்தில் கொள்வது நல்லது, எனவே ஜாதகர் 2,3ம் பாவக வழியில் இருந்து வரும் நன்மைகளை, கால நேரம் மற்றும் மேற்கண்ட பாவக பலனை ஏற்று நடத்தும் திசாபுத்திகள் எதுவென்று அறிந்து வாழ்க்கையில் நலம் பெற "ஜோதிடதீபம்" வாழ்த்துகிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016

ஜாதக ஆலோசனை : ராகு திசை தரும் பலன்களும், சுய ஜாதக வலிமையும் !

ஜாதக பொது பலன்கள்


லக்கினம் : துலாம்
ராசி : ரிஷபம்
நட்ஷத்திரம் : கிருத்திகை 2ம் பாதம்


ஜாதகத்தில் வலிமையான பாவகங்கள்

1,2,3,4,5ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு லக்கின பாவக வழியில் இருந்து நண்பர்கள் ஆதரவு, பொதுமக்கள் ஆதரவு, வெளிநாடுகளில் யோக வாழ்க்கை தன்னிறைவான பொருளாதார வசதி வாய்ப்புகள், நல்ல உடல் ஆரோக்கியம் மற்றும் சிறப்பான வாழ்க்கை சூழ்நிலை, அரசியலில் வெற்றி, தர்ம சிந்தனை, சிறந்த மனப்பக்குவம், பொருத்தன்மையான நடவடிக்கைகள், அனைவரிடமும் நட்பு பாராட்டும் குணம், செய்யும் காரியங்களில் அதிக கவனம், விரோதிகள் அற்ற வாழ்க்கை, கூட்டு முயற்சிகளில் அபரிவிதமான லாபங்கள், திருமணம் வாழ்க்கையில் மகிழ்ச்சி, வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் செல்வாக்கு மற்றும் ஆதரவு, அரசியலில் வெற்றி, வெளிநாடுகளில் இருந்து வரும் ஜீவன முன்னேற்றம், ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில் வரும் லாபம் என்ற வகையில் நன்மைகளை வாரி வழங்கும்.

2ம் பாவக வழியில் இருந்து கூட்டாளிகள் மற்றும் கூட்டு தொழில் மூலம் அபரிவிதமான லாபம், வெளிநாடு வேலை வாய்ப்பு, வெளிநாடுகளில் நல்ல வருமான வாய்ப்பு, பேச்சின் மூலம் வெற்றி, ஒப்பந்த தொழில்களில் அபரிவிதமான லாபங்கள், பொதுமக்கள் மற்றும் நண்பர்கள் ஆதரவின் மூலம் திடீர் முன்னேற்றம் பெரும் யோகம், எதிர்பால் அமைப்பினர் மூலம் வருமான வாய்ப்புகள், அனைவரின் ஆதரவும் கிடைக்கும் தன்மை, எதிரிகளுக்கு தோல்வியை பரிசளிக்கும் வல்லமை, சட்டத்தின் ஆதரவு கிடைத்தல், வழக்குகளில் வெற்றி, செய்யும் தொழில் அல்லது பணியில் முதல் நிலையை பெரும் யோகம், திடீர் பதவி உயர்வு, சிறப்பு மிகுந்த குடும்ப வாழ்க்கை, இனிமை நிறைந்த வார்த்தைகள் மற்றும் பேச்சு திறமை, வேகமிக்க துல்லியமான செயல் மூலம் நிச்சய வெற்றியை பெரும் யோகம் என்ற வகையில் நன்மைகளை வாரி வழங்கும்.

3ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் எடுக்கும் செயல்கள் வெற்றி பெரும் யோகம், சகோதர வழியில் ஆதரவு, தீர்க்கமான வாத திறமை, திருமணம் மூலம் நிறைவான அதிர்ஷ்டங்களை பெரும் யோகம், நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளுடன் நல்லுறவு, பொது வாழ்க்கையில் வெற்றி, விவேகத்துடன் கூடிய வீரம், இளமையில் திருமண யோகம், வீரியமிக்க செயல்திறன், பயணம் மூலம் லாபம், விவசாயம் மூலம் நல்ல அதிர்ஷ்டம், உல்லாச விரும்பி, எதிர்ப்புகள் அற்ற யோக வாழ்க்கை, வியாபரம் செய்வதின் மூலம் சகல நிலைகளில் இருந்தும் முன்னேற்றம் பெரும் அமைப்பு, குறுகிய காலத்தில் தனவந்தன் ஆகும் யோகம், எதிர்பால் அமைப்பினரிடம் மிக எளிதாக பழகும் வாய்ப்பு, வருமுன் உணரும் சக்தி, செய்வதை திருந்த செய்யும் யோகம், திட்டமிடும் விஷயங்களை வெற்றிகரமாக முடிக்கும் வல்லமை பெற்றவர்.

4 ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் வாழ்க்கை துணையுடன் இனிமையான வாழ்க்கையை பெரும் யோகம் உண்டாகும், சாதுர்யமாக சொத்து சுகங்களை சேர்க்கும் வல்லமை, சாமதானம் மூலம் மிகப்பெரிய சொத்து சுக சேர்க்கை உண்டாகும், வீடு,வண்டி வாகன யோகம், வீடு கட்டி வாடகைக்கு அல்லது விற்ப்பனை செய்யும் யோகம், சொந்த பந்தங்கள் மூலம் அதிர்ஷ்டம் பெரும் யோகம், வெளிநாடுகளில் ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் செய்யும் தன்மை, பெரிய மனிதர்கள் மூலம் நல்ல லாபம், பெற்றோர் வழி ஆதரவை பெரிய அளவில் பெரும் யோகம், தாய் வழியில் இருந்து நல்லாசிகளும், முன்னேற்றத்தையும் பெரும் அமைப்பு, பொது வாழ்க்கையில் முன்னேற்றம், புதிய சொத்துகளை சுயமாக வாங்கும் யோகம், நல்ல குணம், அனைவரிடமும் அன்பாக நடந்துகொள்ளும் அமைப்பு, சுக போகங்களுக்கு குறைவில்லா யோக வாழ்க்கை என்ற வகையில் நன்மைகளை வாரி வழங்கும்.

5ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் தீர்க்கமான அறிவு திறன்,  சமயோசித புத்திசாலித்தனம், வருமுன் உணரும் அதீத சக்தி, கற்ற கல்வி வழியில் இருந்து யோகம் பெரும் அமைப்பு, தன்னம்பிக்கை குறையாத செயல்பாடுகள், மெய் பொருள் காணும் அறிவு திறன், எவரிடமும் ஏமாறாத குணம், கூட்டாளியின் ஆதரவு பொதுமக்கள் ஆதரவு, தமக்கு வரும் இன்னல்களை மிக எளிதாக கையாளும் வல்லமை, பொது காரியங்களில் ஆர்வம் மற்றும் அதன் வழியில் இருந்து ஜாதகர்  பெரும் யோக வாழ்க்கை, எதிர்ப்புகள் மூலமும் நன்மையை பெரும் யோகம், குல தேவதையின் பரிபூர்ண நல்லாசிகள், நல்ல குழந்தை பாக்கியம், செல்லும் இடங்களில் எல்லாம் பெரும் சிறப்பான வரவேற்ப்பு, தனது அறிவு திறன் கொண்டு வாழ்க்கையில் அனைத்தையும் சாதிக்கும் யோகத்தை தரும்.

9ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகரின் வாழ்க்கையில் சகல முன்னேற்றங்களையும் தடையின்றி தரும், மிகசிறந்த அறிவு திறன், ஆன்மீக வெற்றி, ஆன்மீக பெரியோர்கள் ஆசியை பெரும் யோகம், புனித திருத்தலங்களுக்கு சென்று வரும் யோகம், வேறு இடங்களுக்கு சென்ற ஜீவன வழியில் புகழ் பெரும் யோகம், தன்னிறைவான வசதி வாய்ப்புகளை பெரும் யோகம், எந்த ஒரு சூழ்நிலையிலும் ஜாதகருக்கு உதவ வரும் நண்பர்கள் மற்றும் பெரிய மனிதர்கள், எடுக்கும் முயற்ச்சிகளில் இறை அருளால் பெரும் வெற்றி வாய்ப்புகள், பந்தையம் மற்றும் போட்டிகளில் நிச்சய வெற்றி, பரோபகரமான செயல்பாடுகள், மற்றவர்களுக்கு உதவும் மனபக்குவம், சிந்தனை மூலம் வாழ்க்கையில் வெற்றிகளை படிபடியாக பெரும் யோகம் என்ற வகையில் நன்மைகளை வாரி வழங்கும்.

10 ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகரின் சுய ஜீவன வெற்றிகளை அதிகரிக்கும், தீர்க்கமான வாத திறமை மூலம் வெற்றிகளை பெரும் யோகத்தை தரும், மேலும் உத்தியோகம், வியாபரம், மற்றும் தொழில்களில் வெற்றி மேல் வெற்றி பெரும் யோகத்தை தரும், ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் வலிமை பெற்று கடக ராசியில் அமைவது, உணவு பொருட்கள் சார்ந்த தொழில்களில் மிகப்பெரிய வெற்றிகளை வாரி வழங்கும், மனிதர்களுக்கு தேவையான உணவு பெருட்கள் சார்ந்த எந்த ஒரு தொழிலையும் தேர்வு செய்து நடத்தினால், ஜாதகருக்கு அபரிவிதமான வருவாயினை தொடர்ந்து தந்துகொண்டே இருக்கும், செய்யும் தொழிலில் நல்ல அதிர்ஷ்டத்தையும் லாபத்தையும் ஜாதகர் சிறப்பாக பெறுவார், கௌரவம் குறையாத யோக வாழ்க்கை உண்டாகும், பொறுப்பு மிக்க பதவிகளை அலங்கரிக்கும் யோகம் ஜாதகருக்கு நிச்சயம் உண்டு.

11ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 11ம் பாவக வழியில் இருந்து வீடு வண்டி வாகன யோகம் உண்டாகும், அனைத்தும் ஜாதகருக்கு புதியதாக அமையும், உலகில் உள்ள அனைத்து நாகரிக வஸ்துக்களையும் வாங்கும் யோகம் உண்டாகும், புதிய கருவிகள் ஜாதகரின் வாழ்க்கையில் பல முன்னேற்றங்களை வாரி வழங்கும், உலகத்திற்கு ஏற்ற வகையில் தனது முன்னேற்றத்தை ஒவ்வொரு நாளும் புதுப்பித்துக்கொண்டே இருப்பர் என்பது கவனிக்க தக்கது, நிம்மதியான யோக வாழ்க்கை உண்டாகும், ஜாதகர் மனதில் நினைக்கும் நன்மைகள் யாவும் நிச்சயம் நடைமுறைக்கு வரும், எதிர்ப்புகள் அற்ற யோக வாழ்க்கையும், அனைவராலும் நன்மைகளை பெரும் யோகத்தையும் தரும், தாய் செய்த புண்ணியத்தின் பலனை ஜாதகர் சிறப்பாக பெறுவார்.

ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட பாவக தொடர்புகள் :

6ம் வீடு சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு உடல் சார்ந்த சிறு சிறு தொந்தரவுகளை தரும், மருத்துவம் மூலம் குணமடையும், தேர்வு,போட்டி,பந்தயம் மற்றும் வழக்குகளில் வெற்றி கிட்டும், பிறருக்கு ஜாதகர் சில நேரங்களில் தொல்லை கொடுக்கும் நிலை உருவாகலாம், எதிரிகளுக்கு இன்னல்களை தரும் ஜாதகர், கடன் கொடுப்பது பெறுவது இரண்டு விஷயங்களும் ஜாதகருக்கு மிகுந்த துன்பத்தை தர கூடும், ஜாமீன் கொடுப்பது ஜாதகருக்கு மிகுந்த இன்னல்களை வரவழைக்கும்.

7 ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு பித்தம் சார்ந்த தொந்தரவுகளை வாரி வழங்கும், தனது புத்திசாலித்தனம் சில நேரங்களில் ஜாதகருக்கு பயன் தாராது, வாழ்க்கை துணை மற்றும் நண்பர்கள் ஜாதகருக்கு செய்யும் நன்மையான விஷயங்களை ஜாதகர் தவறாக புரிந்துகொண்டு எடுக்கும் முடிவுகள் யாவும் ஜாதகருக்கு வாழ்நாள் முழுவதும் இன்னல்களை தர கூடும், அதிக அளவில் ஜாதகர் பொறுமையை கடைபிடிப்பது சகல நன்மைகளையும் தரும், ஜாதகர் செய்யும் விஷயங்கள் இலை மறை காய்மறையாக இருப்பதே சகல நன்மைகளையும் தரும், நண்பர்களையும் வாழ்க்கை துணையையும் தேர்வு செய்யும் பொழுது ஜாதகர் மிகுந்த கவனத்துடன் இருப்பது நெடுநாள் நன்மைகளை வாரி வழங்கும், யாரிடமும் மிகுந்த எச்சரிக்கையாக பழகுவது ஜாதகருக்கும், ஜாதகரை சார்ந்தவர்களுக்கும் நன்மைகளை வாரி வழங்கும்.

8,12 ம் வீடுகள் விறைய ஸ்தானமான 12 ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மிகுந்த இன்னல்கள் 8ம் பாவக வழியில் இருந்து வழங்கும், விபத்து, மருத்துவ செலவினங்கள், மன குழப்பம், திடீர் முடிவுகளால் வரும் பேரிழப்பு, அறுவை சிகிச்சை மூலம் குணம் பெரும் கட்டாயம், உடல் ஆரோக்கியத்தில் அக்கறை இன்மை, சுய முடிவுகள் சில நேரங்களில் ஜாதகருக்கு இழப்புகளை தர கூடும், உடல் நலனில் அதிக அக்கறை கொள்வது ஜாதகருக்கு நன்மையை தரும், பாதுகாப்பான பயணம் ஜாதகருக்கு சிறப்பான நன்மைகளை தரும்.

12 ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் நிறைய விறைய செலவுகளை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், பங்கு சந்தை மூலம் திடீர் இழப்புகளை சந்திக்கும் நிலையை தரும், திருப்தி அற்ற மன நிலை, அதிக மன போராட்டம், வீண் மன பயம் ஆகியவை ஜாதகரின் முன்னேற்றத்திற்கு மிகபெரிய தடைகளை தரும், சொத்துகளை நிர்வகிப்பதில் அதிக அக்கறை செலுத்துவது ஜாதகருக்கு வரும் பெரிய இழப்புகளை தவிர்க்க உதவும், மன நிம்மதி பெற தியானம், யோகம் பயில்வது சகல நலன்களையும் தரும், ஜாதகர் எக்காரணத்தை கொண்டு தீய பழக்க வழக்கங்களுக்கு ஆர்படுவது மிகுந்த இன்னல்களை வாரி வழங்கும்.

ஜாதகருக்கு தற்பொழுது நடைபெறும் ராகு திசை தரும் பலன்கள் :
( 04/08/2005  முதல் 04/08/2023 வரை )

ஜாதகருக்கு தற்ப்பொழுது நடைபெறும் ராகு திசை 8,12 ம் வீடுகள் விறைய ஸ்தானமான 12 ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பலனை தருவது உகந்தது அல்ல என்ற போதிலும், மேற்கண்ட பாவக வழியில் இருந்து பாதிப்புகள் ஜாதகருக்கு மிக குறைந்த அளவிலேயே இருக்கும், சுய ஜாதகத்தில் 7ல் அமர்ந்த ராகு மிகவும் வலிமையுடன் இருந்த போதிலும், தனது திசையில் 12ம் பாவக பலனை ஏற்று நடத்திடுவது ஜாதகருக்கு நன்மைகளை வழங்காது, ராகு திசையில் தற்போழுது நடைபெறும் கேது புக்தி ( 03/02/2016 முதல் 21/02/2017 வரை ) எடுக்கும் முயற்சசிகளில் வெற்றி மேல் வெற்றியை பெற்று தரும், சிறப்பான நபர்களின் தொடர்பு மூலம் ஜாதகரின் உலகம் விரிவடையும், அந்நிய தேசத்து நபர்கள், வேற்று மதத்தினர் உதவிகள் மூலம் நல்ல முன்னேற்றத்தையும் வியாபர விருத்தியையும் பெரும் யோகம் உண்டாகும், ஜாதகர் புதிய யோக வாழ்க்கையை ஆரம்பிக்க ஏற்ற யோக காலம் இதுவே என்று தெளிவாக கூறலாம்.

மேலும் அடுத்து வரும் சுக்கிரன் புத்தி ( 21/02/2017 முதல் 21/02/2020 வரை ) 10 ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அபரிவிதமான தொழில் வாய்ப்புகளை வாரி வழங்கும் என்பதால் ஜாதகர் தொழில் ரீதியாக சில திட்டமிடுதல்களை மேற்கொள்வது சால சிறந்து, சுக்கிரன் புத்தி காலத்தில் ஜாதகருக்கு தன்னிறைவான ஜீவன முன்னேற்றம் என்பது 100 சதவிகிதம் துல்லியமாக அமையும் என்பதால், விழிப்புணர்வுடன் செயல்பட்டு வெற்றிகளை பெறுவது அவசியமாகிறது, செய்யும் தொழிலில் குறுகிய காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை பெரும் யோக காலமாக ராகு திசை சுக்கிரன் புத்தி அமையும், வாழ்த்துகள்

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

மாமனாருக்கு ஆகாத மூல நட்சத்திரமும், சுய ஜாதக பாவக வலிமையையும் !


 திருமண பொருத்தம் காண்பதில் மூல நட்சத்திரம் மாமனாருக்கு ஆகாது என்பது ஜோதிட ரீதியாக உள்ள கருத்து, எனவே மூல நட்சத்திரம் கொண்ட பெண்களை, திருமணம் செய்துகொள்ள தகப்பனார் உள்ள வரன்கள் வெகுவாக தயங்குகின்றனர், மூல நடசத்திரம் கொண்ட வதுவை திருமணம் செய்து கொள்ளும் வரனுக்கு தகப்பனார் இல்லாமல் இருப்பது அதி முக்கியமாக கருதபடுகிறது, இதன் உண்மை நிலையை பற்றி கிழ்கண்ட பதிவில் ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே, மூல நட்சத்திரம் கொண்ட ஒரு பெண்ணின் ஜாதகத்தை ஆய்வுக்கு எடுத்துகொண்டு தெளிவு பெறுவோம், திருமண வாழ்க்கையினை நிர்ணயம் செய்வது தசவித பொருத்தமான நட்ச்சத்திர பொருத்தம் மட்டும் அல்ல என்பதை கருத்தில் கொள்வது அவசியமாகிறது, சுய ஜாதகத்தில் 12 பாவகங்களின் வலிமை நிலையே தம்பதியரின் வெற்றிகரமான யோக வாழ்க்கைக்கு காரணமாக அமைகிறது, நட்ஷத்திரம் என்ற ஒரு விஷயத்தை மட்டும் கருத்தில் கொண்டு பொருத்தம் காண்பது, சிறப்பான யோகம் உள்ள நல்ல ஜாதகங்களை நாமே தவிர்க்கிறோம் என்பதே உண்மை நிலை.


லக்கினம் : கும்பம்
ராசி : தனுசு
நட்ஷத்திரம் : மூலம் 4ம் பாதம்

மேற்கண்ட ஜாதகத்தில் பாவக தொடர்புகள் :

சுய ஜாதகத்தில் வலிமை பெற்றுள்ள பாவக தொடர்புகள் :

1,2,8,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம்.
3,9ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம்.
4,5ம் வீடுகள் பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம்.
6,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம்.
7ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம்.

சுய ஜாதகத்தில் வலிமை அற்ற பாவக தொடர்பு :

12ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம்.

ஜாதகிக்கு பெரும்பாலான பாவக தொடர்புகள் மிகவும் வலிமையுடன் இருப்பது ஜாதகியின் யோக நிலையை தெளிவுபடுத்துகிறது, மேலும் தற்போழுது நடைபெறும் திசையான சூரியன் மட்டும் சற்று சிரமங்களை தந்துகொண்டு இருப்பதால் ( 3,9,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று சூரியன் திசை விரைய பாவக பலனை வழங்கிக்கொண்டு இருக்கின்றது) , திருமண வாழ்க்கை தள்ளி போகின்றது, நினைத்த காரியங்கள் கைகூடி வாராமல் தாமதம் ஏற்படுகிறது, ஆனால் அடுத்து வரும் சந்திரன் திசை ஜாதகிக்கு 4,5ம் வீடுகள் பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருவது வரவேற்கத்தக்கது, சந்திரன் திசை ஆரம்பத்தில் இருந்து ஜாதகிக்கு நல்ல யோகங்கள் ஏற்படும், நினைத்த காரியங்கள் கைகூடி வரும், மேலும் சுய ஜாதகத்தில் இல்லற வாழ்க்கையை குறிக்கும் 2,7ம் வீடுகள் ஜாதகிக்கு மிகவும் வலிமையுடன் இருப்பது, ஜாதகியை திருமணம் செய்துகொள்ளும் அன்பருக்கு மிகுந்த நன்மையையும் யோகத்தையும் வாரி வழங்கும், நல்ல புத்திர பாக்கியம் உண்டாகும், இல்லறவாழ்க்கையில் மகிழ்ச்சியும் யோகமும் உண்டாகும்.

இந்த ஜாதகியை மூல நட்ஷத்திரம் என்ற ஒரே காரணத்துக்காக தவிர்ப்பது முற்றிலும் தவறானதாகவே ஜோதிடதீபம் கருதுகிறது, ஒருவரின் இல்லற வாழ்க்கையை நிர்ணயம் செய்வதில் முக்கிய பங்கு வகிப்பது அவரின் சுய ஜாதக பாவக வலிமையே அன்றி, நட்ஷத்திரமும் ராசியும் அல்ல என்பதனை கருத்தில் கொள்வது நல்லது, மேலும் மேற்கண்ட ஜாதகிக்கு சுய ஜாதக வலிமை என்பது மிக சிறப்பாக அமைந்திருப்பது, ஜாதகி மிகுந்த யோகதாரி என்பதை தெளிவு படுத்துகிறது, அடிப்படையில் சுய ஜாதகம் வலிமை பெரும் பொழுது, நட்ச்சத்திர பொருத்தத்திற்கு முக்கிய துவம் தர தேவையில்லை என்பதே உண்மை நிலை, மேலும் நட்ச்சத்திர பொருத்தங்கள் அனைத்தும் சிறப்பாக இருந்தாலும், சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை அற்று இருப்பின் தம்பதியரின் வாழ்க்கை மிக சிறப்பாக அமைவதில்லை, அதே சமயம் சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை பெற்று இருந்து, நட்ச்சத்திர பொருத்தம் இல்லை என்றாலும் தாம்பத்திய வாழ்க்கையில் யாதொரு இன்னல்களும் வர வாய்ப்பில்லை என்பது கவனிக்கத்தக்க விஷயமாகும்.

மேற்கண்ட ஜாதகிக்கு திருமணத்திற்கு பிறகான வாழ்க்கை சிறப்ப அமையும் என்பதனை எதிர்வரும் திசை மற்றும் புத்திகள் ஏற்று நடத்தும் பாவக பலன்களில் இருந்து நாம் தெளிவாக உணர்ந்துகொள்ள இயலும், உதாரணமாக ஜாதகிக்கு தற்போழுது நடைபெறும் சூரியன் திசைக்கு அடுத்து வரும் சந்திரன் திசை வலிமை பெற்ற 4,5ம் வீடுகள் பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருவதும், சந்திரனுக்கு அடுத்து வரும் திசையான செவ்வாய் வலிமை பெற்ற 7ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருவதும், செவ்வாய் திசைக்கு அடுத்து வரும் ராகு திசையும் வலிமை பெற்ற 7ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருவதும், தொடர்ந்து நன்மைகளையும் யோகங்களையும் வாரி வழங்கும் அமைப்பாகும், மேலும் ஜாதகிக்கு 2,7ம் வீடுகள் வலிமை பெறுவது இல்லற வாழ்க்கையை சிறப்பாக அமைத்து தரும் தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து சகல யோகங்களையும் ஜாதகியும் பெறுவார், ஜாதகியால் அவரது வாழ்க்கை துணையும் பெறுவார் என்பதில் யாதொரு சந்தேகமும் இல்லை, இந்த ஜாதகிக்கு மூல நட்ஷத்திரம் என்ற போதிலும் சுய ஜாதகம் வலிமை பெறுவது தன்னிறைவான யோக வாழ்க்கையை வாரி வழங்கும்.

எனவே திருமண பொருத்தம் காண்பதில் நட்ச்சத்திர பொருத்தத்தை மட்டும் கருத்தில் கொண்டு முடிவு செய்வது முற்றிலும் தவறான அணுகுமுறை என்பதை "ஜோதிடதீபம்" பதிவு செய்ய விரும்புகிறது, மேலும் சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமையை கருத்தில் கொண்டு திருமண பொருத்தம் காண்பதே தம்பதியரின் யோக வாழ்க்கையை 100% விகிதம் உறுதிப்படுத்தும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2016

சுய ஜாதகத்தில் உள்ள யோகங்கள் ( அவயோகங்கள் ) ஜாதகருக்கு பலன் தராமல் போவதற்கு காரணம் என்ன?


சில அன்பர்களுக்கு சுய ஜாதகத்தில் ராஜ யோகங்கள் ( பாவக வலிமை ) இருந்த போதிலும், ஜாதகர் அதனால் பலன் ஏதும் பெற இயலாமல், வாழ்க்கையில் இன்னல்களை சந்தித்து கொண்டு இருப்பர், சில அன்பர்களுக்கு சுய ஜாதகத்தில் அவயோகங்கள் ( பாவக வலிமை அற்ற நிலை ) இருந்த போதிலு, அதனால் ஜாதகர் எவ்வித இன்னல்களையும் அனுபவிக்காமல் சுக போக வாழ்க்கையை நடத்திக்கொண்டு இருப்பர், இது எப்படி சாத்தியம் என்ற கேள்வி வருவது இயற்கையே, இதன் உண்மை நிலையை பற்றி இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே ! 

ஒருவரது சுய ஜாதகத்தில் சுபயோகங்கள் இருப்பது மட்டும் சம்பந்த ஜாதகருக்கு, நன்மைகளையும், வெற்றிகளையும் வழங்கி விடாது, சுபயோகங்கள் வழங்கும் பாவக தொடர்பை, ( நடைமுறையில் உள்ள திசாபுத்திகளோ அல்லது எதிர்வரும் திசாபுத்திகளோ ) ஏற்று நடத்தினால் மட்டுமே ஜாதகருக்கு  சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து சுபயோக பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், இது சுபயோகங்களுக்கு உண்டான சிறப்பு அம்சம்.

 ஒருவரது சுய ஜாதகத்தில் அவயோகங்கள் இருந்து அந்த அவயோகங்களை வழங்கும் பாவக பலனை ( வலிமை அற்ற பாவகம் ) நடைபெறும் திசா புத்திகள் ஏற்று நடத்தவில்லை எனில், சுய ஜாதகத்தில் உள்ள அவயோக பலாபலன்கள் ஜாதகருக்கு நிச்சயம் நடைமுறைக்கு வாராது, மேலும் பாதிக்கப்பட்ட பாவக வழியிலான உறவுகளுடன் உள்ள நல்லுறவு பாதிக்கப்படும் அவ்வளவே, எனவே சுய ஜாதகத்தில் உள்ள அவயோக பலாபலன்களை திசாபுத்திகள் ஏற்று நடத்ததே, சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு " மிகுந்த நன்மையாக " கருதலாம்.

இதை பற்றி இரண்டு உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே!

சுய ஜாதகம் வலிமை பெற்று இருந்தும், அவயோக பலனை அனுபவிக்கும் ஜாதக நிலை :


லக்கினம் : சிம்மம் 
ராசி : கன்னி 
நட்ஷத்திரம் : உத்திரம் 4ம் பாதம் 

இந்த சிம்ம லக்கின ஜாதகருக்கு 1,5ம் வீடுகள் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது லக்கினம் மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தான வழியில் இருந்து பரிபூர்ண யோகங்களை அனுபவிக்கும் தன்மையை  தரும், 2,8,10,12ம் வீடுகள் வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்த்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 2,8,10,12ம் பாவக வழியில் இருந்து நன்மைகளையும், யோகங்களையும் வாரி வழங்கும், மேலும் 3ம் வீடு லாப ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவதும், 4ம் வீடு சுக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவதும், 11ம் வீடு களத்திர ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவதும் ஜாதகருக்கு 3,4,11ம் பாவக வழியில் இருந்து யோகங்களை வாரி வழங்கும் அமைப்பாகும்.

ஜாதகருக்கு 6ம் வீடு சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 7ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் ஜாதகருக்கு மேற்கண்ட பாவக வழியில் இருந்து அதிக அளவில் இன்னல்களையும், 9ம் வீடு பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது 200% மடங்கு கடுமையான இன்னல்களை வாரி வழங்கும் என்பது  இவரது ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட நிலை ஆகும்.

இவரது ஜாதகத்தில் சுபயோக பலன்களை 1,2,3,4,5,8,10,11,12 வீடுகள் ஆகிய 9பாவகங்கள் வழங்குகின்றது.

இவரது ஜாதகத்தில் அவயோக பலன்களை 6,7,9 வீடுகள் ஆகிய 3பாவகங்கள் மட்டுமே  வழங்குகின்றது.

இருப்பினும் தற்போழுது நடைபெறும் ராகு திசை ஜாதகருக்கு ( 18/01/2013 முதல் 18/01/2031 வரை ) பாதக ஸ்தானமான 9ம் பாவக பலனையே ஏற்று நடத்துகிறது, இது ஜாதகருக்கு பாதக ஸ்தான வழியில் இருந்து 200%  சதவிகித இன்னல்களையும்  துன்பங்களையும் வாரி வழங்கும் அமைப்பாகும், மேலும் இதனால் ஜாதகர் ராகு திசை முழுவதும், வீண் அவப்பெயர், கல்வியில் தடை, தீய செய்கையின் மூலம் தமது ஆரோக்கியத்தை தாமே கெடுத்து கொள்ளுதல், வீண் அலைச்சல், முன்னேற்ற தடை, ஜீவன மேன்மை இன்றி சிரமம் அனுபவிக்கும் தன்மை என்ற வகையில் இன்னல்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும்.

அடுத்து வரும் குரு திசை ஜாதகருக்கு ( 18/01/2031 முதல் 18/01/2047 வரை ) சத்ரு ஸ்தானமான  6ம் பாவக பலனையே ஏற்று நடத்துகிறது, இது ஜாதகருக்கு 6ம் பாவக வழியில் இருந்து 100% விகித இன்னல்களை தரும் அமைப்பாகும், இதனால் ஜாதகரின் உடல் நலம் கடுமையாக பாதிக்கப்படும், கடன் தொந்தரவுகள், மறைமுக எதிரி தொல்லை அதிகரிக்கும், தொழில் முடக்கம் மற்றும் பணியில் எதிர்ப்பு நிரந்தரம் இல்லாத நிலை என்ற வகையில் இன்னல்களை வாரி வழங்கும், ஜாதகர் கற்றுக்கொண்ட தீய பழக்கங்களினால் ஏற்படும் உடல் தொந்தரவுகளை, குரு திசை காலகட்டத்தில் எதிர்கொள்ளும் நிலையை தரும்.

அதற்க்கு அடுத்து வரும் சனி திசை ஜாதகருக்கு ( 18/01/2047 முதல் 18/01/2066 வரை ) 7ம் வீடு களத்திர ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று  12ம் பாவக பலனை ஏற்று நடத்துவது ஜாதகருக்கு மிகுந்த மன உளைச்சலையும், மனப்போராட்டத்தையும் வாரி வழங்கும், நிம்மதியற்ற நிலை, வீண் மனபயம் என்ற வகையில் இன்னல்களை தரும், ஏற்படும் விரயத்தை ஜாதகரால் தடுத்து நிறுத்த இயலாது என்பதுடன், அனைவராலும் தொல்லைகளை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும்.

எனவே மேற்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகம் வலிமை பெற்று இருந்த போதிலும், நடைபெறும் திசாபுத்தி, எதிர்வரும் திசாபுத்தி ஜாதகருக்கு வலிமை பெற்ற ( சுபயோகம் ) பாவக பலனை ஏற்று நடத்தாத காரணத்தால், சுய ஜாதகத்தில் யோகங்கள் இருந்த போதிலும் யாதொரு நன்மையையும் ஜாதகருக்கு நடைமுறைக்கு வாராது.

சுய ஜாதகம் வலிமை அற்று இருந்தும், யோக பலனை அனுபவிக்கும் ஜாதக நிலை :


லக்கினம் : துலாம் 
ராசி : ரிஷபம் 
நட்ஷத்திரம் : மிருகசீரிடம் 2ம் பாதம் 

மேற்கண்ட துலாம் லக்கின ஜாதகருக்கு 1,3,5,9,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மேற்கண்ட பாவக வழியில் இருந்து 200% விகித இன்னல்களையும், 2,4,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மேற்கண்ட பாவக வழியில் இருந்து ஸ்த்திரமான இன்னல்களையும், 6,12ம் வீடுகள் முறையே சத்ரு ஸ்தானத்துடனும், விரைய ஸ்தானத்துடனும் சம்பந்தம் பெறுவது மேற்கண்ட பாவக வழியில் இருந்து மிகுந்த துன்பங்களை, இன்னல்களையும் தரும்.

மேலும் 7ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 7ம் பாவக வழியில் 100% விகித யோகத்தையும்,

10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 10ம் பாவக வழியில் 100% விகித யோகத்தையும் வாரி வழங்கும்.

 இவரது ஜாதகத்தில் 1,2,3,4,5,6,8,9,11,12 வீடுகள் ஆகிய 10 பாவகங்கள் அவயோக பலன்களை வழங்குகிறது.

இவரது ஜாதகத்தில் 7,10 வீடுகள் ஆகிய 2 பாவகங்கள் மட்டுமே யோக பலன்களை வாரி வழங்குகிறது.

இருப்பினும் தற்போழுது நடைபெறும் ராகு திசை ( 07/09/2009 முதல் 07/09/2027 வரை  ) ஜாதகருக்கு வலிமை பெற்ற 7,10ம் பாவக பலனையே ஏற்று நடத்துகிறது, எனவே ஜாதகருக்கு நல்ல நண்பர்கள், கூட்டாளிகள், பொதுமக்கள் ஆதரவு, பிரபல்ய யோகம், வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் நல்ல வாய்ப்புகள், கூட்டு முயற்ச்சியால் பெரும் வெற்றி வாய்ப்புகள், புகழ் மற்றும் அரசு கவுரவம், சமூகத்தில் அனைவரும் மதிக்கும் வண்ணம் அமையும் ஜாதகரின் செயல்பாடுகள், நல்ல ஜீவனம், செய்யும் தொழில் வழியில் இருந்து நல்ல முன்னேற்றம் என்ற வகையில் ராகு திசை முழுவதும் 7,10ம் பாவக வழியில் இருந்து யோக பலன்களையே ஜாதகருக்கு வாரி வழங்கும்.

அடுத்தது வரும் குரு திசையும் ( 07/09/2027 முதல் 07/09/2043 வரை ) ஜாதகருக்கு வலிமை பெற்ற 7ம் பாவக பலனையே ஏற்று நடத்துவது, வரவேற்க தக்க அம்சமாகும், இந்த காலத்தில் ஜாதகர் தமது வாழ்க்கை துணை வழியில் இருந்து யோகங்களையும், நண்பர்கள்,கூட்டாளிகள் மற்றும் பொதுமக்கள் வழியில் இருந்து அதிக ஆதாயம் மற்றும் பொருளாதார முன்னேற்றத்தையும், வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து அதிக செல்வ சேர்க்கையையும் தங்கு தடையின்றி பெறுவார், மேலும் குரு திசை முழுவதும் 7ம் பாவக வழியில் இருந்து யோக பலன்களையே ஜாதகருக்கு வாரி வழங்கும்.

மேற்கண்ட இரண்டு ஜாதகங்களில் யோகம் மற்றும் அவயோகங்கள் இருந்த போதிலும் நடைமுறை மற்றும் எதிர்வரும் திசாபுத்திகள் முதல் ஜாதகருக்கு பாதகமாகவும், இரண்டாம் ஜாதகருக்கு சாதகமாகவும் அமைவது, " விதி வலியது "  என்பதை தெளிவாக விளங்க செய்கிறது.

முதல் ஜாதகருக்கு சுபயோகங்கள் இருந்தும் அவை நடைமுறைக்கு வாராதது ஜாதகரின் துர்பாக்கிய நிலையையும், இரண்டாம் ஜாதகருக்கு அவயோகங்கள்  இருந்தும் அவை நடைமுறைக்கு வாராதது ஜாதகரின்  அதிர்ஷ்டத்தையும் கட்டியம் கூறுகிறது.

இதைத்தான் பெரியோர்கள் முதல் ஜாதகருக்கு  "கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை" என்றும்.

இரண்டாம் ஜாதகருக்கு " தலைக்கு வந்தது தலை பாதுகையுடன் சென்றது " என்றும்  சிலேடையாக சொல்லியிருக்க கூடும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வியாழன், 11 ஆகஸ்ட், 2016

7 ல் ராகு பகவான் களத்திர தோஷத்தை தரும் பொழுது, எதிர்வரும் தனது திசையில் களத்திர பாவக வழியில் இன்னல்களை தருமா?


சுய ஜாதகத்தில் தான் அமர்ந்த பாவகத்திர்க்கு வலிமை சேர்க்கும் விதத்தில் ராகு பகவான் இருப்பின் சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையில், ராகு பகவான் அமர்ந்த பாவக வழியில் இருந்து யோகங்களையும் நன்மைகளையும் வாரி வழங்கிவிடும் என்பதில் சந்தேகம் இல்லை, அதே போல் ராகு பகவான் தான் அமர்ந்த பாவக வழியில் இருந்து இன்னல்களை தரும் அமைப்பில் இருப்பின், ஜாதகர் அவர் தரும் தீய பலாபலன்களில் இருந்து விடுபடுவது சிரமமே, ஒருவரது ஜாதகத்தில் ராகு பகவான் வலிமை பெற்று இருந்தாலோ, வலிமை அற்று இருந்தாலோ தான் தரவேண்டிய பலாபலன்களை நிச்சயம் தரும், ஆனால் அதை தனது தசாபுத்திகளில் தரும் என்று எண்ணுவது முற்றிலும் ஜாதக உண்மைக்கு புறம்பானது. 

ஒருவருக்கு ராகு திசை நடைபெறும் பொழுது, தான் அமர்ந்த பாவக பலனை தரும் என்பதும், நவ கிரகங்கள் தான் அமர்ந்த பாவக பலனையும், பார்த்த பாவக பலனையுமே தனது திசா புத்திகளில் வழங்கும் என்பதும் முற்றிலும் தவறான கணிப்பே, இதை பற்றி ஓர் பதிவில் சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே, தற்பொழுது கேள்விக்கு வருவோம் கிழ்கண்ட ஜாதகருக்கு 7ம் பாவகத்திர்க்கு பாதிப்பை தரும் ராகு, தனது திசையில் 7ம் பாவக வழியில் இருந்து தீமையை தருமா? இதற்கான பதில் பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.


லக்கினம் : மீனம் 
ராசி : மகரம் 
நட்ஷத்திரம் : உத்ராடம் 2ம் பாதம் 

ஜாதகருக்கு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்தில் அமர்ந்துள்ள ராகு பகவான் கடுமையான பாதிப்பை வாரி வழங்குவது உண்மையே, இதனால் ஜாதகர் தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து ஆரோக்கிய குறைவை பெறுவது உறுதி, மேலும் நண்பர்கள் கூட்டாளிகள் வழியில் இருந்து அதிக இன்னல்களும் பொருள் இழப்பும் உண்டாகும், திடீர் இழப்புகளை தவிர்க்க இயலாது, பொது வாழ்க்கை மற்றும் பொதுமக்கள் வழியில் இருந்து இன்னல்களும் துன்பங்களும் எதிர்பாராத நேரத்தில் வரும் என்பது ராகு களத்திர ஸ்தானத்தில் அமர்ந்து இருப்பதற்கு உண்டான பலாபலன்கள், ஆனால் மேற்கண்ட பலன்களை எதிர்வரும் ராகு திசையில் வழங்கும் என்பது முற்றிலும் ஜாதக உண்மைக்கு புறம்பானதே ஏனெனில், எதிர்வரும் ராகு திசை பாதிக்கப்பட்ட களத்திர ஸ்தான பலனை ஏற்று நடத்தவில்லை, எதிர்வரும் ராகு திசை ஜாதகருக்கு வலிமை பெற்ற வாக்கு மற்றும் குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவக பலனையே ஏற்று நடத்துகிறது.

எனவே ராகு திசை முழுவதும் ஜாதகரின் வாழ்க்கையில் குடும்பத்தில் மகிழ்ச்சி, குடும்ப ஒற்றுமை, எதிர்பார்த்த வருமான வாய்ப்புகள் வந்து சேரும் யோகம், வாக்கு வன்மை அதிகரிக்கும், ஜாதகரின் பேச்சிற்கு எங்கு சென்றாலும் மதிப்பு மரியாதை கிடைக்கும், வாக்கின் வழியில் வருமானம் அதிகரிக்கும், கை நிறைவான வருமானமும், அளவற்ற செல்வ சேர்க்கையும் லட்ஷமிகடாட்ஷம் உண்டாகும், ஜாதகரின் 2ம் வீடு சர நெருப்பு ராசியான மேஷத்தில் அமைவதும், ஜாதகருக்கு விரைவான யோக பலன்களை வாரி வழங்கும், ஜாதகருக்கு களத்திர ஸ்தானத்தை ராகு பகவான் பாதிப்பிற்கு உள்ளாக்கினாலும், தனது திசை மற்றும் புத்திகளில் வலிமை பெற்ற 2ம் பாவக பலனை ஏற்று நடத்துவது வரவேற்கத்தக்க அம்சமாகும், எனவே சுய ஜாதகத்தில் நவகிரகங்கள் பாதிக்கப்பட்டு இருப்பின், தனது திசாபுத்திகளில் பாதிக்கப்பட்ட பாவக பலனையே வழங்கும் என்பது முற்றிலும் ஜாதக கணிதத்திற்கு புறம்பானதாகும், மேலும் சுய ஜாதகத்தில் நவகிரகங்கள் வலிமை பெற்று இருப்பின் தனது திசாபுத்திகளில் யோகங்களையும், நன்மையையும் வாரி வழங்கும் என்பதும் முற்றிலும் ஜாதக கணிதத்திற்கு புறம்பானதே, நவ கிரகங்கள் தனது திசா புத்திகளில் எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்பதை கருத்தில் கொண்டு சுய ஜாதகத்திற்கு பலன் காண முற்படுவதே சாலச்சிறந்தது.

மேற்கண்ட ஜாதகருக்கு களத்திர ஸ்தான பலனை நடைமுறைக்கு கொண்டுவரும் திசாபுத்திகள் எது? என்பதை ஆய்வு செய்வோம் அன்பர்களே! 

ஜாதகருக்கு களத்திர ஸ்தான பலனை ஏற்று நடத்துவது சூரியன் திசாபுத்தி மட்டுமே, எனவே ஜாதகர் சூரியன் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சம காலங்களில்  களத்திர ஸ்தான வழியிலான இன்னல்களையும் துன்பங்களையும் நிச்சயம் எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், இந்த காலங்களில்  ஜாதகர் வாழ்க்கை துணை, நண்பர்கள், கூட்டாளிகள் மற்றும் பொதுமக்கள்  வழியில் இருந்து வரும் இன்னல்களை மிக கவனமாக எதிர்கொண்டு நன்மைகளை பெறுவது அவசியமாகிறது.

குறிப்பு :

நவகிரக திசாபுத்திகள் ஒருவரின் சுய ஜாதகத்தில் உள்ள பாவக பலனை ஏற்று நடத்தவே உரிமை பெற்றவை, மேலும் தனிப்பட்ட இயக்கத்தில் நன்மை தீமை பலாபலன்களை வழங்க நவகிரகங்கள் தகுதி அற்றவை என்பதை கருத்தில் கொள்வது நலம், மேலும் சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் 12 பாவகங்களும் வலிமை பெற்று இருப்பது சம்பந்த பட்ட ஜாதகருக்கு நடைபெறும் திசாபுத்திகள் யாவும் நன்மைகளையே வாரி வழங்கும் என்பதில் சந்தேகம் இல்லை, மேலும் சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக பலனை  நடைபெறும் திசா புத்திகள் ஏற்று நடத்தாமல், பாதிக்கப்பட்ட பாவக பலனை மட்டுமே ஏற்று நடத்தினால், ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவகங்கள் இருந்த  போதிலும் எவ்வித பயனும் இல்லை என்பதை கருத்தில் கொள்வது  அவசியமாகிறது, இதை போன்றே சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக பலனை மட்டுமே நவகிரக திசாபுத்திகள் ஏற்று நடத்தினால், பாதிக்கப்பட்ட பாவக வழியில் இருந்து யாதொரு துன்பமும் ஜாதகருக்கு நேராது என்பது ஜாதகருக்கு உள்ள சிறப்பு அமசமாகும், இது பற்றி அடுத்த பதிவில் சிந்திப்போம் அன்பர்களே!

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

குரு பெயர்ச்சி வழங்கும் யோக வாழ்க்கை - கன்னி லக்கினம் !


திருக்கணித பஞ்சாங்க முறைபடி வரும் 11.08.2016 வியாழன் அன்று இரவு 9.35 மணிக்கு சிம்ம இராசியில் இருக்கும் குரு பகவான், கன்னி இராசிக்கு செல்கிறார், இனிவரும் ஒரு வருடம் கன்னி ராசியில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கின அன்பர்களுக்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி இனிவரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே! லக்கினம் என்பதே ஒருவரின் ஜாதகத்தை இயக்குவதில் 100% விகித பங்கை வகிக்கிறது என்பதால் ஒருவரின் லக்கினத்தை அடிப்படையாக கொண்டும், தற்போழுது நடைபெறும் திசாபுத்தி ஏற்று நடத்ததும் பாவகங்களுக்கு, குரு பகவான் தரும் கோள் சாரா பலன்களை அடிப்படையாக கொண்டும், ஜாதக பலன்களை நிர்ணயம் செய்யும் பொழுது சம்பந்த பட்ட ஜாதகருக்கு நடைபெறும் யோக அவயோக பலன்களை பற்றி தெளிவாக உணர இயலும், அதன் அடிப்படையில் தற்போழுது பெயர்ச்சி பெற்றுள்ள குரு பகவான் "கன்னி" லக்கின அன்பர்களுக்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!

கன்னி லக்கினம் 

கன்னி லக்கின அன்பர்களுக்கு லக்கினத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான், நல்ல தீர்க்கமான அறிவு திறனை வாரி வழங்குவார், உடல் நலம் மற்றும் மன நலம் சிறந்து விளங்கும், ஆரோக்கிய குறைகள் இருப்பின் பூரண குண நலம் பெரும் யோகம் உண்டாகும், நல்ல தன சேர்க்கை உண்டாகும், கடன் பெறுவது கொடுப்பதால் நல்ல லாபம் மற்றும் முன்னேற்றம் உண்டாகும், எதிர்ப்புகள் அகலும், ஜாதகரின் வார்த்தைகளுக்கு நல்ல மதிப்பு மரியாதை உண்டாகும், குறுகிய காலத்தில் பொருளாதார வளர்ச்சி உண்டாகும், வியாபாரம் மற்றும் சிறு தொழில் செய்யும் அன்பர்களுக்கு இனிவரும் 1 வருடம் நல்ல வருமான வாய்ப்பை வாரி வழங்கும், போட்டி பந்தயங்களில் வெற்றி கிட்டும், லாட்டரி யோகம் உண்டாகும், எதிரிகளும் நண்பர்கள் ஆகும் யோகம் உண்டு, இருப்பினும் ஜாதகர் தனது சுய முன்னேற்றத்தில் அதிக அக்கறையுடன் செயல்படுவது நல்லது, ஜாதகருக்கே தெரியாமல், மற்றவர்களால் இன்னல்கள் ஏற்பட்ட அதிக வாய்ப்புண்டு, மருத்துவ சிகிச்சை தேவை எனில் உடனடி கவனம் செலுத்தி, குண நலம் பெறுவது அவசியமாகிறது, லக்கின வழியில் இருந்து ஜாதகர் மிகுந்த நன்மைகள் பெறுவது இந்த குரு பெயர்ச்சி "கன்னி" லக்கின அன்பர்களுக்கு வழங்கும் சிறப்பு அம்சமாகும்.

குரு பகவான் தனது 5ம் பார்வையை பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்தை வசீகரிப்பது, கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க செய்யும், பூர்வீகத்தில் ஜீவனம் செய்யும் அன்பர்களுக்கு தொழில் முன்னேற்றத்தை வெளியூர் அல்லது வெளிநாடுகளில் வாரி வழங்கும், தனது பூர்வீகத்தை விட்டு வெகு தொலைவு சென்று பெயரும் புகழும் சம்பாதிக்கும் யோகத்தை வாரி வழங்கும், இதுவரை தொழில் அமையாத கன்னி லக்கின அன்பர்களுக்கு திடீரென தொழில் வாய்ப்புகள் அமையும், புதிய தொழில் துவங்கும் யோகம் உண்டாகும், இருப்பினும் ஜாதகரின் அறிவு திறனை முழு வீச்சில் செயல்படுத்த இயலாத சூழ்நிலையை தரும், புத்திர பாக்கியம் மருத்துவ சிகிச்சையின் பெயரில் கிடைக்க பெறுவார்கள், தொழில் ஞானம் ஜாதகருக்கு இருந்த போதிலும் பொறுமையை கடைபிடிக்கும் நேரம் இது என்பதால் மேல் அதிகாரிகளிடம் சுமூகப்போக்கை கடைபிடிப்பது "கன்னி" லக்கின அன்பர்களுக்கு நன்மைகளை தரும், மேலும் தனது குழந்தைகளின் மீது அதிக அக்கறை கொள்வதும், அவர்களின் நடவடிக்கையில் கவனம் செலுத்துவதும் தங்களுக்கும் தங்களது வாரிசுகளுக்கும் நன்மை பயக்கும், குல தேவதை வழிபாடும், புண்ணிய சேத்திர வழிபாடும் தங்களுக்கு சகல வழிகளில் இருந்தும் யோகத்தை வாரி வழங்கும்.

குரு பகவான் தனது 7ம் பார்வையை களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்தை வசீகரிப்பது, கன்னி லக்கின அன்பர்களுக்கு வாழ்க்கை துணை, நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் வழியில் இருந்து அதிக அளவில் மன உளைச்சலை வாரி வழங்கும், பொது காரியங்களில் ஈடுபடுவது தங்களுக்கு கவுரவ குறைகளை தரக்கூடும், தேவையில்லாமல் மற்றவர்கள் விஷயங்களில் ஈடுபடுவது தங்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய இடர்பாடுகளை வாரி வழங்க வாய்ப்புண்டு, மன நிம்மதி வெகுவாக குறையும், புதிய கூட்டு முயற்ச்சி தங்களுக்கு நன்மைகளை வழங்க வாய்ப்பில்லை என்பதால், அவற்றை தவிர்ப்பது நலம் தரும், வெளியூர் வெளிநாடுகள் செல்லும் பொழுது அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்த பிறகு பயணம் மேற்கொள்வது தங்களுக்கும் தங்களை சார்ந்தவர்களுக்கும் நன்மை பயக்கும், மற்றவர்கள் பிரச்சனைகளில் தலையிடாமல் ஒதுங்கி நிற்பதே தங்களுக்கு சகல நன்மையையும் தரும், குறிப்பாக எதிர்பால் அமைப்பினரிடம் அதிக எச்சரிக்கையாக பழகுவது நலம் தரும், இல்லையெனில் அவர்களால் அதிக துன்பத்திற்கும், மன உளைச்சல்களுக்கும் ஆளாகும் சூழ்நிலையை தரும், கன்னி லக்கின அன்பர்களுக்கு குரு பகவானின் 7ம் பார்வை களத்திர பாவகத்திற்கு அதிக நெருக்கடிகளை தருகிறது என்பதால், வாழ்க்கை துணை, நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் வழியில் அதிக கவனமுடன் நடந்துகொள்வது சகல நன்மைகளையும் வாரி வழங்கும்.

குரு பகவான் தனது 9ம் பார்வையை பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்தை வசீகரிப்பது, கன்னி லக்கின அன்பர்களுக்கு பெரிய மனிதர்கள் ஆதரவும், சமூகத்தில் அந்தஸ்தும் உண்டாகும், பல திருத்தலங்களுக்கு புண்ணிய யாத்திரை சென்றுவரும் யோகம் உண்டாகும், நல்ல குரு அமைவார், அதன் வழியில் இருந்து ஜாதகர் சகல நன்மைகளையும் பெரும் யோகம் உண்டாகும், ஆராய்ச்சி மற்றும் பட்டய கல்வியில் தேர்ச்சி உண்டாகும், குடும்ப வாழ்க்கையிலும், வருமான ரீதியாகவும் தங்களுக்கு மிகுந்த முன்னேற்றம் உண்டாகும், இதுவரை பிரிந்து இருந்த தம்பதியர்கள் பெரிய மனிதர்களின் உதவி மூலம் இல்லற வாழ்க்கையில் ஒன்று இணையும் யோகம் உண்டாகும், ஜாதகரின் வார்த்தைகளுக்கு நல்ல மதிப்பும் மரியாதையும் உண்டாகும், குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும், செல்லும் இடங்களில் எல்லாம் நல்ல  வரவேற்பும் ராஜ மரியாதையும் கிடைக்கப்பெறுவீர்கள், மனதில் உள்ள பயம் அகலும், கலையை தொழிலாக செய்யும் அன்பர்களுக்கு யோகங்கள் வந்து சேரும், அரசு மரியாதை மற்றும் கவுரவம் கிடைக்க பெறுவீர்கள், கன்னி இலக்கின அன்பர்களுக்கு இனிவரும் ஒரு வருட காலம் பாக்கிய ஸ்தான வழியில் இருந்து ஸ்திரமான நன்மைகளும் யோகங்களும் உண்டாகும், மேலும் புதிய கண்டு பிடிப்புகள், புதிய சிந்தனைகள் ஜாதகரின் வாழ்க்கையில் மிகப்பெரிய நீண்ட கால யோகங்களை வாரி வழங்கும்.

குறிப்பு :

கன்னி லக்கின அன்பர்களுக்கு  தற்போழுது நடைபெறும் திசாபுத்திகள் 1,5,7,9ம்  பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், தற்போழுது நடைபெறும் திசா புத்திகள் மேற்கண்ட பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில், குரு பெயர்ச்சியினால் யாதொரு நன்மையையும் தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில் கொள்க, மேலும் குரு பெயர்ச்சி பலனை பற்றி தெளிவாக தெரிந்துகொள்ள, சுய ஜாதகத்துடன் நேரில் ஆலோசனை பெற்று கொள்வதே சாலச்சிறந்தது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696