புதன், 31 மே, 2017

சுய ஜாதக வலிமையும், தொழில் ரீதியான வெற்றி வாய்ப்புக்களும் !


 சுய ஜாதகம் வலிமை பெறாமல் ஒரு ஜாதகரால் சிறு துரும்பை கூட நகர்த்த இயலாது, எனவே சுய ஜாதக வலிமை என்பது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சிறந்த யோகங்களை வாரி வழங்கும் என்றால் அது மிகையில்லை, குறிப்பாக ஜீவன ரீதியான முன்னேற்றங்களை ஜாதகர் பெற வேண்டுமெனில் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தானமான மகரமும், சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானமும் மிகவும் வலிமையுடன் இருப்பது அவசியமாகிறது, மேலும் தற்போழுது நடைமுறையில் உள்ள திசாபுத்திகள் மற்றும் எதிர்வரும் திசா புத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவது சிறப்பான தொழில் நன்மைகளை தரும், குறிப்பாக வலிமை பெற்ற ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்துவது தொழில் ரீதியான அபிவிருத்தி மற்றும் முன்னேற்றங்கள் சிறப்பாக அமையும்.
சுய ஜாதகத்தில் கேந்திர ஸ்தானங்கள் வலிமை பெறுவது ஜாதகருக்கு பொருளாதர ரீதியான வெற்றிகளையும், திரிகோண ஸ்தானங்கள் வலிமை பெறுவது அறிவு சார்ந்த வெற்றிகளையும் தரும், மேலும் மனதை ஆளுமை செய்யும் சந்திரனின் ஆதிக்கமும், உயிரை ஆளுமை செய்யும் சூரியனின் ஆதிக்கமும் சுய ஜாதகத்தில் சிறப்பாக அமைவது ஜாதகரின் தொழில் மற்றும் ஜீவன ரீதியான வெற்றி வாய்ப்புகளை 100% விகிதம் உறுதி செய்யும், மேற்கண்ட விஷயங்கள் சுய ஜாதகத்தில் பாதிக்கப்படும் பொழுது ஜாதகர் கடுமையான ஜீவன போராட்டங்களையும், சுய முன்னேற்றம் அற்ற சூழ்நிலைகளில் மாட்டிக்கொண்டு வாழ்க்கையில் இன்னலுறும் தன்மையை தருகின்றது, எனவே தனது சுய ஜாதகத்தில் பாவக வலிமை நிலையையும், ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவக வலிமையையும் கருத்தில் கொண்டு தொழில் சார்ந்த தேடுதல்களில் ஜாதகர் ஈடுபடுவது, சுய ஜாதக வலிமைக்கு உற்ப்பட்ட ஜீவனம் சார்ந்த நன்மைகளை பெற முடியும், இதை கீழ்க்கண்ட உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம்.


லக்கினம் : சிம்மம் 
ராசி : தனுசு 
நட்ஷத்திரம் : பூராடம் 2ம் பாதம் 

ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் ராசியான ரிஷபத்தில் 07.47.48 பாகைகளும், மிதுனத்தில் 07.30.08 பாகைகளும் வியாபித்து இருக்கின்றது, ஜீவன ஸ்தான ஆளுமை என்பது ஜாதகருக்கு ரிஷபத்தில் 22பாகைகளும், மிதுனத்தில் 8 பாகைகளும் அமைகிறது, ரிஷபம் ஸ்திர மண் தத்துவ ராசி, மிதுனம் உபய கற்று தத்துவ ராசி, ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் எனும் 10ம் வீடு தொடர்பு பெறுவது 4ம் பாவகத்துடன் ஜாதகரின் நான்காம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஆயுள் பாவகமான விருச்சிக ராசி மற்றும் பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியில் வியாபித்து இருப்பது சிறப்பான அம்சமாகும், மேலும் விருச்சிகம் ஸ்திர நீர் ராசியிலும், தனுசு உபய நெருப்பு ராசியிலும் அமைவது ஜாதகருக்கு மேற்கண்ட தத்துவ ரீதியான தொழில் வாய்ப்புகளை வழங்கும்.

ஜாதகரின் ஜீவன ஸ்தானம் வலிமை பெற்ற சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகரின் வாழ்க்கையில் நீர் மற்றும் நெருப்பு தத்துவ ரீதியிலான தொழில் வாய்ப்புகளை தரும், உதாரணமாக ஜாதகர் அழிவு பொருட்கள் சார்ந்த தொழில்களில் மிகப்பெரிய முன்னேற்றத்தை பெறலாம் அதாவது உணவு பொருட்கள், பால் பொருட்கள், நீர்ம பொருட்கள், அரிசி, தானியம் சார்ந்த தொழில்களில் அபிவிருத்தி உண்டாகும், மேலும் உபய நெருப்பு தத்துவம் சார்ந்த தொழில்களில் சிறப்பான வெற்றிகளை தரும், தொழில் நுட்பம் சார்ந்த விஷயங்கள், ஆசிரிய பணி, வண்டி வாகனம் சார்ந்த தொழில்கள், தகவல் தொழில் நுட்பம், மென்பொருள் சார்ந்த தொழில்களில் சிறப்பான விருத்தியை தரும்.

ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் செவ்வாய் திசையும், எதிர்வரும் ராகு திசையும் 3ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் 7ம் பாவக பலனையே ஏற்று நடத்துகிறது என்பதனால், ஜாதகர் சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானமும் வலிமை பெற்று இருப்பதால் தகவல் தொழில் நுட்பம் சாந்த துறையில் சிறப்பான நன்மைகளை அனுபவித்துக்கொண்டு இருக்கின்றார், அதாவது ஜாதகர் மென்பொருள் ஏற்றுமதி தொழிலில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கின்றார், தொழில் செய்வதும் வெளிநாடுகளில் என்பது கவனிக்கத்தக்க விஷயமாகும், இதற்க்கு ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் செவ்வாய் திசை 3ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று, தனது திசையில் 7ம் பாவக பலனை ஏற்று நடத்துவது ஜாதகருக்கு சிறப்பான வெற்றிகளை வாரி வழங்கும் அமைப்பாகும், மேலும் ஜாதகரின் களத்திர ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு லாப ஸ்தானமாகவும், ஸ்திர காற்று தத்துவ ராசியில் அமைவது ஜாதகருக்கு அறிவு சார்ந்த தொழில் முன்னேற்றத்தையும், வெளிநாடு மற்றும் வெளியூர் சார்ந்த ஜீவன வாழ்க்கையையும் வாரி வழங்கி இருப்பது கவனிக்கத்தக்கது, இது ஜாதகரின் வாழ்க்கையில் தகவல் தொழில் நுட்பம் சார்ந்த துறையில் பன்மடங்கு வெற்றி வாய்ப்புகளை வாரி வழங்கி கொண்டு இருக்கின்றது மேலும் எதிர்வரும் ராகு திசையும் 3ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 7ம் பாவக பலனையே ஏற்று நடத்துவது சிறப்பான நன்மைகளையும் தொழில் விருத்தியையும் தரும் என்பது ஜாதகர் தொடர்ந்து தான் செய்யும் தொழில் வழியிலான முன்னேற்றங்களை 100% விகிதம் வாரி வழங்கும் என்பது ஜாதகர் ஜீவன ரீதியாக பெரும் யோக வாழ்க்கை ஆகும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக