சனி, 16 டிசம்பர், 2017

பூர்வபுண்ணியம் எனும் 5ம் பாவகத்தில் அமர்ந்த ராகுபகவான் தரும் அதிர்ஷ்டம் மிக்க ஆண் வாரிசு !



 5ல் அமர்ந்த ராகு ஜாதகருக்கு கடுமையான புத்திர தோஷத்தை தரும் என்றும், ஜாதகருக்கு புத்திரபாக்கியம் கிட்டாது என்று கூறி சுய ஜாதகத்தில் ராகு பகவானால் வலிமை பெற்ற 5ம் பாவகத்தை கொண்ட ஜாதகங்களையும் திருமண பொருத்தம் காணும் பொழுது புத்திரபாக்கியம்  இல்லை என்று பல அன்பர்களின் ஜாதகங்களை பெண்வீட்டார் தவிர்த்து விடுகின்றனர், 5ல் ராகு அமர்ந்த ஜாதகங்களை குழந்தை பாக்கியம் அற்ற ஜாதகம் என பல ஜோதிடர்களும் பெண்வீட்டாருக்கு மனதில் ஓர் பயத்தை ஏற்படுத்திவிடுகின்றனர், இது மிகவும் தவறான அணுகுமுறையாகும், சுய ஜாதகத்தில் 5ல் ராகு அல்லது கேது அமர்ந்து இருப்பதை மட்டும் கருத்தில் கொண்டு புத்திரபாக்கியம் இல்லை என்ற முடிவுக்கு வருவது மிகவும் தவறானதாகும், 5ல் அமர்ந்த ராகு அல்லது கேது சம்பந்தப்பட்ட 5ம் பாவகத்தை வலிமை பெற செய்கிறாரா ? அல்லது வலிமை இழக்க செய்கிறாரா ? என்பதில் தெளிவு இல்லாமல் கூறப்படும் கருத்துக்கள் யாவும் ஜோதிடக்கணிதத்திற்கு புறம்பான விஷயம் என்பதில் மாற்று கருத்து இல்லை அன்பர்களே !

 சுய ஜாதகத்தில் 5ல் அமர்ந்த ராகு தாம் அமர்ந்த பாவகத்தை வலிமை பெற செய்தால் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு நிச்சயம் ஆண் வாரிசாகவே பிறக்கும், தனது வாழ்க்கை துணையின் ஜாதகத்திலும் 5ம் பாவகம் வலிமை பெற்று இருப்பின் இவர்களுக்கு பெண் குழந்தை பிறப்பதென்பதே அரிதாக அமையும், தொடர்ந்து ஆண் குழந்தைகளாகவே பிறக்கும், ஒருவேளை 5ல் அமர்ந்த ராகு சம்பந்தப்பட்ட பாவகத்தை வலிமை இழக்க செய்தால் ஜாதகருக்கு பெண் குழந்தை உண்டு ஆண் வாரிசு என்பது தனது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் 5ம் பாவக வலிமையின் அடிப்படையில் அமையும், எனவே சுய ஜாதகத்தில் 5ல் அமர்ந்த ராகு அல்லது கேது புத்திரபாக்கியம் இன்மையை தரும் என்று கருதுவது சுய ஜாதகத்தில் 5ம் பாவக வலிமையை பற்றிய எதுவும் தெரியாமல் குத்துமதிப்பாக சொல்லும் வாய்ஜாலம் என்பதை அனைவரும் உணருவது அவசியமாகிறது.

5ல் அமர்ந்த ராகு கீழ்கண்ட ஜாதகருக்கு தொடர்ந்து  3 ஆண் வாரிசாகவே வாரி வழங்கி இருப்பதற்கு அவரது ஜாதகத்தில் 5ல் அமர்ந்த வலிமை பெற்ற ராகுபகவானின் கருணையே காரணம் என்பதை உறுதியாக பதிவு செய்ய முடியும், மேலும் ராகு பகவான் 5ம் பாவகத்தை வலிமை பெற செய்வதால் ஜாதகர் பெரும் நன்மைகளை என்ன ? என்பதை இன்றைய சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !


லக்கினம் : மகரம்
ராசி : விருச்சிகம்
நட்ஷத்திரம் : அனுஷம் 3ம் பாதம்

மேற்கண்ட மகர லக்கின ஜாதகருக்கு ஸ்திர மண் தத்துவ ராசியான ரிஷபத்தில் 5ம் பாவகத்திற்க்கு உற்ப்பட்ட பாகையில் அமர்ந்து இருக்கும் ராகு பகவான் ஜாதகருக்கு 100% விகித யோக பலன்களை தரும் அமைப்பில் காணப்படுகிறார், இது ஜாதகருக்கு உபய மண் தத்துவம் சார்ந்த தொழில்களான மண் மனை வண்டி வாகன துறையில்  நல்லறிவையும், சமயோசித அறிவுத்திறன் மூலம் மேற்கண்ட தொழில்களில் சிறந்து விளங்கும் தன்மையையும் தருகின்றார், மேலும் ஜாதகரின் தொழில் நுணுக்க அறிவு திறன் மூலம் தன்னிறைவான பொருளாதார வசதி வாய்ப்பை தொடர்ந்து வாரி வழங்கிக்கொண்டு  சுய ஜாதகத்தில் ராகு பகவான் கால புருஷ தத்துவ  அமைப்பிற்கு 2ம் வீடான ரிஷபத்தில் வலிமை பெற்று இருப்பதே அடிப்படை காரணம் என்றால் அதில் மாற்று கருத்து இல்லை அன்பர்களே !

பொதுவாக 5ல் அமர்ந்த ராகு புத்திர பாக்கியத்தை வழங்கமாட்டார் என்ற விஷயம் யாதொரு ஜோதிட நூல்களிலும் இல்லை, இந்த கருத்து இடைப்பட்ட காலத்தில் புகுத்தப்பட்ட தவறான கருத்து என்பதை சொல்லி தெரிவதில்லை, சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் 12 பாவகங்களின் வலிமை நிலையை பற்றிய தெளிவு இல்லாமல் கூறப்படும் விஷயமாகவே " ஜோதிடதீபம் " கருதுகிறது, ஓர் ஜாதகத்தில் சாயா கிரகங்களான ராகு கேது தாம் அமரும் பாவகத்தை தனது முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடும் என்ற அடிப்படை விஷயம் அறிந்திருப்பது அவசியமாகிறது, குறிப்பாக மேற்கண்ட ஜாதகத்தில் 5ல் அமர்ந்த ராகுவும், 11ல் அமர்ந்த கேதுவும் தாம் அமர்ந்த பாவகத்தை தனது வசம் முழு கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர், அதுவும் 100% விகித வலிமையுடன், இதன் காரணமாக சுய ஜாதகத்தில் 2ம் பாவகம் பாதிக்கப்பட்ட போதிலும் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் ராசியான ரிஷபம் வலிமை பெற்று இருப்பது ஜாதகருக்கு சிறு தாமதத்திற்கு பிறகு சிறப்பான இல்லற வாழ்க்கையை அமைத்து தந்து இருக்கின்றது, பொதுவாக சுய ஜாதகத்தில் 2ம் வீடு பாதிப்படைவது ஜாதகருக்கு திருமண தடைகளை தரும் , பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது குடும்ப வாழ்க்கையை கேள்விக்குறியாக மாற்றும், இந்த ஜாதகத்தில் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் வீடான ரிஷபம் ராகு பகவானால் வலிமை பெறுவதால் ஜாதகர் மேற்கண்ட பாவக வழியில் இருந்து பரிபூர்ண நன்மைகளை பெறுகின்றார்.

ஜாதகத்தில் 5ல் ராகு அமர்ந்தாலே " புத்திரபாக்கியம் இல்லை " என்ற மூடத்தனமான நம்பிக்கைகளை களைந்து, 5ல் அமர்ந்த ராகு ஜாதகருக்கு வலிமையை  சேர்க்கிறதா ? வலிமையற்று இன்னல்களை தருகின்றதா ? என்பதை  தெளிவாக தெரிந்து கொண்டு சிறப்புறுவதே " ஜோதிட கணிதத்தின் " பரிபூர்ணத்துவம் அடங்கியிருக்கின்றது.

நவ கிரகங்கள் ஏழை பணக்காரன், நல்லவன் கெட்டவன் என்ற பாகுபாடு பார்த்து  பலாபலன்களை தருவதில்லை, அவரவர் பிறந்த நேரத்தின் அடிப்படையில் அமையும் லக்கினம் முதல் 12 பாவகங்களின் மீது விழும் நவக்கிரகத்தின் ஜீவகாந்த சக்தியை சுவீகரிக்கும் வலிமை பெற்ற பாவகங்கள் ஜாதகனுக்கு சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து சுபயோகங்களையும், வலிமை அற்ற பாவகங்கள் ஜாதகனுக்கு சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து  அவயோகங்களையும் தருகின்றது, இந்த பாவக பலன்களை நவக்கிரகத்தில் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் காலங்களில் ஏற்று நடத்தி ஜாதகனுக்கு நன்மை தீமையை வழங்குகின்றது என்ற உண்மையை உணரும் பொழுது, ஒருவருக்கு தமது வாழ்க்கையில் தனது ஜாதகத்தின் பங்கு என்ன என்பதை பற்றியும், அது தரும் பலாபலன்கள் பற்றியும் ஓர் தெளிவான விழிப்புணர்வு கிடைக்கும், மாறாக நவ கிரகங்கள் நன்மை தீமை தருகின்றது  என்ற மூடநம்பிக்கையில் இயங்குவது முற்றிலும் ஜாதக கணிதம் தெரியாமல் ஒருவர் கூறும் கற்பனை நிறைந்த கட்டுக்கதைகளாகவே அமைந்துவிடும், சுய ஜாதக வலிமை என்பது லக்கினம் முதல் 12 பாவகங்களின் வலிமையின் அடிப்படையில் அமையும் என்பதனை உணரும் பொழுது நமது வாழ்க்கையின் முன்னேற்றத்தையும், சாதக பாதகங்களை அறிந்து செயல்படும் வல்லமையும் நமக்கு பரிபூர்ணமாக கிடைக்கும்.

மேற்கண்ட ஜாதகருக்கு 5ல் வலிமை பெற்ற ராகு, தொடர்ந்து 3 ஆண் வாரிசுகளையும், அவர்களின் ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவகங்களையும் கொண்டிருக்கும் தன்மையை தருகின்றார், எனவே நமது சுய ஜாதகத்தில் 5ல் ராகுவோ அல்லது கேதுவோ அமர்ந்து இருந்தால் பயமேதும் கொள்ளாமல், அவர் வலிமையுடன் உள்ளாரா ? வலிமை அற்று காணப்படுகிறாரா ? என்பதில் தெளிவு பெறுவது அவசியமாகிறது, 5ல் வலிமை பெற்ற சாயா கிரகங்கள் ஒருவருக்கு நல்ல ஆண் வாரிசை வழங்குவதுடன், அவர்களை அதிர்ஷ்டத்துடன்  யோகம் மிக்கவர்களாக திகழ செய்வார் என்பதில் மாற்று கருத்து இல்லை அன்பர்களே !

குறிப்பு :

 ரிஷபம்,மிதுனம்,கடகம்,கன்னி,துலாம்,தனுசு மற்றும் மீன ராசிகள் 5ல் பாவகமாக அமைந்து அங்கு அமரும் ராகுகேது ஜாதகருக்கு புத்திர தோஷத்தை நிச்சயம் தாராது, ஆனால் இதில் சில விதி விளக்குகளும் உண்டு என்பதை  கருத்தில் கொள்வது சிறப்பை தரும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக