சனி, 11 மார்ச், 2017

லக்கினம் மற்றும் ஏழாம் பாவகத்தை வலிமை பெற செய்யும் ராகுகேது !



சுய ஜாதகத்தில் தான் அமரும் பாவகத்தை முழுவதும் தமது ஆளுமையின் கீழ் கொண்டுவரும் வல்லமை பெற்ற சாயா கிரகங்கள், ஒருவருக்கு தாம் அமர்ந்த பாவக வழியிலான நன்மைகளை தரும் அமைப்பில் இருப்பின் சம்பந்தப்பட்ட ஜாதகர் கொடுத்து வைத்தவர் எனலாம், ஏனெனில் சுய ஜாதகத்தில் அதி வலிமை வாய்ந்த கிரகங்களான ராகுகேது தாம் அமர்ந்த பாவகத்தை வலிமை பெற செய்யும் பொழுது சம்பந்தப்பட்ட பாவக வழியிலான யோகங்களை முழு அளவில் பரிபூர்ணமாக பெறுவார், ( உதாரணமாக அதிகாரமும்,அறிவு திறனும், வலிமையும் , ஒருங்கே அமையப்பெற்ற ஒரு நாட்டின் மன்னன் , நல்லவராக இருப்பின் அவர் சார்ந்த சமூகம் மற்றும் மக்கள் சிறப்பான முன்னேற்றங்களையும், நன்மைகளையும் எப்படி பெறுவார்களோ, அதற்க்கு இணையான நன்மைகளை )  சாயா கிரகங்கள் ஜாதகருக்கு வாரி வழங்கும், மேலும் தனிப்பட்ட சிறப்பு திறமைகளை இயற்கையாக பிறவியிலேயே பெற்று இருப்பார்கள் .

குறிப்பாக சுய ஜாதகத்தில் சாயா கிரகமெனும் ராகு கேது, லக்கினம் மற்றும் களத்திர பாவகத்தை வலிமை பெற செய்யும் பொழுது ஜாதகர் லக்கினம் மாற்று களத்திர ஸ்தான வழியில் இருந்து பெரும் யோக வாழ்க்கைக்கு சிறு குறையும் இருக்காது, மேற்கண்ட அமைப்பு சிம்மம் மற்றும் கும்ப லக்கினத்தை பெற்றவர்களுக்கு இருப்பின், அவர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்று சந்தேகம் இன்றி கூறலாம், ஜாதகரின் உடல் நலம் மனநலம், செயல்திறன் ஆகியவை ஸ்திரமான இயக்கத்தை பெற்று இருக்கும், சுய கட்டுப்பாடு, ஒழுக்கம், ஸ்திரமான அறிவு திறன், தெய்வ அனுக்கிரகம், மிதம் மிஞ்சிய புத்திசாலித்தனம் மூலம் அனைத்திலும் வெற்றி வாய்ப்பினை பெறுவார்கள்.


லக்கினம் : கும்பம்
ராசி : மேஷம்
நட்ஷத்திரம் : அஸ்வினி 3ம் பாதம்.

மேற்கண்ட ஜாதகருக்கு ஜெனன ஜாதகத்தில் லக்கினத்தில் ராகுவும், களத்திர ஸ்தானத்தில் கேதுவும் அமர்ந்து இருப்பதை சர்ப்ப தோஷ ஜாதகம் என்று நிர்ணயம் செய்வது  பொதுவான அணுகு முறை மேலும் அது உண்மைக்கு புறம்பானது, மேற்கண்ட அமைப்பில் சுய ஜாதகத்தை லக்கினம் மற்றும் களத்திர ஸ்தானத்தில் அமரும் சாயா கிரகங்களான ராகுகேது தான் அமர்ந்த பாவகத்தை 100% விகித வலிமை பெற செய்கின்றனர், எனவே லக்கினத்தில் அமர்ந்த  ராகு பகவானால் ஜாதகர் லக்கினம் முழு வலிமை பெற்றும், களத்திர ஸ்தானத்தில் அமர்ந்த கேது பகவானால் 7ம் பாவகம் முழு வலிமை பெற்றும் ஜாதகர் சம்பந்தப்பட்ட பாவக வழியிலான யோக பலன்களை 100% விகிதம் பெரும் வல்லமையை பெறுகின்றார், எனவே சுய ஜாதகத்தில் சாயா கிரகங்கள் அமர்ந்த பாவக வழியில் இருந்து வலிமை பெற்று நன்மையை தருகின்றாரா ? வலிமை அற்று தீமையை தருகின்றாரா ? என்பதில் தெளிவு பெறுவது அவசியமாகிறது.

மேற்கண்ட ஜாதகருக்கு ஜெனன ஜாதகத்தில் ராகு பகவான் லக்கினத்தில் வலிமை பெற்று அமர்ந்து இருப்பது, ஜாதகருக்கு லக்கின பாவக வழியில் இருந்து சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும், குறிப்பாக ஜாதகரின் லக்கினம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு, அதிர்ஷ்டத்தை குறிக்கும் 11ம் ராசியாக அமைவது, ஜாதகருக்கு லக்கின பாவக வழியிலான அதிர்ஷ்டங்களை ராகு பகவானால் கிடைக்க பெறுவார், வளரும் சூழ்நிலையில்  அதிர்ஷ்ட யோகங்களை பெறுவதும், மிதமிஞ்சிய தன்னம்பிக்கை எப்பொழுதும் தனது மனதில் கொண்டவராக திகழ்வார், சிறந்த மதி நுட்பமும் கூரியஅறிவுத்திறனும் ஜாதகருக்கு இயற்கையிலேயே அமைந்து இருக்கும், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் தன்மையையும், தான் செய்யும் காரியங்கள் அனைத்திலும் ஓர் நேர்த்தியை கடைபிடிக்கும் வல்லமை பெற்றவராக திகழ்வார், சூழ்நிலைகளை கையாள்வதில் இவருக்கு நிகராக வெறும் எவரும் இல்லை எனலாம், முற்போக்கு சிந்தனை, மெய்பொருள் கண்டுணர்ந்து செயல்படும் யோகம், அதிர்ஷ்டத்தின் மூலம் வாழ்க்கையை சிறப்பிக்கும் வல்லமை என ஜாதகருக்கு சுபயோகங்கள் வலிமையாக வேலை செய்யும், குறிப்பாக ராகு காலத்தில் ஜாதகர் செய்யும் விஷயங்கள் 100% விகித வெற்றிகளை வாரி வழங்கும், நீண்ட ஆயுள், தெளிந்த நல்லறிவு, விழிப்பு மிக்க மனநிலை, ஜாதகரின் வாழ்க்கையில் முழு அளவிலான யோகங்களை தங்கு தடையின்றி தரும்.

கேது பகவான் களத்திர ஸ்தானத்தில் வலிமை பெற்று அமர்ந்து இருப்பது, ஜாதகருக்கு களத்திர பாவக வழியில் இருந்து சுப யோகங்களை வழங்கும், லக்கினம் ஜாதகர் சார்ந்த விஷயங்களையும், களத்திர பாவகம் ஜாதகருடன் தொடர்பு பெரும் நபர்களான , வாழ்க்கை துணை, நண்பர்கள், கூட்டாளிகள், வெளிவட்டார பழக்க வழக்கங்கள், பொதுமக்களால் சார்ந்த விஷயங்களையும் தெளிவு படுத்தும், மேற்கண்ட ஜாதகருக்கு களத்திர பாவகம் கேது பகவானால் 100% விகித வலிமை பெறுவது ஜாதகருக்கு மேற்கண்ட அன்பர்களின் தொடர்புகள் மூலம் மிகுந்த நன்மைகளையும் முன்னேற்றங்களையும்  ஜாதகர் தனது வாழ்நாள் முழுவதும் பெறுவதற்கு உண்டான  வாய்ப்புகளை வழங்கு, மேலும் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜாதகரின் காலத்திர ஸ்தானம் 5ம் ராசியான சிம்மத்தில் அமைவது, சிறந்த வாழ்க்கை துணையையும், அவர்கள் வழியிலான மதி நுட்ப ஆலோசனை மூலம் வாழ்க்கையில் பெரும் வெற்றிகளையும் குறிக்கின்றது, ஜாதகருக்கு  அமையும் வாழ்க்கை துணை, நண்பர்கள், மற்றும் கூட்டாளிகள் வழியில் இருந்து  மிகுந்த அதிர்ஷ்டங்களை பெறுவார், உலக அறிவு ஜாதகருக்கு மிதம்மிஞ்சிய அளவில் கிரகிக்கும் வல்லமையை தரும், வெளியூர் வெளிநாடுகளில் இருந்து வரும் முன்னேற்றம் என்பது ஜாதகருக்கு அபரிவிதமானதா அமையும்.

சுய ஜாதகத்தில் ஜாதகருக்கு எப்பொழுதெல்லாம் 1,7ம் பாவக பலன்களை, நவகிரக திசாபுத்திகள் ஏற்று நடத்துகிறதோ அப்பொழுதெல்லாம், ஜாதகர் மேற்கண்ட பாவக வழியிலான சுபயோகங்களை தன்னிறைவாக பெறுவார் என்பது கவனிக்கத்தக்க முக்கிய அம்சமாகும்.

குறிப்பு :

சுய ஜாதகத்தில் சாயா கிரகங்கள் வலிமை பெறுவது, சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு தான் அமர்ந்த பாவக வழியில் இருந்து 100% விகித நன்மைகளை மட்டுமே செய்யும் என்பதே உண்மை நிலை, எனவே சுய ஜாதகத்தில் ராகுகேது வலிமை பெற்று அமர்ந்து இருக்கின்றதா? வலிமை அற்று அமர்ந்து இருக்கின்றதா ? என்பதில் மட்டும் தெளிவு பெறுவது அவசியமாகிறது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

1 கருத்து:

  1. How to find balam.balaveenam I'm kumba lagnam ,lagnathil rahu,yelil kethu chandran,thirumanam vasathi kuraivana manaivi amainthullar,ithanal athiga vethanai padugiren ,9il sukran atchi ,2il sevvai,4il vakra guru,sun,budhan 10th,sani in 11th house ,Chandra dasa sukran starts this month ,pls give any solution for this regards mohan

    பதிலளிநீக்கு