சனி, 11 நவம்பர், 2017

திருமண வாழ்க்கையை கடுமையாக பாதிக்குமா? ஏக திசை நடப்பு !


கேள்வி :

 அய்யா எனக்கும் எனது வாழ்க்கை துணைக்கும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து இருக்கிறோம், எங்களது ஜாதகத்தை பார்க்கும் ஜோதிடர்கள் இருவருக்கும் புதன் திசை நடைபெறுவதால் " ஏக திசை நடப்பு " இதனால் இல்லற வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படுகிறது விவாகரத்து நிச்சயம் என்று கூறுகின்றனர், நாங்கள் மீண்டும் இல்லற வாழ்க்கையில் இணைந்து வாழ வாய்ப்பு உண்டா ? தெளிவான ஆலோசனையை எதிர்பார்க்கிறேன்.


ஜாதகி

லக்கினம் : சிம்மம்
ராசி : மீனம்
நட்ஷத்திரம் : உத்திரட்டாதி 1ம் பாதம்


ஜாதகர்

லக்கினம் : மிதுனம்
ராசி : கடகம்
நட்ஷத்திரம் : பூசம் 1ம் பாதம்

தங்களது இருவரது ஜாதகத்திலும் ஏக காலத்தில் புதன் திசை நடைபெறுவது உண்மைதான், அதே சமயம் இருவருக்கும் நடைபெறும் புதன் திசை பாதிக்கப்பட்ட  பாவக பலனை ஏற்று நடத்துவதும் தங்களது இல்லற வாழ்க்கையில்  இன்னல்களை தரும் என்பதும் உண்மைதான் ஆனால் அது விவாகரத்தை தரும் என்பது முற்றிலும் தவறான கருத்து, தம்பதியர் இருவரது ஜாதகத்திலும் ஏக காலத்தில் நடைபெறும் ஒரே கிரகத்தின் திசை விவாகரத்தை தரும் என்பதெல்லாம் கற்பனையின் அதிஉட்ச நிலை என்று சொல்வதை தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை, தங்களது இருவரது சுய ஜாதகத்திலும் ஏக காலத்தில் நடைபெறும் புதன் திசை ஏற்று நடத்தும் பாவக தொடர்பு நிலையை பற்றி தெரியாமல் விவாரகாரத்து நடைபெறும் என்று  கூறிய விஷயமாகவே " ஜோதிடதீபம் " கருதுகிறது.

பொதுவாக கணவன் மனைவி இருவரது சுய ஜாதகத்திலும் நடைபெறும் ஏக திசை இன்னல்களை தரும் என்று கருதுவதும் தவறான அணுகுமுறையே, தம்பதியர் இருவரது ஜாதகத்திலும் நடைபெறும் ஏக திசை சுய ஜாதகத்தில் ஏற்று  நடத்தும் பாவக தொடர்புகளின் வலிமை மற்றும் அது தரும் பலாபலன்களை கருத்தில் கொண்டு தீர்வு காண்பதே சரியானதாக இருக்கும், தங்களது இருவரது சுய ஜாதகத்திலும் நடைபெறும் புதன் திசை தரும் பலாபலன்களை கருத்தில் கொண்டு தங்களுக்கான ஆலோசனையை ஜோதிடதீபம் கீழ்கண்ட வரிகளில் வழங்குகிறது.

ஜாதகிக்கு நடைபெறும் புதன் திசை தரும் பலன்கள் : ( 28/03/2010 முதல் 28/03/2027  வரை )

 தங்களுக்கு தற்போழுது நடைமுறையில் உள்ள புதன் திசை 5,9ம் வீடுகள் விறைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் விறைய  ஸ்தான பலனை தந்துகொண்டு இருக்கின்றது, மேலும் தங்களது விறைய ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு சுகம் மற்றும் மாத்ரு ஸ்தானமாக அமைவது தங்களின் சுக போக வாழ்க்கையில் நிம்மதியின்மையை தருகின்றது, குறிப்பாக வாழ்க்கை துணையுடனான அந்தரங்க வாழ்க்கையில் சிறு சிறு மன சஞ்சலங்களை அனுபவிக்கும் நிலையை தருகின்றது, மேலும் நிம்மதி இன்மை அனைவராலும் தொல்லை தொந்தரவுகள் என்ற வகையிலும் பாதிப்பை தருகின்றது, 5ம் பாவக வழியில் இருந்து குல தெய்வ ஆசியின்மையையும், தெளிவான சிந்தனை இன்றி தவறான முடிவுகளை மேற்கொள்ளும் நிலையை தருகின்றது, குழந்தை பாக்கியம் இன்மை தங்களது இல்லற வாழ்க்கையில் ஓர் பிணைப்பை தாராமல் வெற்றிடத்தை ஏற்ப்படுத்துகிறது, 9ம் பாவக வழியில் இருந்து பித்ரு ஆசியின்மையின் காரணமாக இல்லற வாழ்க்கையில் சிரமங்களை தருகின்றது, அறிவார்ந்த செயல்பாடுகள் தங்களிடம் இல்லாத காரணத்தால் யார் நல்லவர் யார் கெட்டவர் என்று பகுத்தறிந்து செயல்படும் தன்மை குறைகிறது, இதனால் தங்களுக்கு வரும் ஆலோசனைகளை அப்படியே நம்பி வாழ்க்கை துணையுடன் பிரிந்து நிற்பது நல்லது அல்ல, மேலும் தங்களது சுய ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகம் விறைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது தங்களின் குடும்ப வாழ்க்கையில், தங்களது பேச்சின் மூலம் பல இன்னல்களை ஏற்ப்படுத்தும், நிம்மதியின்மையைதரும், இது தங்களது ஜாதகத்தில் உள்ள குறை என்பதுடன், தங்களது வாழ்க்கை துணையின் ஜாதகத்திலும் குடும்ப ஸ்தானம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தப்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பது குடும்ப வாழ்க்கையில் நிச்சயம் சிரமங்களை தரும் அமைப்பாகும், இருப்பினும் தற்பொழுது நடைபெறும் புதன் திசை இருவருக்கும் பாதிக்கப்பட்ட குடும்ப ஸ்தான பலனை  ஏற்று நடத்தவில்லை என்பதால் இல்லற வாழ்க்கையில் பெரிய அளவிலான பாதிப்பை தாராது, மேலும் தங்களது சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் வலிமை பெற்று இருப்பது, தாங்கள் நல்ல வாழ்க்கை துணையை பெற்று  இருக்கின்றீர்கள் என்பதை தெளிவு படுத்துகிறது.

ஜாதகருக்கு நடைபெறும் புதன் திசை தரும் பலன்கள் : ( 19 /03/2013 முதல் 19/03/2030  வரை )

தங்களது கணவரது ஜாதகத்தில் தற்பொழுது நடைபெறும் புதன் திசை 3,6,12ம் வீடுகள் விறைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று விறைய ஸ்தான பலனை தருவது தங்களின் தாம்பத்திய வாழ்க்கையில் சிறு சிறு இன்னல்களை  தரும் அமைப்பாகும், 3ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் நன்மைகளை அனுபவித்த போதிலும், 6ம் பாவக வழியில் இருந்து கடன், உடல் நல பாதிப்பு, எதிர்ப்பு என்ற வகையில் இன்னல்களையும், 12ம் பாவக வழியில் இருந்து திடீர் நஷ்டம், மன உளைச்சல் மற்றும் போராட்டம், வீண் கற்பனை என்றவகையில் இன்னல்களை தரும், இவரது ஜாதகத்திலும் குடும்ப  ஸ்தானம் பாதக ஸ்தான தொடர்பை பெற்று கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பது, இல்லற வாழ்க்கையில் இன்னல்களை தரும் அமைப்பாகவே படுகிறது, ஆனால் தாங்கள் இருவரது ஜாதகத்திலும் களத்திர ஸ்தானம் எனும் 7ம் வீடு வலிமை பெற்று இருப்பது தங்களுக்கு இல்லற வாழ்க்கையில் விவாகரத்தை தாராது, சிறு சிறு பிரிவுகள் நிச்சயம் வரும், தாங்கள் இருவரும் இதை உணர்ந்து தங்களது தாம்பத்திய வாழ்க்கையை புனிதமாக்கிகொள்வது தங்களது கையிலேயே உள்ளது என்பதை அழுத்தமாக பதிவு செய்ய " ஜோதிடதீபம் " விரும்புகிறது, மேலும் தங்களுக்கு வயதும் மிக மிக குறைவு என்பதால் தங்களைவிட வயதில் மூத்தோர்களிடம் ஆலோசனை பெற்று இல்லறவாழ்க்கை சிறப்பாக எதிர்கொள்ளுங்கள், தங்களின் வாழ்க்கை துணைக்காக சில பல விஷயங்களில் விட்டுகொடுத்து செல்வது தங்களின் எதிர்காலத்தை  சிறப்பாக அமைத்து தரும், தங்களின் எதிர்கால சந்ததிகளுக்கு சிறப்பு மிக்க யோக வாழ்க்கையை அமைத்து தரும், சிலர் கூறும் பிற்போக்கு தனமான சுய ஜாதகத்தில் இல்லாத, உண்மைக்கு புறம்பான வாதங்களை தங்களது நினைவில் நிறுத்தாமல், சிறப்பான தாம்பத்திய வாழ்க்கையை வாழுங்கள், தங்களின் இருவரது சுய ஜாதகத்திலும் பல பாவகங்கள் பாதிக்கப்பட்டு இருந்த போதிலும், களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம் மிகவும் வலிமை பெற்று இருப்பது தங்களின் இல்லற வாழ்க்கையில் பிரிவை தாராது என்று நம்பிக்கை கொள்ளலாம்.

 தங்களது இருவரது சுய ஜாதகத்திலும் அடுத்து வரும் கேது திசை தங்களுக்கு 8ம் பாவக வழியில் இருந்து சிறு சிறு இன்னல்களை தரும், தங்களது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் எதிர் வரும் கேது திசை பாக்கிய ஸ்தான பலனை ஏற்று நடத்தி சிறப்புகளை தர இருக்கின்றது என்பது வரவேற்கத்தக்க விஷயம், அடுத்து வரும் சுக்கிரன் திசையும் இருவருக்கு ஜாதகத்தில் ஸ்தான பலனை ஏற்று நடத்துவது சிறந்த எதிர்காலத்தை தரும் என்பதை கருத்தில் கொண்டு சிறப்பான தாம்பத்திய வாழ்க்கையை பெறுங்கள் வாழ்த்துக்கள்.

குறிப்பு :

தாங்கள் இருவருக்கும் தற்போழுது நடைமுறையில் புதன் திசை நடைபெற்றாலும் இல்லற வாழ்க்கையில் இன்னல்களை தரும் என்பது மட்டுமே உண்மை, ஆனால் விவாகரத்தை தாராது என்பதை கருத்தில் கொண்டு இனிமையான இல்லற வாழ்க்கையை பெறுங்கள்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக