சனி, 8 ஏப்ரல், 2017

அதிர்ஷ்டம் நிறைந்த மனைவி அமையும் யோகமும், திருமண பொருத்தமும் !


 திருமண வாழ்க்கையில் யோகத்தையும், தம்பதியா வாழ்க்கையில் மனமகிழ்வையும் வாரி வழங்குவதில் நட்ச்சத்திர பொருத்தத்தை விட சுய ஜாதக பாவக வலிமையே முதன்மை வகிக்கிறது என்றால் அது மிகையில்லை, சுய ஜாதகம் வலிமை உள்ள ஓர் வரனையோ அல்லது வதுவையோ திருமணம் செய்துகொள்ளும் அன்பர்களுக்கு தனது ஜாதகம் பாவக வலிமை குறைவாக இருந்தாலும், இல்லற வாழ்க்கை யோகம் நிறைந்ததாகவும், மகிழ்ச்சிக்கு எப்பொழுதும் குறைவு இல்லாத நிலையையும் தரும், எனவே தனது வாழ்க்கை துணையாக வரும் அன்பரின் சுய ஜாதக வலிமையை கருத்தில் கொள்வது சம்பந்தப்பட்ட வரனுக்கோ வதுவுக்கோ மிகுந்த நன்மைகளையும் யோகங்களையும் தரும் என்றால் அது மிகையில்லை.

தனது ஜாதகம் வலிமை அற்று இருந்த போதிலும், தனது வாழ்க்கை துணையின் ஜாதக வலிமையை தனக்கு சாதகமாக அமைத்துக்கொண்டு வாழ்க்கையில் பெற்றி பெரும் யோகம் சிலருக்கே உண்டு, தனது ஜாதக வலிமை தனது வாழ்க்கை துணையின் ஜாதக வலிமை  இரண்டில் சிறப்பானது எது என்பதை தெளிவாக உணர்ந்து அதன் வழியில் வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக்கொள்வதே புத்திசாலித்தனம் எனலாம், இதை ஓர் உதாரண ஜாதகம்  கொண்டு தெளிவு பெறுவோம்.


லக்கினம் : விருச்சகம்
ராசி : மீனம்
நட்ஷத்திரம் : உத்திரட்டாதி 1ம் பாதம்

ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவக தொடர்புகள் :

2,5ம் வீடுகள் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு சிறப்பான குடும்ப வாழ்க்கை, கைநிறைவான வருமான வாய்ப்புகள், இனிமையான பேச்சு திறமை, பொருளாதாரத்தில் தன்னிறைவு என்ற வகையில் யோகத்தையும், சிறந்த அறிவு திறன், அதிபுத்திசாலித்தனம், தெய்வீக அனுக்கிரகம், கற்ற கல்வி  வழியிலான முன்னேற்றம், தனது குழந்தைகள் வழியில் சிறப்பு, சூழ்நிலைகளை சிறப்பாக கையாளும் வல்லமை, எதிர்கால வாழ்க்கைக்கு உண்டான திட்டமிடுதல்கள் என்ற வகையில் நன்மைகளை வாரி வழங்கும்.

8,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு தனது வாழ்க்கை துணை வழியிலான  பொருளாதார உதவி, முழுமையான ஆதரவு, புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கை, நீடித்த அதிர்ஷ்டம் நல்ல குணம், வாழ்க்கை துணையின் மூலம் ஜாதகர் பொருளாதார ரீதியாக மிக பெரிய அந்தஸ்த்தை பெரும் யோகம், மிதம்மிஞ்சிய தன்னம்பிக்கை, முற்போக்கு சிந்தனை மூலம் வாழ்க்கையில் சகல நிலைகளில் இருந்தும் யோக வாழ்க்கையை பெரும் தன்மை, எதிர்பாலின அமைப்பினரால் மிகுந்த முன்னேற்றத்தை பெரும் அமைப்பு என்ற வகையில் நன்மைகளை தரும்.

தற்போழுது நடைபெறும் சுக்கிரன் திசை தரும் பலன்கள் : ( 18/09/2016 முதல் 18/09/2036 வரை )

சுக்கிரன் திசை ஜாதகருக்கு 2,5ம் வீடுகள் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது சுக்கிரன் திசை 20 வருடமும் 2,5ம் பாவக வழியிலான நன்மைகளையும் யோகங்களையும் தரும், ஜாதகரின் 5ம் பாவகம் மீனத்தில் 7 பாகைகளும் மேஷத்தில் 21 பாகைகளும் வியாபித்து இருப்பது ஜாதகருக்கு வரும் யோகத்தின் தன்மையை மிக பெரிய அளவில் தரும், குறிப்பாக ஜாதகருக்கு நல்ல குடும்ப வாழ்க்கை அமையும், நிறைவான வருமானமும், பொருளாதார முன்னேற்றமும் உண்டாகும், நல்ல புத்திர பாக்கியம் கிட்டும், தனது புத்திசாலித்தனத்தால் தனது வாழ்க்கையை ஜாதகர் மிகுந்த யோகமுள்ளதாக மாற்றிக்கொள்ளும் வல்லமையை சுக்கிரன் வாரி வழங்கும், அதற்க்கு ஜாதகரின் வலிமை பெற்ற 2,5ம் பாவகங்கள் காரணமாக அமையும்.

ஜாதகருக்கு வலிமை அற்ற பாவக தொடர்புகள் :

1,3,7,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு மேற்கண்ட 1,3,7,9ம் பாவக வழியில் இருந்து 200% விகித இன்னல்களை தரும், 4,6,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு மேற்கண்ட 4,6,10,12ம் பாவக வழியில் இருந்து 100% விகித இன்னல்களை தரும் என்ற போதிலும், ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் சுக்கிரன் திசை வலிமை பெற்ற 5ம் பாவக பலனை ஏற்று நடத்துவது மேற்கண்ட பாதிக்கப்பட்ட பாவக வழியிலான இன்னல்களை தவிர்க்க உதவும், மேலும் ஜாதகர் தேர்வு செய்த வாழ்க்கை துணையின் ஜாதகம் ஜாதகருக்கு தரும் யோக பலன்களை இனி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !



லக்கினம் : சிம்மம்
ராசி : கன்னி
நட்ஷத்திரம் : சித்திரை 2ம் பாதம்

ஜாதகிக்கு வலிமை பெற்ற பாவக தொடர்புகள் :

1,3,5,9ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், ஜாதகியின் லாப ஸ்தானம் மிதுனத்தில் 1 பாகையும், கடகத்தில் 29 பாகையும் கொண்டு இருப்பது 100% விகித அதிர்ஷ்டங்களை 1,3,5,9ம் பாவக வழியில் இருந்து வாரி வழங்கும், லக்கின வழியில் இருந்து அதிர்ஷ்டம், நீண்ட ஆயுள், நல்ல குணம், குபேர யோகம், நல்ல ஆரோக்கியம், தெளிவான சிந்தனை, சுய கட்டுப்பாடு, எதிர்பாராத நீடித்த அதிர்ஷ்டங்கள் என்ற வகையில் யோகத்தை தரும், 3ம் பாவக வழியில் இருந்து சகல சௌபாக்கியம், வியாபர விருத்தி, துவங்கும் காரியங்களில் வெற்றி வாய்ப்பு, அனைத்திலும் சுபம் என்ற வகையிலும், 5ம் பாவக வழியில் இருந்து நிறைவான புத்திசாலித்தனம், கற்ற கல்வி வழியிலான யோக வாழ்க்கை, மதிப்பு மிக்க செய்லபாடுகள், தன்னம்பிக்கை, சிறப்பான புத்திர பாக்கிய யோகம், குழந்தைகள் வழியிலான யோகம் என்ற வகையிலும், 9ம் பாவக வழியில் இருந்து நல்ல குணம், பொறுப்பு மிக்க வாழ்க்கை, பெரியோர் ஆசிர்வாதம், பெரிய மனிதர்கள் ஆதாரவு, ஆன்மீக ஈடுபாடு, ஆன்மீகத்தில் வெற்றி, தெய்வீக அனுபவம், தன்னை சார்ந்தவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வல்லமை, நல்ல பெருந்தன்மையான மனம் என்ற வகையில் சிறப்புகளை தரும்.

4,8ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, நிறைய சொத்து சுக சேர்க்கை, வாழ்க்கை துணையின் உதவிகளுடன் புதிய சொத்துக்கள் மற்றும் வீடு வண்டி வாகனம் வாங்கும் யோகம், நிலம் வண்டி வாகனம் சார்ந்த தொழில்கள் வழியிலான வருமானம் வாய்ப்பு என்ற வகையிலும், 8ம் பாவக வழியில் இருந்து நீண்ட ஆயுள், வாழ்க்கை துணைக்கு யோகம், திடீர் அதிர்ஷ்டம், புதையலுக்கு நிகரான சொத்து சுக  சேர்க்கையை தனது தொழில் வழியில் இருந்து பெரும் யோகம் என்ற வகையில் நன்மைகளை வாரி வழங்கும்.

7,11ம் வீடுகள் வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது 7ம் பாவக வழியில் இருந்து ஜாதகி யோகம் மிக்க வாழ்க்கை துணையை பெறுவார், தாம்பத்திய வாழ்க்கையில் திருப்தி, கணவருக்கு யோகம், கணவர் வழியில் இருந்து பரஸ்பர யோக வாழ்க்கை, சமூக அந்தஸ்து, உயர் பதவி, மக்கள் செல்வாக்கு, வெளிநாடு மற்றும் வெளியூர் வழியிலான முன்னேற்றங்கள் என்ற வகையிலும், திடீர் அதிர்ஷ்டம், தெய்வீக அனுகூலம், தன்னம்பிக்கை, வியாபார விருத்தி, செல்வாக்கு, அரசு பதவி மற்றும் ஆதாயம் என்ற வகையில் சுபயோகங்களை வாரி வழங்கும்.

மேலும் தற்போழுது நடைபெறும் குரு திசை தரும் பலன்கள் : ( 10/04/2006 முதல் 10/04/2022 )

ஜாதகிக்கு தற்போழுது நடைமுறையில் உள்ள குரு திசை 4,8ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 4,8ம் பாவக வழியிலான நன்மைகளையும் யோகங்களையும் தந்து கொண்டு இருப்பது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும், குறிப்பாக ஜாதகி 4ம் பாவக வழியில் இருந்து சுகபோக வாழ்க்கையையும், 8ம் பாவக வழியில் இருந்து திடீர் அதிர்ஷ்டம் மற்றும் எதிர்பாராத முன்னேற்றத்தையும் தரும், மேலும் தனது கணவன் வழியிலான  கவுரவ வாழ்க்கையையும் திடீர் அந்தஸ்த்தையும் பெறுவார். எதிர்வரும் சனி திசையும் ஜாதகிக்கு 3ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக வாழ்க்கையை  தருவது சனி திசை முழுவதுமான சிறப்புகளை தரும், எதிர்பாராத நன்மைகளை வாரி வழங்கும்.

ஜாதகருக்கு வலிமை அற்ற பாவக தொடர்புகள் :

2,10ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகிக்கு 2,10ம் பாவக வழியில் இருந்து 100% விகித இன்னல்களையும், 6,12ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 6,12ம் பாவக வழியில் இருந்து 200% விகித இன்னல்களையும் தரும் இருப்பினும் தற்போழுது நடைபெறும் குரு திசை, எதிர்வரும் சனி திசை  இரண்டும் வலிமை பெற்ற பாவக பலனையே ஏற்று நடத்துவதால் ஜாதகிக்கு பாதிக்கப்பட்ட பாவக வழியிலான இன்னல்கள் எதுவும் நடைபெறாது என்பது வரவேற்கத்தக்க  அம்சமாகும்.

குறிப்பு :

மேற்கண்ட ஜாதகர்  தனது ஜாதகத்தில் 8பாவகங்கள் வலிமை அற்று இருந்த போதிலும், வாழ்க்கை துணையாக வரும் ஜாதகியின் சுய ஜாதகம் வலிமை  பெற்று இருப்பதாக தேர்வு செய்தது வரவேற்கத்தக்க அம்சம், அதற்க்கு காரணமாக ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் தசையும், வலிமை பெற்ற 5ம்  பாவகமுமே காரணமாக அமைந்திருப்பது ஜாதகருக்கு இறை அருள் தந்த  வரம் என்றே சொல்லலாம்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக