ஞாயிறு, 29 அக்டோபர், 2017

ஜாதக ஆலோசணை : அதிர்ஷ்டகரமான சுபயோகங்களை நடைமுறைக்கு கொண்டுவரும் திசா புத்திகள் !



சுய ஜாதகத்தில் சுபயோகங்கள் என்பது பாவக வலிமையின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகிறது, வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து ஓர் ஜாதகர் சுபயோகங்களை அனுபவிப்பதற்க்கு நடைபெறும் எதிர்வரும் திசா புத்திகள் மூல காரணமாக அமைகிறது என்றால் அது மிகையில்லை, சுய ஜாதகத்தில் உள்ள சுபயோகங்கள் அவயோகங்கள் என்ன என்பதனையும், அவை திசா  புத்திகளில் எப்படி நடைமுறைக்கு வருகின்றது என்பதனையும் ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !


லக்கினம் : தனுசு 
ராசி : கன்னி 
நட்ஷத்திரம் : அஸ்தம் 3ம் பாதம் 

மேற்கண்ட ஜாதகர் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பாக்கிய ஸ்தானம் என்று அழைக்கப்படும் தனுசு ராசியை லக்கினமாக பெற்று இருக்கின்றார், லக்கினம் என்பது ஜாதகருக்கு தனுசு ராசியில் (  254:33:18 ) பாகையில் ஆரம்பித்து மகர ராசியில் ( 284:38:46 ) பாகை வரை வியாபித்து நிற்கிறது, எனவே ஜாதகருக்கு லக்கினம் என்பது தனுசு என்ற போதிலும் மகர ராசியின் தன்மையும் ஜாதகருக்கு கலந்து நிற்கின்றது, ஜாதகர் உபய நெருப்பு தத்துவ அமைப்பிற்க்கான  குணாதிசயமும், சர மண் தத்துவத்திற்க்கு உண்டான குணாதிசயமும் பெற்று இருப்பார், ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் உள்ள பாவக தொடர்புகள் என்ன ? வலிமை பெற்ற பாவக தொடர்புகள் எவை ? வலிமை அற்ற  பாவக தொடர்புகள் எவை ? என்பதனை இனி காண்போம்.

வலிமை பெற்ற பாவக  தொடர்புகள் :

1,3,4ம் வீடுகள் சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம்.
2,5,11ம் வீடுகள்  லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம்.
6,9,12ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம்.
7,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று  இருப்பது சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக தொடர்புகளாகும்.

வலிமை அற்ற பாவக தொடர்புகள் :

8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது சுய ஜாதகத்தில் வலிமை அற்ற பாவக தொடர்பு ஆகும்.

1,3,4ம் வீடுகள் சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு லக்கின பாவக வழியில் இருந்து கல்வியில் தேர்ச்சி, மண் மணை வண்டி வாகன யோகம் உண்டாகும், தாய் வழி சொத்துக்கள் கிடைத்தல், கலை துறையில் ஆர்வம், நுண்ணறிவுத்திறன், சுக போக வாழ்க்கை, சிறப்பான நல்ல குணம், தனது கற்பனை திறன் மூலம் பல சாதனைகளை செய்யும் வல்லமை, திருப்திகரமான யோக வாழ்க்கை என்ற அமைப்பில் நன்மைகளை தரும், 3ம் பாவக  வழியில் நிறைவான பொருளாதரா சேர்க்கை, சொகுசு வாகன யோகம், பின்யோக  ஜாதகம், சந்தோசம் மற்றும் மனநிறைவு பெண்கள் வழியில் ஆதரவு, போட்டி பந்தங்களில் எளிதில் வெற்றி பெரும் யோகம், போக்குவரத்துக்கு தொழில் செய்யும் யோகம், வீட்டு மிருகங்கள் மூலம் அதித லாபம், விவசாயத்தில் அதிர்ஷ்டம் மற்றும் லாபம், அரசியல் வெற்றி அரசியல்வாதிகள் மூலம் லாபம் என்றவகையில் சிறப்புகளை தரும், 4ம் பாவக வழியில் இருந்து நிறைவான சொத்து சுக சேர்க்கை சொந்த உழைப்பில் புதிய சொத்துகளை பெரும் யோகம், சுக போகங்களுக்கு குறைவில்லா வாழ்க்கை முறை, நல்ல குணாதிசயம், தெய்வீக நம்பிக்கை மூலம் அதிர்ஷ்ட வாழ்க்கையை பெரும் அமைப்பு, தனது தாய் வழியில் இருந்து வரும் சுபயோகங்கள், தீர்கமான முடிவுகள் மூலம் ஆதாயம் என்ற வகையில் நன்மைகளை தரும்.

 2,5,11ம் வீடுகள்  லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெரும் அமைப்பே  ஜாதகத்தில் மிகவும் வலிமை பெற்ற பாவக தொடர்புகளாக கருதலாம், 2ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் மிகுந்த அதிர்ஷ்டசாலி, தனது பேச்சு திறன் மூலம் அதிர்ஷ்டங்களை தொடர்ந்து பெரும் யோகத்தை தரும், நண்பர்கள் வழியில் இருந்து சிறப்புகளை வாரி வழங்கும், தன ஆதாயம் பரிபூர்ணமாக ஜாதகருக்கு கிடைக்கும், இயக்க நிலையில் உள்ள மண் தத்துவம் சார்ந்த தொழில்கள் வழியில் இருந்து ஜாதகருக்கு அபரிவிதமான வருமான வாய்ப்புகள் உண்டாகும், 5ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் கற்ற கல்வி வழியில் இருந்து முன்னேற்றங்கள் உண்டாகும், தனது புத்டிசாலிதனத்தல் யோக வாழ்க்கை உண்டாகும், எப்பொழுதும் மகிழ்சிகரமான யோக வாழ்க்கை உண்டு, குழந்தை மற்றும் குடும்பத்தாருடன் சந்தோசம் உண்டாகும், இறை அருளின் கருணை மூலம் ஜாதகரின் வெற்றிகரமான யோக வாழ்க்கை உறுதி செய்யப்படும். 11ம் பாவக வழியில் இருந்து அதிர்ஷ்டத்தின் தாக்கம் ஜாதகருக்கு சற்று அதிகமாகவே அமையும், தன்னம்பிக்கை மற்றும் முற்போக்கு சிந்தனையுடன் அனைத்தையும் அணுகும் வல்லமையை தரும், எதிர்ப்புகள் இருப்பின் அனைத்தும் ஜாதகருக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கும், நம்பிக்கையுடன் ஜாதகர் செய்யும் விஷயங்கள் யாவும் வெற்றி மேல் வெற்றி தரும், ஜாதகரின் எண்ணம் என்னவோ ? அதுவே ஜாதகரின் வாழ்க்கையாக மலரும்.

6,9,12ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 6ம் பாவக வழியில் இருந்து பயணம் மூலம் அதிர்ஷ்டம் மற்றும் லாபம் உண்டாகும், எதிரிகள் செய்யும் சூழ்சிகள் வழியில் இருந்து ஜாதகருக்கு நன்மை நடைபெறும், உடல் நலம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் உயர்கல்வி பட்டய கல்வி அல்லது கௌரவ பட்டம் பெரும் யோகம் உண்டாகும், 9ம் பாவக வழியில் இருந்து அறிவார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம், பயணங்களில் விருப்பம், ஆராய்ச்சி மனப்பான்மை, தெய்வீக அனுகிரகம், செய்யும் செயல்களில் நல்ல முன்னேற்றம், தெளிவான சிந்தனை மூலம் வாழ்க்கையில் நன்மைகளை பெரும் அமைப்பு, பெரிய மனிதர்கள் ஆதரவு, சமூக அந்தஸ்து, ஆன்மீக வெற்றி என்ற வகையில் சிறப்புகளை தரும், 12ம் பாவக வழியில் இருந்து வெளிநாடுகளில் யோக வாழ்க்கை, வெளிநாடுகளில் இருந்து வரும் செல்வ வளம், பயணம் மூலம் அதிக லாபம், உல்லாச வாழ்க்கை, தொழில் மற்றும் இருப்பிட மாற்றம் மூலம் சகல சௌபாக்கியங்களையும் அனுபவிக்கும் தன்மை, போதும் என்ற மனம், இறைஅருளின் கருணையை பரிபூர்ணமாக பெரும் அமைப்பு, தெய்வீக அனுபவம், நல்ல ஞானம் மற்றும் ஆன்மீக பெரியோரின் கருணையை பெரும் அமைப்பு என்ற வகையில் சிறப்புகளை தரும்.

7,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 7ம் பாவக வழியில் இருந்து தாமத திருமணம் மூலம் யோக வாழ்க்கை, நல்ல அந்தஸ்து மற்றும் வசதி மிக்க வாழ்க்கை துணையை பெறுதல், வாழ்க்கை துணை வழியிலான முன்னேற்றம், திருமணத்திற்கு பிறகான அபரிதவித வளர்ச்சி, அரசியல் செல்வாக்கு, வியாபர விருத்தி, சமூக அந்தஸ்து மூலம் உயர் பதவிகள் என நன்மைகளை தரும், நண்பர்கள் கூட்டாளிகள் மற்றும் வெளிவட்டார பழக்க வழக்கங்கள் என ஜாதகரை அபரிவிதமான வளர்ச்சி பாதையில் அழைத்து செல்லும்.

10ம் பாவக வழியில் இருந்து உத்தியோகம் மற்றும் வியாபாரம் சார்ந்த வெற்றி வாய்ப்புகள் தேடிவரும், கௌரவம் குறையாத யோக வாழ்கையை தரும், செய்யும் தொழில் முழு வெற்றியை தரும், கம்பீர யோக வாழ்க்கை, தீர்க்கமான முடிவுகள் மூலம் அதிர்ஷ்டம் என்ற வகையில் சுபயோகங்களை வாரி வழங்கும், தெய்வீக அனுபவம் மூலம் முன்னேற்றம் உண்டாகும், பல தொழில் செய்யும் யோகம் உண்டு, ஜாதகரின் திட்டமிடுதல்கள் யாவும் தன்னிறைவான பொருளாதார வசதி வாய்ப்புகளை வாரி வழங்கும்.

8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு எதிர்பாராத இழப்புகளை தரும், எதிர்பாலின சேர்க்கை மூலமா தொல்லைகள் அதிகரிக்கும், மனம் ஒருநிலை படுவது வெகு சிரமம், வாழ்க்கையில் ஏமாற்றம் மற்றும் மற்றவர்கள் மூலம் அதிக இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலையை தரும், திருப்தி அற்ற வாழ்க்கையை தரும், இருப்பினும் நீண்ட ஆயுள் உண்டாகும், வாழ்க்கை துணை வழியில் இருந்து சில நேரங்களில் பொருளாதார முடக்கங்கள் ஏற்ப்பட வாய்ப்பு உண்டு, விபத்து, துயரம், வியாதிகள் மூலம் இன்னல்களை தரும்.

மேற்கண்ட வகையில் ஜாதகருக்கு சுய ஜாதக பலாபலன்கள் சிறப்புகளை பொது பலனாக தருகின்ற போதிலும், ஜாதகருக்கு கடந்த ராகு திசை தந்த பலாபலன்கள் என்ன ? தற்பொழுது நடைமுறையில் உள்ள குரு திசை தரும் பலாபலன்கள் என்ன ? எதிர்வரும் சனி திசை தரும் பலாபலன்கள் என்ன ? என்பதனை கண்டுணர்ந்து விழிப்புணர்வுடன் செயல்படுவதே ஜாதகருக்கு சிறப்பான நன்மைகளை தரும், ஓர் ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக தொடர்புகள் ( சுபயோகங்கள் ) இருந்தாலும் நடைமுறையில் உள்ள திசா புத்திகள், எதிர்வரும் திசா புத்திகள் வலிமை பெற்ற பாவக பலன்களை ஏற்று நடத்தினால் மட்டுமே சுய ஜாதகத்தில் உள்ள யோகங்கள் ஜாதகருக்கு நன்மைகளையும், யோகங்களையும் தரும் என்பதை கருத்தில் கொள்வது நலம் தரும்.

ஜாதகருக்கு கடந்த ராகு திசை தந்த பலாபலன்கள் ( 12/07/1992 முதல் 12/07/2010 வரை ) 

ராகு திசை ஜாதகருக்கு 18 வருட காலம் தனது திசையில் ஜாதகருக்கு 8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அவயோக பலன்களை ஆயுள் பாவக வழியில் இருந்து வாரி வழங்கி இருக்கிறது, ராகு திசை ஜாதகருக்கு பால்ய பருவம் என்பதனால் ஜாதகரின் கல்வி பாதிப்பு, வளரும் சூழ்நிலை சரியில்லா நிலை, உடல் ஆரோக்கிய பாதிப்புகள், திடீர் மருத்துவ செலவு, விபத்து, பொருளாதார செலவினங்கள் என்ற வகையில் சிரமங்களை தந்து இருக்கின்றது, மேலும் ஜாதகரின் ஆயுள் ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு சுக ஸ்தானமாக ( கடகம் ) அமைவது ஜாதகரின் மன நிலையை கடுமையாக பாதித்து செயல்முடக்கத்தை தந்து இருக்கின்றது, சர தத்துவ அமைப்பில் இருந்து தர வேண்டிய இன்னல்களை 100 % விகிதம் விரைவாக வாரி வழங்கி இருக்கின்றது, ஜாதகரின் மனதின் ஆசைகள் யாவும் நிறைவேறாமல் வீண் மன ஏக்கத்தை மட்டுமே அனுபவிக்கும் நிலைக்கு ஆளாக்கி இருக்கின்றது, ஜாதகருக்கு அடிப்படையில் கிடைக்க வேண்டிய கல்வி,நல்ல தொழில் ,திருமண ஆகியவை கிடைக்கவில்லை, மேலும்  பொருளாதர முன்னேற்றமும் தடை பெற்றது, சுய ஜாதகத்தில் ஆயுள் பாவகத்தை தவிர மற்ற பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு சுப யோகங்கள் இருப்பினும் அதை ராகு திசையில் ஜாதகர் பெற இயலாத சூழ்நிலையை தந்து இருப்பது கவனிக்கத்தக்க விஷயமாகும்.

ஜாதகருக்கு தற்பொழுது நடைபெறும் குரு திசை தரும் பலாபலன்கள் ( 12/07/2010 முதல் 12/07/2026 வரை ) 

தற்போழுது நடைபெறும் குரு திசை ஜாதகருக்கு 2,5,11ம் வீடுகள்  லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சுபயோக பலாபலன்களை வாரி வழங்கிக்கொண்டு  இருப்பது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும், ஏனெனில் சுய ஜாதகத்தில் மிகவும் வலிமை பெற்ற பாவக தொடர்பு இதுவே ஆகும் எனவே ஜாதகர் குரு திசையில் சிறப்பு மிக்க சுபயோகங்களை 2ம் பாவக வழியில் இருந்து வருமானம், பேச்சு திறன், குடும்பத்தில் மகிழ்ச்சி, பொருளாதார தன்னிறைவு, நிறைவான வசதி வாய்ப்புகள் என ஜாதகரின் வாழ்க்கை எதிர்பாராத அதிர்ஷ்டங்களை வாரி வழங்கும், ஜாதகரின் 2ம் வீடு கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தானமாக அமைவது ஜாதகரின் வருமானத்தை ஜீவன வழியில் இருந்து தரும், 5ம் பாவக வழியில் இருந்து ஜாதகரின் குல தெய்வ அனுக்கிரகம் மூலம் சகல சௌபாக்கியத்தையும் தரும், தனது அதிபுத்திசாலித்தனம் மூலம் அதிர்ஷ்டங்களை தங்கு தடையின்றி பெறுவார் நல்ல நண்பர்கள் சேர்க்கை உண்டாகும், கலைத்துறையில் பிரபல்யம் உண்டாகும், கலைகளில் தேர்ச்சியும் முன்னேற்றமும் உண்டு, திருமணம் மூலம் அதிர்ஷ்டம் மற்றும் நல்ல குழந்தை பேரு உண்டாகும். 11ம் பாவக வழியில் இருந்து ஜாதகரின் அதிர்ஷ்டம்  சகல நிலைகளில் இருந்து முன்னேற்றத்தை வாரி வழங்கும், குறிப்பாக  ஜாதகரின் லட்சியங்கள் நடைமுறைக்கு வரும், எதிர்ப்புகளை களைந்து  வெற்றி நடை போடும் யோக காலமாக இதை கருதலாம், அதிர்ஷ்டத்தின் மூலம் ஜாதகரின் பொருளாதார முன்னேற்றம் சிறப்பாக அமையும், உடல் நலம் தேறும், மனதைரியம் அதிகரிக்கும், குரு திசை ஜாதகருக்கு சுய ஜாதகத்திலேயே மிகவும் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவது ஜாதகருக்கு கிடைத்திருக்கும் வரப்பிரசாதம் எனலாம், ஜாதகருக்கு இது சுப யோகங்களை 11ம் பாவக வழியில் இருந்து தரும்.

அடுத்துவரும் சனி திசை தரும் பலாபலன்கள் ( 12/07/2026 முதல் 12/07/2045 வரை)

ஜாதகருக்கு எதிர்வரும் சனி திசை 10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சுபயோக பலனை தருவது சனி திசை முழுவதுமான ஜீவன முன்னேற்றத்தை தரும் அமைப்பாகும், ஜாதகரின் கவுரவம் அதிகரிக்கும், செய்யும் தொழில் வழியில் இருந்து அபரிவிதமான முன்னேற்றம் உண்டாகும், ஜாதகருக்கு பல தொழில் செய்யும் யோகத்தை இது தருகிறது, கடின உழைப்பின் மூலம் ராஜயோக வாழ்க்கையை ஜாதகருக்கு சனி திசை 10ம் பாவக வழியில் இருந்து வாரி வழங்கும், எனவே எதிர்வரும் சனி திசையும் ஜாதகருக்கு மிகவும் சாதகமான பலாபலன்களையே தருவது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

மேற்கண்ட ஜாதகருக்கு பெரும்பாலான ( 11 பாவகங்கள் ) பாவகங்கள் வலிமையுடன் இருந்தாலும் கடந்த ராகு திசை ஆயுள் பாவக பலனை ஏற்று நடத்தியதால் ஜாதகருக்கு கடந்த ராகு திசை இன்னல்களையும் சிரமங்களையும் வாரி வழங்கியது, ஆனால் தற்போழுது நடைபெறும் குரு திசையும் எதிர்வரும் சனி திசையும் வலிமை பெற்ற லாபம் மற்றும் ஜீவன ஸ்தான பலனை  ஏற்று நடத்துவதால் ஜாதகரின் வாழ்க்கை மிகவும் சிறப்பான நன்மைகளை தர ஆரம்பித்து இருப்பது ஜாதகரின் சுபயோகங்கள் நடைமுறைக்கு வர இருப்பதை கட்டியம் கூறுகிறது என்பதை மறுக்க இயலாத உண்மையாகும்.

குறிப்பு :

சுய ஜாதகத்தில் யோகங்கள் இருப்பது  மட்டுமே ஜாதகருக்கு நன்மையை தாராது, சுபயோகங்கள் பெற்ற பாவக பலனை நடைமுறையில் திசா புத்திகள் ஏற்று நடத்தினால் மட்டுமே அதனால் வரும் சுபயோகங்களை ஜாதகர் சுவீகரிக்க இயலும் என்ற விஷயத்தை கருத்தில் கொள்வது நலம் தரும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

ஞாயிறு, 22 அக்டோபர், 2017

ராகு திசை தரும் பலன்களும், பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெரும் லக்கினமும் !

 

 சுய ஜாதகத்தில் லக்கினம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது என்பது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சிறப்புகளை தரும் விஷயம் அல்ல, உடல் உயிராகிய லக்கினம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவதால் ஜாதகரின் உடல் நலம் மற்றும் மனநலம் இரண்டும் கடுமையாக பாதிக்கப்படும், பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்ற லக்கினத்தின் பலனை நடைபெறும் எதிர்வரும் திசா புத்திகள் ஏற்று நடத்தினால் ஜாதகரின் கதி அதோ கதிதான், கீழ்கண்ட ஜாதகத்தை சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே, ஜாதகருக்கு தற்போழுது ராகு திசை நடைமுறையில் உள்ளது, நடைபெறும் ராகு திசை ஜாதகருக்கு தரும் பலாபலன்கள் என்ன ? என்பதனை பற்றியும் தெளிவு பெறுவோம்.


லக்கினம் : விருச்சிகம் 
ராசி : மகரம் 
நட்ஷத்திரம் : திருவோணம் 3ம் பாதம் 

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஆயுள் பாவகமும், ஸ்திர நீர் ராசியான விருச்சிகத்தை லக்கினமாக பெற்ற மேற்கண்ட ஜாதகருக்கு பாதக ஸ்தானம் என்பது 9ம் வீடு ஆகும், 9ம் வீடு கால புருஷ தத்துவ அமைப்பிற்கு சுக ஸ்தானமான கடக ராசியில் அமைவது கவனிக்கத்தக்கது, ஜாதகருக்கு லக்கினம் மற்றும் 9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுகிறது எனவே ஜாதகருக்கு அடிப்படையே கடுமையான பாதிப்பை பெறுகின்றது, ஜாதகருக்கு வளரும் சூழ்நிலை சிறப்பில்லை , உடல் நலம் மற்றும்  மன நலம் சார்ந்த இன்னல்களை கடுமையாக அனுபவித்துக்கொண்டு இருக்கின்றார், தனது பெற்றோரின் அரவணைப்பில் வளர இயலாமல் தனது தாயின் பெற்றோரின் ஆதரவில் ஜீவிக்கும் தன்மையை சிறு வயதுமுதலே தந்து  இருக்கின்றது, ஜெனன காலம் முதல் நான்கு வயது வரை நடைபெற்ற சந்திரன் திசை ஜாதகருக்கு சுபயோகங்களை வழங்கிய போதிலும், அடுத்து நடைபெற்ற செவ்வாய் திசை விரைய ஸ்தான பலனை ஏற்று நடத்தி ஜாதகருக்கும் ஜாதகரை சார்ந்தவர்களுக்கும் கடுமையான இன்னல்களை தந்து மீள இயலாத சிரமங்களை உருவாக்கியது, ஜாதகரின் விரைய ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு  7ம் வீடாக அமைவது ஜாதகருக்கு மற்றவர்கள் வழியில் இருந்து கடுமையான இன்னல்களையே தொடர்ந்து தந்து கொண்டு இருப்பது விதியின் விளையாட்டு என்பதை தவிர வேறு என்ன சொல்வது.

