புதன், 6 டிசம்பர், 2017

சுக்கிரன் திசை ( குடும்ப ஸ்தானாதிபதி, பாக்கிய ஸ்தானாதிபதி திசை ) நடைபெற்றும் திருமணதடை ஏற்ப்பட காரணம் என்ன ?


கேள்வி :

 கடந்த 13 வருடங்களாக சுக்கிரன் திசை நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது, குடும்ப ஸ்தானாதிபதி, பாக்கியஸ்தானாதிபதி திசை என்பதால் நன்மைகளை தருவார் என்றனர், இதுவரை யாதொரு நன்மையையும் இல்லை, கல்வியில் தடை, திருமண முயற்சிகள் யாவும் தடை, பொருளாதார சிக்கல்கள், எதிர்பாரா இழப்புகள் என மிகுந்த இன்னல்களுக்கு மட்டுமே இதுவரை ஆளாகி வந்துள்ளேன், சுக்கிரன் திசை எனக்கு வழங்கும் உண்மையான பலாபலன்கள் என்ன ? எதிர்காலம் எனக்கு எப்படி அமையும் ?


பதில் :

லக்கினம் : கன்னி
ராசி : கடகம்
நட்ஷத்திரம் : ஆயில்யம் 4ம் பாதம்

தங்களின் ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் குடும்பம் மற்றும் பாக்கிய ஸ்தான அதிபதியான சுக்கிரன் திசை சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தாமல், மிகவும் வலிமை அற்ற கடுமையான பாதிப்புகளை தரும் பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துவதே தாங்கள் அனுபவிக்கும் இன்னல்களுக்கு அடிப்படை காரணமாக விளங்குகிறது, பொதுவாக சுய ஜாதக பலாபலன்களை சிந்தனைக்கு எடுத்துக்கொள்ளும் பொழுது சுப ஆதிபத்தியம் பெற்ற கிரகங்கள் அல்லது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு நவகிரகங்கள் பெரும் ஆட்சி,உச்சம்,நட்பு,சமம் என்ற நிலையை பெற்ற கிரகங்களின் திசா புத்திகள் நன்மையை செய்யும், அசுப ஆதிபத்தியம் பெற்ற கிரகங்கள் அல்லது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு நவகிரகங்கள் பெரும் பகை,நீசம் என்ற நிலையை பெற்ற கிரகங்களின் திசா புத்திகள் தீமையை செய்யும், என்று கருதுவது சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை நிலையை கருத்தில் கொள்ளாமல் கூறப்பட்டும் பொது பலன்களே, இதை கருத்தில் கொண்டு நமது வாழ்க்கையை நிர்ணயம் செய்வது என்பது மண் குதிரையை நம்பி நடுஆற்றில் இறங்குவதற்கு சமமானது, இதை மேற்கண்ட தங்களின் சுய ஜாதகத்தை உதாரணமான கொண்டு தெளிவு பெறுவோம் அன்பரே !

  தங்களது ஜாதகத்தில் 5,7ம் வீடுகளை தவிர மற்ற அனைத்து வீடுகளும் மிகவும் வலிமையுடன் இருப்பது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும், இருப்பினும் தற்போழுது நடைபெறும் சுக்கிரன் தங்களுக்கு சுய ஜாதகத்தில் கடுமையாக  பாதிக்கப்பட்ட 5,7ம் வீடுகளின் பலாபலன்களை ஏற்று நடத்துவது  ( 5,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் ) தங்களின் வாழ்க்கையில் நினைத்துப்பார்க்க இயலாத துன்பங்களை 5ம் மற்றும் 7ம் பாவக வழியில் இருந்து 200% விகிதம் வாரி வழங்கும், அடிப்படையில் தங்களின் பூர்வீகத்தில் இருந்து ஜீவன செய்ய இயலாத நிலையை தந்து பரதேச ஜீவனம் என்ற நிலைக்கு ஆளாக்கும், சிறிதும் இறை அருளின் கருணை தங்களுக்கு உதவி செய்யாது, தங்களின் அறிவு திறனும் சமயோசித புத்திசாலித்தனமும் சரியான நேரத்தில் பயன்படாது, உதவி செய்ய யாரும் அற்ற நிலையில் தனிமையாக போராட்ட வாழ்க்கையை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், கற்ற கல்வி பலனளிக்காது, தனக்கு சிறிதும் சம்பந்தம் இல்லாத துறையில் தனது வாழ்க்கை பயணத்தை நடத்தியாகவேண்டிய சிரமமான சூழ்நிலையை உருவாக்கிவிடும், ஜாதகர் மேற்கொள்ளும் சுப நிகழ்வுகள் யாவும் தடைபெற்று பாதியிலே நின்றுவிடும், ஜாதகரின் அனைத்து முயற்சிகளும் மிகப்பெரிய தோல்வியையே தரும் என்பது சுக்கிரன் திசை ஜாதகருக்கு 5ம் பாவாக வழியில் இருந்து தரும் பலன்களாகும்.

 7ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் நண்பர்கள், கூட்டாளிகள் மற்றும் எதிர்பாலின அமைப்பினர் மூலம் கடும் நெருக்கடிகளை சந்திக்கும் சூழ்நிலையை உருவாக்கும், காதல்வயப்பட்டு அதன் மூலம் மிகப்பெரிய இழப்புகளை ஜாதகர் சந்திக்கும் சூழ்நிலை ஏற்படும், இறுதியில் தேவையற்ற வீண் அவப்பெயர் மற்றும் களங்கம் ஏற்படும், குறிப்பாக ஜாதகர் வெளிவட்டார பழக்க வழக்கங்களில் இருந்து பெரிய அளவிலான துன்பங்களை எதிர்கொள்ளும் சூழ்நிலை உருவாகும், கூட்டு முயற்சி பெரிய பாதிப்புகளை தரும், நண்பர்கள் வழியிலான பொருளாதார சீர்குலைவு தங்களின் முன்னேற்றத்தை வெகுவாக பாதிக்கும், தேவையற்ற சகவாசம் தங்களின் வாழ்க்கையை கடுமையாக பாதிக்கும்.

தங்களின் 5ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தானமான மகர ராசியில் அமைவது தங்களின் தொழில் வழியிலான முன்னேற்றத்தையும், அறிவு சார்ந்த முயற்சிகளையும் கடுமையாக பாதிக்கும், ஓர் நல்ல வேலை வாய்ப்பை பெறுவதே குதிரை கொம்பாக அமையும், மேலும் கவுரவம் சார்ந்த பிரச்சனைகள் தங்களின் எதிர்காலத்தையும், தொழில் வழியிலான முயற்சிகளுக்கும் மிக பெரிய தடைக்கற்களாக அமையும் என்பதை கவனத்தில் கொள்க.

தங்களின் 7ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு விரைய ஸ்தானமான மீன ராசியில் அமைவது எதிர்பாலினம், நண்பர்கள், பொதுமக்கள் மற்றும் கூட்டாளிகள் வழியில் இருந்து கடுமையான மனநிம்மதியிழப்பையும், மனஅழுத்தத்தை வழங்கும் என்பதால் சற்று கவனமுடன் மேற்கண்ட உறவுகளுடன் நட்பு பாராட்டுவது நலம் தரும், குறிப்பாக தவறான எதிர்பாலின சேர்க்கை இருப்பின் அதில் இருந்து வெகு விரைவில் விடுபடுவது தங்களின் எதிர்கால வாழ்க்கைக்கு உகந்த நன்மைகளை தரும்.

அடுத்து வரும் சூரியன் திசை தரும் பலன்கள் திருமண தடை சார்ந்த கேள்விகளுக்கு  அலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளவும் .

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக