செவ்வாய், 9 மே, 2017

சுய ஜாதகம் என்றால் என்ன ? சுய ஜாதகத்தால் நமக்கு என்ன பயன் ? ( வலிமை பெற்ற சுயஜாதகம் )



சுய ஜாதகம் வலிமை பெறுவது என்பது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு, அவரது வாழ்க்கையில் வலிமை பெற்ற பாவக வழியிலான சுபயோகங்களை ஸ்திரமாக பெற்று தரும், லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் சுய ஜாதகத்தில் வலிமை பெறுவது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு மிகுந்த நன்மைகளையும் சுப யோகங்களையும் வாரி வழங்கும், வலிமை பெற்ற சுய ஜாதகம் ஜாதகருக்கு வழங்கும் சுப யோகங்களை பற்றி ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !

அதற்க்கு முன் ஒருவரது சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் வலிமை பெறுவது, ஜாதகருக்கு எப்படி சுப யோகங்களை வாரி வழங்குகிறதோ? அதை போன்றே சுய ஜாதகத்தில் சில பாவகங்கள் மட்டும் வலிமை பெற்று இருந்தாலும், ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவக பலனை மட்டும் நடைபெறும் திசாபுத்திகள் ஏற்று நடத்தினாலும், ஜாதகருக்கு சுப யோக பலன்களே நடைமுறைக்கு வரும், மேலும் பாதிக்கப்பட்ட பாவக வழியிலான இன்னல்களை ஜாதகர் எதிர்கொள்ளும் சூழ்நிலை வர வாய்ப்பில்லை என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், எனவே சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை பெறுவது மட்டுமே சிறப்பான நன்மைகளை ஜாதகருக்கு தந்துவிடாது, நடைபெறும் திசாபுத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவக வழியிலான நன்மைகள் நடைமுறைக்கு வரும்.


லக்கினம் : தனுசு
ராசி : துலாம்
நட்ஷத்திரம் : விசாகம் 1ம் பாதம்

ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக தொடர்புகள் :

1,3,4,6,9,10,12ம் வீடுகள் வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 1ம் பாவக வழியில் இருந்து சிறந்த மனநிலை, தைரியம், ஆர்வம், வீரியமிக்க செயல்திறன், உடல் வலிமை மனவலிமை, பயணம் மூலம் லாபம், சகோதர வழியிலான ஆதரவு, அனைவருடன் இணக்கமாக பழகும் தன்மை, அனைவரின் ஆதரவு மற்றும் உதவிகளை பெறுதல், முற்போக்கு சிந்தனை, நீண்ட ஆயுள், வலி தாங்கும் தன்மை, விரைவில் குணம் பெரும் உடல் அமைப்பு, செய்யும் காரியங்களில் பாதுகாப்பு துறையில் பணியாற்றும் யோகம் என்ற வகையில் நன்மைகளை தரும்.

3ம் பாவக வழியில் இருந்து செல்வசெழிப்பு, எதிரிகளை வெல்லும் தன்மை, நல்ல மனநிலை, சிறப்பாக சிந்திக்கும் ஆற்றல், சத்தியத்தை மதித்தல், தைரியம், பயணங்களில் விருப்பம், கல்வியில் ஆர்வம், மாற்றம் மற்றும் புதிய சூழ்நிலைகளில் விருப்பம், ஏஜென்சி துறையில் நல்ல வெற்றி வாய்ப்புகள், அறிவுபூர்வமான செயல்பாடுகள், தகவல் தொழில் நுட்ப துறையில் வெற்றி வாய்ப்புகள், தன்னம்பிக்கை குறையாத மனநிலை, நினைத்ததை சாதிக்கும் வல்லமை, மக்கள் ஆதரவு, எதிர்ப்புகள் அற்ற யோக வாழ்க்கை, என்ற வகையில் சுப யோகத்தை தரும்.

4ம் பாவக வழியில் இருந்து மனநிலையில் தெளிவு,  ஞாபக சக்தி மற்றும் நுண்ணறிவு பாதிப்பு, வீடு வண்டிவாகனம் பாதிப்பு, அடிக்கடி மாற்றுதல், கால்நடைகள் மூலம் விரையம், பயணம் மூலம் பாதிப்பு, அமைதியின்மை, பேரம் மாறும் மற்றவர்களுக்கு ஜாமீன் கொடுப்பதால் நஷ்டம், மற்றவர்கள் விஷயங்களில்  தலையீடு செய்வதால் இன்னல்கள்  என்ற வகையில் சிரமங்களை தந்த போதிலும், நல்ல குணம் அமையும், அறிவு திறன் மூலம் தனது  பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் யோகம் உண்டாகும்.

6ம் பாவக வழியில் இருந்து சிறு சிறு அதிர்ஷ்ட வாய்ப்புகள், ஏஜென்சி மற்றும் காண்ட்ராக்ட் விஷயங்களில் லாபம், உடல் நிலையில் நல்ல முன்னேற்றம், எதிர்ப்புகள் நன்மையை தரும், எதிரிகளால் செல்வாக்கு உண்டாகும், சகல சௌபாக்கியம் மற்றும் திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும், தெய்வீக சிந்தனை மேலோங்கும், எதிரிகள் பலம் குறையும், எதிர்பாராத வகையில் சொத்தது சுக சேர்க்கை உண்டாகும்.

9ம் பாவக வழியில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்று வரும் வாய்ப்பு,  பிரயாணங்களில் விருப்பம், ஆராய்ச்சி துறையில் வெற்றி, பணியில் இடம் மாற்றம், புதிய சூழ்நிலைகளில் ஆர்வம், சகோதர வழி நற்பெயர், தனது அறிவு திறனை எழுத்துருவாக மாற்றும் வல்லமை, அதன் வழியிலான சுய முன்னேற்றம், சுயநலம் கருதா நிலை என்ற வகையில் சுப யோகங்களை நல்கும்.

10ம் பாவக வழியில் இருந்து ஏஜென்சி துறையில் ஜாதகர் புகழ் பெற்ற வியாபாரியாக திகழும் வாய்ப்பை தரும், எழுத்து மற்றும் பத்திரிக்கை துறையில் பெயரும் புகழும் உண்டாகும், வியாபார ஆலோசனை வழங்கும் துறையில் ஜாதகருக்கு பெயரும் புகழும் உண்டாகும், வீரியமிக்க தொழில் துறையில் ஜாதகர் வெற்றி பெறுவார், விளையாட்டு மற்றும் பாதுகாப்பு துறையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும், தெய்வீக சிந்தனை மூலம் ஜாதகர் தொடர் வெற்றிகளை பெறுவார், எதிர்பார்ப்புகள் யாவும் நிறைவேறும், செய்யும் தொழில் முன்னேற்றம் என்பது மிகவும் அபரிவிதமானதாக அமையும், திடீர் செல்வத்தை தொழில் மூலம் ஜாதகர் பெறுவார், அனைத்து செயல்களிலும் வெற்றி உண்டாகும்.

12ம் பாவக வழியில் இருந்து வெளிநாடு யோகம் மற்றும் வெளிநாட்டில் இருந்து வரும் வருமானம் அதிகரிக்கும், செய்த முதலீடுகள் வழியிலான லாபம் பெரிய அளவில் வந்து சேரும், நல்ல உறக்கம், சிறந்த ஆன்மீக வழியிலான தேடுதல்கள் மூலம் வாழ்க்கையில் வெற்றி பெரும் அமைப்பை தரும், பல புண்ணிய திருத்தலங்களுக்கு சென்று வரும் யோகமும், திருப்தியான மனநிலையையும் தரும்.

  2,5,8,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, 2ம் பாவக  வழியில் இருந்து அதிர்ஷ்டம், நண்பர் உதவி, செல்வச்செழிப்பு, இனிமையான பேச்சு திறன், தன்னம்பிக்கை மிக்க மனநிலை, வாக்கு சாதுர்யம், செய்யும் தொழில் வழியிலான சிறப்பான வருமானம், தெய்வீக சிந்தனை, பரிவு மிக்க செயல்பாடுகள், சிறந்த குடும்ப வாழ்க்கை, பல தொழில் செய்யும் யோகம், முற்போக்கு சிந்தனை மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் காணும் அமைப்பு என்ற வகையில் சுபயோகங்களை வாரி வழங்கும்.

5ம் பாவக வழியில் இருந்து நல்ல ஆண் வாரிசு, குழந்தைகள் , மூலம் வாழ்க்கையில்  செல்வச்செழிப்பு மற்றும் அதிர்ஷ்டம், லாட்டரி யோகம் அறிவு திறனால் பெரும் வளர்ச்சி, எப்பொழுதும் சந்தோசம், குழந்தைகள் மற்றும் வாழ்க்கை துணையுடன் எப்பொழுதும் மகிழ்ச்சியாக வாழும் யோகம், திருமணத்திற்கு பிறகான தொழில் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம், குலதெய்வ அனுக்கிரகம், சந்தர்ப்பங்களை சரியாக கையாளும் வல்லமை, எதிர்பாராத வளர்ச்சி மற்றும் அதிர்ஷ்டம், தனது அறிவு திறன் மூலம் சகல செல்வங்களையும் பெரும் யோகம் என்ற வகையில் சுபயோகங்களை வாரி வழங்கும்.

8ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு நினைத்த ஆசைகள்  நிறைவேறும்யோகம், மிக சுலபமாக அனைத்தையும் வெற்றி கொள்ளுதல், திருப்தியான  மனநிலை, வாழ்க்கை துணை, நண்பர்கள், கூட்டாளிகள் வழியிலான  வருமான வாய்ப்புகள், திடீர் அதிர்ஷ்டம், புதையல் யோகம், எதிர்பால் அமைப்பினரால் பெரும் வருமானம், நீண்ட ஆயுள், திடீர் பொருள் வரவு, மருத்துவ உபகரணம் மூலம் அல்லது மருத்துவ துறையிலான லாபங்களை குறுக்கியகாலத்தில் பெரும் யோகம், ஆயுள் காப்பீடு, ஊக்க தொகை மூலம் பெரும் சொத்தது சேர்க்கை மற்றும் வருமானம் என்றவகையில்  சுபயோகங்களை வாரி வழங்கும், திருமணத்துக்கு பிறகான வளர்ச்சி ஜாதகருக்கு அபரிவிதமானதாக அமையும்.

11ம் பாவக வழியில் இருந்து மனதில் எண்ணிய எண்ணங்கள் யாவும் திடீரென  பலிதம் பெரும் யோகம், தெய்வீக சிந்தனை, புதிய முயற்சிகள் மூலம் வாழ்க்கையில் அதிர்ஷ்டங்களை தேடி பெரும் யோகம், எதிர்பாராத வருமானம் மூலம் ஜாதகர் பெரும் பொருளாதர தன்னிறைவு, எதிர்ப்புகளை கடந்து  வெற்றிபெறும் யோகம், போட்டி பந்தயங்களில் வெற்றி, வழக்குகளில் வெற்றி, நல்ல மனநிலை, பின்யோக ஜாதகம் ( திருமணத்திற்கு பிறகான முன்னேற்றம் )

ஜாதகத்தில் வலிமை அற்ற பாவக தொடர்புகள் :

7ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம்  பெறுவது ஜாதகத்திலே மிகவும் மோசமான அமைப்பை தரும், மேலும் களத்திர ஸ்தான வழியிலான  இன்னல்கள்  ஜாதகருக்கு 200% விகித துன்பங்களை தரக்கூடும் என்பதால் வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் பொழுது ஜாதகர் மிகவும் கவனமுடன் இருப்பது நலம் தரும், ஜாதகருக்கு நல்ல வாழ்க்கை துணை அமைவது  சற்று சிரமம், நல்ல நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் அமைவது குதிரை கொம்பு என்றே சொல்லலாம், பொதுமக்கள் வழியிலான வளர்ச்சி வெகுவாக குறையும், மற்றவர்கள் விஷயங்களில் தலையீடு செய்வது ஜாதகருக்கு கடுமையான நெருக்கடிகளை தரும், குறிப்பாக எதிர்பாலின அன்பர்களின் பிரச்சனைகளில்  தலையீடு செய்யலாம் இருப்பதே ஜாதகருக்கு சகல அமைப்புகளில் இருந்தும் நன்மையை தரும்.

நடைபெறும் சனி திசை தரும் பலன்கள் : ( 30/05/2002 முதல் 30/05/2021 வரை )

ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் சனி திசை 1,3ம் வீடுகள் வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருவதும், 3ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 11ம் ராசியாக அமைத்து லாபங்களை அதிர்ஷ்டங்களையும் தான் எடுக்கும் முயற்சிகள் வழியில் இருந்து வாரி வழங்கும், தெளிவான சிந்தனை, விளையாட்டுகளில் ஆர்வம், பாதுகாப்பு துறையில் பணியாற்றும் யோகம் என்றவகையில் ஜாதகருக்கு சனி திசை முழு அளவிலான நன்மைகளையே ஸ்திரமாக வாரி வழங்கும், தெய்வீக அனுக்கிரகம் வாழ்க்கையில் நல்ல வெற்றிகளை பெற்று தரும், எந்த  சூழ்நிலையையும் சிறப்பாக எதிர்கொண்டு வாழ்க்கையில்  வெற்றிநடைபோடும் வாய்ப்பினை தற்போழுது நடைமுறையில் உள்ள சனி திசை 1,3ம் பாவக வழியில் இருந்து தரும், நல்ல ஆரோக்கியம், ஸ்திரமான மனநிலை, பயம் அறியா குணம், வீரியமிக்க செயல்திறம், அரசு துறையிலான ஆதரவு என்ற வகையில் ஜாதகருக்கு  சீரிய முன்னேற்றங்கள் வந்து சேரும், சனி திசை ஜாதகருக்கு வலிமை பெற்ற வீரிய ஸ்தான பலனை ஏற்று நடத்துவது ஜாதகருக்கு பல சிறப்பான யோகங்களை வாரி வழங்கும்.

சனி திசையில் தற்போழுது நடைபெறும் ராகு புத்தி தரும் பலன்கள் ( 11/01/2016 முதல்  17/11/2018 வரை )

ஜாதகருக்கு சனி திசையில் ராகு புத்தி 2ம் வீடு திடீர் அதிர்ஷ்டத்தை தரும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை ஏற்று நடத்துவது ஜாதகருக்கு பரிபூர்ண நன்மைகளை தரும், ஜாதகருக்கு திடீர் அதிர்ஷ்டம் மூலம் நல்ல பொருளாதார முன்னேற்றம் உண்டாகும், நிறைவான வருமான வாய்ப்பு வரும்படியான நல்ல பணி அமையும், தெய்வீக சிந்தனை மேலோங்கும், எதையும் சாதிக்கும் துணிச்சல் உண்டாகும், தன்னம்பிக்கை  அதிகரிக்கும், திடீரென எதிர்பாராத சந்தோஷங்கள் மற்றும் மன நிறைவை தரும் காரியங்கள் நடைபெறும், குறிப்பாக திருமண வாய்ப்பு ஜாதகருக்கு திடீரென அமைய  வாய்ப்பு உண்டு என்பதால், விழிப்புணர்வுடன் இருந்து நன்மை பெறுவது  அவசியமாகிறது மேலும் ஜாதகரின் பணியில் நல்ல முன்னேற்றமும், எதிர்பாராத அதிர்ஷ்டங்களை பெரும் யோகம் உண்டு என்பதால் ஜாதகருக்கு ராகு புத்தி மிகுந்த யோகத்தையே வாரி வழங்குகிறது.

மேற்கண்ட ஜாதகத்தில் 1,2,3,4,5,6,8,9,10,11,12 பாவகங்கள் மிகவும் வலிமையுடன் இருப்பது கவனிக்கத்தக்க அம்சமாகும், மேலும் பாதிக்கப்பட்ட பாவகம் என்பது களத்திர  ஸ்தானம் எனும் 7ம் பாவகம் ஒன்று மட்டுமே மேலும் களத்திர ஸ்தான பாதிப்பு என்பது மிகவும் கடுமையானதாக இருப்பது கவனிக்கத்தக்க விஷயமாகும், ஜாதகர் திருமணம் செய்துகொள்ளும் பொழுது வலிமை பெற்ற ஜாதகத்தை  வாழ்க்கை துணையாக தேர்வு செய்யவில்லை எனில், ஜாதகரின் வாழ்க்கை முற்றிலும்  கடுமையான பாதிப்பை சந்திக்கும் சூழ்நிலையை தரும் என்பதில் கவனம் கொள்ளக.

திசா புத்திகள் ஏற்று நடத்தும் பாவக தொடர்புகள் :

கேது : 

2ம் வீடு வலிமை பெற்ற 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை கேது திசை மற்றும் புத்திகளில் தருகின்றது.

சுக்கிரன் : 

4,6,9,10,12ம் வீடுகள் வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சுக்கிரன் திசை மற்றும் புத்திகளில் யோக பலன்களை தருகின்றது.

சூரியன் : 

1ம் வீடு வலிமை பெற்ற 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை சூரியன் திசை மற்றும் புத்திகளில் தருகின்றது.

சந்திரன் : 

5,8,11ம் வீடுகள்  வலிமை பெற்ற 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை சந்திரன் திசை மற்றும் புத்திகளில் தருகின்றது.

செவ்வாய் : 

1,3ம் வீடுகள்  வலிமை பெற்ற 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை செவ்வாய் திசை மற்றும் புத்திகளில் தருகின்றது.

ராகு : 

2ம் வீடு வலிமை பெற்ற 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை கேது திசை மற்றும் புத்திகளில் தருகின்றது.

குரு : 

3ம் வீடு வலிமை பெற்ற 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனையும், 11ம் வீடு வலிமை பெற்ற 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனையும் குரு திசை மற்றும் புத்திகளில் தருகின்றது. 

சனி : 

1,3ம் வீடுகள்  வலிமை பெற்ற  3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை சனி திசை மற்றும் புத்திகளில் தருகின்றது.

புதன் : 

7ம் வீடு பாதகஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று ஜாதகருக்கு  7ம் பாவக வழியில் இருந்து 200 % விகித கடுமையான இன்னல்களையும் , மிகுந்த பாதிப்பையும் தருகின்றது.

மேற்கண்ட ஜாதகருக்கு  நவகிரகங்களின் திசா புத்திகளில் புதன் திசை,புத்தி, அந்தரம் மற்றும் சூட்சமம் மட்டுமே கடுமையான தவிர்க்க இயலாத இன்னல்களை வாரி வழங்கும், மேலும் இதன் பாதிப்பு என்பது எதிர்பால் இனம் அல்லது மற்றவர்களால் நடைபெறும் என்பது கவனிக்கத்தக்க விஷயமாகும், எனவே ஜாதகர் புதன் திசை,புத்தி, அந்தரம் மற்றும் சூட்சம காலங்களில் மட்டும் சற்று எச்சரிக்கையாக இருப்பது நன்மை தரும், மற்ற திசா புத்திகள் யாவும் ஜாதகருக்கு பரிபூர்ண யோக பலன்களையே வாரி வழங்குகிறது.

வலிமை பெற்ற ஜாதகத்திற்க்கு மேற்கண்ட ஜாதகமே நல்ல உதாரணம். வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக