வியாழன், 26 ஜனவரி, 2017

திருமண வாழ்க்கையில் சிறிதும் நிம்மதியில்லை, எதிர்காலம் எப்படி இருக்கும்?


கேள்வி :
காதல் திருமண வாழ்க்கையில் சிறிதும் நிம்மதியில்லை, கணவருடன் நித்தம் சண்டை சஞ்சாரவு, எங்களது எதிர்காலம்  எப்படி இருக்கும், மணவாழ்க்கையில் பிரிவு நேருமோ ? ஆண் குழந்தை ஒன்று உள்ளது, 
எங்களது மூவரின் ஜாதகம் எப்படி உள்ளது?

பதில் : 

சுய ஜாதக பாவக வலிமை உணராமல், விருப்பத்தின் அடிப்படையில் காதல் திருமணம் செய்வது, இன்னல்களை தருவதில் வியப்பில்லை, பெரும்பாலும் சுய ஜாதகம் வலிமையாக இருக்கும் பொழுது காதல் வாழ்க்கை கசப்பதில்லை, சுய ஜாதகம் வலிமை அற்று காணப்படும் பொழுது தாம்பத்திய வாழ்க்கையில் மிகுந்த இன்னல்களை தருகின்றது, சுய ஜாதகம் கடுமையாக பாதிக்கப்படும் பொழுது, காதல் திருமண வாழ்க்கை கடந்து, இல்லற வாழ்க்கையில் பிரிவை சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது, மேற்கண்ட தம்பதியர் விருப்பமனம் முடித்தவர்கள், இவர்களது சுய ஜாதக வலிமையையும், இனிவரும் எதிர்கால வாழ்க்கையை பற்றியும், இன்றைய சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!

ஜாதகி 

லக்கினம் : கடகம் 
ராசி : சிம்மம் 
நட்ஷத்திரம் : மகம் 2ம் பாதம் 

ஜாதகிக்கு வலிமை பெற்ற பாவக தொடர்புகள் :

3ம் வீடு வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம்.
5ம் வீடு பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம்,
6ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் ஜாதகிக்கு சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையாகும்.

ஜாதகிக்கு வலிமை அற்ற பாவக தொடர்புகள் :
1,7,10,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகிக்கு மேற்கண்ட பாவக வழியில் இருந்து 200% விகித இன்னல்களையும்.
2,4,8ம் வீடுகள் திடீர் இழப்பை தரும் ஆயுள் பாவகமான 8ம் பாவகத்த்துடன் சம்பந்தம் பெறுவது மேற்கண்ட பாவக வழியில் இருந்து ஸ்திரமான இன்னல்களையும்.
9,12ம் வீடுகள் சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, மேற்கண்ட பாவக வழியில் இருந்து கடுமையான இன்னல்களையும் தரும்.

தற்போழுது நடைபெறும் சந்திரன் திசை தரும் பலன்கள் ( 11/11/2016 முதல் 11/11/2026 வரை ) 

ஜாதகிக்கு கடந்த சூரியன் திசை 9,12ம் வீடுகள் சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வாழ்க்கையில் கடுமையான நெருக்கடிகளை தந்துள்ளது, ஆனால் தற்போழுது நடைபெறும் சந்திரன் திசை 3ம் வீடு வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களை தருவது வரவேற்கத்தக்க விஷயமாகும், மேலும் ஜாதகிக்கு சந்திரன் திசை சிறப்பான நன்மைகளை தரும், இனிவரும் சந்திரன் திசை 10 வருட காலமும் மிகுந்த யோகங்களை தரும் என்பதில் சந்தேகம் இல்லை.


ஜாதகர் 

லக்கினம் : கன்னி 
ராசி : மீனம் 
நட்ஷத்திரம் : உத்திரட்டாதி 3ம் பாதம் 

ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவக தொடர்புகள் :

1,3,7,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம்,
4,6,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம்,
5,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக தொடர்புகள் ஆகும்.

ஜாதகருக்கு வலிமை அற்ற பாவக தொடர்புகள் :

2,8ம் வீடுகள் திடீர் இழப்பை தரும் ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம்,
12ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் மேற்கண்ட பாவக வழியில் இருந்து கடுமையான இன்னல்களை தரும்.

தற்போழுது நடைபெறும் சுக்கிரனை திசை தரும் பலன்களை : ( 07/11/2012 முதல்  07/11/2032 வரை )
தற்போழுது நடைபெறும் சுக்கிரனை திசை ஜாதகருக்கு 5,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் லாப ஸ்தான பலனை ஏற்று நடத்துவது ஜாகருக்கு மேற்கண்ட பாவக வழியிலான நன்மைகளை, 100% சதவிகிதம் வாரி வழங்குகிறது.

தம்பதியர் இருவரது ஜாதகத்திலும் மிகவும் வலிமையான ஜாதகம் கணவரின் ஜாதகமே, இதில் மனைவியின் ஜாதகத்தில் பெரும்பாலான பாவகங்கள் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகிக்கு உகந்தது அல்ல, மேலும் ஜாதகி தனது ஜாதக வலிமையை உணர்ந்து, தனக்கு வாய்த்த கணவர் யோகமானவர் என்பதை கருத்தில் கொண்டு, சிறப்பாக இல்லற வாழ்க்கையை எதிர்கொள்வதே நல்லது, ஏனெனில் கணவரினால் ஜாதகிக்கு யாதொரு பாதிப்பும் இல்லை, ஜாதகி மட்டும் தனது நாவை அடக்கி குடும்ப வாழ்க்கையை சிறப்பாக மேற்கொள்வதே ஜாதகிக்கு சிறந்தது, இல்லை எனில் ஜாதகியின் சுய ஜாதக வலிமை இன்மை, இல்லற வாழ்க்கையில் துன்பத்தை தந்து, பிரிவை நோக்கி நகர்த்தி செல்லும், இருவரது ஜாதகத்திலும் 2ம் வீடான குடும்ப  ஸ்தானம் வலிமை இழப்பது, தேவையற்ற வாக்குவாதத்தை வளர்க்கும் என்பதால், தனது காதலுக்கு மரியாதை செய்து இருவரும் நாவடக்கத்துடன் இல்லற வாழ்க்கையை இனிமையாக நடத்துவதே சாலச்சிறந்தது, மேலும் தற்போழுது இருவருக்கும் நடைபெறும் திசைகளான, சந்திரன் மற்றும் சுக்கிரன் வலிமை பெற்ற பாவக பலனையே ஏற்று நடத்துவது, தாம்பத்திய வாழ்க்கையில் சகல யோகங்களையும் தரும்.

 மேலும் இருவரது சுயஜாதகத்திலும் பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகம் வலிமை பெற்று இருப்பது, தனது ஆண் குழந்தை வழியில் இருந்து மிதமிஞ்சிய யோக பலன்களை வாரி வழங்கும், இதனால் குழந்தையின் பொருட்டாவது தங்களுக்கு இல்லற வாழ்க்கையில் பிரிவு வர வாய்ப்பு இல்லை என்பதை கருத்தில் கொண்டு, வாழும் வாழ்க்கையை சிறப்பு மிக்கதாக மாற்றி கொள்ளலாம்.

குறிப்பு :

மேற்கண்ட தம்பதியரின் ஜாதகத்தில் மனைவியின் ஜாதகம் வலிமை இன்றி இருந்த போதிலும், கணவரின் ஜாதகம் மிகவும் வலிமையுடன் இருப்பது இல்லற வாழ்க்கையில் பிரிவை தாராது, மேலும் கணவர் எந்த சூழ்நிலையிலும் தனது வாழ்க்கை துணையை கைவிடமாட்டார் என்பது அவரது ஜாதக வலிமையில் இருந்து தெரிய வருகிறது, எனவே வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் ஒவ்வொருவரும், குறிப்பாக காதல் திருமணம் செய்துகொள்ள நினைக்கும் அனைவரும், தனது ஜாதக வலிமையை விட, தனக்கு வாழ்க்கை துணையாக வர இருக்கும் வரன் அல்லது வதுவின் சுய ஜாதகம் மிக மிக வலிமை மிக்கதாக தேர்வு செய்துவிட்டால், திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு யாதொரு குறையும் இருக்காது என்பதனை " ஜோதிடதீபம் " இங்கே அழுத்தமாக பதிவு செய்ய விரும்புகிறது.

வாழ்க வையகம், வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக