திங்கள், 13 நவம்பர், 2017

ராகு திசை தரும் பலன்களும், சுய ஜாதகத்தில் லக்கினத்தின் வலிமையும் !



ஜாதகத்தில் நடைமுறையில் உள்ள திசையும், எதிர்வரும் திசையும் தரும் பாலாபலன்கள் என்ன? என்பதை பற்றிய ஓர் தெளிவு நமக்கு கிடைக்குமாயின், நமது வாழ்க்கையை மிக எளிதாக நடத்தி செல்லவும், சரியான திட்டமிடுதல்களை மேற்கொள்ளவும் பேருதவியாக அமையும், இதற்க்கு சுய ஜாதகத்தில் நடைபெறும் திசை, எதிர்வரும் திசை சுய ஜாதகத்தில் எந்த எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது, திசா ஏற்று நடத்தும் பாவகம் சுய ஜாதகத்தில் மிகவும் வலிமையுடன் உள்ளதா ? பாவக தொடர்பு வழியில் இருந்து ஜாதகருக்கு சுபயோகங்களை நல்குகிறதா ? கோட்சார கிரகங்கள் திசா ஏற்று நடத்தும் பாவகங்களுக்கு வலிமை சேர்க்கிறதா? என்ற விஷயங்களை சிந்தனைக்கு எடுத்துக்கொண்டு பலாபலன் காண்பதே சிறந்த யோக வாழ்க்கையை அமைத்துத்தரும், அடிப்படையில் நடைபெறும் திசை எதிர் வரும் திசை ஏற்று நடத்தும் பாவக வலிமையை பற்றியோ, சுய ஜாதகத்தில் சம்பந்தப்பட்ட பாவகம் பெற்ற தொடர்பு வலிமையை பற்றியோ தெளிவு இல்லாதா பொழுது நமக்கு குழப்பமும், சந்தேகமும் மட்டுமே மிஞ்சும், காணும் சுய ஜாதக பலாபலனும் முற்றிலும் முரண்பட்ட பலாபலன்களை தந்துவிடும், இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !


லக்கினம் : விருச்சிகம்
ராசி : மகரம்
நட்ஷத்திரம் : திருவோணம் 3ம் பாதம்

 ஜாதகத்தில் வலிமை பெற்றுள்ள பாவக தொடர்புகள் :

2,5,8,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும்,
3,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகத்தில் வலிமை பெற்றுள்ள பாவக தொடர்புகள் ஆகும்.

ஜாதகத்தில் வலிமை அற்ற பாவக தொடர்புகள் :

1,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு மேற்கண்ட பாவக வழியில் இருந்து 200% விகித இன்னல்களை தரும் அமைப்பாகும்.

4,6,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது  மேற்கண்ட பாவக வழியில் இருந்து 100% விகித இன்னல்களை தரும் அமைப்பாகும்.

ஜாதகருக்கு பெரும்பாலான பாவக தொடர்புகள் வலிமை அற்று இருப்பது ஜாதகரின் வளரும் சூழ்நிலை மற்றும் சுய வாழ்க்கையில் இன்னல்களை தரும், குறிப்பாக லக்கினம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகரின் வளரும் சூழ்நிலை, உடல் நலம், கல்வி மற்றும் மனநலம் சார்ந்த வழிகளில் இருந்து அதிக அளவில் இன்னல்களை தரும், பெற்றோரின் அரவணைப்பில் வளராத சூழ்நிலையை வலிமை அற்ற 4,10ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் அனுபவிக்கும் நிலையை தரும், எதிர்ப்புகள் மற்றும் மனநிம்மதி இழப்பை 6,12ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், 9ம் பாவக வழியில் இருந்து தேவையற்ற அவப்பெயரை சந்திக்கும் சூழ்நிலையை உருவாக்கும் மேலும் ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவக  வழியில் இருந்து  கிடைக்க வேண்டிய சுபயோக பலாபலன்களை தடை செய்யும்,  தெய்வீக அனுகிரகம் குறையும், நம்பிக்கையில்லா தன்மையை அதிகரிக்க செய்யும், வாழ்க்கையில் அதிக அளவிலான போராட்டங்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும்.

ஜாதகருக்கு 2,5,8,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 2ம் பாவக வழியில் இருந்து நல்ல பேச்சு திறன், சிறந்த குடும்ப வாழ்க்கை, கை நிறைவான வருமான வாய்ப்புகள் என்ற வகையிலும், 5ம் பாவக வழியில் இருந்து நல்ல புத்திர  பாக்கியத்தையும், சமயோசித புத்திசாலித்தனம் மற்றும் குழந்தைகள் வழியில் இருந்து யோகத்தை தரும், 8ம் பாவக வழியில் இருந்து வாழ்க்கை துணை ஆதரவு மற்றும் பொருளாதர உதவிகள், பொதுமக்கள் ஆதரவு அவர்களின் வழியிலான தான்சேர்க்கையை தரும் நீண்ட ஆயுள் உண்டு, 11ம் பாவக வழியில் இருந்து அதிர்ஷ்டம், தன்னம்பிக்கை, முற்போக்கு சிந்தனை, வருமுன் காக்கும் வல்லமை, குலதெய்வ ஆசி, புதிய சிந்தனை மற்றும் அதன் வழியிலான ஆதாயம் என்ற வகையில் யோகத்தை தரும், 3,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 3ம் பாவக வழியில் சக சௌபாக்கியம், மக்கள் ஆதரவு வியாபார விருத்தி, அரசு ஆதரவு, வாழ்க்கை துணையின் வழியிலான முயற்சிகளில் வெற்றி, நல்ல உதவிகளை வழங்கும் வாழ்க்கை துணை  மற்றும் நண்பர்கள், பொதுநலம் சார்ந்த செயல்களில் பிரபல்ய யோகம் எதிர்ப்புகள் விலகுதல் என்ற வகையில் சிறப்புகளை வாரி வழங்கும், 7ம் பாவக வழியில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்யும் யோகம், யோகம் மிக்க வாழ்க்கை துணை, நல்ல நண்பர்கள் சிறந்த வெளிவட்டார பழக்க வழக்கங்கள், அரசியல் யோகம், கூட்டு தொழில் முன்னேற்றம், வெளியூர் அல்லது வெளிநாடு சென்று விருத்தி பெரும் அமைப்பு நல்ல இல்லற வாழ்க்கை, சுக போகம் நிறைந்த தாம்பத்தியம் என்ற வகையில் சிறப்புகளை தரும்.

 மேற்கண்ட ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து ஜாதகர் பெரும்  நன்மைகளையும், வலிமை அற்ற பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களையும்  தெளிவாக பாவக வலிமையின் அடிப்படையில் தெரிந்துகொண்டோம், இனி மேற்கண்ட வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து  சுபயோக பலன் எப்பொழுது நடைபெறும், வலிமை அற்ற பாவக வழியில் இருந்து அவயோக பலன்கள் எப்பொழுது நடைமுறைக்கு வரும் என்பதை கணிதம் செய்வதே சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சரியான வழிகாட்டுதல்களை வழங்கும், தற்போழுது நடைபெறும் திசை யோக பலன்களை  தருகின்றதா ? அவயோக பலன்களை தருகின்றதா ? எதிர்வரும் திசைகள் தரும் பலாபலன்கள் என்ன ? என்பதனை இனி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம், ஏனெனில் இதுவே ஜாதகரின் வாழ்க்கைக்கு சரியான திட்டமிடுதல்களையும், எச்சரிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டிய விஷயங்களையும் நமக்கு தெளிவு படுத்தும்.

ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் ராகு திசை தரும் பலன்கள் : ( 24/10/2010 முதல் 24/10/2028 )

ராகு திசை ஜாதகருக்கு 4,6,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் மேற்கண்ட பாவக வழியில் இருந்து விரைய ஸ்தான பலனை அனுபவிக்க செய்கிறது, இதனால் ஜாதகர் பெற்றோரின் அரவணைப்பில் இல்லாமல் வாழும் சூழ்நிலையை தருகின்றது, மேலும்  உடல் நலம் மற்றும் மனஅழுத்தம் என அதிக அளவிலான சிரமங்களை எதிர்கொள்ளும் நிலையை தருகின்றது, இருப்பினும் ராகு திசையில் தற்போழுது நடைபெறும் சனி புத்தி ( 30/11/2015 முதல் 06/10/2018 வரை ) 2,5,8,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருவது மேற்கண்ட 2,5,8,11ம் பாவக வழியில் இருந்து சுபயோகங்களை  தரும் என்பதால் ஜாதகருக்கு சனி புத்தி முடியும் வரும் நன்மையான  பலாபலன்கள் நடைமுறைக்கு வரும் என்பதில் சந்தேகம் இல்லை, மேலும் எதிர்வரும் புதன் மற்றும் கேது புத்திகள் முறையே விரயம் களத்திரம் மற்றும் பாதக ஸ்தான பலனை தருவது உகந்தது அல்ல, அதன் பிறகு வரும் சுக்கிரன் புத்தி 5ம் பாவக வழியில் இருந்து நன்மைகளையும், சூரியன் புத்தி  பாதக ஸ்தான வழியில் இருந்து இன்னல்களையும், சந்திரன் புத்தி 2ம் பாவக வழியில் இருந்து நன்மைகளையும், செவ்வாய் விரைய ஸ்தான வழியில் இருந்து இன்னல்களையும் தரும் என்பதால் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று  நடத்தும் திசை புத்திகளில் ஜாதகர் முயற்சிகளை மேற்கொள்வது சிறப்புகளை  தரும், வலிமையற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் திசா புத்திகளில் ஜாதகர் பொறுமை காப்பதே சாலச்சிறந்தது.

அடுத்து வரும் குரு திசை  தரும் பலாபலன்கள் ( 24/10/2028 முதல் 20/10/2044 வரை )

 எதிர் வரும் குரு திசை ஜாதகருக்கு 1,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மேற்கண்ட பாவக வழியில் இருந்து 200% விகித இன்னல்களை வாரி வழங்கும் என்பது கவலைக்குரிய விஷயமாகும், மேற்கண்ட பாவக வழியில் இருந்து விடுபட ஜாதகருக்கு உள்ள ஒரே வாய்ப்பு சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து பலாபலன்களை சுவீகரிப்பது மட்டுமே, அதன் அடிப்படையில் சுய ஜாதகத்தில் ஜாதகருக்கு 2,5,7ம்  வீடுகள் வலிமை பெற்று இருப்பதால் தற்போழுது நடைபெறும் ராகு திசையில் கேது அல்லது சுக்கிரன் புத்தியில் திருமண வாழ்க்கையை அமைத்துக்கொண்டு வாழ்க்கை துணை வழியில் இருந்து யோக வாழ்க்கையை மிக எளிதாக சுவீகரிக்கலாம், எனவே ஜாதகருக்கு இல்லற வாழ்க்கையை  சிறப்பாக அமைத்துக்கொள்வதே சுய ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை தவிர்க்க உதவும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

குறிப்பு :

 சுய ஜாதகத்தில் பாவக வலிமையின் தன்மை, நடைபெறும் எதிர்வரும் திசா புத்திகள் ஏற்று நடத்தும் பாவக தொடர்பு மற்றும் திசாபுத்திகள் ஏற்று நடத்தும் பாவக தொடர்புக்கு கோட்சார கிரகங்கள் தரும் பலாபலன்கள் ஆகியவை நமக்கு தெளிவாக தெரிந்து இருப்பது, நமது வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக்கொள்ளவும், சரியான திட்டமிடுதல்களை மேற்கொள்ளவும் உறுதுணையாக அமையும், மேற்கண்ட விஷயங்கள் நாம் அறிந்துகொள்ளாத பொழுது தவறான முடிவுகளை மேற்கொண்டு பெரிய அளவிலான இன்னல்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக