செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

காதல் கண்ணை மறைத்தால், வாழ்நாள் முழுவதும் கண்ணீர்தான் மிஞ்சும் !



இன்றைய இளைஞர்களின் அசட்டு துணிச்சலும், தான் திறமையானவன் என்ற எண்ணமும் தனது இளைமை பருவத்திற்கே உண்டான அறியாமையினாலும், வாழ்க்கை துணையை தேர்வு செய்வதில் மிகப்பெரிய தவறுகளை செய்கின்றனர், குறிப்பாக தனது விருப்படி வழக்கை துணையை தேர்வு செய்துகொள்வது என்பது ( ஆண் பெண் ) பேதம் இன்றி நடைபெறுகிறது, இனகவர்ச்சியை மட்டும் கருத்தில் கொண்டு தனக்கு பொருத்தமற்ற காதல் துணையை தேர்வு செய்து, தனது வாழ்க்கைக்கே தானே தீவிணையை தேடிக்கொள்கின்றனர், தனது வாழ்க்கை துணையாக கிழ்கண்ட ஜாதகியை காதலித்து திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும், இந்த ஜாதகியை திருமணம் செய்துகொண்டால் தனது வாழ்க்கையில் முன்னேற்றம் எப்படி இருக்கும் என்று தனது கேள்வியை ஒரு அன்பர் முன்வைத்து இருக்கின்றார், முதலில் பெண்ணின் ஜாதகத்தை ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே, ஜாதகத்தில் உள்ள நிறை குறைகளை சிந்தனைக்கு எடுத்து கொள்வோம்.


லக்கினம் : கடகம்
ராசி : சிம்மம்
நட்சத்திரம் : உத்திரம் 1ம் பாதம் 

திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய பெண்களின் ஜாதகத்தில் வலிமை பெற்று இருக்க வேண்டிய பாவகங்கள் ( 1,2,5,7,8,12 ) ஆகும் பெண்களின் சுய ஜாதகத்தில் மேற்கண்ட 1,2,5,7,8,12ம் பாவகங்கள் வலிமை பெற்று இருப்பது தாம்பத்திய வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றத்தையும், நன்மைகளையும் வாரி வழங்கும், குறிப்பாக பெண்களின் ஜாதகத்தில் மேற்கண்ட பாவகங்கள் மிகவும் வலிமை பெறுவது கணவனுக்கும், குடும்பத்திற்கும் மிகுந்த யோக பலன்களை நல்கும், லக்கினம் வலிமை பெறுவது ஜாதகியின் குணநலன்களையும், உடல் ஆரோக்கியம் மற்றும் ஜாதகியின் செயல்திறனையும் சிறப்பிக்கும், குடும்ப ஸ்தானம் வலிமை பெறுவது, இனிமையான பேச்சு, குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி, நிறைவான வருமானம், கணவருடன் அன்னியோன்னியம், மற்றும் சந்தோஷத்தை தரும், பூர்வ புண்ணியம் வலிமை பெறுவது ஜாதகியின் அறிவு, சமயோசித புத்திசாலித்தனம், குழந்தை பாக்கியம், சூழ்நிலைகளை சிறப்பாக கையாளும் வல்லமை என்ற வகையில் சிறப்புகளை தரும், களத்திர ஸ்தானம் வலிமை பெறுவது, கணவனுக்கு யோகத்தையும், இணக்கமான நல்லுறவையும், ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் வல்லமையையும் தரும், திருமண பந்தத்தின் புனிதத்தை காக்கும், ஆயுள் பாவகம் வலிமை பெறுவது ஜாதகியின் மூலம் அவரது கணவர் பெரும் யோகங்களையும், தீர்க்க சுமங்கலி யோகத்தையும், நீண்ட ஆயுள் மற்றும் திடீர் அதிர்ஷ்டம் மூலம் சிறப்பான வெற்றிகளையும் வாரி வழங்கும், அயனசயன ஸ்தானம் வலிமை பெறுவது தாம்பத்திய இன்பத்தையும், திருப்தியான யோக வாழ்க்கை, மனநிறைவுடன் கூடிய சந்தோஷத்தை தரும், திருமண பந்தத்தில் பிரிவு இல்லா நிலையை தரும், ஆக வாழ்க்கை துணையாக வரும் பெண்ணின் ஜாதகத்தில் மேற்கண்ட பாவகங்கள் வலிமையை உறுதி செய்து கொண்டு அதன் பிறகு, திருமண பந்தத்தில் இணையும் அன்பர்களுக்கு, திருமண வாழ்க்கையில் வெற்றி மேல் வெற்றி நிச்சயம், இனி மேற்கண்ட ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையை பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

1,2,7ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகிக்கு லக்கின வழியில் இருந்து அதிக மனஉளைச்சலுக்கும், போராட்டத்திற்கும் ஆளாக்கும், எதிலும் திருப்தி அற்ற நிலை, மனக்கிலேசம், நம்பிக்கை அற்ற தன்மை, உறுதியில்லா மனப்பாண்மையை தரும், குடும்ப ஸ்தானம் பாதிக்கப்படுவது, குடும்ப வாழ்க்கையில் திருப்தி இல்லை, வீண் வாக்குவாதம், பொருளாதார நெருக்கடி, நிம்மதியின்மை, எப்பொழுதும் சண்டை சச்சரவு, குடும்ப வாழ்க்கையில் கடுமையான பாதிப்புகள் என்ற வகையில் இன்னல்களை தரும். களத்திர ஸ்தானம் வலிமை இழப்பது ஜாதகி தனது கணவர் வழியில் இருந்து கடுமையான மனபோராட்டத்தை சந்திக்கும் சூழ்நிலையை தரும், ஒற்றுமை இன்மை, தாம்பத்திய வாழ்க்கையில் இன்னல்கள், வீண் வெறுப்பு, திருப்தி அற்ற நிலை, அனைத்திலும் குற்றம் காணும் சுபாவம் என ஜாதகியை இல்லற வாழ்க்கையில் இணக்கம் காண்பதற்கு உண்டான வாய்ப்பை தாராது, எனவே ஜாதகியின் இல்லற வாழ்க்கை துன்பத்தின் விளிம்பில் வந்து நிற்கும்.

5ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது நல்ல புத்திர சந்தானத்தை தாராது, ஜாதகியின் அறிவு திறனும் மட்டுப்படும், முட்டாள்தனமான செய்கைகள் மூலம் ஜாதகி தனது வாழ்க்கையை தானே கெடுத்துக்கொள்வார், அனைத்திலும் தோல்வி என்ற நிலையை தரும், குல தேவதையின் ஆசியை பெற ஜாதகி பகிர்தனா முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலையை தரும், தனக்கு வரும் இன்னல்களை ஜாதகியால் தவிர்க்க இயலாது, புத்திர பாக்கியத்திலும் இன்னல்களை தரும்.

8ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகிக்கு பரதேச ஜீவனத்தை தரும், தனது பூர்வீகத்தை விட்டு வெளியில் சென்று ஜீவிக்கும் தன்மையை தரும், குறிப்பாக இந்த அமைப்பு ஜாதகிக்கு நன்மையை தரும் அமைப்பு அல்ல, கணவன் வழியில் இருந்து தானும், தனது வழியில் இருந்து கனவரும் கடுமையான இழப்புகளை சந்திக்கும் நிலையை தரும்.

12ம் வீடு குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, குடும்ப வாழ்க்கையில் வரும் கடுமையான பாதிப்புகளை உறுதிப்படுத்துகிறது, குறிப்பாக தனம் சார்ந்த தொந்தரவுகள் கடுமையான நெருக்கடிகளை தரும், அயனசயன சுகம் என்பது ஜாதகிக்கு பெரும் நெருக்கடிகளை தரும், வாழ்க்கையை கேள்விக்குறியாக மாற்றும் தன்மை பெற்றது மேற்கண்ட பாவக தொடர்பு, எனவே ஜாதகியை காதல் திருமண செய்து கொள்ள விரும்பும் அன்பரது நிலை மிகுந்த கவலைக்கிடமாக மாற அதிக வாய்ப்பு உள்ளது, ஒருவேளை ஜாதகியை காதல் திருமணம் செய்துகொள்ள விரும்பும் அன்பரது சுயஜாதகம் மிக மிக வலிமையுடன் இருந்தால் மட்டுமே, இல்லற வாழ்க்கை ஓரளவிற்கு நலம் பெரும்.

குறிப்பு :

திருமணம் செய்வதற்கு முன்பு தம்பதியர் இருவரும், தமது சுய ஜாதக வலிமையை உணர்ந்து இல்லற வாழ்க்கையில் இணைவது, சகலவிதங்களில் இருந்து நன்மைகளை தரும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக