சனி, 24 பிப்ரவரி, 2018

தொழில், திருமணம் அமைவது எப்பொழுது ? சுய ஜாதகத்தில் உள்ள யோக அவயோகங்கள் பற்றி விளக்கம் தருக ?



தொழில் ( வேலை ) இதுவரை சரியாக அமையவில்லை, திருமணமும் நடைபெறவில்லை, எதிர்காலம் எப்படி இருக்கும், எனது ஜாதகம் பற்றிய ( லக்கினம் முதல் 12 வீடுகள் பற்றி ) முழு விபரமும் தெளிவாக விளக்கம் தர வேண்டுகிறேன், எதிர்கால வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக்கொள்ள, தங்களின் அறிவுரையையும் எதிர்பார்க்கிறேன், " நன்றி "

ஒருவரது சுய ஜாதக பலாபலன் பற்றி தெளிவு பெற 3 வழிமுறையை பின்பற்றினால் ஜாதகருக்கான துல்லியமான பலாபலன்களை மிக சரியாக தெளிவு படுத்த இயலும், அதுபற்றி இன்றை பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

1) ஜாதகரின் பிறந்த தேதி,நேரம் மற்றும் இடம் ஆகிவற்றை அடிப்படையாக கொண்டு கணிதம் செய்யப்படும் சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமையை பற்றி தெளிவு பெறுவது மிக அவசியமானது.

2) ஜாதகரின் சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை பெற்ற பாவகங்கள் எது? வலிமை அற்ற பாவகங்கள் எது ? அதன் வழியில் இருந்து ஜாதகர் பெரும் நன்மை தீமை பற்றி தெளிவு பெறுவது மிக அவசியமானது.

3) ஜாதகருக்கு தற்போழுது, எதிர்வரும் திசாபுத்திகள் ஏற்று நடத்தும் பாவக தொடர்புகள் என்ன ? அவை வலிமை பெற்ற பாவக தொடர்பை பெற்று யோக பலன்களை தருகின்றதா? வலிமை அற்ற பாவக தொடர்பை பெற்று அவயோக பலன்களை தருகின்றதா ? என்பது பற்றி தெளிவு பெறுவது மிக அவசியமானது, மேலும் திசா புத்திகள் பாவக தொடர்புகளுக்கு, கோட்சார கிரகங்கள் தரும் வலிமை, வலிமை அற்ற தன்மை பற்றி தெளிவு பெறுவதும்  மிக மிக அவசியமானது.

மேற்கண்ட மூன்று விதிகளை கையாள்வதன் மூலமே, நாம் சுய ஜாதக பலாபலன்களை பற்றி 100% விகிதம் தெளிவு பெற உதவி புரியும்.


ஜாதக பலாபலன்கள் 

லக்கினம் : கடகம் 
ராசி : கடகம் 
நட்ஷத்திரம் : ஆயில்யம் 1ம் பாதம் 

ஜாதகத்தில் வலிமை பெற்றுள்ள பாவக தொடர்புகள் :

1,5,7,11ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு லக்கின பாவக வழியில் இருந்து தந்தையின் ஆதரவு மற்றும் நேசம் கிட்டும், நீண்ட தூர பயணங்கள் மூலம் லாபம் உண்டாகும், மனோ தத்துவம் மற்றும் தெய்வீக அனுபவம் உண்டாகும், மதம் ஞானம் போன்ற விஷயங்களில் தேர்ச்சி உண்டு, நல்ல தெளிந்த அறிவு திறன் மூலம் சகல சௌபாக்கியங்களையும் பெரும் யோகம் உண்டாகும், தனது வாழ்க்கை துணையின் சகோதரர் வழியிலான நன்மைகளை ஜாதகர் பரிபூர்ணமாக பெரும் வல்லமையை தரும்.

5ம் பாவக வழியில் இருந்து ஜாதகரின் ஆரோக்கியம் மேம்படும், ஸ்திரமான மனவலிமை மூலம் சகல காரியங்களிலும் வெற்றி பெரும் யோகம் உண்டு, எடுக்கும் முடிவுகள் விரைவானதாகவும், சரியானதாகவும் அமையும், அதிபுத்திசாலித்தனம் ஜாதகருக்கு பல நேரங்களில் கைகொடுக்கும், ஆராய்ச்சி மனப்பான்மை ஜாதகரின் வெற்றியை அதிகரிக்கும், நல்ல பழக்க வழக்கங்கள் மூலம் ஜாதகர் அனைவரிடமும் நற்பெயர் எடுக்கும் யோகம் உண்டு, அமைதியும் மகிழ்ச்சியும் ஜாதகரின் வெற்றிக்கு உறுதுணையாக அமையும், சமாதானம் மற்றும் பெருந்தன்மை ஜாதகரின் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும்.

7ம் பாவாக வழியில் இருந்து ஜாதகர் மனைவியுடன் நல்ல இணக்கமான சூழ்நிலையை பெறுவதற்கான வாய்ப்பை தரும், வாழ்க்கை துணையின் கல்வி அறிவு ஜாதகரின் முன்னேற்றத்திற்கு பேருதவியாக அமையும், கூட்டு தொழில் வழியில் இருந்து சகல சௌபாக்கியங்களும் கிட்டும், கூட்டாளிகளுக்கு நல்ல லாபத்தை தரும், பலதிருத்தலங்களுக்கு கூட்டாக சென்று வரும் யோகம் உண்டு, வணிகம் மற்றும் வியாபர துறையில் நல்ல அறிவும், பல புதிய யுக்தியை கடைபிடிக்கும் யோகமும் உண்டு, வெளியூர் வெளிநாடுகளில் இருந்து சிறப்பான முன்னேற்றம் உண்டாகும்.

11ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு சிறந்த நல்லறிவை இயற்கையாகவே பெறுவதற்கான வாய்ப்புகள் வந்து சேரும், தனது பேச்சு எழுத்து மூலம் மிகப்பெரிய நன்மைகளை ஜாதகர் பெறுவதற்கான வாய்ப்பு உண்டு , தன்னம்பிக்கையும், மனோதைரியமும் மிதமிஞ்சிய அளவில் ஜாதகருக்கு கைகொடுக்கும், அதிர்ஷ்ட வாய்ப்புகளை ஜாதகர் தவறவிடாமல் கைப்பற்றி நலம் பெறுவது அவசியமாகிறது, வியாபரத்துறையில் நல்ல லாபம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு, பெற்றோர் மற்றும் பாரம்பரிய தொழில்கள் வழியில் இருந்து சிறப்பான முன்னேற்றங்கள் உண்டாகும், ஜாதகரின்  புதிய முயற்சிகள் யாவும் மிகப்பெரிய வெற்றியை தரும்.

2ம் வீடு குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு அளவற்ற வருமானத்தை வாரி வழங்கும், மிதம்மிஞ்சிய செல்வாக்கு, தன்னிறைவான பொருளாதார வசதி வாய்ப்பு, குடும்ப ஒற்றுமை, குடும்பத்தி மகிழ்ச்சி, அறுசுவை உணவு, இனிமையான பேச்சு திறன், வருமானம் சார்ந்த உதவிகள், கடின உழைப்பிற்கான ஊதியம் உடனே கிடைத்தால், குடும்ப வாழ்க்கையில் சுபயோகம், வாழ்க்கை துணை வழியிலான வருமான உதவி மற்றும் பரிபூர்ண ஆதரவு, பேச்சை முதலீடாக கொண்டு செய்யும் தொழில் வழியிலான அதீத வருமானம் என ஜாதகருக்கு 2ம் பாவக வழியில் இருந்து சகல சௌபாக்கியங்களும் உண்டாகும்.

3ம் வீடு வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு  மிகுந்த செல்வ செழிப்பை தரும், ஜாதகரின் எதிரிகளை மிக எளிதாக எதிர்கொண்டு வெற்றிபெறும் யோகம் உண்டு, ஸ்திரமான நல்ல மனநிலையை தரும், சிறந்த சிந்தனை மூலம் வாழ்க்கையில் ஜாதகர் சகல சௌபாக்கியங்களையும் பெரும் யோகம் உண்டு, உண்மை மற்றும் சத்தியத்தை மதிக்கும் யோகம் உண்டு, விளையாட்டு வீர சாகச நிகழ்வுகளில் அதீத ஆர்வம் உண்டாகும், மன தைரியம் சிறப்பான வெற்றிகளை நல்கும், பயணம் மூலம் லாபமும் முன்னேற்றமும் உண்டாகும், கற்ற கல்வியின் மூலம் சிறப்பு உண்டு, புதிய மாற்றங்கள் ஜாதகருக்கு சகல சௌபாக்கியத்தை தரும், ஏஜென்சி எடுத்து செய்யும் வியாபாரங்கள் யாவும் ஜாதகருக்கு வெற்றி மேல் வெற்றியை தரும் வருமானம் என்பது அளவில்லாமல் கிடைக்கும், சகல எதிர்ப்புகளையும் சமாளித்து பரிபூர்ண வெற்றியை பெறுவதற்கான வாய்ப்புகளை வாரி வழங்கும்.

குறிப்பு :

 ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் மேற்கண்ட 6 பாவகங்கள் மிக மிக வலிமையுடன் இருந்த போதிலும், தொழில் மற்றும்  திருமணம் இதுவரை ஏன்? கைகூடி வரவில்லை என்பதனை அடுத்த பதிவில் சிந்திப்போம் அன்பர்களே ! ஜாதகருக்கு 23/07/2001 தேதி முதல் தற்போழுது வரை சுகம் மற்றும் பாக்கிய ஸ்தான  அதிபதி சுக்கிரன் திசை நடைமுறையில் இருந்தும், தொழில் திருமணம் ஏன் தாமதம் ஆகிறது என்பதனையும் அடுத்த பதிவில் விளக்கமாக பார்ப்போம் .

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக