புதன், 8 மார்ச், 2017

காலதாமதமாக திருமணம் செய்துகொள்வது யோக வாழ்க்கையை வழங்குமா ?


பொதுவாக சுய ஜாதகத்தில் காலதாமத திருமணம் பரிந்துரை செய்யும் சூழல் லட்சத்தில் ஒன்று அல்லது இரண்டு வரக்கூடும் அதற்க்கு காரணம் ஜாதகருக்கோ, ஜாதகிக்கோ சுய ஜாதகத்தில் 2,5,7,8,12ம் பாவகங்கள் அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டு, நடைபெறும் திசாபுத்திகள் பாதிக்கப்பட்ட பாவக பலனை ஏற்று நடத்திக்கொண்டு இருக்கும் பொழுது, சம்பந்தப்பட்ட ஜாதகரோ, ஜாதகியோ திருமணத்திற்கு உண்டான முயற்சிகளை மேற்கொள்ளும் பொழுது, திருமணம் அமையாது, வீண் விரையம் மற்றும் மனஉளைச்சல்தான் அதிகரிக்கும், ஆனால் சுய ஜாதகத்தில் மேற்கண்ட பாவகங்கள் நல்ல வலிமையுடன் இருந்து, ஜாதகரை தாமத திருமணத்திற்கு பரிந்துரை செய்வது என்பது முற்றிலும் தவறான அணுகுமுறை, ஏனெனில் சுய ஜாதகத்தில் மேற்கண்ட பாவகங்கள் வலிமை பெற்று இருக்கும் பொழுதும், தற்போழுது நடைமுறையில் உள்ள திசை புத்தி வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் பொழுதும், ஜாதகருக்கு சரியான பருவ வயதில் திருமணம் கூடி வரும், இதை உணர்ந்து சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு திருமணம் செய்து வைப்பதே உகந்த நடைமுறையாகும், ஒருவேளை சில விஷயங்களை காரணம் கூறி திருமண வாழ்க்கையை தள்ளிப்போடுவது, விரும்பத்தகாத உறவுகளை உருவாக்கி விடும், ஏனெனில் காலமும் நேரமும் எவருக்கும்  காத்து இருக்காது.

( பொதுவாக தொழில்,வீடு,வசதி,வாய்ப்புகள், வண்டி வாகனம், சொத்து, நிலம், பொருளாதார விஷயங்களை நாம் எந்த வயதிலும் சம்பாதித்து கொள்ள இயலும், ஆனால் திருமணம் என்பது பருவ வயதில் செய்துகொள்வதே உகந்தது, இந்த விஷயத்தில் தாமதம் செய்ய செய்ய நிச்சயமாக சுய ஜாதகத்தில் உள்ள அனைத்து யோகங்களும் பாழ்படும். )

சுய ஜாதகத்தில் 2,5,7,8,12ம் பாவகங்கள் அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தால் மட்டுமே சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு கால தாமதத்தை பரிந்துரை செய்ய வேண்டும், மேற்கண்ட பாவகங்கள் பாதிக்கப்பட்டு இருந்தாலும், திருமணத்திற்கு உகந்த வயதில் நடைபெறும் திசாபுத்திகள் வலிமை பெற்ற பாவாக பலனை ஏற்று நடத்தினால், சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு காலதாமதம் செய்யாமல் திருமண வாழ்க்கையை அமைத்து தந்துவிடுவது, சிறந்த யோகம் நிறைந்த வாழ்க்கை துணையை பெறுவதற்கு வழிவகுக்கும், நடைபெறும் திசாபுத்தி ஜாதகருக்கு அந்த வாய்ப்பை நல்கிவிடும், சுய ஜாதகத்தில் மேற்கண்ட பாவகங்கள் யாவும் பாதிக்கப்பட்டு, நடைபெறும் திசாபுத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை தரவில்லை என்ற சூழ்நிலையில் மட்டுமே தாமத திருமணத்தை பரிந்துரை செய்ய வேண்டும், அதுவும் பாதிக்கப்பட்ட பாவக பலன்கள் நடைமுறையில் உள்ள காலம் வரையில் மட்டுமே இந்த விஷயம் பொருந்தும், இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம்.


லக்கினம் : விருச்சகம்
ராசி : கடகம்
நட்ஷத்திரம் : பூசம் 3ம் பாதம்

ஜாதகருக்கு சுய ஜாதகத்தில்   2,5,7,8,12ம் பாவகங்களில் 8,12ம் பாவகத்தை தவிர மற்ற பாவகங்கள் மிகவும் வலிமையுடன் இருப்பது வரவேற்க தக்க அம்சமாகும், மேலும் 8ம் பாவகம் உபய ராசி தொடர்பை பெறுவதால் அதனால் யாதொரு இன்னல்களும் வாராது, 12ம் பாவகம் பாதிக்கப்படுவது மட்டுமே சற்று இன்னல்களை தர கூடும், ஜாதகர் தேர்வு செய்யும் வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் 12ம் பாவகம் பாதிக்கப்படாமல் இருப்பதுடன், 2,5,7,8ம் பாவகங்கள் வலிமையுடன் இருக்கும் ஓர் வதுவை தேர்வு செய்தால் போதும், ஜாதகரின்  திருமண வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமையும், குறிப்பாக வதுவின் ஜாதகத்தில் 2,5,7,8,12ம் பாவகங்கள் வலிமை பெற்று இருப்பதுடன், தற்போழுது நடைபெறும் திசா புத்தி, எடுத்துவரும் திசா புத்தி வலிமை பெற்ற பாவக பலனை  ஏற்று நடத்தும் அமைப்பில், பொருத்தமான வரனை தேர்வு செய்து  கொடுப்பது மட்டுமே ஜோதிடரின் கடமை.

மேற்கண்ட ஜாதகருக்கு தற்போழுது  நடைபெறும் திசை கேது என்பதால், அது இன்னல்களை  தரும் என்ற குருட்டு நம்பிக்கையில் ஜாதகருக்கு 31 வயதுக்கு மேல் திருமணம் செய்வது உகந்தது என்று பரிந்துரை செய்து இருக்க  கூடும் என்று  நம்புகிறேன், நடைபெறும் திசாபுத்திகள் எதுவென்ற போதிலும், சமபந்தப்பட்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்ற விஷயம் தெரியாத நிலையிலேயே மேற்கண்ட குழப்பங்கள்  ஏற்படுகிறது, ஜாதருக்கு தற்போழுது நடைபெறுவது  கேது  திசை ( 02/01/2014 முதல் 02/01/2021 வரை ) என்ற  போதிலும் அவர் ஏற்று நடத்தும் பாவக  தொடர்பு என்பது, 5,10,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் லாப ஸ்தான பலனை ஏற்று நடத்துவது வரவேற்கத்தக்க அம்சமாகும், மேலும் கேது திசை ஜாதகருக்கு 5,10,11ம் பாவக வழியில் இருந்து  யோகங்களையே வாரி வழங்குகிறது.

தற்போழுது கேது திசையில் நடைபெறும் ராகு புத்தியும்  ( 02/12/2016 முதல் 21/12/2017 வரை ) ஜாதகருக்கு 10ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் லாப ஸ்தான பலனை ஏற்று நடத்துகிறது என்பதால் ஜாதகர் திருமண வாழ்க்கையை தள்ளிப்போடாமல், உடனடியாக திருமணத்திற்கு உண்டான முயற்சிகளை மேற்கொண்டு வாழ்க்கையில் நலம்  பெறுவது அவசியமாகிறது,

குறிப்பு :

வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் பொழுது வதுவின் ஜாதகத்தில் 2,5,7,8,12ம் பாவகங்கள் மிகவும் வலிமை பெற்று இருப்பது, ஜாதகருக்கு யோகம் மிகுந்த வாழ்க்கையை வாரி வழங்கும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக