புதன், 7 ஜூன், 2017

நவகிரக திசாபுத்திகள் தரும் பலாபலன்களும், சுய ஜாதகத்தில் 12 பாவகங்களின் வலிமையும் !



 " கொடிது கொடிது வறுமை கொடிது " 
 " அதனினும் கொடிது இளமையில் வறுமை " 

என்ற வாக்கிற்கு இணங்க சுய ஜாதகத்தில் இளமையில் வறுமை என்பது சம்பந்தப்பட்ட ஜாதகரை வெகுவாக படுத்தி எடுத்து விடும் குறிப்பாக, பெண்களின் ஜாதகமாக இருப்பின் அவர்களது வாழ்க்கையில் மிகுந்த போராட்டங்களை சந்திக்கும் சூழ்நிலையை தரும், தன்னம்பிக்கை வெகுவாக குறையும், மனம் உடல் சார்ந்த தொந்தரவுகள், எதிர்ப்புகள் என கடுமையான இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலை தரும், எந்த ஒரு சிறு விஷயத்திற்கும் கடுமையான போராட்டங்களை சந்தித்து பெரும் நிலையை ஏற்படுத்தும், குறிப்பாக எவருக்கும் 14 வயது முதல் 30 வயது வரை நடைபெறும் திசா புத்திகள் பாதிக்கப்பட்ட பாவக பலனை ஏற்று நடத்துவது நல்லதல்ல, குறிப்பாக பாதக ஸ்தான தொடர்பை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவது கடுமையான இன்னல்களை சம்பந்த பட்ட ஜாதகருக்கு தந்து விடும், நெருப்பில் இட்ட புழு போல துடிக்கும் நிலைக்கு ஆளாக்கும்.

சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்கள் பெரும் வலிமையின் அடிப்படையிலே ஓர் ஜாதகரின் வாழ்க்கை பல சிறப்புகளை பெறுகின்றது, வலிமை பெரும் பாவக வழியில் இருந்து ஜாதகர் சகல யோகங்களையும் பெரும் வல்லமையை பெறுகின்றார், எனவே சுய ஜாதகத்தில் இல்லாத ஓர் அமைப்பை நவகிரகங்களின் திசாபுத்திகள் ஓர் ஜாதகருக்கு வாரி வழங்கிவிடாது ( நடைபெறுவது சுப கிரகங்களின் திசைகளான குரு,சுக்கிரன்,சந்திரன்,புதன் என்றாலும் சரி, அசுப கிரகங்களின் திசைகளான சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது என்றாலும் சரி )  சுய ஜாதக வலிமை என்பது ஓர் ஜாதகரின் வாழ்க்கையில் சிறப்பு மிக்க நன்மைகளையும், சுபயோகங்களையும் வாரி வழங்கும்,.

 சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் வலிமை பெற்று நடைபெறும் திசா புத்திகள், எதிர்வரும் திசா புத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால், ஏற்று நடத்தும் பாவக வழியில் இருந்து ஜாதகர் சுபயோக பலாபலன்களை அனுபவிக்கும் யோகத்தை தரும், ஜாதகரின் வாழ்க்கையில் சிறப்பான நன்மைகள் நடைமுறைக்கு வரும் மாறாக, சுய ஜாதகத்தில் பல பாவகங்கள் வலிமை பெற்று இருந்து, சில பாவகங்கள் மட்டும் வலிமை அற்று காணப்பட்டால், வலிமை அற்ற சில பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு இன்னல்கள் நடைமுறைக்கு வரும், குறிப்பாக நடைபெறும் அல்லது எதிர்வரும் திசா புத்திகள் பாதிக்கப்பட்ட பாவக பலனை ஏற்று நடத்தினால் ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவக வழியிலான நன்மைகள் ஏதும் நடைமுறைக்கு வாராது, சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை பெற்று இருப்பினும் அதனால் ஜாதகருக்கு எவ்வித நன்மையும் இல்லை என்ற சூழ்நிலையை தரும், இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே ! 


லக்கினம் : கடகம் 
ராசி : மீனம் 
ராசி : உத்திரட்டாதி 1ம் பாதம் 

  மேற்கண்ட ஜாதகிக்கு சுய ஜாதகத்தில் 4,8,12 பாவகங்களை தவிர மற்ற அனைத்து பாவகங்களும் மிகவும் வலிமையுடன் இருப்பது சுய ஜாதகத்தில் யோகங்களை தரும் அமைப்பாகும், இருப்பினும் ஜாதகிக்கு தற்போழுது நடைபெறும் திசையான புதன் திசை ( 14/01/2001 முதல் 15/01/2018 வரை  ஜாதகியின் 15 வயது முதல் தற்போழுது வரை ) சுக ஸ்தானமான ( பெண்கள் ஜாதகத்தில் தகப்பனாரை குறிக்கும் ) 4ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பலனை தருவது, சுய ஜாதகத்தில் மற்ற பாவக வழியில் யோகம் இருப்பினும், புதன் திசையில் அவயோகத்தை வாரி வழங்கும் அமைப்பாகும், தற்போழுது நடைபெறும் புதன் திசை ஜாதகியின் வாழ்க்கையை வெகுவாக பாதிப்படைய செய்திருக்கிறது 4ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று பலனை தருவதால்.

 புதன் திசைக்கு முன்பு நடைபெற்ற ஜெனன கால சனி திசை ஜாதகிக்கு ஜீவன ஸ்தான வழியில் இருந்து மட்டும் நன்மைகளை தந்து, 8,12ம் பாவக வழியில் இருந்து கடுமையான இன்னல்களை வாரி வழங்கி இருக்கின்றது, அதன் பிறகு தற்போழுது நடைபெறும் புதன் திசையும் ஜாதகிக்கு 4ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பலனை தருவது ஜாதகிக்கு மேற்கண்ட பாவக வழியில் இருந்து 200% விகித இன்னல்களை தந்து கொண்டு இருக்கிறது, புதன் திசையை ஜாதகிக்கு கால புருஷ தத்துவ அமைப்பிற்கு களத்திர ஸ்தானமான துலாம் ராசியின் ( 4ம் பாவகம் ) பலனையும், காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு குடும்ப ஸ்தானமான ரிஷப ராசியின் ( 11ம் பாவகம் ) பலனையும், ஏற்று நடத்துவது ஜாதகிக்கு மேற்கண்ட பாவக வழியிலான கடுமையான இன்னல்களை வாரி வழங்கி உள்ளது, அடிப்படையில் ஜாதகிக்கு 4ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது தனது தகப்பனார் வழியில் இருந்து எவ்வித நன்மையையும் பெற இயலாத சூழ்நிலையையும், தனது தகப்பனாரை சிறு வயதிலேயே இழந்து தவிக்கும் துர்பாக்கிய நிலைக்கு ஆளாக்கி இருக்கின்றது, மேலும் கல்வியில் தடை, வேலை வாய்ப்பில் இன்னல்கள், திருமண தடை தற்போழுது வரை உள்ளது ( சுய ஜாதகத்தில் 2,7ம் வீடுகள் வலிமை பெற்று இருந்த போதிலும் ) மேலும் ஜாதகி ஒவ்வொரு விஷயத்தையும் பெறுவதற்கு கடுமையான போராட்டங்களை சந்திக்கும் சூழ்நிலையை தந்து இருப்பது பாதக ஸ்தான வலிமையின் தன்மையை நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

இதுவரை ஜாதகிக்கு இன்னல்கள் இனி வரும் கேது மற்றும் சுக்கிரன் திசை தரும் பலாபலன்களை சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே! அடுத்து வரும் கேது திசை ( 15/01/2018 முதல் 14/01/2025 வரை ) ஜாதகிக்கு 3ம் வீடு வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வீரிய ஸ்தான பலனை ஏற்று நடத்துவது முழு அளவில் சகல சௌபாக்கியத்தை தரும் அமைப்பாகும், அடுத்து வரும் சுக்கிரன் திசை ( 14/01/2025 முதல் 14/01/2045 வரை ) ஜாதகிக்கு 1,2,5,7,11ம் வீடுகள் குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு அளவில் யோக பலனை தருவது ஜாதகிக்கு 1,2,5,7,11ம் பாவக  வழியில் இருந்து சுப யோகங்களை வாரி வழங்கும், ஜாதகிக்கு இனிவரும் எதிர்காலம் கேது மற்றும் சுக்கிரன் திசை அமைப்பில் இருந்து நன்மைகளை வாரி வழங்கும் என்பது உறுதியாக தெரிகிறது, எனவே ஜாதகி பின்யோகம் கொண்டவர் என்பது உறுதியாகிறது, எனவே இனிவரும் காலம் ஜாதகிக்கு யோக காலமாக அமையும் என்பது தெளிவாகிறது.

 கேது மற்றும் சுக்கிரன் திசை ஜாதகிக்கு வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்திடுவது ஜாதகி நன்மைகளையும் சுபயோகங்களை வாரி வழங்கும், எனவே சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை பெறுவதைவிட, வலிமை பெற்ற பாவக பலனை நடைபெரும் திசா புத்திகள் ஏற்று நடத்துவதே சிறப்பானது என்பதனை மேற்கண்ட உதாரண ஜாதகம் மூலம் தெளிவு பெறலாம்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக