செவ்வாய், 7 நவம்பர், 2017

தொழில் ஸ்தான வலிமையும், ஜாதகர் பெரும் தொழில் ரீதியான முன்னேற்றமும் !



 சுய ஜாதக ரீதியான தொழில் நிர்ணயம் என்பது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு மிக அவசியமானது, ஏனெனில் கால விரையம் தவிர்க்கப்படும், ஜாதகருக்கு உகந்த தொழில் வாய்ப்பை தேர்வு செய்ய உதவி புரியும், தனது ஜீவன முன்னேற்றத்திற்கான திட்டமிடுதல்களை மிக துல்லியமாக செயல்படுத்தும் வல்லமையை ஜாதகர் இதன் மூலம் பெற இயலும், பொதுவாக தமக்கு உகந்த தொழில் வாய்ப்பினை தேர்வு செய்வதற்கு சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தான வலிமையை கருத்தில் கொள்வதுடன் சதுர் கேந்திரங்களான லக்கினம், சுக ஸ்தானம், களத்திரம் மற்றும் ஜீவனம் எனும் நான்கு பாவகங்களின் வலிமையையும் கருத்தில் கொள்வது அவசியமாகிறது, மேலும் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தானமான மகரம் ஜாதகருக்கு எந்த பாவகமாக அமைந்தாலும் அது வலிமை பெற்று இருப்பது தன்னிறைவான தொழில் வெற்றிகளை வாரி வழங்கும்.

சுய ஜாதகத்தில் ஒருவருக்கு ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவது மட்டுமே தொழில் ரீதியான வெற்றிகளை வாரி வழங்கிவிடுவது இல்லை, நடைமுறையிலும், எதிர்காலத்திலும் திசா புத்திகள் வலிமை பெற்ற ஜீவன ஸ்தான பலனையே அல்லது வலிமை பெற்ற மற்ற பாவக பலனையே ஏற்று நடத்தினால் மட்டுமே ஜாதகர் தொழில் ரீதியான யோக பலன்களை அனுபவிக்கும் நிலையை தருகிறது, மேலும் நடைபெறும் திசை வலிமை பெற்ற ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்தினால் சம்பந்தப்பட்ட ஜாதகர் ஜீவன ஸ்தான வழியில் இருந்து பெரும் நன்மைகளுக்கு தடையேதும் இருக்காது, சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு ஓர் சிறப்பை தரும், அதாவது ஜாதகர் தனக்கு உகந்த தொழிலை சரியான வயதில், சரியான நேரத்தில் தேர்வு செய்து அதில் தேர்ச்சியை பெற்று திறன்மிக்க நபராக உருவாக்கி விடும்.

சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெற்ற அன்பர்களுக்கு தமக்கு உகந்த தொழில் வாய்ப்புகளை உருவாக்கி கொள்ளவும், அதன் பெயரில் ஈர்ப்பு ஏற்படுவதையும் இயற்கையே நிர்ணயம் செய்துவிடும், உதாரணமாக சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெற்ற அன்பர்களுக்கு தமக்கான தொழில் தொடர்புகளை மிக எளிதில் பெற்றுவிடுவார்கள், தனது நண்பர்கள் வழியிலோ அல்லது தான் கற்ற கல்வி வழியிலோ இது மிக எளிதாக அமைந்துவிடும், சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை அற்ற நிலையில் உள்ள அன்பர்களுக்கே இது குதிரை கொம்பாக அமைந்துவிடும், தமக்கான சரியான தொழில் அமைப்பினை தேர்வு செய்வதற்க்கே நீண்ட நெடுங்காலம் ஆகிவிடும், மேலும் கால விரையத்தை ஜாதகரால் தவிர்க்க இயலாது, சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை அற்ற அன்பர்களுக்கு நடைமுறையில் உள்ள திசா புத்திகளும், எதிர்வரும் திசா புத்திகளும் சற்று சாதகம் இன்றி இருப்பின் ஜீவன ரீதியான போராட்டங்களை ஜாதகரால் தவிர்க்க இயலாது.

எனவே சுய ஜாதக ரீதியாக பாவகங்களின் வலிமையின் அடிப்படையில் ஜாதகர் எந்தவிதமான தொழில் வாய்ப்புகளை தேர்வு செய்து முன்னேற்றம் பெற அருகதை பெற்றவர் என்பதில் தெளிவு பெற்ற பிறகு, சம்பந்தப்பட்ட ஜாதகர் அந்த தொழிலை தேர்வு செய்து நடத்தினால் நிச்சயம் அதில் 100% விகிதம் வெற்றி பெறுவார் என்பதில் மாற்று கருத்து இல்லை, சுய ஜாதகத்தில் தமக்கு பொருந்தாத தொழில்களை ஜாதகர் தவிர்த்துவிடுவதே சகல விதங்களிலும் நன்மையை தரும், உதாரணமாக ஒருவரது சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை அற்ற நீர் தத்துவ ராசிகளுடன் சம்பந்தம் பெற்று இருப்பின், ஜாதகர் நீர் தத்துவம் சார்ந்த தொழில்களை தவிர்த்து விடுவது நல்லது அதாவது விவசாயம், உணவு பொருட்கள், வஸ்த்திர வியாபாரம், அழிவு பொருட்கள் சார்ந்த வியாபரங்கள் மற்றும் தொழில்களை ஜாதகர் தவிர்த்து விடுவதே நல்லது ஏனெனில் மேற்கண்ட தொழில் வழியில் இருந்து ஜாதகர் மிகுந்த நஷ்டங்களையே சந்திக்கும் நிலையை தரும், ஜீவன ஸ்தான வலிமை மற்றும் தொழில் முன்னேற்றம் பற்றி ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம்.


லக்கினம் : மகரம்
ராசி : தனுசு
நட்ஷத்திரம் : பூராடம் 3ம் பாதம்

ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக தொடர்புகள் :

1ம் வீடு உயிர் உடல் ஆகிய லக்கினத்துடனே தொடர்பு பெறுவது ஜாதகரின் வாழ்க்கையில் மிகுந்த சிறப்புகளை தரும் அமைப்பாகும், ஜாதகர் மேற்கொள்ளும் காரியங்களில் வெற்றி, நல்ல உடல் ஆரோக்கியம், சிறந்த மன வலிமை, எதிர்ப்புகளை எதிர்கொண்டு நலம் பெரும் தன்மை, தீர்க்கமான அறிவு மற்றும் சிந்தனை திறன் வருமுன் காக்கும் வல்லமை, நோயில் இருந்து விரைவில் விடுபடும் தன்மை என்ற வகையில் சிறப்புகளை தரும், மேலும்  லக்கினம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு முதல் ராசியான மேஷத்தில் 13 பாகையும், இரண்டாம் ராசியான ரிஷபத்தில் 17 பாகையும் பெற்று இருப்பது ஜாதகருக்கு சுய கட்டுப்பாடுடன் கூடிய பொறுமையை தரும், நேர்மை மற்றும் சத்தியத்தை மதித்து நடக்கும் தன்மையை தரும், ஜாதகரின் செயல்பாடுகள் யாவும் நேர்மை மிகுந்ததாக இருக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

3,8,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 3ம் பாவக வழியில் இருந்து ஜாதகரின் ஆராய்ச்சி மனநிலை அதிகரிக்கும், நல்ல ஞானத்தை வாரி வழங்கும், ஜாதகர் செய்யும் முயற்சிகள் நல்ல வெற்றிகளை பெற்று தரும், நல்ல புத்தி கூர்மை உண்டாகும் அனைத்திலும் வெற்றியை பெரும் யோகத்தை தரும், தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும், வெளிநாடுகளில் இருந்து வரும் வருமானம் ஜாதகருக்கு பொருளாதர  தன்னிறைவை தரும், சாஸ்திர ஞானம் ஜோதிட அறிவு ஜாதகரின் முன்னேற்றத்தை விருத்தி செய்யும், வெளிநாட்டில் குடியேறும் அமைப்பு, போக்குவரத்து ஏஜென்சி மூலம் லாபம், சகல சௌபாக்கியம் என்ற வகையில் நன்மைகளையும், நல்ல சிந்தனை சிறந்த வாத திறமை, யோக பயிற்சி, கனிம பொருட்கள் மற்றும் சுரங்க பொருட்கள் மூலம் அதிக லாபம், ஏற்றுமதி இறக்குமதி தொழில் விருத்தி, நுண்ணறிவு திறன் மூலம் சிறப்பான திட்டமிடுதல்களை நடைமுறைக்கு கொண்டு வரும் வல்லமை என்றவிதத்தில் சுபயோங்களை வாரி வழங்கும்.

8ம் பாவக வழியில் இருந்து சட்ட ரீதியான விஷயங்களில் சாதகமான சூழ்நிலை, வழக்குகளில் வெற்றி மற்றும் சமாதான விரும்பி, அறிவுபூர்வமான செயல்பாடுகள், ரகசிய கலைகளில் ஆர்வம் மற்றும் தேர்ச்சியை தரும், வாழ்க்கை துணை வழியிலான நன்மைகளும் உண்டு, நல்ல நண்பர்கள் வழியில் இருந்து திடீர் செல்வாக்கை பெரும் யோகத்தை தரும், தெய்வீக சிந்தனை மூலம் வாழ்க்கையில் சகல யோகங்களையும் பெரும் வாய்ப்பு உண்டாகும்.

9ம் பாவக வழியில் இருந்து ஜாதகரின் அபரிவிதமான அறிவு திறனும் புத்திசாலித்தனமும் எந்த ஓர் சூழ்நிலையையும் சிறப்பாக எதிர்கொண்டு வெற்றி பெரும் யோகத்தை தரும், பெரியோர் ஆசி மற்றும் பித்ருக்களின் ஆசி ஜாதகருக்கு வரும் இன்னல்களில் இருந்து விடுவித்து சுபயோகங்களை தரும், சிரமமான சூழ்நிலையை மிக எளிதாக வெற்றி பெரும் யோகத்தை தரும், பயணங்கள் மூலம் லாபமும், சூழ்நிலை மாற்றத்தில் விருப்பத்தையும் தரும், நல்ல  ஞானம் உண்டாகும்.

4,10ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 4ம் பாவக வழியில் இருந்து நல்ல தொழில் முன்னேற்றத்தை வாரி வழங்கும்,சமூகத்தில் பெயரும் புகழும் உண்டாகும், மண் மனை வண்டி வாகன யோகம் உண்டாகும், நிறைய ஆள் வசதி, சிறந்த நிர்வாக திறமை, பெரிய சொத்து சுக சேர்க்கை, விளையாட்டில் ஆர்வம், சமூக அந்தஸ்து, அரசியல் வெற்றி என்ற வகையில் சிறப்புகளை வாரி வழங்கும், தனது தாய் வழியில் இருந்து சுப யோகங்களையும் லாபங்களையும் ஜாதகர்  பரிபூர்ணமாக பெறுவார்.

10ம் பாவக வழியில் இருந்து உத்தியோகம் வியாபாரம் மற்றும் தொழில் வழியில்  இருந்து வெற்றி வாய்ப்புகள், தீர்க்கமான முடிவுகள் மற்றும் வாத திறமை, செய்யும் தொழில் வழியில் நல்ல முன்னேற்றம் மற்றும் திடீர் வளர்ச்சி, சர மண் தத்துவ தொழில், ஸ்திர காற்று தத்துவ தொழில் மூலம் அபரிவிதமான முன்னேற்றம் மற்றும் தன சேர்க்கை உண்டாகும், எதிர்பாராத நபர்கள் மூலம் தொழில் விருத்தி, கவுரவம் குறையாத யோக வாழ்க்கை என்ற வகையில் சிறப்புக்களை தரும், சுய தொழில் செய்வதற்கு உண்டான முழு தகுதியும் கொண்டவராக திகழ செய்யும், ஜாதகரின் லட்ச்சியம் மற்றும் திட்டமிடுதல்கள் யாவும் நடைமுறைக்கு வரும், மண் தத்துவம் சார்ந்த தொழில்களில் தனது அறிவு திறன் கொண்டு வாழ்க்கையில் வெற்றிகளை பெறுவார், தன்னிறைவான பொருளாதார வசதி வாய்ப்புகள் ஜாதகருக்கு பரிபூர்ணமாக அமையும்.

7ம் வீடு குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும்  பொருளாதார முன்னேற்றம், இல்லற வாழ்க்கையில் சந்தோசம், வாழ்க்கை துணையின் ஆதரவும் அன்பும் பரிபூர்ணமாக கிடைத்தல், வெளிநாடு வெளியூரில் இருந்து வரும் தனவரவு, திடீர் அதிர்ஷ்டம், பொதுமக்கள் ஆதரவு, பொதுமக்கள் வழியிலான ஜீவன மேன்மை, அரசியலில் வெற்றி மற்றும் ஆதாயம் உண்டாகும், வெளிவட்டார பழக்க வழக்கங்கள் மூலம் தன ஆதாயம் என்ற வகையில் சிறப்புகளை தரும், களத்திர ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு காற்று மற்றும் நீர் தத்துவ  ராசியில் வியாபித்து இருப்பது ஜாதகரின் அறிவு சார்ந்த செயல்பாடுகளிலும், மனஉறுதி என்ற அமைப்பிலும் சிறப்பான வெற்றிகளை வாரி  வழங்கும்.

12ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு எதிரிகள் சூழ்ச்சி மற்றும் எதிர்ப்புகளே சாதகமாக மாறும் சூழ்நிலையை உருவாக்கும், பதவி உயர்வு தொழில் துறையில் அபரிவிதமான வளர்ச்சி, அதிர்ஷ்டம் என்ற வகையில் சிறப்புக்களை தரும், ரகசிய தொழில் வழியில் இருந்து வருமானம் உண்டாகும், நிம்மதியான உறக்கம் உண்டு, பெரிய முதலீடுகள் வழியில் எதிர்பாராத சொத்து சுக சேர்க்கை உண்டாகும், வீடு நிலம் போன்றவற்றில் முதலீடு செய்வது சகல நிலைகளில் இருந்தும் முன்னேற்றத்தை தரும்.

ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட பாவக தொடர்புகள் :

2,6,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு மேற்கண்ட பாவக வழியில் இருந்து 200% விகித இன்னல்களை தங்கு தடையின்றி வாரி வழங்கும், 2ம் பாவக வழியில் இருந்து குடும்பம் மற்றும் வாக்கு வழியில் இருந்து ஜாதகர் அதிக அளவில் இன்னல்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், குடும்பத்தில் சிறு சிறு இன்னல்களை ஜாதகரால் தவிர்க்க இயலாது, குறிப்பாக ஜாதகர் பணம் சார்ந்த விஷயங்களில் மிக கவனமுடன் இருப்பது அவசியமாகிறது ஏனெனில் தனம் சார்ந்த நடவடிக்கைகள் ஜாதகரின் வாழ்க்கையே கடுமையாக பாதித்துவிட வாய்ப்பு அதிகம், சரியான திட்டமிடுதல்களுடன் ஜாதகர் செயல்படவில்லை எனில் தன்னிடம் உள்ள செல்வங்கள் அனைத்தையும் இழக்கும் சூழ்நிலையை உருவாக்கும், குடும்பத்தில் சிரமங்கள் அதிக அளவில் ஏற்பட்ட வாய்ப்பு உண்டு , வீண் வாக்குவாதங்கள் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாக்கும்.

6ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு வயிறு சார்ந்த தொந்தரவுகள் அதிக அளவில் இன்னல்களை தரும், எதிரி தொந்தரவு, கடன் பிரச்சனைகள் ஜாதகரின் முன்னேற்றத்தை வெகுவாக பாதிக்கும், வீண் மருத்துவ செலவினங்கள், திடீர் இழப்புகள் தவிர்க்க இயலாது, அதிக அளவிலான முதலீடுகள் சில நேரங்களில் தொழில் முடக்கத்தை தரக்கூடும், தெளிவான சிந்தனையுடன் செயல்படவில்லை எனில் கடுமையான பாதிப்புகளை ஜாதகர் எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும்.

11ம் பாவக வழியில் இருந்து அதிர்ஷ்டம் என்பது ஜாதகருக்கு சற்று குறைவென்றே சொல்லலாம், கடின உழைப்பு மட்டும் ஜாதகருக்கு வெற்றிகளை தரும், மேலும் ஜாதகரின் தன்னம்பிக்கை வெகுவாக குறையும் எதிர்ப்புகள் அதிக அளவில் இன்னல்களை தரும், சிந்தனை திறன் வெகுவாக பாதிக்க வாய்ப்பு உண்டு, புதிய முயற்சிகள் சில நேரங்களில் ஜாதகருக்கு பலன்தாராமல் போக வாய்ப்பு உண்டு, சரியான திட்டமிடுதல்களுடன் ஜாதகர் செயல்படுவது அவசியமாகிறது. மேலும் ஜாதகரின் செயல்திறனும் பெரிய அளவில் அதிகரிப்பது சிறப்பான முன்னேற்றங்களை வாரி வழங்கும்.

5ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு திடீர் நஷ்டம், வீண் விரையம், ஜாமீன் கொடுப்பதால் சிக்கல்கள், குழந்தைகள் வழியில் இருந்து வரும் சிரமங்கள், மன அமைதி இன்மை, தொல்லை தரும் தொடர்புகள், எப்பொழுதும் வீண் மனக்கவலை என்ற வகையில் இன்னல்களை தரும், மேலும் ஜாதகரின் இன்னல்களுக்கு உதவி செய்ய யாரும் அற்ற சூழ்நிலையை தரும், பொது வாழ்க்கையில் சில சிரமங்களை அதிக அளவில் தர கூடும், எதிர்ப்புகள் அற்ற வாழ்க்கையை ஜாதகர் நினைத்து பார்க்க இயலாது, ஜாதகரின் சுய சிந்தனையும் சில நேரங்களில் சரியான தீர்வுகளை தர மறுக்கும், குல தெய்வத்தின் நிந்தனை ஜாதகருக்கு வரும் இன்னல்களுக்கு மிக முக்கிய காரணமாக அமையும், பொது வாழ்க்கையில் சில இன்னல்களை ஜாதகர் அனுபவித்த ஆக வேண்டிய சூழ்நிலையை உருவாக்கும்.

தற்போழுது நடைபெறும் ராகு திசை தரும் பலன்கள் : ( 10/12/2003 முதல் 10/12/2021 வரை )

ராகு திசை ஜாதகருக்கு 2ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று தனது திசையை நடத்துவது ஜாதகரின் வாழ்க்கையில் குடும்பம், வருமானம் மற்றும் வாக்கு வழியில் இருந்து கடுமையான நெருக்கடிகளை தரும், குறிப்பாக ஜாதகரின் பொருளாதர நிலை மிகவும் கடுமையாக பாதிக்கப்படும், எதிர்ப்புகள் மிக அதிக அளவில் வந்து சேரும், பாதக ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு லாபம் மற்றும் விரைய ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகரின் மனநிம்மதி மற்றும் அதிர்ஷ்டத்தை கேள்விக்குறியாக மாற்றும், ராகு திசை ஜாதகருக்கு சற்று அதிக அளவிலேயே பாதக ஸ்தான வழியிலான இன்னல்களை தந்து கொண்டு இருப்பது கண்கூடான உண்மை, மேலும் குடும்ப வாழ்க்கையிலும் ஜாதகர் கடுமையான நெருக்கடிகளை சந்தித்துக்கொண்டு இருப்பார், வருமான பற்ற குறை  வீண் வாக்குவாதங்கள், சச்சரவுகள் ஜாதகரின் இன்னல்களை வெகுவாக அதிகரிக்கும், பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தும் ராகு திசை ஜாதகரின் வாழ்க்கையில் தவிர்க்க இயலாத இன்னல்களை குடும்ப ஸ்தான வழியில் இருந்து தந்து கொண்டு இருக்கின்றது என்பதை ஜாதகர் கவனத்தில் கொள்வது மிக அவசியமாகிறது.

ராகு திசையில் தற்போழுது நடைபெறும் சுக்கிரன் புத்தி வலிமை பெற்ற விரைய ஸ்தான பலனை ஏற்று நடத்துவது ஜாதகருக்கு சிறப்பான நன்மைகளை தரும், குறிப்பாக முதலீடுகளில் நல்ல வருமான வாய்ப்பை நல்கும், நிம்மதி தரும் நிகழ்வுகள் தொழில் துறையில் இருந்து நடைமுறைக்கு வரும், தெய்வீக சிந்தனை மேலோங்கும்.

ராகு திசையில் எதிர்வரும் சூரியன் புத்தி ஜாதகருக்கு 4,10ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு மேற்கண்ட பாவக வழியில் இருந்து சுபயோகங்களை வாரி வழங்கும், புதிய சொத்துக்கள் வண்டி வாகன யோகம், வாகனம் சார்ந்த தொழில் துறையில் முன்னேற்றம், சுக போக யோக வாழ்க்கை என்ற வகையில் நன்மைகளை தரும், ஜீவன ஸ்தான வழியில் இருந்து திடீர் யோகம் ஜாதகருக்கு உண்டு நல்ல  நண்பர்கள் மூலம் தொழில் விருத்தி உண்டாகும், எதிர்பாராத அதிர்ஷ்டம் ஜாதகருக்கு வாழ்க்கை துணை, நண்பர்கள், கூட்டாளிகள் மற்றும் பொதுமக்கள் வழியில் இருந்து பரிபூர்ணமாக கிடைக்கும்.

ராகு திசையில் அடுத்து வரும் சந்திரன் புத்தி விரைய ஸ்தான பலனையும், அதற்க்கு அடுத்து வரும் செவ்வாய் புத்தி பாதக ஸ்தான பலனையும் ஏற்று நடத்துவது ஜாதகரின் வாழ்க்கையை சற்று பாதிக்க கூடும் என்பதால் மிகுந்த கவனமுடன் செயல்படுவது நல்லது.

குறிப்பு :

 மேற்கண்ட ஜாதகத்தில் 1,4,7,10ம் வீடுகள் மிகவும் வலிமை பெற்று இருப்பது சிறப்புக்களை வாரி வழங்கும் அமைப்பாகும், இது தொழில் ரீதியான வெற்றிகளை வாரி வழங்கும் இருப்பினும் தற்போழுது நடைபெறும் ராகு திசை பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துவது, ஜாதகருக்கு கடுமையான இன்னல்களை தரும் என்பதால், ராகு திசையில் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் புத்திகளில் மட்டும் ஜாதகர் தொழில் ரீதியான நடவடிக்கையை மேற்கொண்டு நலம் பெறலாம், வலிமை அற்ற பாவக பலனை  ஏற்று நடத்தும் புத்திகளில் புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் செய்துகொண்டு இருக்கும் விஷயங்களை மட்டும் கவனம் செலுத்துவது நல்லது, பாதக ஸ்தான வழியில் இருந்து வரும் இன்னல்களை தவிர்க்க உதவும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக