சனி, 11 மார்ச், 2017

திருமணம் பொருத்தம் : இல்லற வாழ்க்கையில் சுபயோகங்களை வழங்கும், பாவக வலிமையிலான திருமண பொறுத்த நிர்ணயம் !



திருமண பொருத்தம் காண்பதில், நட்ச்சத்திர பொருத்தம், தோஷபொருத்தம், ராகுகேது தோஷ பொருத்தம், செவ்வாய் தோஷ பொருத்தம், ஏக திசை பொருத்தம், திசாசந்திப்பு பொருத்தம், ராஜ்ஜுபொருத்தம் ஆகிய விஷயங்களுக்கு ( உண்மைக்கு புறம்பான விஷயங்கள் ) முன்னுரிமை தந்து, திருமண பொருத்தம் காண்பதை விடுத்து, சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமையை அடிப்படையாக கொண்டு திருமண வாழ்க்கையை நிர்ணயம் செய்வதே சிறந்ததென "ஜோதிடதீபம்" கருதுகிறது, ஏனெனில் சுய ஜாதகத்தை ஆளுமை செய்வதில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமையே சுய ஜாதகத்திற்கு ஆதாரமாக விளங்குகிறது, சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை அறியாமல் நிர்ணயம் செய்யப்படும் ( நட்ச்சத்திர பொருத்தம், தோஷபொருத்தம், ராகுகேது தோஷ பொருத்தம், செவ்வாய் தோஷ பொருத்தம், ஏக திசை பொருத்தம், திசாசந்திப்பு பொருத்தம், ராஜ்ஜுபொருத்தம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ) திருமணங்கள் தம்பதியருக்கு சுபயோக வாழ்க்கையை வழங்கியதா? என்றால் மிக பெரிய கேள்விக்குறியே நமக்கு முன்பு நிற்கும், மேற்க்கண்ட விஷயங்களுக்கு முன்னுரிமை தந்து செய்த திருமணங்கள், தாம்பத்திய வாழ்க்கையில் பிரிவினையை தரவில்லையா ? என்ற கேள்வியை முன்வைத்தால் அதற்க்கு பதில் " இல்லை " என்பதே, இதை நாம் விவாகரத்து பெற்ற தம்பதியர்கள் ஜாதகம் கொண்டு அறிய இயலும்.

நட்ச்சத்திர பொருத்தம், தோஷபொருத்தம், ராகுகேது தோஷ பொருத்தம், செவ்வாய் தோஷ பொருத்தம், ஏக திசை பொருத்தம், திசாசந்திப்பு பொருத்தம், ராஜ்ஜுபொருத்தம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு திருமணம் செய்த தம்பதியரும் இல்லற வாழ்க்கையில் விவாகரத்து பெற்றதற்க்கு காரணமாக அவர்களது சுய ஜாதகத்தில் பாவகங்களின் வலிமை இன்மையும், வலிமை அற்ற பாவகத்தின் பலனை திருமணத்திற்க்கு பிறகு நடைபெற்ற திசாபுத்திகள் பாதிக்கப்பட்ட பாவக பலனை தம்பதியருக்கு ஏற்று நடத்தியதே மிக முக்கிய காரணமாக அமைந்திருக்கும், இதை பல உதாரண ஜாதகம் கொண்டு நாம் தெளிவு பெற இயலும், இருப்பினும் இன்றைய சிந்தனைக்கு நாம் திருமண  பொருத்தம் காண்பதில் சுய ஜாதகத்தில் பாவக வலிமையின் அடிப்படையில் நிர்ணயம் செய்வதால் தம்பதியர் பெரும் யோக வாழ்க்கையை பற்றி சிந்தனைக்கு எடுத்து கொள்வோம் அன்பர்களே !

பொதுவாக திருமண வாழ்க்கையில் சுபயோகங்களையும், தாம்பத்திய வாழ்க்கையில்  வெற்றிகளையும் பெறுவதற்கு சுய ஜாதகத்தில் சில பாவகங்களின் வலிமையும், திருமணத்திற்கு பிறகு வலிமை பெற்ற பாவக பலனை  ஏற்று நடத்தும் திசாபுத்திகளும் காரணமாக அமைகிறது, உதாரணமாக கீழ்கண்ட ஜாதகங்களை ஆய்வு எடுத்துக்கொள்வோம்.

ஜாதகர் :


லக்கினம் : ரிஷபம்
ராசி : மீனம் 
நட்ஷத்திரம் : ரேவதி 4ம் பாதம் 

ஜாதகி :

லக்கினம் : கன்னி 
ராசி : கன்னி 
நட்ஷத்திரம் : அஸ்தம் 3ம் பாதம் 

மேற்கண்ட வரன் வது இருவரது ஜாதகத்திலும் சுய ஜாதக பாவக வலிமையின் அடிப்படையில் திருமண பொருத்தத்தை நிர்ணயம் செய்வோம் அன்பர்களே !

திருமண வாழ்க்கையில் சுபயோகங்களையும் இணைபிரியா தாம்பத்திய வாழ்க்கையையும் பெறுவதற்கு, வரன் வது ஜாதகத்தில் 2,5,7,8,12 பாவகங்கள் வலிமை பெற்று இருக்கவேண்டியது அவசியமாகிறது, மேலும் திருமணத்திற்கு  பிறகு வரும் திசாபுத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் பொழுது, தம்பதியர் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களும்  தேடி வரும், மேற்கண்ட வரன் ஜாதகத்தில் 2,7ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகவும் வலிமையுடன் உள்ளது ஜாதகரின் திருமண வாழ்க்கையில் குடும்பம் மற்றும் களத்திர ஸ்தான வழியிலான  சுபயோகங்களை வாரி வழங்கும், 5ம் வீடு பூர்வபுண்ணிய ஸ்தானமான  5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வலிமை பெற்று இருப்பது  திருமணத்திற்கு  பிறகு தனக்கான ஓர் நல்ல ஆண் வாரிசை பெரும் யோகம் பெற்றவர் என்பதை உறுதிப்படுத்துகிறது, 8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான  12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மட்டும் ஜாதகருக்கு மேற்கண்ட பாவக வழியிலான இன்னல்களை தரும்.

வது ஜாதகத்தில் 5,7ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது  வரவேற்க தக்க அம்சமாகும், குறிப்பாக 5ம் பாவகம் வலிமை பெறுவது நல்ல புத்திர பாக்கியத்தையும், 7ம் பாவகம் வலிமை பெறுவது ஜாதகி தனது  வாழ்க்கை துணை உடன் இணைபிரியா யோக வாழ்க்கையை பெறுவதை  தெளிவு படுத்துகிறது, 2,8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன்  சம்பந்தம் பெறுவது, ஜாதகிக்கு மேற்கண்ட பாவக வழியில் இருந்து ஸ்திரமான இன்னல்களை தரும் என்பது தெளிவாகிறது, வரன் வது இருவரது  ஜாதகத்திலும் பரஸ்பரம் சில பாவக பெருத்தங்கள் வலிமை பெற்று இருப்பினும் ஆணுக்கு 8,12ம் பாவகங்கள் பாதிக்கப்படுவதும், பெண்ணுக்கு 2,8,12ம் பாவகங்கள் பாதிக்கப்படுவதும் சற்று சிரமம் தரும் அமைப்பாகும், இருப்பினும்  இருவரது களத்திர ஸ்தானங்களும் வலிமை பெற்ற லாபஸ்தானத்துடன் சம்பந்தம்  பெறுவது, தாம்பத்திய வாழ்க்கையில் யோகத்தையே வாரி வழங்கும், பாதிக்கப்பட்ட பாவக வழியில் இருந்து தம்பதியருக்கு  சில இன்னல்கள் வந்த போதிலும், பிரிவினை  தாராது என்பது  வரவேற்கத்தக்க விஷயம்.

மேலும் தற்போழுது ஜாதகருக்கு நடைபெறும் சூரியன் திசை சனி  புத்தி  4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருவதும், ஜாதகிக்கு நடைபெறும் ராகு திசை சுக்கிரன் புத்தி 3,9ம் வீடுகள்  பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருவதும்  வரவேற்க தக்க விஷயமாகும், எதிர்வரும் திசை தரும் பலன்கள் பற்றி அடுத்த பதிவில் சிந்திப்போம்.

ஜாதகிக்கு 1,5,7,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்த பெறுவது  லக்கின வழியில் இருந்து சுய முன்னேற்றத்தையும், ஐந்தாம் பாவக  வழியில் இருந்து தனது குழந்தை மற்றும் அறிவுத்திறன் மூலம், களத்திர பாவக  வழியில் இருந்து தனது வாழ்க்கை துணை மற்றும் நண்பர்கள் மூலம், லாப ஸ்தான வழியில் இருந்து தன்னம்பிக்கை மற்றும் அதிர்ஷ்டம் மூலமும் மிதம்மிஞ்சிய யோக வாழ்க்கையை பெறுவார் என்பதால், ஜாதகிக்கு திருமண வாழ்க்கைக்கு பிறகே சுபயோக வாழ்க்கை கிடைக்கும் என்பது கவனிக்கத்தக்க விஷயம், எனவே ஜாதகி திருமணத்திற்கு பிறகே சகல சௌபாக்கியங்களையும் பெறுவார் என்பது உறுதியாகிறது.

குறிப்பு :

சுய ஜாதகத்தில்  2,5,7,8,12ம் பாவகங்கள் பாதிக்கப்பட்டு இருப்பின், சம்பந்தப்பட்ட ஜாதகர் அல்லது ஜாதகி  தேர்வு செய்யும் வாழ்க்கை துணையின் ஜாதகத்தில்  2,5,7,8,12ம் பாவகங்கள் பாதிக்கப்படாமல் இருப்பது, தாம்பத்திய வாழ்க்கையில் சிறப்புகளை தரும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக