ஞாயிறு, 8 ஏப்ரல், 2018

ராகு திசை தரும் பலன்கள் என்ன ? சுய ஜாதகத்தில் பாவங்களின் வலிமை நிலை எப்படி உள்ளது ?



சுய ஜாதக பலாபலன்கள்


லக்கினம் : மகரம்
ராசி : மேஷம்
நட்சத்திரம் : பரணி 3 ம் பாதம்

ஜாதகத்தில் பாவக தொடர்புகள் :

 1ம் வீடு உயிர் உடலாகிய லக்கின பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 1ம் பாவக வழியில் இருந்து சிறப்பாக வளரும் சூழ்நிலை, நோய் எதிர்ப்பு திறன், சிறந்த உடல் மன வலிமை, முற்போக்கு சிந்தனை, தெளிவான நல்லறிவு, தீர்க்கமாக முடிவெடுக்கும் வல்லமை, நேர்மையான குணம், மண் தத்துவம் சார்ந்த சுபயோகங்கள், எதிர்ப்புகளை கண்டு அஞ்சாத மனம், உயிரோட்டமான செயல்பாடுகள் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுதல், தெய்வீக அனுக்கிரகம், புதிய சிந்தனை மற்றும் யுக்தி வழியிலான நன்மைகளை பெறுதல், சிறந்த திட்டமிடுதல், செய்யும் காரியங்களில் ஒருவித நேர்மை மற்றும் நேர்த்தியை கடைபிடித்தல், ஒழுக்கம், சுய கட்டுப்பாடு, ஸ்திரமான மனநிலை என ஜாதகருக்கு லக்கின வழியில் இருந்து சுபயோகங்களை வாரி வழங்கும், மேலும் தீர்க்கமான ஆயுள், நோயில் இருந்து விரைவில் குணம் பெரும் வல்லமை என ஜாதகருக்கு மிகுந்த ஆரோக்கியத்தை நல்கும், ஜாதகரின் புகழ், வெற்றி யாவும் ஜாதகருக்கு பரிபூர்ணமாக பயன்படும்.

2,3,6,8ம் வீடுகள்  வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 2ம் பாவக வழியில் இருந்து கல்வியில் வெற்றி, எழுது பொருள் மூலம் அபரிவித லாபம், சிறந்த பேச்சு திறமை, விளம்பரம் மூலம் மிகப்பெரிய வெற்றிகளை பெறுதல், கவிதை இலக்கியம் சார்ந்த விஷயங்களில் நல்லறறிவு, எஜென்ஜி துறையில் பரிபூர்ண வெற்றி, கமிஷன் வியாபாரத்தில் கொடிகட்டி பறக்கும் யோகம், ட்ராவல் எஜென்ஜி மூலம் அபரிவித முன்னேற்றம், தரகு தொழில் வழியிலான மிகுந்த நன்மைகள், சிறு பிரயாணம் மூலம் நல்ல லாபம், இளைய சகோதரர் மூலம் நன்மை மற்றும் அதிர்ஷ்டங்களை பெறுதல், வாக்கு வன்மை மூலம் பெரும் செல்வம் சேரும் யோகம், எதிர்பாராத வருமான வாய்ப்புகள் என ஜாதகருக்கு மிகுந்த யோகத்தை நல்குவதுடன், இனிமையான குடும்ப வாழ்க்கை, வாழ்க்கை துணை வழியிலான பொருளாதர முன்னேற்றங்களை சிறப்பாக வாரி வழங்கும்.

3ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு மிகுந்த செல்வச்செழிப்பு, எதிரிகளை வென்று வெற்றிவாய்ப்பை தனக்கு சாதகமாக மாற்றும் வல்லமை, நல்ல மனநிலை, சிந்தனை திறன் மூலம் அனைத்தையும் சாதித்தல், உண்மை சத்தியம் போன்றவற்றை மதித்து நடக்கும் குணம், மனதைரியம், மனஉறுதியுடன் அனைத்தையும் எதிர்கொள்ளும் வல்லமை, சாகசம் செய்வதில் விருப்பம், விளையாட்டில் ஆர்வம், கற்ற கல்வியின் மூலம் வாழ்க்கையில் சிறப்பான யோகங்களை பெறுதல், புதிய மாற்றங்கள் மற்றும் சூழ்நிலைகளை விரும்புதல், எஜென்ஜி துறையில் கொடிகட்டி பறக்கும் யோகம், அதன் வழியிலான மிதமிஞ்சிய லாபம் என ஜாதகருக்கு வீர்ய ஸ்தான வழியில் இருந்து சுபயோகங்கள் நடைமுறைக்கு வரும், தெய்வீக பயணங்கள் மூலம் வாழ்க்கையில் சுபயோகங்கள் தேடிவரும் வாய்ப்பை ஜாதகர் பரிபூர்ணமாக பெறுவார்.

6ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு எஜென்ஜி அல்லது காண்டராக்ட் தொழில் வழியிலான முன்னேற்றங்கள் மிக அபரிவிதமானதாக அமையும், ஜாதகரின் சீரிய முயற்சிகள் யாவும் நல்ல வெற்றிவாய்ப்புகளை வாரி வழங்கும், உடல் நலம் மற்றும் மனநலனில் அதிக அக்கறை கொள்வது நல்லது, மற்றவர்கள் மூலம் தனசேர்க்கை மிக சிறப்பாக குறுகிய காலத்தில் அமையும், தனது சுய சிந்தனையும், அறிவு திறனும் ஜாதகருக்கு பெருவாரியான வெற்றி வாய்ப்புகளை வாரி வழங்கும், எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் தன்மையை தரும், ஜாதகரை எதிர்ப்பவர்கள் மிகுந்த பாதிப்பிற்கு ஆளாகும் சூழ்நிலையை தரும் என்பதுடன் ஜாதகரின் முன்னேற்றம் எதிரியே மெச்சும் அளவிற்கு அமையும்.

8ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு பூர்ண ஆயுள் உண்டாகும், லாட்டரியில் திடீர் அதிர்ஷ்டம் உண்டு, ஜாதகரின் வாழ்க்கை துணை வழியில் இருந்தும் பெரும் சொத்து சுக சேர்க்கை உண்டாகும், கூட்டாளிகளின் பணம் ஜாதகருக்கு பயன்படும், சுலப வழியில் பெரும் செல்வம் ஜாதகருக்கு வந்து சேரும், குறிப்பாக ஜாதகர் செய்யும் எஜென்ஜி தொழில் அல்லது காண்ட்ராக்ட் தொழில் வழியில் இருந்து அபரிவிதமான சொத்தது சுக சேர்க்கை வந்து சேரும், வெளிநாடுகள் அல்லது வெளியூரில் இருந்து வரும் பொருட்கள் ஜாதகருக்கு மிகுந்த லாபத்தை தரும், இஞ்சுரன்ஸ், ஆயுள் காப்பீடு துறையில் மிதமிஞ்சிய லாபம் மற்றும் அதிர்ஷ்டம் ஜாதகருக்கு உண்டு என்பதுடன், உயிர் காக்கும் மருந்துகள் மூலமும் எதிர்பாராத வருமானம் வந்து சேரும்.

4,10ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 4ம் பாவக வழியில் இருந்து எதிர்பாராத விபத்து அல்லது இழப்பை தரும், மருத்துவ சிகிக்சை, சொத்துக்களை பாதுக்காக்க போராடும் தன்மையை தரும், வண்டி வாகன சார்ந்த செலவுகள் அதிகரிக்கும், சில நேரங்களில் காரிய தடங்கல் உண்டாகும், வறுமை, துரதிர்ஷ்டம், இன்னல்கள், மனகுழப்பம், அதிக வேலைப்பளு, சுகபோக வாழ்க்கையில் தடங்கல், சுயமாக சொத்துக்களை சேர்க்க இன்னலுறும் தன்மை, கவனமின்மையால் ஏற்படும் திடீர் இழப்புகள் என ஜாதகரை வெகுவாக பாதிக்கும், எந்த காரணத்தை கொண்டும் தனது பெயரில்  தனியாக சொத்துக்களை பராமரிப்பது பேரிழப்புகளை ஏற்படுத்தும் என்பதால் கூட்டு முயற்சியாக சொத்துக்களை வைத்திருப்பது சகல விதங்களில் இருந்தும் நன்மையை தரும்.

10ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு ஜீவனம் அமைவதில் சில இடர்பாடுகளை தரும், வெளியூர் அல்லது பிறந்த இடத்தை விட்டு செல்வதால் மட்டுமே ஜீவனம் சார்ந்த நன்மைகளை தரும், அடிக்கடி தொழில் வழியில் மாற்றங்களை தரும், வரவை விட செலவுகள் அதிகரிக்கும், எதிர்பாராமல் செய்யும் செயல்களால் கவுரவ குறைவை ஏற்படுத்தும், சுய தொழில் செய்வதில் மிகுந்த எச்சரிக்கை தேவை, போதுமான திட்டமிடுதல்களுடன் ஜாதகர் செயல்படுவதே சகல நிலைகளில் இருந்தும் நன்மையை தரும், தொழில் சார்ந்த நன்மைகளை பெற ஜாதகர் கடும் போராட்டங்களை எதிர்கொள்ளவேண்டிவரும், திட்டமிட்டு செயல்படுவது ஜாதகருக்கு வரும் தோல்விகளை தவிர்க்க உதவும்.

5,9,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 5ம் பாவக வழியில் இருந்து குல தெய்வ ஆசியை பெறுவதற்கு தடைகளை ஏற்படுத்தும், தெய்வ நம்பிக்கை இழப்பை தரும், ஜாதகரின் புத்திசாலித்தனமும்  சமயோசித அறிவு திறனும் பூர்வீகத்தில் ஜீவிக்கும் வரை பலன் ஏதும் தாராது, கற்ற கல்வி ஜாதகருக்கு பயன்படாது, கடும் முயற்சிகளை மேற்கொண்டும் வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது மிக சிறிய அளவிலேயே அமையும், நல்ல ஆண் வாரிசு அமைவது என்பது ஜாதகருக்கு சற்று சிரமமே, முறையான குலதெய்வ சாப நிவர்த்தி ஜாதகருக்கு சகல நன்மைகளையும் தரும்.

9ம் பாவக வழியில் இருந்து எடுக்கும் காரியங்கள் யாவும் ஜாதகருக்கு பெரும் பின்னடைவை தரும், முழு வீச்சில் ஜாதகர் மேற்கொள்ளும் விஷயங்களில் பெரும்  தடை தாமதங்கள் உண்டாகும், பெரியமனிதர்கள் ஆதரவை பெறுவது ஜாதகருக்கு சற்று சிரமமாக இருக்கும், அரசியல் மற்றும் பொது வாழ்க்கையில் துன்பத்தை தரும், உறவுகள் சார்ந்த வகையில் சிரமங்கள் அதிக அளவில் ஏற்படுத்தும், பித்ரு சாபம் உள்ளதால், ஜாதகர் முறையான பிரீதி பரிகாரங்களை மேற்கொண்டு நலம் பெறுவது அவசியமாகிறது.

11ம் பாவக வழியில் இருந் ஜாதகரின்  ஆசைகள் மற்றும் லட்சியங்கள் வெகுவாக பாதிக்கும், அதிர்ஷ்டமின்மையால் அதிக அளவிலான போராட்டங்களை மேற்கொள்ளும் நிலையை தரும், தெய்வீக அனுக்கிரகம் ஜாதகர்  பெறுவதில் தடை ஏற்படும், முற்போக்கு சிந்தனை ஜாதகருக்கு பலன் தாராது, எதிர்மறை எண்ணங்களால் ஜாதகரின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படும், எதிலும் மனக்குழப்பம், சந்தேகம், மனப்போராட்டம் என்றவகையில் பெருத்த இன்னல்களை ஏற்படுத்தும், சுய ஜாதகத்தில் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட பாவகங்களில் 5,9,11ம் வீடுகளுக்கே முன்னுரிமை தரலாம், ஜாதகருக்கு 5,9,11ம் பாவக வழியில் இருந்தே 200% விகித இன்னல்கள் நடைமுறைக்கு  வரும் என்பது கவனிக்கத்தக்க விஷயமாகும்.

7ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது வாழ்க்கை துணை  வழியில் இருந்து வரும் சின்ன சின்ன இன்னல்கள், கூட்டாளி வழியில் இருந்துவரும் ஏமாற்ற்றம், இழப்புகளுடன் கூடிய தொல்லைகள், வாழ்க்கை துணை வழியில் இருந்துவரும் வார்த்தை சாடல்கள், கடன் பெறுவதால் வரும் சிரமங்கள், எதிராளிக்கு வாய்ப்பை வழங்குதல், கூட்டு வியாபாரத்தில்  பெருத்த நஷ்டம் என ஜாதகரை கடுமையாக பாதிக்கும், எந்த ஓர் விஷயத்திலும்  கூட்டு என்பது ஜாதகருக்கு ஆகாது, எதிர்பாலின அமைப்பினரிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது நலம் தரும், பொது வாழ்க்கையில் பெரிய தோல்விகளை சந்திக்கும் நிலையை தரு ம், நீண்ட ஆயுள் உண்டு என்ற போதிலும், உடல் நல பாதிப்பை தரும்.

12ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு மனைவியின் சொற்படி நடக்கும் தன்மையை தரும், கூட்டாளிகளுக்கு நிறைவான லாபத்தை தரும், நிம்மதியான உறக்கம் கிட்டுவது அரிதிலும் அரிதாக அமையும், பொதுநல காரியங்களில் ஈடுபடாமல் இருப்பதே ஜாதகருக்கு சகல நிலைகளில் இருந்தும் நன்மையை தரும்.


நடைபெறும் ராகு திசை தரும் பலாபலன்கள் : ( 02/02/2012 முதல் 02/02/2030 வரை )

ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் ராகு திசை 4,10ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று தனது திசை முழுவதும் விரைய ஸ்தான பலனை 4,10ம் பாவக வழியில் இருந்து தருவதால் ஜாதகர், சொத்து, வண்டி வாகனம், வீடு நிலம் சார்ந்த விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது, அதைப்போன்றே செய்யும் தொழில் வழியில் மிகுந்த கவனமுடன் செயல்படுவது சகல விதங்களில் இருந்தும் நன்மையை தரும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

7ல் அமர்ந்த ராகு ஜாதகியை " முதிர்கன்னி " என்ற நிலைக்கு ஆளாக்குமா ?



 களத்திர ஸ்தானத்தில் அமர்ந்த ராகு தான் அமர்ந்த பாவகத்தை கடுமையாக பாதிப்பிற்க்கு ஆளாக்கும் பொழுது, சம்பந்தப்பட்ட ஜாதகரின்  திருமணம் வாழ்க்கை மிகப்பெரிய கேள்விக்குரியாக மாறிவிடும், மேலும் ஜாதகர் திருமணத்திற்க்காக மேற்கொள்ளும் முயற்சிகள் யாவும் முழுமை பெறாமல், மிகப்பெரிய இன்னல்களுக்கும் துன்பத்திற்கும் ஆளாக்கும், காதல் திருமணம் செய்துகொள்வதற்கான வாய்ப்பும் ஜாதகருக்கு கிட்டாது என்பதுடன், இல்லற வாழ்க்கை துணையை தேர்வு செய்வதில் பெரும் தவறு இழைத்து அதன் வழியிலான தொல்லைகளை வாழ்நாள் முழுவதும் எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், பொதுவாக சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகத்தில் ராகு அல்லது கேது அமரும் பொழுது சம்பந்தப்பட்ட பாவகத்தை மிகவும் வலிமைப்படுத்தும் அமைப்பில் இருப்பது களத்திர ஸ்தான வழியிலான சுபயோகங்களை வாரி வழங்கும், மாறாக வலிமை அற்ற நிலையை தருமாயின் ஜாதகரின் நிலை களத்திர பாவக வழியில் இருந்து கடுமையான இன்னல்களை எதிகொள்ளும் சூழ்நிலையை தரும் என்பதற்கு கீழ்கண்ட ஜாதகமே நல்ல உதாரணம் என்பதை, இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம். 


லக்கினம் : கன்னி
ராசி : சிம்மம்
நட்ஷத்திரம் : மகம் 4ம் பாதம்

ஜாதகிக்கு  ராகு பகவான் களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகத்தில் வலிமையற்று அமர்ந்து இருப்பதும், சுய ஜாதகத்தில் 7ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் ஜாதகியின் திருமண வாழ்க்கையை கடுமையாக பாதிக்கும் அமைப்பாகும், குறிப்பாக ஜாதகியின் களத்திர ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு விரைய பாவகம் என்று அழைக்கப்படும்  மீன ராசியில் அமைவதும் ஜாதகிக்கு வாழ்க்கை துணை வழியில் இருந்து கடுமையான மன நிம்மதி இழப்பையும், மனப்போராட்டத்தையும் வாரி வழங்கும் என்பதை மறுப்பதற்கு இல்லை, சுய ஜாதகத்தில் இல்லற வாழ்க்கையை குறிக்கும் பெரும்பாலான வீடுகளின் தொடர்பு ஜாதகிக்கு திருமண வாழ்க்கை என்ற ஓர் அமைப்பையே கேள்விக்குறியாக மாற்றும் வல்லமையுடன் காணப்படுவது கவனிக்கத்தக்கது, எந்த ஓர் சூழ்நிலையிலும் ஜாதகி திருமண வாழ்க்கையில் இணைவதற்கான சந்தர்ப்பத்தை தட்டிப்பறித்துக்கொண்டே இருக்கும் என்பது கவனிக்கத்தக்கது .

இல்லற வாழ்க்கையை நிர்ணயம் செய்யும் 2,5,7,8,12ம் வீடுகள் முறையே 2,8,12ம்  வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடனும், 5ம் வீடு மட்டும் லாப ஸ்தானத்துடனும், 7ம் வீடு 200% விகித இன்னல்களை தரும் பாதக ஸ்தானத்துடன்  சம்பந்தம் பெற்று இருப்பது, ஜாதகிக்கு வயது 31 கடந்தும் திருமண வாழ்க்கை எனும் சுப நிகழ்வை நடைமுறைப்படுத்தவில்லை, பெரும்பாலான வீடுகள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பது, ஜாதகியின் இல்லற வாழ்க்கையை கேள்விக்குறியாக மாற்றி அமைத்திருக்கிறது, மேலும் சுய ஜாதகத்தில் 4ம் வீடு கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பது ஜாதகியின் நற்குணங்களை இழந்து, அனைவருடனும் விரோத போக்கை கடைபிடிப்பது, ஜாதகியின் இல்லற வாழ்க்கைக்கு தானே தேடிவைத்துக்கொள்ளும் சூன்யமாகும், குணக்கேடான செயல்பாடுகள் ஜாதகியின் நற்பெயருக்கு பெருத்த களங்கத்தை ஏற்படுத்திக்கொண்டு இருப்பதை அறியாமல் , தனது செயலே சரியானது என்ற மனஇயல்புடன் ஜாதகி செயல்படுவதும் ஓர் வகையில் திருமண வாழ்க்கை அமைவதை வெகுவாக தடுத்துக்கொண்டு இருக்கிறது, ஜாதகியின் நண்பர்கள் கூறும் அறிவுரையும், ஜாதகியின் நடவடிக்கையை சிறிதும் மாற்ற முடியவில்லை என்பது கவலைக்கு உரியது.

 நடைபெறும் சந்திரன் திசை வலிமை பெற்ற லக்கின பாவக பலனை ஏற்று நடத்துவது  நல்ல ஜீவன மேன்மையை தந்து இருப்பது ஜாதகியின் பொருளாதார  தன்னிறைவை சிறப்பாக அமைத்து தந்துகொண்டு இருக்கிறது என்ற போதிலும், இல்லற வாழ்க்கை எனும் விஷயத்தை மிகப்பெரிய கேள்விக்குறியாக மாற்றி வைத்திருப்பது கவனிக்கத்தக்கது, திருமண தாமதம் ஏன் ? என்ற கேள்விக்கு சுய ஜாதகத்திலும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கும் 2,5,7,8,12ம் வீடுகள் மிக மிக கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதே அடிப்படை காரணம் என்றால் அதை மறுப்பதற்கு இல்லை, நடைபெறும் சந்திரன் திசை வலிமை பெற்ற பாவாக பலனை ஏற்று நடத்திய போதிலும், அது ஜாதகிக்கு திருமணம் சார்ந்த நன்மைகளை வழங்காமல், ஜீவனம் சார்ந்த நன்மைகளை மட்டும் வாரி வழங்கிக்கொண்டு இருப்பது கவனிக்கத்தக்கது.

மேற்கண்ட ஜாதகி தனது சுய ஜாதக வலிமை நிலையை தெளிவாக உணர்ந்து, தனக்கு  வரும் வரனின் ஜாதகத்தில் 2,5,7,8,12ம் வீடுகள் வலிமை உள்ள ஜாதகமாக தேர்வு செய்து இல்லற வாழ்க்கையில் இணைந்து நலம் பெறுவதே சாலச்சிறந்தது, மாறாக தனது எண்ணத்தின் படி வாழ்க்கையை வாழ ஆரம்பித்தாள், இறுதியில் இல்லற வாழ்க்கை சார்ந்த கடுமையான இன்னல்களை எதிர்கொண்டு நிம்மதி இழந்து வாடும் சூழ்நிலையை தந்துவிட வாய்ப்புண்டு, மேலும் தனது ஜாதக வலிமையை பற்றி தெளிவு பெறுவது ஜாதகியின் குடும்ப வாழ்க்கையில் வரும் இன்னல்களை வெகுவாக குறைக்க உதவும் என்பதை உணர்ந்து செயலாற்றுவது சகல நலன்களையும் தரும்.

குறிப்பு :

 மேற்கண்ட ஜாதகத்தில் களத்திர ஸ்தானத்தில் அமர்ந்த ராகு தான் அமர்ந்த பாவகத்தை 100% விகிதம் பாதிப்பிற்கு ஆளாக்குவது, ஜாதகி வாழ்க்கை துணை வழியில் இருந்து கடுமையான இன்னல்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், அதை போன்றே சுய ஜாதகத்திலும் 7ம் வீடு பாதக ஸ்தான தொடர்பை பெறுவது திருமண வாழ்க்கையில் தடை தாமதங்களும், தனக்கு உகந்த வாழ்க்கை துணையை தேர்வு செய்வதில் மிகுந்த குழப்பத்தையும் ஏற்படுத்தும், மேலும் ஜாதகி 2,5,7,8,12 வீடுகள் வலிமை பெற்ற ஓர் ஜாதகரை தனது  வாழ்க்கை துணையாக தேர்வு செய்யவில்லை எனில், வாழ்க்கையே நரகமாகிவிட வாய்ப்பு அதிகம் உள்ளது என்பதை நினைவில் கொள்வது ஜாதகியின் எதிர்கால வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக்கொடுக்கும் .

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

வெள்ளி, 6 ஏப்ரல், 2018

ராகு திசை சுய புத்தி சுபயோக பலனை வழங்கினால், பிறகு வரும் புத்திகள் மிகப்பெரிய கெடுதலை தருமா ?


 கேள்வி : 

   ராகு திசை சுயபுத்தியில் நல்ல பலனை தந்தது. ஒரு தசா சுயபுத்தியில் அதிகமான நன்மையை வழங்குகிறது என்றால் பிறகு வரும் புத்திகள் மிகப்பெரிய கெடுதலை தரும் என்பதில் எவ்வித சந்தேகமும் வேண்டியதில்லை, இது உண்மையா? இந்த ஜாதகத்தை உங்களது பாணியில் விளக்கி தெளிவை கொடுக்க முடியுமா? ஆள் ஆளுக்கு ஒன்னா சொன்னா மனுசன் எதை நம்புறது ?

பதில் :

 ஒரு தசா சுயபுத்தியில் அதிகமான நன்மையை வழங்குகிறது என்றால் பிறகு வரும் புத்திகள் மிகப்பெரிய கெடுதலை தரும் என்பதில் எவ்வித சந்தேகமும் வேண்டியதில்லை. என்ற கருத்து சுய ஜாதக கணிதம் என்றால் என்னவென்றே தெரியாமல், பிதற்றும் வாய் ஜாலம் என்றே சொல்ல தோன்றுகிறது, அடிப்படையில் எந்த ஓர் கிரகத்தின் திசையும் சரி, புத்தியும் சரி தன்னிசையாக பலாபலன்களை வழங்கும் வல்லமை அற்றவை, சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்கள் பெரும் வலிமையை மட்டுமே தனது திசை, புத்தி, அந்தரம் மற்றும் சூட்ஷம காலங்களில் நடைமுறைக்கு கொண்டுவரும், இதை சுய ஜாதக கணிதம் பற்றி தெளிவு பெற்றவர்கள் மிக எளிதாக உணர இயலும், கீழ்கண்ட ஜாதகருக்கு ராகு தனது சுய புத்தியில் யோக பலனை வழங்கியதால், அடுத்து வரும் மற்ற புத்திகள் அவயோகங்களை வாரி வழங்கும் என்பது முற்றிலும் தவறான கருத்து, ராகு தனது திசையில் தரும் பலனும், ராகு சுய புத்தியிலும் மற்ற புத்திகளில் நடைமுறைக்கு வரும் பலாபலன்கள் பற்றியும் இன்றை பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !


லக்கினம் : மகரம்
ராசி : மேஷம்
நட்சத்திரம் : பரணி 3ம் பாதம்

ராகு திசையில் சுய புத்தி ஜாதகருக்கு யோக பலனை வழங்கியது எப்படி ?

ஜாதகருக்கு ( 17/01/2008 முதல் 16/01/2026 வரை ) நடைமுறையில் உள்ள ராகு திசை சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக தொடர்புகளான 5,11ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பூர்வ புண்ணிய ஸ்தானம் மற்றும் லாப ஸ்தான வழியில் இருந்து முழு வீச்சில் யோக பலன்களை வாரி வழங்கி உள்ளது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், சுய ஜாதகத்தில் நடைபெறும் நவக்கிரக திசை அல்லது புத்தி எதுவென்றாலும், வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு ஏற்று நடத்தும் பாவக வழியில் இருந்து சுபயோக பலாபலன்களே நடைமுறைக்கு வரும், மாறாக சுய ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட பாவக பலனை ஏற்று நடத்தும் நவகிரகங்களின் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் ஜாதகருக்கு சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து அவயோக பலன்களையே வாரி வழங்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

மேற்கண்ட் ஜாதகருக்கு ராகு திசை 5,11ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பூர்வ புண்ணிய ஸ்தானம் மற்றும் லாப ஸ்தான வழியில் இருந்து நன்மைகளையும், ராகு திசை ராகு புத்தி மேற்கண்ட பாவக வழியிலான தொடர்புகளை பெற்று சுய திசையில் சுய புத்தி ஜாதகருக்கு சுபயோக பலாபலன்களையே வழங்கியது தெளிவாகிறது, அடுத்து வந்த ராகு திசை குரு புத்தி ஜாதகருக்கு 3,4 ம் வீடுகள் சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றதும், ஜாதகருக்கு ராகு திசை குரு புத்தியும் ஜாதகருக்கு நன்மைகளை வழங்கியிருக்கிறது, குரு புத்திக்கு அடுத்து வந்த சனி புத்தி 1,7,10ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் ( சர லக்கினத்திற்கு பாதக ஸ்தானம் 11ம் வீடாகும் ) பெற்று 200% மடங்கு இன்னல்களை வாரி வழங்கியுள்ளது, ராகு திசையில் சனி புத்திக்கு அடுத்து வந்த புதன் புத்தியும் 1,7,10ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இன்னல்களையும், 8ம் வீடு வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சில நன்மைகளையும் வழங்கி கொண்டு இருப்பது கவனிக்கத்தக்கது.

 ஜாதகர் 29/12/2015 முதல் 18/07/2018 வரை 1,7,10ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று, பாதக ஸ்தான வழியில் இருந்து கடுமையான கடுமையான இன்னல்களை தொடர்து வழங்கிக்கொண்டு இருப்பதால் ஜாதகர் மிகுந்த துன்பத்திற்கும் இன்னல்களுக்கும் ஆளாகி கொண்டு இருக்கின்றார், மேலும் ஜாதகரின் லக்கினம், களத்திரம் மற்றும் ஜீவன ஸ்தானங்களே பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவதால் ஜாதகருக்கு வரும் பாதிப்புகள் அதிக அளவில் உள்ளது என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகும், லக்கினம் பாதிக்கப்படுவது ஜாதகரே தன்னை தானே பாதிப்பிற்க்கு ஆளாக்கி கொள்வார், களத்திர ஸ்தானம் பாதிக்கப்படுவது ஜாதகருக்கு ஏற்படும் எதிர்பாலின சேர்க்கையின் மூலம் இன்னல்களுக்கு ஆளாகும் சூழ்நிலையை தரும், ஜீவன ஸ்தானம் பாதிக்கப்படுவது ஜாதகரின் தொழில் ஸ்தான வழியிலான இன்னல்களுடன், சுய கவுரவம் பாதிக்கும் சூழ்நிலையை தரும்.

 ராகு திசையில் அடுத்து வரும் கேது மற்றும் சுக்கிரன் புத்திகள் 8ம் வீடு வீரிய ஸ்தானமான 3ம் பாவக பலனை ஏற்று நடத்துவது ஜாதகருக்கு சில எதிர்பாராத நன்மைகளையும், சூரியன் மற்றும் செவ்வாய் புத்திகள் 2ம் வீடு குடும்ப ஸ்தானமான 2ம் பாவக பலனை ஏற்று நடத்தி நிறைவான வருமான வாய்ப்புகளையும், சுபயோகங்களையும், சந்திரன் புத்தி 6,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இன்னல்களையும், 9ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சுபயோக பலாபலன்களை நடத்த தயார் நிலையில் இருப்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

 நவகிரகங்கள் தன்னிசையாக நன்மை தீமை பலாபலன்களை நடைமுறைக்கு கொண்டுவருவதற்கான வாய்ப்பு என்பது சிறிதும் இல்லை என்பதே மேற்கண்ட உதாரண ஜாதகம் மூலம் நாம் அறிந்துகொள்ள வேண்டிய விஷயமாகும், சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவக வலிமையையே ஏற்று நடத்தும் என்ற உண்மையையும் நாம் உணர்ந்துகொள்ளவேண்டிய நேரமிது, மேலும் கோட்சார கிரகங்களின் தாக்கம் என்பதனையும் மேற்கண்ட முறையிலேயே கையாண்டு துல்லியமான பலாபலன்களை உணர்ந்து, நமது வாழ்க்கையை மேலும் சிறப்பு மிக்கதாக மாற்றிக்கொள்வது சகல நன்மைகளையும் தரும்.

குறிப்பு :

 சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை நிலையையும் , நடைபெறும் திசாபுத்திகள் ஏற்று நடத்தும் பாவகங்களின் தன்மையையும் நாம் தெளிவாக உணர்ந்து கொள்வது, நமது வாழ்க்கையை மிகவும் சிறப்பு மிக்கதாக மாற்றிக்கொள்ளும் வாய்ப்பை தரும், குறிப்பாக நமது எதிர்கால திட்டமிடுதல்களை மிக சிறப்பாக முன்னெடுத்துச்செல்லும் வாய்ப்பை வாரி வழங்கும் என்பது மறுக்க இயலாத உண்மை.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696 

செவ்வாய், 3 ஏப்ரல், 2018

சுய ஜாதக பலாபலன்கள் : சுப, அவயோக பலனை ஏற்று நடத்தும் திசா புத்திகள் !



சுய ஜாதகத்தில் சுபயோகங்கள் அல்லது அவயோகங்கள் இருப்பது முக்கியமல்ல, நடைபெறும் திசா புத்தி, எதிர்வரும் திசா புத்தி சுபயோக பலனை ஏற்று நடத்துவது ஜாதகருக்கு சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து நன்மைகளையும் அதிர்ஷ்டங்களை வாரி வழங்கும், அதுபோன்றே பாதிக்கப்பட்ட பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களையும், துன்பங்களையும் நடைபெறும் திசா புத்தி அல்லது எதிர்வரும் திசா புத்திகள் ஏற்று நடத்தினால் மட்டுமே அவயோக பலாபலன்கள்  நடைமுறைக்கு வரும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

 கீழ்கண்ட ஜாதகருக்கு, 1,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பாபந்தம் பெறுவதும், 6ம் வீடு சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 7ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் அவயோக அமைப்பாகும், 2,5,8,11ம் வீடுகள் வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 3ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 4ம் வீடு சுக ஸ்தானமான நான்காம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 9ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 10ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் சுபயோகங்களை நல்கும் அமைப்பாகும், தற்போழுது நடைபெறும் குரு திசை ஜாதகருக்கு 6ம் பாவக வழியில் இருந்து உடல் நல குறைவை தந்த போதிலும், 9 பாவக வழியில் இருந்து சுபயோகங்களை பரிபூரணமாக வாரி வழங்கிக்கொண்டு இருப்பது வரவேற்க தக்க சிறப்பு அம்சமாகும், எதிர் வரும் சனி திசை ஜாதகருக்கு 10ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் சுபயோகங்களை தருவது ஜாதகரின் வாழ்க்கையில் மிகுந்த அதிர்ஷ்டத்தை தரும் அமைப்பாகும்.


லக்கினம் : தனுசு
ராசி : கன்னி
நட்ஷத்திரம் : சித்திரை 2ம் பாதம்

ஜாதகத்தில் பாவக தொடர்புகள் :

1,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பாபந்தம் பெறுவது ஜாதகருக்கு 1ம் பாவக வழியில் இருந்து அருங்கலைகளில் ஆர்வத்தை தரும், யோகம் பக்தி போன்ற விஷயங்களில் தேர்ச்சியை தரும், தனிமை விருப்பம், தொலைதூர பயணங்களில் அதீத ஆர்வம், முதலீடுகளில் அதிக விருப்பம் என்றவகையில் நன்மைகளை தந்த போதிலும், அனைவராலும் தொல்லை மற்றும் துன்பத்தை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், மறைமுக எதிரிகள் தொந்தரவு, தடங்கல், அடிக்கடி வைத்திய செலவு, ஏமாற்றம், துன்பம், சதி வேலைகளால் இன்னலுறும் தன்மையை தரும், தன்னம்பிக்கை வெகுவாக குறையும், நல்லவர்களை காண்பது ஜாதகருக்கு அரிதிலும் அரிதாக அமையும், தேவையற்ற குழப்பமும் நிம்மதியின்மையும், ஜாதகரின் வாழ்க்கையில் பெரும் துன்பங்களை தரும், வீண் கற்பனை ஜாதகரின் எதிர்கால வாழ்க்கையை கேள்விக்குறியாக மாற்றும், சுய ஜாதகத்தில் மற்ற பாவக வழியில் இருந்து வரும் சுபயோகங்களை சுவீகரிக்க இயலாத நிலையை தரும், தன்னம்பிக்கையையும், சுய கட்டுப்பாட்டையும் ஜாதகர் அதிகம் வளர்த்துக்கொள்வது நல்லது, எந்த ஓர் காரியத்தையும் பலமுறை ஆலோசனை செய்து முடிவெடுப்பதே சகல நிலைகளில் இருந்தும் நன்மைகளை தரும், சுய ஜாதகத்தில் லக்கினம் வலிமை இழப்பது கடுமையான பின்னடைவுகளை ஜாதகருக்கு  தரும் என்பதால் முறையான பரிகாரங்களை மேற்கொண்டு சகல நலன்களையும் பெறுக.

12ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு நிறைய விரைய செலவுகளை தரும், சேமிப்பு எதிர்பாராத விஷயங்களால் வீணடிக்கப்படும், தாம்பத்திய வாழ்க்கையில் எதிர்பாராத துன்பங்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், நல்ல உறக்கம் அமைவது கேள்விக்குறியே, மனநிம்மதி இழப்பு, மனஅழுத்தம், மனப்போராட்டம் என சகல நிலைகளில் இருந்தும் பெருத்த துன்பத்தை தரும், மனஒருமைப்பாடு ஜாதகரின் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் தரக்கூடும், தெளிவில்லாத மனநிலை மற்றும் சிந்தனை ஆகியவை ஜாதகருக்கு பெருத்த சேதாரங்களை வழங்கக்கூடும், பங்கு சந்தை, சூது மூலம் நஷ்டத்தை தரும், அனைவராலும் தொல்லை மற்றும் எதிர்பாராத விபத்தை ஏற்படுத்தும், விடாமுயற்சியுடன் போராடி வாழ்க்கையில் வெற்றி பெரும் சூழ்நிலையை தரும்.

2,5,8,11ம் வீடுகள் வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 2ம் பாவக  வழியில் இருந்து எழுத்து பேச்சு, கலைத்துறை போன்ற அமைப்புகளில் சிறப்பான முன்னேற்றத்தை தரும், எண்ணத்தின் வலிமை அதிகமாகும், கைநிறைவான வருமான வாய்ப்புகள் வந்து சேரும், நிலையான வருமான வாய்ப்பு ஜாதகருக்கு தேடி வரும், தெய்வீக அனுக்கிரகம் மூலம் சகல சம்பத்தும் பெறுவதற்கான யோகம் உண்டு,  விளம்பர துறை, இலக்கியம், எஜென்ஜி, கமிஷன், தரகு தொழில், எதிர்பாராத லாபம், இனிமையான பேச்சு திறன் மூலம் பெரும் வியாபார விருத்தி என சகல சௌபாக்கியங்களையும் நல்கும்.

5ம் பாவக வழியில் இருந்து எஜென்ஜி விளையாட்டு உபகரணம், இசைக்கருவிகள்,  தைரிய செயல்பாடுகள், எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் வல்லமை, இறுதி நேரத்தில் பிரச்சனைகளில் இருந்து விடுபடுதல், மந்திர உபதேசம் பெறுதல், வாக்கு வன்மை குல தெய்வ ஆசிர்வாதம், தெய்வீக அனுக்கிரகம், நினைத்தைதை சாதிக்கும் யோகம், பெரும் செல்வாக்கு, தீர்வுகளை அறியும் யோகம், பொதுவாழ்க்கையில் பெயரும் புகழும் உண்டாகும் தன்மை என்ற வகையில் சிறப்புகளை தரும்.

8ம் பாவக வழியில் இருந்து லாட்டரியில் அதிர்ஷ்டம், சுலப வழி வருமானம், இன்சூரன்ஸ் போனஸ் போன்றவற்றில் நல்ல லாபம், திடீர் அதிர்ஷ்டம், வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் பொருளாதார தன்னிறைவு, திடீர் பதவி மற்றும் அந்தஸ்து தேடி வரும் யோகம் என்ற வகையில் சிறப்புகளை தரும்.

11ம் பாவக வழியில் இருந்து பயணங்களில் விருப்பம், எழுத்து மற்றும் புத்தம் எழுதும் ஆற்றல், மாற்றத்தை முன்னெடுக்கும் வல்லமை, வெளிநாடுகளில் இருந்து வரும் செல்வாக்கு, கமிஷன், எஜென்ஜி மூலம் அபரிவித லாபம், மனோதைரியம், தன்னம்பிக்கை ஓங்கும் குணாதிசயம், எதையும் அதிர்ஷ்டம் மூலம் பெரும் ஆற்றல், பொது வாழ்க்கையில் வெற்றி என்றவகையில் சிறப்புகளை தரும், வியாபாரத்தில் மிகுந்த லாபத்தை தரும்.

3ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மருந்துகள் மூலம் மிகுந்த லாபத்தை தரும், அரிய கலைகளில் ஜீவித மேன்மையையும், விட்டுக்கொடுக்கும் தன்மையால் மிகுந்த லாபத்தையும் ஜாதகர் பெறுவார், அயல் தேசம் மற்றும் அயலார் மூலம் சிறந்த நன்மைகள் தேடி வரும், புதிய கண்டுபிடிப்பு, சட்டம் மூலம் நன்மை, தர்ம சிந்தனை, நேர்மையான வழியில் முன்னேற்றங்களை பெரும் யோகம் என்ற வகையில் சிறப்புகளை தரும்.

4ம் வீடு சுக ஸ்தானமான நான்காம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு மண் மனை வண்டி வாகன யோகம், சொந்த ஊரில் ஜீவிக்கும் தன்மை, கல்வி மற்றும் நிர்வாக துறையில் சிறந்து விளங்கும் தன்மை, வடக்கு வாயிற்படி கொண்ட வீடுகளில் ஜீவனம் செய்யும் பொழுது சிறப்பான முன்னேற்றங்களை பெரும் யோகத்தை நல்கும்.

6ம் வீடு சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு தேர்வு போட்டி பந்தயங்களில் வெற்றி, உடல் நல பாதிப்பு தொடர் சிகிச்சை மேற்கொள்ளும் சூழ்நிலை, வியாதியை எதிர்க்கும் தன்மை அற்ற நிலை, சிறந்த வேலை வாய்ப்பு மூலம் முன்னேற்றம் பெரும் யோகம், பிறரால் கடுமையான தொல்லைகளை எதிர்கொள்ளும் சூழ்நிலை, முன்னேற்றம் என்பது எதிரிகளால் வெகுவாக பாதிக்கப்படும் தன்மை, உடல் மனம் சார்ந்த சிக்கல்களில் சிரமப்படும் நிலை என பாதிப்புகளை தரும்.

7ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு கடுமையான இன்னல்களை வாழ்க்கை துணை வழியில் இருந்து வாரி வழங்கும், நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் மூலம் எதிர்பாராத இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலையை தரும் வெளிவட்டார பழக்க வழக்கம் கடுமையாக பாதிக்கப்படும், வாழ்க்கை துணைக்கு கடுமையான இன்னல்களை உருவாக்கும், திருமண வாழ்க்கையில் கடுமையான பாதிப்பு மற்றும் இல்லற வாழ்க்கையில் துன்பங்களை வாரி வழங்கும், பொது வாழ்க்கையில் எதிர்பாலினத்தல் வீண் அவப்பெயரை சந்திக்கும் சூழ்நிலையை தரும், சுய ஜாதகத்தில் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட பாவகத்தில் களத்திர ஸ்தானமே முதலிடம் பெறுகிறது என்பதால், மேற்கண்ட பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை ஜாதகர் மிக கவனமுடன் எதிர்கொள்வதே சால சிறந்தது மேலும் ஜாதகர் மேற்கண்ட பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை தவிர்க்க முறையான பிரீத்தி பரிகாரங்களை மேற்கொள்வது நல்லது, இல்லை எனில் இல்லற வாழ்க்கை கேள்விக்குறியாக மாறிவிட வாய்ப்பு உள்ளது.

9ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு மிகுந்த அறிவு திறனை வாரி வழக்கும், எதையும் தனது அறிவு திறன் கொண்டு வெற்றிகொள்ளும் வாய்ப்பை தரும், முன்னேர்களின் ஆசிர்வாதம் சிறந்த வாழ்க்கை பாதையை அமைத்து தரும், தெய்வீக தரிசனம், ஆன்மீக பெரியோர்களின் ஆசிர்வாதம் ஜாதகரின் வாழ்ககையில் பல மாற்றங்களை வாரி வழங்கும், யோகம் மற்றும் தெய்வீகம் ஜாதகருக்கு சிறந்த நன்மையை வாரி வழங்கும்.

10ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு செய்யும் தொழில் அல்லது வேளையில் மிகுந்த லாபத்தை தரும், குறுகிய காலத்தில் தொழில் வெற்றிகளை சுவீகரிக்கும் வல்லமை உண்டு, பல தொழில் செய்யும் யோகத்தை நல்கும், எதிர்பாராத அதிர்ஷ்டம் மூலம் கை நிறைவான வருமான வாய்ப்புகளை ஜாதகர் பெறுவார், பெற்றோர் வழியிலான நன்மைகளை ஜாதகருக்கு பரிபூர்ணமாக அமையும், சுய உழைப்பில் வாழ்க்கையில் பெருத்த நன்மைகளை அனுபவிக்கும் தன்மையை தரும், கவுரவம் குறையாத தொழில் வாய்ப்புகளை வாரி வழங்கும்.

நடைபெறும் குரு திசை ராகு புத்தி தரும் பலாபலன்கள் : ( 02/05/2017 முதல் 26/09/2019 வரை )

நடைபெறும் குரு திசை ராகு புத்தி ஜாதகருக்கு 2,5,11ம் வீடுகள் வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், 9ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், சுபயோக பலன்களை தருவதால் ஜாதகர் மேற்கண்ட பாவக வழியில் இருந்து சுபயோக பலன்களை வெகுவாக அனுபவிக்கும் தன்மையை தரும், எடுக்கும் காரியங்கள் வெற்றி தரும், முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும், தெய்வீக அனுக்கிரகம் மூலம் சுபயோகங்கள் ஜாதகருக்கு தேடி வரும், வெகுநாள் பிரச்சனைகள் விரைவில் முடிவுக்கு வரும்.

எதிர்வரும் சனி திசை தரும் பலாபலன்கள் : ( 26/09/2019 முதல் 05/09/2038 வரை )

எதிர்வரும் சனி திசை ஜாதகருக்கு 10ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பலனை தருவது ஜாதகர் எதிர்பாராத தொழில் வெற்றிகளை அனுபவிக்கும் யோகத்தை தரும், சுய சிந்தனை மற்றும் சுய உழைப்பின் மூலம் வாழ்க்கையில் மிகப்பெரிய தொழில் வெற்றிகளை பெறுவார், ஜாதகரின் லாப ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் வீடான துலாம் ராசியில் அமைவது ஜாதகரின் வியாபார விருத்தி 100% விகிதம் மிகவும் சிறப்பான முன்னேற்றங்களை பெரும், தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும், வலிமை பெற்ற பாவகத்தின் பலனை ஏற்று நடத்தும் சனி திசை ஜாதகருக்கு பரிபூர்ண நன்மைகளை லாப ஸ்தான வழியில் இருந்து வாரி வழங்கும், ஜாதகர் தனது அறிவு திறன் மூலம் லாபங்களை அதிர்ஷ்டங்களை முழுவீச்சில் சனிதிசையில் பெறுவார் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், வாழ்த்துக்கள்.

குறிப்பு :

ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட வீடுகள் இருப்பினும் நடைபெறும், எதிர்வரும் திசாபுத்திகள் வலிமையான பாவக பலனை ஏற்று நடத்துவதால், ஜாதகர் சுபயோக பலன்களையே அனுபவிப்பார் என்பது கவனிக்க தக்க சிறப்பு அம்சமாகும், எனவே சுய ஜாதகத்தில் திசாபுத்திகள் ஏற்று நடத்தும் பாவாக பலன்கள் என்ன என்பதில் தெளிவு பெறுவதே சகல நிலைகளில் இருந்து சிறப்புகளை தரும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696