தற்போழுது நடைபெறும் ராகு திசை ( 24/10/2010 முதல் 24/10/2028 வரை ) ஜாதகருக்கு 4,6,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் விறைய ஸ்தான பலனை தருவது ஜாதகருக்கு மேற்கண்ட பாவக வழியில் இருந்து கடுமையான நெருக்கடிகளை தந்து கொண்டு இருக்கின்றது, குறிப்பாக 4,10ம் பாவக வழியில் இருந்து பெற்றோர் ஆதரவு இன்மையையும், 6ம் பாவக வழியில் இருந்து உடல் நலம் சார்ந்த தொந்தரவுகளையும், 12ம் பாவக வழியில் இருந்து அனைவராலும் தொல்லை, மற்றும் அதிக மன உளைச்சல், மன போராட்டம், மன நலம் சார்ந்த பாதிப்பு மற்றும்  திடீர் இழப்புகள் என இந்த சிறு வயதிலேயே கடுமையான நெருக்கடிகளை ஜாதகர் சந்தித்துக்கொண்டு இருக்கின்றார், இதனால் வரும் இன்னல்களை  எதிர்கொள்ள ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் லக்கினமும் வலிமை பெறவில்லை, பாக்கியமும் கைகொடுக்கவில்லை 4,6,10,12ம் வீடுகள் வழியில் விரைய ஸ்தான பலனை ஜாதகர் அனுபவித்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருப்பது சுய ஜாதக வலிமை இன்மையை தெளிவுபடுத்துகிறது .
ஜாதகத்தில் சில பாவகங்கள் வலிமையுடன் இருந்த போதிலும் அதனால் வரும் யோக பலாபலன்களை ஜாதகர் அனுபவிக்க யாதொரு முகாந்திரமும் இருப்பதாக தெரியவில்லை, ஏனெனில் அடுத்து வரும் குரு மகா திசையும் ஜாதகருக்கு 12ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று விரைய ஸ்தான பலனையே ஏற்று நடத்துவதால், ஜாதகரின் வாழ்க்கை மிக பெரிய சவால்களை எதிர்கொள்ளும் தன்மையில் இருப்பதை கட்டியம் கூறுகிறது, குறிப்பாக சுய ஜாதகத்தில் லக்கினம் பாதிக்கப்படுவது ஜாதகரின் செயல்பாடுகள் மற்றும் செயல்திறனை கடுமையாக பாதிக்கும், தனக்கு வரும் இன்னல்களை எப்படி எதிர்கொள்வது என்ற ஓர் விஷயத்தை அறிந்துகொள்வே ஜாதகர் கடும் பிராயத்தனம் செய்யவேண்டி வரும், அறிவார்ந்த செயல்பாடுகள் முடங்குவதாலும், இறையருளின் கருணை ஜாதகருக்கு தக்க சமயத்தில் பலன்தாராமல் தடைகளை தருவதாலும், ஜாதகரின் முன்னேற்றம் என்பது குதிரை கொம்பாகவே இருக்கின்றது.

மேற்கண்ட ஜாதகருக்கு உள்ள ஒரே வாய்ப்பு ஜாதகருக்கு அமையவிருக்கும் வாழ்க்கை துணை, அதை சரியாக தேர்வு செய்துவிட்டால் ஜாதகரின் இன்னல்களுக்கு நல்லொதொரு தீர்வுகளை தர ஆரம்பித்து விடும், மாறாக தனது விருப்பம் போல் அவயோக ஜாதகத்தை ஜாதகர் தேர்வு செய்வாராயின் வாழ்க்கையில் நிம்மதி என்பதே இல்லை என்ற நிலையை தரும், சுய ஜாதகத்தில் 2,5,8,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும் 3,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து சுபயோகங்களை தந்த போதிலும், தற்போழுது நடைபெறும் திசை வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தாதது, சுய ஜாதகத்தில் யோகம் இருந்தும் பலன் அற்ற நிலையை தரும், ஜாதகருக்கு இறை நிலையும் குல தேவதையின் ஆசியும் நன்மைகளை வாரி  வழங்கட்டும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

செவ்வாய், 17 அக்டோபர், 2017

சுய ஜாதக வலிமை நிலையும், ஜாதகரின் மனபயமும் !

 
 
 "ஜோதிடம்" என்பது நமது வாழ்க்கையில் முன்னேற்றங்களையும், விழிப்புணர்வுடன் கூடிய தெளிந்த நல்லறிவையும் தரவேண்டும், மாறாக மூடநம்பிக்கைகளையும், நம்பிக்கையை குலைக்கும் விதமான பயமுறுத்தல்களையும் கொண்டதாக இருக்க கூடாது, பொதுவாக ஓர் ஜாதகர் சமுதாயத்தில் சுய வாழ்க்கையில் தன்னிறைவான முன்னேற்றங்களை பெற்று சுபயோக வாழ்க்கையை பெறுவதற்கு மூன்று அன்பர்களின் வழிகாட்டுதல்கள் மிக முக்கியமாக தேவை, அந்த மூன்று நபர்களின்  சரியான வழிகாட்டுதல்கள் கிடைக்குமாயின் சம்பந்தப்பட்ட ஜாதகர் தனது வாழ்க்கையில் சிறப்பு மிக்க யோக வாழ்க்கையினை பெறுவதற்கு தடையேதும் இருக்காது, முதலில் நல்ல மருத்துவர் ஆலோசனையை பெறுவது ஜாதகரின் உடல் நிலையில் சிறப்பான ஆரோக்கியத்தை தரும், நல்ல வழக்கறிஞர் ஆலோசனையை பெறுவது ஜாதகரின் வாழ்க்கையில் சிறப்பான வாழ்க்கை பாதையினை அமைத்து தரும், நல்ல ஜோதிடரின் ஆலோசனையை பெறுவது ஜாதகரின் வாழ்க்கையில் சகல நிலைகளில் இருந்தும் முன்னேற்றங்களையும், சுபயோகங்களையும் வாரி வழங்கும்.

 ஒரு ஜாதகத்தில் இல்லாத விஷயத்தை நவகிரகங்கள் தருவதாக மிகைபடுத்தி கூறுவது உண்மைக்கு புறம்பானது, பொதுவாக சுய ஜாதகத்தில் லக்கினம் வலிமை பெறுவது சம்பந்தப்பட்ட ஜாதகரை மிக சிறப்பாக செயல்பட வைக்கும், மேலும் பூரண ஆயுளை தரும், தான் தொடர்பு பெரும் பாவக வழியில் இருந்து ஜாதகரை ஏதாவது ஓர் வழியில் ஜீவிக்க வைக்கும், இதை போன்றே லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் தான் தொடர்பு பெரும் பாவக வழியில் இருந்து ஜாதகரை தனது வலிமைக்கு ஏற்றார் போல் இயக்கும், கிழ்கண்ட ஜாதகரின் கேள்விக்கு சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமைக்கு உற்பட்ட உண்மையான பலாபலன்களை சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே, ஜாதகர் இதற்க்கு முன் ஜாதக ஆலோசனை பெற்ற இடத்தில் கூறப்பட்ட கருத்துக்களை முதலில் பார்ப்போம்.


( 1. ஜாதகருக்கு . .கேது கொடி பிடிக்க **கால ஸர்ப்ப தோஷம் ** இது கடைசி வரை தொடர்வது .!! ) 

ஜோதிடதீபத்தின் கருத்து :

கால சர்ப்ப தோஷத்திற்கு இலக்கணம் ராகுகேது க்குள் அணைத்தது கிரகங்களும் அடக்கம் பெறுவது, மேற்கண்ட ஜாதகத்தில் ராகு 260:43:58 பாகையில் அமர்ந்திருக்கிறது, அதற்க்கு முன் சந்திரன் 251:56:46 பாக்கையிலும், செவ்வாய் 257:15:38 பாக்கையிலும் அமர்ந்து இருக்கின்றனர் எனவே கால சர்ப்ப தோஷம் என்பது இல்லை என்பதால் ராகு கேது கொடி பிடித்தால் நமக்கு என்ன?  குத்தூசி பிடித்தால் நமக்கு என்ன ? மேலும் இதற்கும் சுய ஜாதக வலிமைக்கும் சம்பந்தம் இல்லை.

( 2.லக்கினாதிபதி புதன் நீசமாகி தன வீட்டை பார்க்கிறான் ..அதனால் ஓரளவு உயிர் வாழ்வு .10% )

ஜோதிடதீபத்தின் கருத்து :

லக்கினாதிபதி நீசம் பெறுவது கால புருஷ தத்துவ அமைப்பிற்க்கான நிலை இதை சுய ஜாதகத்துடன் தொடர்பு படுத்துவது அபத்தமான செயல், மேலும் சுய ஜாதகத்தில் ஜாதகரின் லக்கின அதிபதி குரு பகவான் ஆவர் இதை நன்கு ஜோதிட கணிதம் அறிந்தவர்கள் மிக எளிதாக தெரிந்துகொள்ள இயலும். லக்கினம் எனும் முதல் வீடு ஜாதகருக்கு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகரின் லக்கினம் 100% விகிதம் வலிமை பெறுவதை கட்டியம் கூறுகிறது, எனவே ஜாதகர் பூர்ண ஆயுளுடன் ஜீவித்து நிற்பார் என்பதை தெளிவு படுத்துகிறது.

( 3. கல்வி 5ம் வீட்டில் குரு [நீசமானாலும் ஒரு 40 சதவீதம் வேலை செய்வார் குரு மட்டும் ]இருப்பதால் கொஞ்சம் நுண்ணறிவுடன் செயல்பட்டு பூர்வ புண்ணியமும் சேர்ந்து தகவல் தொழில் நுட்பம் பயின்றார் .... வெளி நாட்டில் வேலை .உபய ராசி என்பதால் ...அம்சத்தில் 10 ல் ராஹு வெளி நாடு கடத்தியது ..!! ) 

ஜோதிடதீபத்தின் கருத்து :

ஜாதகரின் லக்கினம் மற்றும் 5ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானம் எனும் 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதாலும் 5ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தானமான மகர ராசியில் வியாபித்து நிற்பது, ஜாதகருக்கு சிறப்பு மிக்க ஜீவன முன்னேற்றத்தை தனது சுய அறிவு மற்றும் புத்திசாலித்தனம் கொண்டு வாழ்க்கையில் பெற வேண்டிய சுபயோகங்களை பரிபூர்ணமாக பெறு வைக்கிறது, என்பதே உண்மை நிலை. 5ம் வீடு சர ராசி என்பதனால் அயல் தேசம் சென்று ஜீவனம் செய்யும் யோகத்தை தருகிறது.

( 4.. கர்மகாரகனான சனி தனது 10 ம் பார்வையாக தன வீடு கும்பத்தை பார்ப்பது .அது லக்கினத்திற்கு 6ம் வீடு ருணம் .???அது ஒரு கஷ்டம் ...)

ஜோதிடதீபத்தின் கருத்து :

சனி பகவான் தனது வர்க்க கிரகமான சுக்கிரனின் வீட்டில் ( ரிஷபத்தில் ) அமர்ந்து தனது வீட்டை தானே பார்ப்பது ( கேந்திர பலம் பெற்று ) மேலும் வலு சேர்க்கும் அமைப்பாகும், மேலும் 6ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு வரும் உடல் நிலை பாதிப்புகளை ஜாதகரின் குலதெய்வ ஆசியின் மூலம் தனது சமயோசித புத்திசாலித்தனம் கொண்டு வெற்றிகாண்பார், சனி பார்வையினால் யாதொரு கஷ்டமும் ஜாதகருக்கு இல்லை, இதை சொன்னவருக்கு வேண்டுமாயின் ஏதாவது ஓர் கஷ்டம் சனியின் மூலம் வரலாம்.

( 5.. 6ம் வீட்டில் சூரியன் தலை பாகத்திற்கு அதிபதி ஆதாலால் ***மூளையில் கட்டி** ஏற்பட்டு ஜாதகர் **.மூளை புற்று ** நோயால் அவதி படுகிறார்...கீமோ தெரபி தொடர்ர்ந்தால்???? ..மொத்த உடலும் ஊனம் ஏற்பாடும் .மருத்துவ நிபுணர்கள் கருத்து படுத்தய படுக்கை ..)

ஜோதிடதீபத்தின் கருத்து :

சத்ரு ஸ்தானத்தில் நிற்கும் சூரியன் ஜாதகருக்கு ஸ்திர காற்று தத்துவ ராசி மூலம் நிறைவான அறிவு மற்றும் தன்னம்பிக்கையை வழங்கி தனது வாழ்க்கையில் எதிர்த்து போராடி வெற்றி பெரும் தன்மையை தருகின்றார், ஜாதகருக்கு வரும் நோய், எதிர்ப்பு, கடன் போன்ற இன்னல்களில் இருந்து மீட்டு எடுக்கும் வல்லமையை தருகின்றார், எனவே ஜாதகரின் நம்பிக்கை மற்றும் முயற்சி வீண் போக வாய்ப்பில்லை, 6ல் சூரியன் மருத்துவ சிகிச்சையின் மூலம் விரைவாக குணம் பெறுதலை குறிக்கும்.

( 6.,அஷ்ட வர்க்க பரல் ..ஜாதகருக்கு 8 மிடம் 16//28 பரல்களே .இது மிக குறைவானது  ஆயுள் ..???? ) 

ஜோதிடதீபத்தின் கருத்து :

இயற்கை நியதிகளை நிர்ணயம் செய்ய இறை நிலையால் மட்டுமே முடியும் எனும் பொழுது, ஒருவரின் ஆயுளை நிர்ணயம் செய்ய மருத்துவராலும் முடியாது, ஜோதிடராலும் முடியாது, மேலும் பரல்கள் ஒருவரின் ஆயுளை நிர்ணயம் செய்கின்றது என்பது கேலிக்கூத்து.


( 7.,உபய ராசி உபய லக்கினம் ஆதலால் வெளி நாட்டில் வேலை ...)

ஜோதிடதீபத்தின் கருத்து :

உபய ராசி உபய லக்கினத்தில் உள்ளார்கள் அனைவரும் இனி வெளிநாடு ஜீவனத்தை தேடுவதே உகந்தது, உள்நாட்டில் வேலையில்லை, சுய ஜாதகத்தில் ஜாதகருக்கு 1,5ம் வீடுகள் வலிமை பெற்று இருப்பது சிறப்பான தகுதி மற்றும் திறமைகளை வழங்கியிருக்கிறது, ஜாதகரின்  சுய உழைப்பின் மூலம் வெளிநாட்டில் பணியாற்றும் யோகத்தை பெற்று இருக்கின்றார்.

( 8..திருமணம் நடந்தது கொஞ்சம் உறவு பெண் மிக அருமையான பெண்மணி ..1 ஆண் 1 பெண் குழைந்தை ...குழைந்தைகளுக்கு தந்தையின் நிலைமை தெரியும் குறுகிய ஆயுள் என!! )

ஜோதிடதீபத்தின் கருத்து :

சுய ஜாதகத்தில் 5ம் பாவகம் மிகவும் வலிமை பெற்று இருப்பது ஜாதகருக்கு நல்ல புத்திர பாக்கியத்தை தந்து இருக்கின்றது, மேலும் வாழ்க்கையில் அவர்கள் வழியிலான சுபயோகங்களை பெறுவதற்கு வழிகாட்டுதல்களையும் தொடர்ந்து வாங்கிக்கொண்டு இருக்கின்றது.


( 9.,...8 மிடத்திற்கு 12 மிடமான மீனம் .அதிபதி குரு 5ம் வீட்டில் நீசமாகி போனான் உத்தேசமாக அடுத்துவரக்கூடிய ராஹு திசையின் குரு புக்தி இவருக்கு கடுமையான கண்டம் ..!!!!! தனுசு ராசிக்கு 12ல்விருச்சிகத்தில் குரு வரும்நேரம் கண்டம் 2018..ஜூலை .)

ஜோதிடதீபத்தின் கருத்து :

ஜாதகருக்கு ராகு திசை மற்றும் குரு புத்தி ஏற்று நடத்தும் பாவக பலன் பற்றி ஏதும் அறியாத நிலையில் கூறப்படும் கருத்து இது என்றே சொல்ல தோன்றுகிறது, ஜாதகருக்கு கடந்த செவ்வாய் திசை 2,4,8,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று கடுமையான மன பயத்தையும் இழப்புகளையும் வாரி வழங்கி இருக்கின்றது, ஆனால் தற்போழுது நடைபெறும் ராகு திசை ஜாதகருக்கு 6ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சுபயோக பலன்களை தருவது ஜாதகரின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும், உடல் மனம் சார்ந்த இன்னல்களில் இருந்து விடுபட சரியான மருத்துவரை காணும் யோகத்தை தரும், மன பயம் நீங்கும், ராகு திசையில் எதிர் வரும் குரு புத்தியும் 6ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சுபயோக பலன்களை தருவது ஜாதகரின் வாழ்க்கையில் ஓர் நம்பிக்கையை பெற்று தரும், வீண் மரண பயத்தை போக்கி தனது உடல் நலத்தை தானே தேற்றும் தன்மையை தரும், ராகு தசை குரு புத்தி ஜாதகருக்கு மரணத்தை தாராது என்பதே உண்மை நிலை.

( .10.,ஏழரை சனி ஜென்ம ராசிக்கு வருவது ஒரு பாதிப்பு ..கர்மகாரகனான இவரின் 3ம் பார்வை 6 மிடத்தை பார்ப்பது கண்டத்தை ஏற்படுத்தும் )

 ஜோதிடதீபத்தின் கருத்து :

இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் ஏழரை சனியை வைத்துக்கொண்டு ஜோதிடர்கள் காலத்தை ஓட்டுவார்கள் என்று தெரியவில்லை, சுய ஜாதகத்தில் பாவகங்களின் வலிமை நிலை, தற்போழுது நடைபெறும் திசாபுத்தி ஏற்று நடத்தும் பாவக தொடர்பு, அந்த பாவகங்களுக்கு கோட்சார கிரகங்கள் தரும் வலிமை வலிமை இன்மை ஆகிவை கொண்டு சுய ஜாதக பலாபலன்கள் காண இயலாத பொழுது, ஏழரை சனி, அஷ்டம சனி, கால சர்ப்ப தோஷம் என பல காரணங்களை சொல்லி தானும் குழம்பி ஜோதிடம் பார்க்க வந்தவரையும் குழப்பி வினைப்பதிவின் தாக்கத்தை அதிகரித்துக்கொண்டே செல்வது ஜோதிடர்களின் விதியை வெகுவாக பாதிக்கும் என்பது மட்டும் சத்தியம்.

( 11.,அம்சத்தை கவனிக்கும் போது சற்று பரவாயில்லை என தோன்றும் லக்கினாதிபதி சனி தன வீட்டை பார்ப்பது .. . .)

ஜோதிடதீபத்தின் கருத்து :

பாவக தொடர்புகளிலேயே அனைத்தையும் அறிந்துகொள்ளும் பொழுது,  அம்ச நிலையை பற்றி சிந்திப்பது வீண் வேலை.

( 12., அஷ்ட வர்க பரல் லக்கினம் [1] 27.,33.,33.,36.,28.,28.,24.,**16.**27.,26.,32.,27..!!!!!...8மிடத்தில் பரல் 16 ஆயுள் குறைவு .25 வரை பரல்கள் சரி பரவாயில்லை என கொள்ளலாம் ..அதற்கும் கீழ் என் வரும்போது அந்த வீடு பாதிப்பு ..!!!.)

ஜோதிடதீபத்தின் கருத்து :

அஷ்டவர்க்க பரல்கள் கொண்டு எந்தவித பலாபலன்களை ஜோதிடரால் நிர்ணயம் செய்ய இயலாது என்பதே உண்மை.

( 13.,சுய வர்க்கபரலும் லக்கினம் .4.,5.,4.,5.,5.,5.,4.,4.,..ஆக இதில் சராசரியா 4 பரல்கள் சுயவர்கத்தில்4 பரல் இருந்தாலே போதும் என கொள்ளலாம் . )

ஜோதிடதீபத்தின் கருத்து :

அஷ்டவர்க்க பரல்கள் கொண்டு எந்தவித பலாபலன்களை ஜோதிடரால் நிர்ணயம் செய்ய இயலாது என்பதே உண்மை.

( 14..,ஜாதகர் வெளி நாட்டில் இருப்பதா..???உள்நாட்டில் வந்துஉறவுகளுடன் இருப்பதா ???.மில்லியன் டாலர் கேள்வி.???? )

ஜோதிடதீபத்தின் கருத்து :

சுய ஜாதகத்தில் பாவக வலிமை நிலை தெரியவில்லை எனில் உடனே மில்லியன் டாலர் கேள்வி என்பதா ? என்ன கொடுமை இது ? ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானம் எனும் 5ம் வீடு மிகவும் வலிமை பெற்று இருக்கின்றது, எனவே சந்தேகம் இன்றி தெளிவாக சொல்லலாம் ஜாதகர் தனது பூர்வீகத்தில் ஜீவித்து இருப்பதே சகல நலன்களையும் வாரி வழங்கும், குலதெய்வ ஆசியுடன் குழந்தைகளின் பாசத்துடன் பூர்வீக ஜீவனமே ஜாதகருக்கு உகந்தது.

( 15..,எனது யோசனை இந்திய வந்து உறவுகளுடன் இருப்பது ..!!!)

ஜோதிடதீபத்தின் கருத்து :

யோசனை தேவையில்லை சுய ஜாதகம் சொல்வது என்ன என்பதே முக்கியம்.

( 16.,ஜோதிட ஜாம்பவான்கள் என்ன சொல்கிறீர்கள் .

எதிர்கால பலன் என்றில்லை ..???இது வித்தியாசமான ஜாதகம் என்பதால் பதிந்துள்ளேன். 
இதே போல் ஒரு எனக்கு நெருங்கிய உறவினர். மூளை டூமர் ஆபரேஷன் செய்தார். ஆனால் 6 மாதம் டூமர் மீண்டும் வளர்ச்சி ..தற்போது ஜாதகர் இல்லை ..!!!.. ) 

ஜோதிடதீபத்தின் கருத்து :

ஒரு ஜாதகத்தை போல் மற்றோரு ஜாதகம் இருக்காது என்ற அடிப்படை விஷயம் எப்பொழுது புரிய வருகிறதோ அப்பொழுதுதான் சுய ஜாதக பலாபலன்கள் பற்றிய தெளிவு கிடைக்கும். மேலும் எந்த ஒரு ஜோதிட ஜாம்பவான்களாலும் ஒருவரின் ஆயுளை நிர்ணயம் செய்ய இயலாது, ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் ராகு திசை வலிமை பெற்ற பலாபலன்களை ஏற்று நடத்துவது ஜாதகரின் வாழ்க்கையில் சுபயோகங்களை தரும் என்பதால் வீண் பயமின்றி எதிர்காலத்தை ஜாதகர் எதிர்கொள்வதே சால சிறந்தது.


குறிப்பு :

 கிராமங்களில் ஓர் செலவேந்திரம் ஒன்று உண்டு அதாவது " அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் " என்று அதை போன்று உள்ளது மேற்கண்ட ஜாதகரின் நிலை, ஜாதகர் எம்மிடம் ஆலோசனை பெற வந்தது கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் அப்பொழுதே ஜாதகர் தனக்கு மருத்துவர்கள் 6 மாதம் தான் கெடு வைத்திருக்கின்றனர் என்றார், இப்பொழுது இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகியும், ஜாதகர் மின் அஞ்சல் மூலம் ஆலோசனை பெறுகிறார் எனும் பொழுது, ஜாதகரின் உயிருக்கும் உடலுக்கும் பாதிப்பு இல்லை, ஜாதகரின் மனம் மட்டுமே கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றது இதற்க்கு அவரது சுய ஜாதகத்தில் 2,3,4,7,8,10,11,12ம் வீடுகள் அனைத்தும் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்த்துடன் சம்பந்தம் பெற்று இருப்பதே காரணமாக அமைகிறது, சுய ஜாதகத்தில் 12ம் வீடு மனம் சார்ந்த கற்பனைகளை அதிகரிக்கும், மேற்கண்ட ஜாதகருக்கு 2,3,4,7,8,10,11,12ம் பாவக வழியில் இருந்து வரும் மிதம் மிஞ்சிய கற்பனைகள் ஜாதகரின் வாழ்க்கையை வெகுவாக பாதித்து கொண்டு இருக்கின்றது, கடந்த செவ்வாய் திசையில் ஜாதகர் 2,4,8,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று விரைய ஸ்தான பலனை முழு வீச்சில் நடத்தியது பெரிய அளவிலான மன பயத்தை ஏற்படுத்தி தனக்கு வந்த உடல் தொந்தரவு தீர்க்க இயலாத பிரச்சனை என்று ஜாதகரையே மிக ஆழமாக ஆள் மனதில் நம்ப வைத்தது, இதன் தாக்கத்தையே ஜாதகர் தற்போழுது ராகு திசையிலும் அனுபவித்து கொண்டு இருக்கின்றார், ராகு திசை வலிமை பெற்ற பாவக பலனை தருவதால், ஜாதகர் இந்த வீண் மனபயத்தில் இருந்து விரைந்து மீட்டு எடுக்கும், தனது பூர்வீகத்தில் ஜீவிக்கும் பொழுது வாழ்க்கையில் சிறப்பு மிக்க யோகங்கள் நடைமுறைக்கு வரும்.


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வியாழன், 12 அக்டோபர், 2017

சுய ஜாதகத்தில் லக்கினம் வலிமை இழப்பதால், ஜாதகருக்கு ஏற்படும் இன்னல்கள் !



 " எண்சான் உடம்பிற்கு சிரசே பிரதானம் " என்பதற்கு இணங்க சுய ஜாதகத்தை ஆளுமை செய்வதில் உயிர் உடல் என்று வர்ணிக்கப்படும் லக்கினமே பிரதானம் ஆகும், சுய ஜாதக பலன்கான சம்பந்தப்பட்ட நபரின் லக்கினமே அடிப்படையாக விளங்குகிறது,  இது சம்பந்தப்பட்ட நபரின் பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் என்ற குறிப்பை கொண்டு  கணிதம் செய்யப்படும், அதன் அடிப்படையில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை வலிமை அற்ற தன்மை நிர்ணயம் செய்யபடுகிறது, ஒருவரது சுய ஜாதக பலாபலன்கள் பற்றி தெளிவு பெற நிச்சயம் அவரது லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை நிலையை கருத்தில் கொண்டும், நடைபெறும் திசை புத்தி மற்றும் எதிர்வரும் திசாபுத்திகள் ஏற்று நடத்தும் பாவக வலிமையை கருத்தில் கொண்டும், சுய ஜாதக பலன் காண்பது அவசியமாகிறது.

அதன் அடிப்படையில் சுய ஜாதகத்தில் முதல் பாவகமான லக்கினம் வலிமை பெறுவது மற்ற பாவக வழியில் இருந்து வரும் யோக அவயோக பலாபலன்களை சுவீகரிக்கும் வல்லமையை பரிபூர்ணமாக பெற்று இருக்கும், மாறாக சுய ஜாதகத்தில் லக்கினம் வலிமை அற்று காணப்படுவது ஜாதகர் மற்ற பாவக வழியில் இருந்து வரும் நன்மை தீமைகளை ஏற்றுக்கொள்ளும் வல்லமையை இழந்து காணப்படும், லக்கினம் பாதிப்படைவது என்பது சுய ஜாதகத்தில் முதல் வீடு மறைவு ஸ்தானமான 6,8,12ம் பாவகங்களுடன் தொடர்பு பெறுவது ( லக்கினாதிபதி 6,8,12ல் மறைவது என்பதல்ல ) ஜாதகர் சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து இன்னல்களை தரும், மேலும் லக்கினம் எனும் முதல் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது என்பது சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையை கணிக்க இயலாத கடுமையான பாதிப்பை தரும் ( சர லக்கினத்திற்கு 11ம் வீடும், ஸ்திர லக்கினத்திற்க்கு 9ம் வீடும், உபய லக்கினத்திற்க்கு 7ம் வீடும் பாதக ஸ்தானமாகும் ) ஒருவரது ஜாதகத்தில் மேற்கண்ட பாவகங்களுடன் சம்பந்தம் பெரும் லக்கினம் மிகவும் பாதிப்பிற்க்கு ஆளாகி, ஜாதகரின் வாழ்க்கையை வெகுவாக பாதிக்கும்.

லக்கினம் சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது :

ஜாதகரின் உடல் நிலை மற்றும் மனநிலை வெகுவாக பாதிக்கும், நோய் எதிர்ப்பு தன்மை குறையும், ஜாதகரின் சிந்தனை மற்றும் செயல்பாடுகள் ஜாதகருக்கே எதிராக திரும்பும், வளரும் காலத்தில் பல எதிர்ப்புகளுக்கு இடையில் ஜாதகர் போராடி முன்னுக்குவரும் நிலையை தரும் அல்லது முன்னேற்றம் அற்ற நிலையில் தோல்வியை தரும், ஜாதகருக்கு அதிக அளவிலான எதிரிகளும், எதிர்ப்புகளும் தொடர்ந்து வரும் இதை சமாளிக்கும் வல்லமையும் ஜாதகருக்கு மிக குறைவாகவே அமைந்து இருக்கும், அடிக்கடி உடல் நலம் பாதிப்படையும், குறுகிய காலத்தில் மருத்துவ செலவினங்களை சந்திக்கும் நிலையை தரும், எதிரியின் பலமே உயர்ந்து நிற்கும், எதிர்மறையான எண்ணங்கள் ஜாதகரின் உடல் மனம் இரண்டையும் கடுமையாக பாதிக்கும், இதுவே ஜாதகரின் முன்னேற்றத்தை வெகுவாக பாதிக்கும், சில நேரங்களில் எதிரியின் மிரட்டலுக்கு பயந்து போகும் நிலையை  தரும், அதிக பொறுப்புகளை சுமக்கும் வல்லமையற்றவராக திகழ்வார்கள், சிறு உடல் தொந்தரவுக்கே அதிக மனபயம் கொண்டு தானும் பாதித்து தன்னை சார்ந்தவர்களையும் படுத்தி எடுக்கும் தன்மையை பெற்றவர்கள் என்பதால் இவர்களை மற்றவர்கள் கையாள அதிகம் சிரமப்படுவார்கள், மேற்கண்ட அமைப்பில் உள்ள வாழ்க்கை துணையை பெற்ற அன்பர்களின் பாடுதான் ரொம்ப சிரமம்.

லக்கினம் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது :

ஜாதகருக்கு வரும் எதிர்பாராத இழப்புகள் தாங்க இயலாவண்ணம் இருக்கும், தான் செய்யும் செய்கைகள் தனக்கு இன்னல்களை தரும் என்று நன்கு தெரிந்து இருந்தும் அசட்டு தைரியத்துடன் அதில் ஈடுபட்டு இழப்புகளை சந்திப்பார்கள், விபத்து, வீண் விரையம் போன்றவற்றை ஜாதகர் தவிர்க்க இயலாது, சில நேரங்களில்  இவர்கள் எடுக்கும் முடிவுகள் பலரது வாழ்க்கையையும் பாழ்படுத்திவிடும், குறிப்பாக வாழ்க்கை துணைக்கு தாங்க இயலாத இன்னல்களை தருவார்கள், நண்பர்கள் அனைவரும் இவர்களால் அதிகம் பாதிக்கப்படுவார்கள், சுய சிந்தனை என்பது ஜாதகருக்கு இழப்புகளையே  ஏற்படுத்தும், மனம் குறுக்கியவட்டத்தில் இருந்து வெளிவர மறுக்கும், தவறான திட்டமிடுதல்கள் மூலம் கடுமையான இழப்புகளை ஜாதகரும் சந்தித்து, ஜாதகரால் மற்றவர்களும் சந்திக்கும் சூழ்நிலையை உருவாக்கும், பெரும்பாலும் ஜாதகரின் சிந்தனை எதிர்மறையான எண்ணங்களால் சூழப்பட்ட மனநிலையில் அதிக போராட்டங்களை சந்திக்கும் நிலையை தரும், ஜாதகர் பலமுறை முயற்சித்தே சிறு வெற்றிகளை பெறவேண்டியிருக்கும், தீவிரமான எண்ணங்கள் ஜாதகரின் வாழ்க்கையை பல சிக்கல்களுக்கும் சிரமங்களுக்கு வித்திடும், கிணற்றுத்தவளையாய் வாழ்க்கையில் விழிப்புணர்வு அற்று தனது வாழ்க்கையை தானே பாதிப்பிற்கு ஆளாக்கும் தன்மையை தரும்.

லக்கினம் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது :

ஜாதகரின் மனநிம்மதி கெடும், நல்ல உறக்கம் இன்றி பரிதவிக்கும் நிலையை தரும், ஜாதகர் தீட்டும் பெரிய அளவிலான திட்டங்கள் இறுதியில் முழு தோல்வியை  தரும், ஆண் பெண் உறவுகள் வழியிலான பேரிழப்புக்களை அதிக அளவில்  சந்திக்கும் நிலையை தரும், தனக்கு உகந்த துணையை சரியாக தேர்வு செய்யாமல் அதன் வழியில் இருந்து வரும் இன்னல்களை சந்தித்து நிம்மதி இல்லாமல் வாழ்க்கையில் போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டி வரும், ஆன்மீகத்தில் நாட்டம் இன்றி நாத்திக செயல்பாட்டினை தரும், தெளிவில்லாத சிந்தனை ஜாதகரின் மனநிம்மதியை பறிக்கும், முதலீடு செய்வதால் பேரிழப்புகளை சந்திக்கும் நிலையை தரும், அதிக அளவில் மனநோய் சார்ந்த தொந்தரவுகளால் பாதிப்படையும் நிலையை தரும், மற்றவர்களால் தானும், தன்னால் மற்றவர்களும் நிம்மதியற்று மனோ ரீதியாக  போராட்டங்களை சந்திக்கும் சூழ்நிலையை தரும், கற்பனையே  வாழ்க்கை என்று எண்ணிக்கொண்டு தனது வாழ்க்கையை தானே கெடுத்துக்கொண்டு  இன்னலுறும் தன்மையை தரும், திரை துறை சார்ந்த விஷயங்களில் வீண் கற்பனை செய்துகொண்டு வாழ்க்கையை கெடுத்துக்கொள்பவர்கள் அதிக அளவில் மேற்கண்ட அமைப்பை பெற்றவர்களே, சுய அறிவு சொல்வதை கருத்தில் கொள்ளாமல் தனது மனம்போன போக்கில் தனது வாழ்க்கையை வாழ்ந்து, யாதொரு பிரயோசனம் இன்றி ஜீவிக்கும் தன்மையை தரும், சில நபர்கள் தாங்க இயலாத மனஅழுத்தத்தின் காரணமாக தற்கொலை முயற்சி செய்யும் நிலைக்கு தள்ளப்படுவதும் உண்டு, 12ம் பாவகம் நீர் தத்துவ ராசி எனில் ஜாதகரின் நிலை மிகவும்  பரிதாபத்திற்க்கு உரியதாக மாறிவிடும்.

லக்கினம் பாதக ஸ்தான தொடர்பை பெறுவது ( சரலக்கினம் )

அடிப்படையில் தன்னம்பிக்கையே ஜாதகருக்கு இருக்காது, செய்யும் காரியங்கள் யாவும் பிற்போக்கு தனமாகவும், மூட பழக்க வழக்கங்களை ஆதரிக்கும் தன்மை கொண்டதாகவும் இருக்கும், மிக மிக பழமைவாதிகளாக தனது வாழ்க்கையை சுருக்கிக்கொண்டு போராட்டத்தை மட்டுமே ஆயுதமாக கொண்டு வாழ்க்கையில் இன்னலுறுவார்கள், இவர்களால் மற்றவர்களுக்கு சிறிதும் நன்மை உண்டாகாது என்பதுடன், தனது வாழ்க்கையையும் தானே கெடுத்துக்கொள்வார்கள், அனைத்திற்கும் எதிர்ப்புவாதமே சரியானது என்று பிடிவாதம் செய்ப்பவர்கள், தேக ஆரோக்கியம் மற்றும் அறிவார்ந்த செயல்களில் ஈடுபாடு காட்டாமல், மற்றவர்கள் செய்வதை தானும் செய்து மிகப்பெரிய தோல்விகளை சந்திப்பார்கள், பொறுப்பற்ற தன்மை அதிகம் காணப்படும், அதிர்ஷ்டத்தின் தாக்கம் சிறிதும் இருக்காது, பகுத்தறிந்து செயல்படும் தன்மை இன்றி வேதனையை விலைகொடுத்து வாங்கிக்கொள்வார்கள், மற்றவர்களால் செய்யமுடியும் காரியத்தையும் தனது செய்கையின் மூலம் பாதிப்படைய செய்வார்கள், மற்றவர்களை முன்னிறுத்தி அதன் பின்னால் தனது ஜீவனத்தை மேற்கொள்வார்கள், எதிர்ப்புகள் எப்பொழுதும் இருந்துகொண்டே இருக்கும், மற்றவர்களை சார்ந்து வாழும் சூழ்நிலையை தந்துவிடும், தெய்வீக அனுக்கிரகம் சிறிதும் இருக்காது, இவருடன்  சார்ந்தவர்கள் சுய ஜாதகம் வலிமை பெறவில்லை எனில், அவர்களின்  கதி அதோ கதிதான், சர லக்கினத்திற்க்கு அடிப்படையே வேகம்தான் ஆனால் இவர்களின் செயல்திறன் சிறிதும் அதற்க்கு பொருந்தவண்ணம் இருக்கும், சுய கட்டுப்பாடு, மனவலிமை, உடல் வலிமை, அறிவின் திறன் போன்றவை ஜாதகரின் வாழ்க்கையை விட்டே விலகி சென்றுவிடும்.

லக்கினம் பாதக ஸ்தான தொடர்பை பெறுவது ( ஸ்திர லக்கினம் )

 ஜாதகருக்கு சமூகத்தில் நற்பெயர் கிடைப்பது அரிது, பலரது கண்டிப்புக்கு ஆளாகும்  சூழ்நிலையை தரும், அறிவுத்திறன் என்பது ஜாதகருக்கு எதிர்மறையாக வேலை செய்யும், தொடர்ந்து பாதிப்புகளை தரும் விஷயங்களில் ஈடுபட்டு தனது வாழ்க்கையை தானே கெடுத்துக்கொள்வார்கள், குறிப்பாக தனது உடலுக்கும் மனதுக்கும் ஒவ்வாத காரியங்களில் ஈடுபட்டு இன்னலுறும் தன்மையை தரும், முதியவர்கள், ஆன்மீக பெரியோர்களின் நிந்தனைக்கு ஆளாகும் சூழ்நிலையை தரும், யாதொரு அறிவுரையும் ஜாதகருக்கு பலன்தராது, தானே அறிவாளி என்ற எண்ணத்தை மனதில் நிலை நிறுத்தி நல்லோர்களின் சாபத்திற்கு  ஆளாகும் சூழ்நிலையை தரும், கற்ற கல்வி பலன்தராது, மிக உயர்ந்த இடத்தில் இருந்த போதிலும் செயல்பாடுகள் அதற்க்கு ஈடானதாக இருக்காது, எந்த காரியத்திலும் வெற்றி பெற ஜாதகர் கடுமையாக போராடவேண்டிவரும், தீயபழக்க வழக்கங்கள் ஜாதகருக்கு மிக எளிதில் சுவீகரிக்கபடும், அதில் இருந்து விடுபட ஜாதகர் மரண போராட்டம் நடத்த வேண்டியிருக்கும், செய்யக்கூடாத காரியங்களை செய்துவிட்டு அதன் வழியில் இருந்து வரும் இன்னல்களை ஜாதகர் எதிர்கொள்ள இயலாமல் தவிப்பர், இறையருள் ஆசிர்வாதமும் பித்ரு ஆசிர்வாதமும் ஜாதகருக்கு சிறிதும் இன்றி வாழ்க்கையில் போராட்டத்தை எதிர்கொள்ளும் சூழ்நிலைய தரும், உண்மையான ஆன்மீகத்தை நாடாமல் போலி வேசதாரிகளை நம்பி தமது  வாழ்க்கையை தாமே கெடுத்துகொல்வர்கள், அறிவில் விழிப்பு நிலை ஏற்ப்படாது , அறிவார்ந்த பெரியோர்கள் சொல்லும் அறிவுரையும் ஜாதகருக்கு பலன் தாராது, சில நேரங்களில் இவர்களின் செய்கைகள் என்பது விட்டில் பூச்சிகளுக்கு நிகராக அமைந்திருக்கும், தான் செய்யும் செயல்கள் யாவும் சரியென்று வீண் வாதம் செய்து, தவறான சேர்க்கையின் மூலம் தனது  வாழ்க்கை தானே பாதிப்பிற்கு ஆளாக்கி இன்னலுருவார்கள்.

லக்கினம் பாதக ஸ்தான தொடர்பை பெறுவது ( உபய லக்கினம் )

ஜாதகரின் சேர்க்கையும், வெளிவட்டார பழக்க வழக்கமும், எதிர்ப்பால் இன சேர்க்கையும் ஜாதகரின் வாழ்க்கையை முழு அளவில் பாதிப்பிற்கு ஆளாக்கும் , மற்றவர்கள் சொல்வதை கேட்டுக்கொண்டு சுய சிந்தனை இன்றி செய்யும் ஒவ்வொரு  காரியங்களிலும்  மிகப்பெரிய தோல்விகளை சந்திப்பார்கள், சுய ஆளுமை இன்றி வாழ்க்கையில் தொடர்ந்து இன்னல்களை அனுபவிக்கும் நிலையை தரும், பெரும்பாலும் தனது வாழ்க்கை துணை, நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் மூலம் வாழ்க்கையை போராட்ட களமாக மாற்றி அவதியுறும் தன்மையை தரும், மேலும் மேற்கண்ட நபர்களால் சிறிதும் நன்மையை பெற இயலாத அன்பர்கள் என்றால் அது மிகையில்லை, தனிப்பட்ட முறையில் சுய முன்னேற்றம் பெரும் யோகம் அற்றவர்கள், தனது வாழ்க்கை துணை, நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளை சரியாக தேர்வு செய்யும் வல்லமை அற்றவர்கள் என்பதுடன், பிரபல்ய யோகம் பெற தகுதியற்றவர்கள், பாதக ஸ்தானம் நீர் ராசிஎனில் சம்பந்தப்பட்ட ஜாதகர் எதிர்ப்பால் இன அமைப்பினரால் ஏமாற்றப்பட்டு, மன நோயாளியாக அவதியுற நேரும், குறிப்பாக அதிக அளவிலான குடி நோயாளிகள் அனைவரும் சுய ஜாதகத்தில் நீர் தத்துவ ராசி பதிக்கப்பட்ட நிலையில்  இருப்பதை கவனிக்க முடிகிறது.


குறிப்பு :

சுய ஜாதகத்தில் லக்கினம் எனும் முதல் வீடு எக்காரணத்தை கொண்டும் பாதக ஸ்தான தொடர்பை பெற கூடாது, அப்படியே பெற்று இருந்தாலும் நடைபெறும் எதிவரும் திசாபுத்திகள் பாதக ஸ்தான தொடர்பை பெற்ற இலக்கின பாவக பலனை  ஏற்று நடத்தாமல் இருப்பதே ஜாதகருக்கு நன்மையை தரும், ஒருவேளை பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்ற இலக்கின பாவக பலனை தற்பொழுது எதிர்வரும் திசாபுத்திகள் ஏற்று நடத்தினால் ஜாதகரின் வாழ்க்கை அனலில் இட்ட மெழுகு போல் உருக வேண்டியிருக்கும், மேலும் சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் எந்த ஒரு பாவகமும் பாதக ஸ்தான தொடர்பை பெறுவது ஒருவரின் வாழ்க்கையில் சிறப்புகளை தருவதில்லை, சுய ஜாதகத்தில் லக்கினம் தொடர்பு பெரும் பாவக நிலையை கருத்தில் கொண்டு வாழ்க்கையில் நலம் பெறுவதே ஒவ்வொருவருக்கும் சுபயோகங்களை வாரி  வழங்கும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

திங்கள், 9 அக்டோபர், 2017

ஜாதக ஆலோசனை : சுய ஜாதகத்தில் உள்ள யோகம் தரும் நன்மைகள் மற்றும் முன்னேற்றம் !



 சுய ஜாதகப்படி ஒருவரது சுய ஜாதகத்தில் உள்ள பாவகங்களின் வலிமை மற்றும் வலிமை அற்ற நிலை, தற்போழுது நடைபெறும் திசாபுத்திகள் தரும் பலாபலன்கள் மற்றும் எதிர்வரும் திசை தரும் பலாபலன்கள் பற்றி ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம்.

லக்கினம் : கன்னி
ராசி : துலாம்
நட்ஷத்திரம் : சித்திரை 3ம் பாதம்


ஜாதகத்தில் பாவக தொடர்புகள் :

1ம் வீடு முதல் பாவகமான லக்கினத்துடன் சம்பந்தம்.
2,4,8,11,12ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம்.
3,5,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம்.
6ம் வீடு சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம்.
9ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம்.
10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம்.

1ம் வீடு முதல் பாவகமான லக்கினத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகிக்கு நோய் எதிர்ப்பு சக்தி, சிறந்த உடல்நலம், வருமுன் காக்கும் வல்லமை, வளரும் சூழ்நிலையில் யோக வாழ்க்கை, சிறந்த கல்வி, நல்ல தொழில் வாய்ப்பு, எடுக்கும் காரியங்களில் வெற்றி என்ற வகையில் சிறப்புகளை தரும் லக்கினம் கன்னி என்பதால் உபய மண் தத்துவ அமைப்பில்  இருந்து ஜாதகி சிறப்புகளை வெகுவாக பெரும் யோகத்தை தரும், போதும் என்ற மனம், எதிர்ப்புகளை மிக எளிதாக கடந்து செல்லும் யோகம், வாழ்க்கையை மற்றவர்களுக்கு பயனுள்ளதாக வாழும் யோகத்தை தரும், இருப்பினும் தான் எடுக்கும் முடிவில் இருந்து பின்வாங்கும் தன்மையை தராமல் துணிந்து வெற்றிகாணும் யோகத்தை நல்கும்.

2,4,8,11,12ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது சுய ஜாதகத்தில்  மிகவும் வலிமை பெற்றுள்ள பாவக தொடர்பாக கருதலாம், ஜாதகி 2ம் பாவக வழியில் இருந்து நல்ல இல்லற வாழ்க்கை, கைநிறைவான வருமான வாய்ப்புகள், தன்னிறைவான பொருளாதார வசதி வாய்ப்புகள், இனிமையான பேச்சு திறன், தெய்வீக அனுபவம், தனது பேச்சில் புத்திசாலித்தனம் மிளிரும் யோகம், அதிர்ஷ்டம் மற்றும் நண்பர்கள் உதவி மூலம் வெற்றிகரமான யோக வாழ்க்கை, செல்வச்செழிப்பு மிக்க யோக வாழ்க்கையை தரும்.

4ம் பாவக வழியில் இருந்து சுகபோக யோக வாழ்க்கை, தனது தகப்பனாருக்கு யோகம் தரும் தன்மை, போதும் என்ற மனநிலை, நல்ல குணம், அனைவரையும் அனுசரித்து ஆளுமை செய்யும் யோகம், மண் மனை வண்டி வாகன யோகம், நிறைய சொத்துக்கள், அரசியலில் வெற்றி, வெளிநாடுகளில் ஜீவிக்கும் யோகம், பெரிய மனிதர்கள் ஆசீர்வாதம் மற்றும் ஆதரவு,வியாதியில் இருந்து விரைவில் குணமடையும் யோகம், சுலபத்தில் வெற்றி, சுகபோகங்களை, சொத்து ஆபரணம் மற்றும் சிறந்த வசிப்பிடம் ஆகியவைகளை பரிபூர்ணமாக தனது தகப்பனாரின் ஆசி மூலம் பெரும் யோகத்தை தரும்.

8ம் பாவக வழியில் இருந்து ஜாதகி தனது எண்ணம் மற்றும் லட்சியங்களில் வெற்றிகாணும் யோகத்தை தரும், நீண்ட ஆயுள், நீடித்த அதிர்ஷ்ட்த்தை பிறவியில் இருந்தே பெற்றிருக்கும் தன்மையை தரும், தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து பரிபூர்ண சுபயோகங்களை தரும், எதிர்பார்ப்புகள் அனைத்தையும் நிறைவேற்றும் வாழ்க்கை துணையை ஜாதகி பெற்று வாழ்க்கையில் நலம் பெரும் தன்மையை 8ம் பாவக வலிமை உறுதி செய்கிறது, ஜாதகியின் நண்பர்கள் வழியில் இருந்தும் பொருளாதார நன்மைகளை பெறுவதற்கு வாய்ப்புகளை வழங்கும், வெளிநாடுகள் அல்லது வெளியூரில் சிறப்பான பொருளாதார வளர்ச்சியை தரும்.

11ம் பாவக வழியில் இருந்து ஜாதகி மிகுந்த அதிர்ஷ்டசாலியாக திகழ்வார், அனைத்திலும் நல்ல லாபம், மெய்பொருள் காண்பது அறிவு என்ற குறளுக்கு இலக்கணமாக திகழ்வார், முற்போக்கு சிந்தனை, புதுமை விரும்பியாக இருப்பது ஜாதகியின் வாழ்க்கையை சுவாரஷ்யம் மிக்கதாக மாற்றும், ஜாதகியின் குணாதிசயம் அனைவராலும் போற்றுதலுக்கு உரியதாக இருக்கும், தெய்வீக அனுக்கிரகம் இயற்கையிலேயே அமைந்து இருப்பதால் வாழ்க்கை ஜாதகிக்கு முழு அதிர்ஷ்டம் நிறைந்ததாகவே காணப்படும், நல்ல மனமும், நல்ல எண்ணமும் ஜாதகியின் வாழ்க்கையை பிரகாசம் மிக்கதாக மாற்றும், சுய ஜாதகத்தில் கடகம் லாப ஸ்தானமாக அமைவது வாழ்க்கையில் அளவில்லா சுபயோகங்களை வாரி வழங்கும்.

12ம் பாவக வழியில் இருந்து நிறைவான லாபங்கள், முதலீடுகளில் இருந்து வரும் வருமானம், நல்ல உறக்கம், ஆன்மீகத்தில் வெற்றி, முக்தி நிலை, தெய்வீக அனுக்கிரகம், நல்ல மன நிம்மதி, தாம்பத்திய வாழ்க்கையில் வெற்றி, வாழ்க்கை துணையுடனான அன்னியோன்யம், தனது வழியில் இருந்து மற்றவர்களுக்கு தரும் உதவிகள் என ஜாதகி சிறப்பு மிக்க நல்வாழ்க்கையை வாழும் யோகத்தை தரும்.

9ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகியின் அறிவு திறன் வாழ்க்கையில் வரும் இன்னல்களை மிக சிறப்பாக எதிர்கொள்ளும் யோகம் உண்டாகும், தனது பித்ருக்கள் வழியிலான ஆசியின் மூலம் வாழ்நாளில் யாதொரு இன்னல்களையும் அனுபவிக்காமல் சுபயோகங்களையே தரும், தான் கற்ற கல்வி வழியிலான நன்மைகளையும் முன்னேற்றங்களையும் ஜாதகி தங்குதடையின்றி பெறுவார், இடம்மாற்றம் சூழ்நிலை மாற்றத்தில் விருப்பத்தை தரும், தெய்வீக அனுக்கிரகம் ஜாதகிக்கு எப்பொழுதும் அமைந்திருக்கும்.

10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, சிறந்த உத்தியோகம், வியாபாரம் மற்றும் தொழில் வழியிலான நன்மைகளை பரிபூர்ணமாக வாரி வழங்கும், கம்பீரம் மிக்கவாழ்க்கை கவுரவம் குறையாத யோக வாழ்க்கை தரும், தீர்க்கமான வாதத்திறமையை தரும், ஜீவனத்திற்க்கு எந்த காலத்திலும் குறைவு இருக்காது, தனது தாய் வழியில் இருந்து ஜாதகி சுய கவுரவம், அந்தஸ்து, சுய மரியாதையுடன் வாழ்வதற்கான யோகத்தை நல்கும், உண்மை சத்தியம் ஆகியவற்றை மதித்து நடக்கும் வல்லமை பெற்றவர் என்பதுடன் மற்றவர்களையும் பின்பற்ற செய்யும் மதிநுட்பத்தை தரும், ஜாதகியின் ஜீவன ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு வீர்ய ஸ்தானமாக அமைவது ஜாதகி கல்வி கேள்விகளில்  சிறந்து விளங்கும் தன்மையையும், கணிதத்தில் நிர்வாகத்தில் சிறந்து விளங்கும் தன்மையை தரும்.

6ம் வீடு சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது தேர்வில் வெற்றி, தேர்தலில் வெற்றி, வழக்குகளில் வெற்றி என்றவகையில் நன்மைகளையும், வயிறு சார்ந்த தொந்தரவுகளையும், கடன் சார்ந்த இன்னல்களையும் தரும், மற்றவர்கள் வழியில் இருந்து வரும் எதிர்ப்புகளை அனுசரித்து செல்லும் தன்மையை வளர்த்துக்கொள்வதே நல்லது, யாரிடமும் பகைமை பாராட்டாமல் சுமுக போக்கை கடைபிடிப்பதே சால சிறந்தது, பிறர் வழியில் இருந்து வரும் இன்னல்களை எதிர்கொண்டு வெற்றி பெறுவது ஜாதகிக்கு மிகுந்த சவால்களை தரும்.

3,5,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ( பாதக ஸ்தான தொடர்பு ) ஜாதகிக்கு 3ம் பாவக வழியில் இருந்து எடுக்கும்  சில முயற்சிகளை தடை செய்யும், சகோதர வழி ஆதரவை உதறித்தள்ளும் நிலையை தரும், 5ம் பாவக வழியில் இருந்து பூர்வீக ஜீவனத்தை தடை செய்யும், 7ம் பாவக வழியில் இருந்து வாழ்க்கை துணையுடனான சிறு சிறு கருத்து வேறுபாடுகளை தரும், வாழ்க்கை துணையுடனான புரிதல் குறையும்.

சனி திசை குரு புத்தி தரும் பலன்கள் : ( 26/08/2017 முதல் 08/03/2020 )

சனி திசை ஜாதகிக்கு 1ம் வீடு முதல் பாவகமான லக்கினத்துடன் சம்பந்தம் பெற்றும், 9ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும் சுபயோக பலன்களை வழங்கிக்கொண்டு இருப்பது சிறப்பான நன்மைகளை தரும், சனி  திசையில் குரு புத்தி ஜாதகிக்கு 3,5,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், 10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும் பாதக ஸ்தான வழியில் இருந்து இன்னல்களையும், ஜீவன ஸ்தான வழியில் இருந்து சுபயோகங்களையும் வாரி வழங்குகிறது.

அடுத்து வரும் புதன் திசை தரும் பலன்கள் ( 08/03/2020 முதல் 08/03/2037 வரை )

 எதிர் வரும் புதன் திசை ஜாதகிக்கு 1ம் வீடு முதல் பாவகமான லக்கினத்துடன் சம்பந்தம் பெற்று சுபயோக பலாபலன்களை வழங்குவது ஜாதகிக்கு சிறப்பான எதிர்கால வாழ்க்கையை தரும், லக்கின பாவக வழியில் இருந்து ஜாதகிக்கு நல்ல உடல் நலம், மனநலம், சுபயோகங்கள் நிறைந்த வாழ்க்கை என ஜாதகிக்கு பல சிறப்புகளை வாரி வழங்க தயார் நிலையில் இருப்பது கவனிக்கத்தக்கது .

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

ஞாயிறு, 8 அக்டோபர், 2017

எல்லா நேரமும் நல்ல நேரமே ! லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் வலிமை பெற்ற ஜாதகத்திற்க்கு !


கேள்வி  :

 சுப அசுபங்களை நீக்க வேண்டிய ராகு காலம், எமகண்டம், குளிகை போன்ற நேரங்களும். செவ்வாய், சனி, சூரியன் போன்ற ஹோரைகளும், சந்திராஷ்டமம், அஷ்டம சனி, ஏழரை சனி, பாத சனி, விரைய சனி, போன்றவைகளும், சனி, ராகு, செவ்வாய், சூரியன், கேது போன்ற இன்னல்களை தரும் என்று கருதப்படும் திசா புத்திகளும் யார் ஒருவருக்கு நன்மையை தரும் ? ஒரு வேலை மேற்கண்ட விஷயங்கள் யாவும் எவருக்கும் நன்மையை தாராத ? கெடு பலனை மட்டுமே தருமா ? உண்மை என்ன ?

பதில் :

 தாங்கள் வினவியிருக்கும் கேள்விக்கு விளக்கமான பதிலை இன்றைய பதிவில்  சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே, ஒருவரின் வாழ்க்கையில் நல்ல நேரம் எது என்பதனையும், கெட்ட நேரம் எது என்பதனையும் நிர்ணயம் செய்யும் முழு உரிமை அவரது சுய ஜாதகத்திற்க்கே உண்டு என்றால் அது மறுக்க இயலாத உண்மை கீழ்கண்ட ஜாதகருக்கு நல்ல நேரம் எது? என்பதனையும் கெட்ட நேரம் எது?  என்பதனையும் அவரது சுய ஜாதகம் எப்படி நிர்ணயம் செய்கிறது என்ற அழகினை இந்த பதிவில் ரசிப்போம்  வாருங்கள் அன்பர்களே !


லக்கினம் : கும்பம்
ராசி : கும்பம்
நட்ஷத்திரம் : சதயம் 2ம் பாதம்

ஜாதகருக்கு  லக்கினம், ராசி இரண்டுமே கால புருஷ தத்துவ அமைப்பிற்கு லாபம்  மற்றும் அதிர்ஷ்டத்தை குறிக்கும் 11ம் வீடான ஸ்திர காற்று ராசியான கும்பத்தில் அமைவது, அடிப்படையிலேயே ஜாதகர் பரிபூர்ண அதிர்ஷ்டத்தை பெரும் யோகம் பெற்றவர் என்பதை தெளிவு படுத்துகிறது, அடுத்து ஜாதகத்தில் உள்ள பாவகங்களின் வலிமை நிலையை சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

1,2ம் வீடுகள் குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்துடன் சம்பந்தம்.
3,5,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம்.
4,7ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம்.
6,8,9,10,12 வீடுகள் வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம்  பெற்று இருப்பது சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் வலிமை பெற்று இருப்பதை உறுதி செய்கிறது, மேற்கண்ட ஜாதகருக்கு வாழ்க்கையில் எல்லா நேரமும் நல்ல நேரமே என்று தெளிவாக சொல்லிவிட முடியும் ஏனெனில் சுய ஜாதக வலிமையே ஒருவரின் வாழ்க்கையில் நல்ல நேரம் மற்றும் கெட்ட நேரத்தை நிர்ணயம் செய்கிறது, ஜாதகர் ஜெனன காலத்தில் ராகு திசை 12வருடம், 7மாதம், 27நாட்கள் இருப்புடன் தனது பூவுலக வாழ்க்கையை துவங்கி இருக்கிறார், ராகு தனது திசையில் 1,2ம் வீடுகள் குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பலனை நடத்தியது ஜாதகருக்கு நல்ல உடல் ஆரோக்கியம், தெளிவான மனநிலையை வாரி வழங்கி இருக்கிறது இதன் காரணமாக ஜாதகரின் அடிப்படை கல்வி சிறப்பாக அமைந்திருக்கிறது, வளரும் சூழ்நிலையில்  நல்ல நன்மைகளையும் பொருளாதர சிறப்புகளையும் பெற்று வாழ்க்கையில் சுப யோகங்களை அனுபவித்திருக்கின்றார், அதன் பிறகு நடைபெற்ற குரு திசை ஜாதகருக்கு 3ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை நடத்தியது ஜாதகரின் முயற்சிகள் யாவும் நல்ல வெற்றியை தந்து இருக்கின்றது, ஜாதகரின் கல்வி முழுமை பெற்று இருக்கின்றது, சிறந்த மேல்நிலை பட்டபடிப்பையும், ஆராய்ச்சி கல்வியையும் யாரும் எதிர்பாரா வண்ணம் சிறப்பாக பெற்று இருப்பது கவனிக்க தக்க விஷயமாகும்.

ஜாதகரின் சிறந்த கல்வி தகுதி சிறப்பான சுய தொழில் வாய்ப்பையும் அதன் வழியிலான அபரிவிதமான முன்னேற்றங்களையும் வாரி வழங்கி இருப்பதற்கு, சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையே அடிப்படை காரணமாக அமைந்திருக்கின்றது, மேலும் சரியான வயதில் திருமண வாழ்க்கை அமைந்தது, உடனே நல்ல புத்திர பாக்கியம் பெற்றது, வாழ்க்கை துணை வழியிலான ஆதரவு மற்றும் அன்பு ஜாதகருக்கு பரிபூர்ணமாக கிடைத்தது என ஜாதகருக்கு தொடர்ந்து சுபயோக பலாபலன்கள் அனைத்தும் நடைபெற சுய ஜாதக வலிமையே உறுதுணையாக நின்று இருப்பது கண்கூடான உண்மை, மேலும் குரு திசை காலத்திலேயே ஜாதகர் மூன்று விதமான  தொழில் வழியில் இருந்து தன்னிறைவான வருமானங்களை எவ்வித தொய்வும் இன்றி பெற்றதற்க்கும் சுய ஜாதக வலிமையே காரணம் என்றால் அது மிகையில்லை அன்பர்களே !

ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் சனி திசை 1,2ம் வீடுகள் குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், 8,10 வீடுகள் வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும் சுபயோக பலாபலன்களை குடும்பம் மற்றும் வீர்ய ஸ்தான வழியில் இருந்து சிறப்பாக வாரி வழங்கிக்கொண்டு இருப்பது, ஜாதகர் மற்றும் ஜாதகரின் முன்னோர்கள் செய்த புண்ணியத்தின் பலனும், பாக்கியத்தின் வலிமையுமே என்றால் அது மிகையில்லை, அடுத்து  வரும் புதன் திசையும் ஜாதகருக்கு 6வீடு வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை ஏற்று நடத்துவது ஜாதகரின் வாழ்க்கை தன்னிறைவான சுபயோக வாழ்க்கை என்பதை கட்டியம் கூறுகிறது அன்பர்களே !

எனவே ஒருவரது சுய ஜாதகம் வலிமை பெற்று, நடைபெறும் எதிர்வரும் திசா புத்திகள் அனைத்தும் வலிமை பெற்ற பாவக பலனையே ஏற்று நடத்தும் பொழுது ஜாதகர் முழு அளவில் யோகம் பெற்றவர் ஆகிறார், இவருக்கு ராகு காலம், எமகண்டம், குளிகை போன்ற நேரங்களும் சுபயோகங்களையே வாரி வழங்கும், கெட்ட நேரம் என்ற ஓர்  விஷயம் ஜாதகரின் நிழலை கூட நெருங்காது, ஆனால் சுய ஜாதகம் வலிமை அற்று நடைபெரும் திசா புத்திகள் வலிமை அற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் ஜாதகர் உலகின் மிகசிறந்த சாஸ்த்திர வல்லுநர்களை கொண்டு நல்ல நேரம் கணித்து செயல்பட்டாலும் கூட, ஜாதகருக்கு அந்த நேரம் கெட்ட நேரமாகவே அமையும், நல்ல நேரமும் கெட்ட நேரமும் சுய ஜாதக வலிமையின் அடிப்படையிலேயே அமைகிறது என்ற  உண்மையை அனைவரும் உணர்வது அவசியமாகிறது என்பதனை " ஜோதிடதீபம் " தெளிவுபடுத்த கடமைப்பட்டுள்ளது.

மேலும் சுப அசுபங்களை நீக்க வேண்டிய ராகு காலம், எமகண்டம், குளிகை போன்ற நேரங்களும். செவ்வாய், சனி, சூரியன் போன்ற ஹோரைகளும், சந்திராஷ்டமம், அஷ்டம சனி, ஏழரை சனி, பாத சனி, விரைய சனி, போன்றவைகளும், சனி, ராகு, செவ்வாய், சூரியன், கேது போன்ற இன்னல்களை தரும் என்று கருதப்படும் திசா புத்திகளும் சுய ஜாதக வலிமையின் அடிப்படையிலேயே கருத்தில்கொண்டு செயலாற்ற வேண்டும் என்பதனை அனைவரும் கடைபிடித்தால் எல்லா நேரமும் நமக்கு நல்ல சுபயோக நேரமே, வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

புதன், 4 அக்டோபர், 2017

வெளிநாடு அல்லது வெளியூர் சென்று தொழில் முன்னேற்றம் பெரும் யோகம் உண்டா ?


 சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் வலிமை பெறுவது என்பது சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையில் சுப யோகங்களை வாரி வழங்கும், மாறாக சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை இழப்பது ஜாதகருக்கு பாதிக்கப்பட்ட பாவக வழியில் இருந்து கடுமையான நெருக்கடிகளை தரும், குறிப்பாக சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு வீடுகளில் எந்த ஒரு வீடும் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது என்பது சம்பந்தப்பட்ட  ஜாதகருக்கு நன்மையை தரும் அமைப்பு அல்ல என்பதே உண்மை நிலை, சுய ஜாதகத்தில் வெளியூர் அல்லது வெளிநாடு சென்று ஜீவனம் செய்யும் அமைப்பிற்க்கு அந்த காலத்தில் "பரதேஷ ஜீவனம்" என்று அழைத்தனர், இன்று அது மிகவும் பெருமைக்கு உரிய ஒன்றாக கருதப்படுகிறது.

 சுய ஜாதகத்தில் 5ம் வீடு வலிமை இழப்பதும், 7,12ம் வீடுகள் வலிமை பெறுவதும் ஓர் ஜாதகருக்கு வெளியூர் அல்லது வெளிநாடுகளில் ஜீவன வாழ்க்கையை அமைத்து தரும், 8,11ம் வீடுகள் வலிமை பெறுவது ஜாதகருக்கு வெளிநாடுகளில் இருந்து தன்னிறைவான பொருளாதார முன்னேற்றம்  மற்றும் கைநிறைவான தன சேர்க்கையை வாரி வழங்கும், லக்கினம் முதல்  பனிரெண்டு பாவகங்களின் வலிமை நிலை ஜாதகரின் வாழ்க்கையில் எங்கு இருப்பினும் சுபயோகங்களையே நல்கும், கீழ்கண்ட ஜாதகரின் கேள்வியான, வெளிநாடு அல்லது வெளியூர் சென்று தொழில் முன்னேற்றம் பெரும் யோகம் உண்டா ?  தற்ப்பொழுது வெளியூரில் செய்து வரும் தொழில் இன்னல்களையும் கடன் சுமையையும் ஏற்படுத்தியதற்க்கு காரணம் என்ன ? என்பதற்கு உண்டான பதிலை இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !


லக்கினம் : தனுசு
ராசி : மகரம்
நட்ஷத்திரம் : உத்ராடம்

 வெளிநாடு சென்று வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுவதற்கு சுய ஜாதகத்தில் அடிப்படையில் களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம் வலிமை பெற்று இருப்பது அவசியமாகிறது, மேற்கண்ட ஜாதகருக்கு 7ம் வீடு விறைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகரின் வெளிநாடு வெளியூர் கனவை நிராசையாக மாற்றுகிறது, வெளிநாடு சென்று ஜீவனம் தேடும் யோகம் அற்றவர் என்பதை தெளிவு படுத்துகிறது, மேலும் சுய ஜாதகத்தில் அயன சயன ஸ்தானம் என்று அழைக்கப்படும் 12ம் பாவகம் வலிமை பெறுவது வெளிநாடுகளில் ஜாதகரின் வாழ்க்கை முறையை தெளிவுபடுத்தும், இந்த ஜாதகத்தி மேற்கண்ட அயன சயன ஸ்தானம் வலிமை குறைந்து காணப்படுவது ஜாதகரின் வெளியூர் வெளிநாடுகளில் வாழும் வாழ்க்கையானது மனநிம்மதி அற்றதாகவும், அதிக போராட்டங்களை எதிர்கொள்ளும் தன்மையை கொண்டதாகவும் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை, மேற்கண்ட விஷயங்களை விட தற்போழுது நடைபெறும் திசை தரும் பலன்கள் என்ன ? என்பதே ஜாதகரின் நிகழ்கால வாழ்க்கையை படம்பிடித்து காட்டும்.

ஜாதகருக்கு தற்போழுது நடைமுறையில் உள்ள திசை ராகு திசை தரும் பலாபலன்கள் : ( 12/04/2006 முதல் 12/04/2024 வரை )

ராகு தனது திசையில் ஜாதகருக்கு சத்ரு ஸ்தானம் என்று அழைக்கப்படும் 6ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் சத்ரு ஸ்தான வழியில் விரையங்களை வாரி வழங்கி கொண்டு இருக்கின்றது, இதனால் ஜாதகர் கடன்பட்டு செய்த தொழில்கள் யாவும் கடும் நஷ்டத்தை தந்தது, ஜாதகருக்கு அதிக அளவிலான கடன் சுமை ஜாதகரின் மனநிம்மதியை வெகுவாக பாதித்தது, இதனால் ஜாதகரின் மன நிம்மதி கெட்டு தெளிவற்ற செயல்பாடுகள் மூலம் கடும் நெருக்கடிகளை ஏற்படுத்திக்கொண்டார், பொதுவாக சுய ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் எனும் 5ம் பாவகம் மற்றும் பாக்கியம் எனும் 9ம் பாவகம் வலிமை பெற்று இருப்பின் ஜாதகர் வெளியூர் அல்லது வெளிநாடு செல்லாமல் தான் அமர்ந்த இடத்தில் ( பூர்வீகம் ) இருந்துகொண்டே சகல சௌபாக்கியங்களையும் தன்னை தேடிவர செய்யலாம், பூர்வீகம் பாதிப்பு அடைந்து இருந்தால் மட்டுமே ஜாதகர் வெளியூர் வெளிநாடு ( பரதேசஜீவனம் ) சென்று ஜீவனம் தேடலாம், அதுவும் சுய ஜாதகத்தில் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பாவகங்கள் வலிமை பெற்று, நடைமுறையில் உள்ள திசை ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால், மாறாக குறிப்பிடப்பட்டுள்ள பாவகங்கள் வலிமை அற்று இருப்பின் தனது பூர்வீகத்திற்கு அருகிலேயே ஜீவன வாழ்க்கையை அமைத்துக்கொள்வது சாலசிறந்தது.

மேற்கண்ட ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் ராகு திசை சத்ரு ஸ்தானமான 6ம் வீட்டு பலனை, விரைய ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று தருவது, ஜாதகரின் வாழ்க்கையில் பொருளாதாரம் சார்ந்த நெருக்கடிகளை தருகின்றது மேலும் ஜாதகரின் 6ம் வீடு கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் வீடாக அமைவது ஜாதகரின் வருமானம் சார்ந்த விஷயங்களை கேள்விக்குறியாக மாற்றுகிறது, ஜாதகருக்கு வரும் வருமானம் வீண் விரையம் ஆகிறது, ஜாதகரின் பேச்சு மிகப்பெரிய இன்னல்களுக்கு ஆளாக்குகிறது, 12ம் வீடு கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் வீடாக அமைவது வெளிநாடு வெளியூர் சென்று ஜீவிப்பது ஜாதகருக்கு மிக பெரிய இழப்புகளையும், அறிவு சார்ந்த முயற்சிகளில் தோல்வி மற்றும் மனநிம்மதி இழப்பையும் வாரி வழங்கிக்கொண்டு இருக்கின்றது.

சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை அற்றும், நடைபெறும் ராகு திசை வலிமை  அற்ற பாவக பலனையும் ஏற்று நடத்துவதே ஜாதகரின் வெளியூர் சார்ந்த தொழில் வழியில் இருந்து கடுமையான தோல்வியை தந்து இருக்கின்றது, மேலும் ஜாதகர் வெளியூர் அல்லது வெளிநாடு சென்று ஜீவனம் தேடி நலம் பெறுவதற்க்கு உண்டான வாய்ப்புகள் சிறிதும் இல்லை என்பதே மேற்கண்ட ஜாதகத்தில் உள்ள உண்மை நிலை, அடுத்து வரும் குரு திசையும் ஜாதகருக்க சாதகமின்றி இருப்பது ஜாதகரின் வெளியூர் வெளிநாடு கனவுகளை வெகுவாக சிதைக்கும் என்பதை கருத்தில் கொண்டு நலம் பெறுவதே ஜாதகருக்கு உகந்தது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696