ஞாயிறு, 8 ஏப்ரல், 2018

ராகு திசை தரும் பலன்கள் என்ன ? சுய ஜாதகத்தில் பாவங்களின் வலிமை நிலை எப்படி உள்ளது ?



சுய ஜாதக பலாபலன்கள்


லக்கினம் : மகரம்
ராசி : மேஷம்
நட்சத்திரம் : பரணி 3 ம் பாதம்

ஜாதகத்தில் பாவக தொடர்புகள் :

 1ம் வீடு உயிர் உடலாகிய லக்கின பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 1ம் பாவக வழியில் இருந்து சிறப்பாக வளரும் சூழ்நிலை, நோய் எதிர்ப்பு திறன், சிறந்த உடல் மன வலிமை, முற்போக்கு சிந்தனை, தெளிவான நல்லறிவு, தீர்க்கமாக முடிவெடுக்கும் வல்லமை, நேர்மையான குணம், மண் தத்துவம் சார்ந்த சுபயோகங்கள், எதிர்ப்புகளை கண்டு அஞ்சாத மனம், உயிரோட்டமான செயல்பாடுகள் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுதல், தெய்வீக அனுக்கிரகம், புதிய சிந்தனை மற்றும் யுக்தி வழியிலான நன்மைகளை பெறுதல், சிறந்த திட்டமிடுதல், செய்யும் காரியங்களில் ஒருவித நேர்மை மற்றும் நேர்த்தியை கடைபிடித்தல், ஒழுக்கம், சுய கட்டுப்பாடு, ஸ்திரமான மனநிலை என ஜாதகருக்கு லக்கின வழியில் இருந்து சுபயோகங்களை வாரி வழங்கும், மேலும் தீர்க்கமான ஆயுள், நோயில் இருந்து விரைவில் குணம் பெரும் வல்லமை என ஜாதகருக்கு மிகுந்த ஆரோக்கியத்தை நல்கும், ஜாதகரின் புகழ், வெற்றி யாவும் ஜாதகருக்கு பரிபூர்ணமாக பயன்படும்.

2,3,6,8ம் வீடுகள்  வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 2ம் பாவக வழியில் இருந்து கல்வியில் வெற்றி, எழுது பொருள் மூலம் அபரிவித லாபம், சிறந்த பேச்சு திறமை, விளம்பரம் மூலம் மிகப்பெரிய வெற்றிகளை பெறுதல், கவிதை இலக்கியம் சார்ந்த விஷயங்களில் நல்லறறிவு, எஜென்ஜி துறையில் பரிபூர்ண வெற்றி, கமிஷன் வியாபாரத்தில் கொடிகட்டி பறக்கும் யோகம், ட்ராவல் எஜென்ஜி மூலம் அபரிவித முன்னேற்றம், தரகு தொழில் வழியிலான மிகுந்த நன்மைகள், சிறு பிரயாணம் மூலம் நல்ல லாபம், இளைய சகோதரர் மூலம் நன்மை மற்றும் அதிர்ஷ்டங்களை பெறுதல், வாக்கு வன்மை மூலம் பெரும் செல்வம் சேரும் யோகம், எதிர்பாராத வருமான வாய்ப்புகள் என ஜாதகருக்கு மிகுந்த யோகத்தை நல்குவதுடன், இனிமையான குடும்ப வாழ்க்கை, வாழ்க்கை துணை வழியிலான பொருளாதர முன்னேற்றங்களை சிறப்பாக வாரி வழங்கும்.

3ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு மிகுந்த செல்வச்செழிப்பு, எதிரிகளை வென்று வெற்றிவாய்ப்பை தனக்கு சாதகமாக மாற்றும் வல்லமை, நல்ல மனநிலை, சிந்தனை திறன் மூலம் அனைத்தையும் சாதித்தல், உண்மை சத்தியம் போன்றவற்றை மதித்து நடக்கும் குணம், மனதைரியம், மனஉறுதியுடன் அனைத்தையும் எதிர்கொள்ளும் வல்லமை, சாகசம் செய்வதில் விருப்பம், விளையாட்டில் ஆர்வம், கற்ற கல்வியின் மூலம் வாழ்க்கையில் சிறப்பான யோகங்களை பெறுதல், புதிய மாற்றங்கள் மற்றும் சூழ்நிலைகளை விரும்புதல், எஜென்ஜி துறையில் கொடிகட்டி பறக்கும் யோகம், அதன் வழியிலான மிதமிஞ்சிய லாபம் என ஜாதகருக்கு வீர்ய ஸ்தான வழியில் இருந்து சுபயோகங்கள் நடைமுறைக்கு வரும், தெய்வீக பயணங்கள் மூலம் வாழ்க்கையில் சுபயோகங்கள் தேடிவரும் வாய்ப்பை ஜாதகர் பரிபூர்ணமாக பெறுவார்.

6ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு எஜென்ஜி அல்லது காண்டராக்ட் தொழில் வழியிலான முன்னேற்றங்கள் மிக அபரிவிதமானதாக அமையும், ஜாதகரின் சீரிய முயற்சிகள் யாவும் நல்ல வெற்றிவாய்ப்புகளை வாரி வழங்கும், உடல் நலம் மற்றும் மனநலனில் அதிக அக்கறை கொள்வது நல்லது, மற்றவர்கள் மூலம் தனசேர்க்கை மிக சிறப்பாக குறுகிய காலத்தில் அமையும், தனது சுய சிந்தனையும், அறிவு திறனும் ஜாதகருக்கு பெருவாரியான வெற்றி வாய்ப்புகளை வாரி வழங்கும், எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் தன்மையை தரும், ஜாதகரை எதிர்ப்பவர்கள் மிகுந்த பாதிப்பிற்கு ஆளாகும் சூழ்நிலையை தரும் என்பதுடன் ஜாதகரின் முன்னேற்றம் எதிரியே மெச்சும் அளவிற்கு அமையும்.

8ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு பூர்ண ஆயுள் உண்டாகும், லாட்டரியில் திடீர் அதிர்ஷ்டம் உண்டு, ஜாதகரின் வாழ்க்கை துணை வழியில் இருந்தும் பெரும் சொத்து சுக சேர்க்கை உண்டாகும், கூட்டாளிகளின் பணம் ஜாதகருக்கு பயன்படும், சுலப வழியில் பெரும் செல்வம் ஜாதகருக்கு வந்து சேரும், குறிப்பாக ஜாதகர் செய்யும் எஜென்ஜி தொழில் அல்லது காண்ட்ராக்ட் தொழில் வழியில் இருந்து அபரிவிதமான சொத்தது சுக சேர்க்கை வந்து சேரும், வெளிநாடுகள் அல்லது வெளியூரில் இருந்து வரும் பொருட்கள் ஜாதகருக்கு மிகுந்த லாபத்தை தரும், இஞ்சுரன்ஸ், ஆயுள் காப்பீடு துறையில் மிதமிஞ்சிய லாபம் மற்றும் அதிர்ஷ்டம் ஜாதகருக்கு உண்டு என்பதுடன், உயிர் காக்கும் மருந்துகள் மூலமும் எதிர்பாராத வருமானம் வந்து சேரும்.

4,10ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 4ம் பாவக வழியில் இருந்து எதிர்பாராத விபத்து அல்லது இழப்பை தரும், மருத்துவ சிகிக்சை, சொத்துக்களை பாதுக்காக்க போராடும் தன்மையை தரும், வண்டி வாகன சார்ந்த செலவுகள் அதிகரிக்கும், சில நேரங்களில் காரிய தடங்கல் உண்டாகும், வறுமை, துரதிர்ஷ்டம், இன்னல்கள், மனகுழப்பம், அதிக வேலைப்பளு, சுகபோக வாழ்க்கையில் தடங்கல், சுயமாக சொத்துக்களை சேர்க்க இன்னலுறும் தன்மை, கவனமின்மையால் ஏற்படும் திடீர் இழப்புகள் என ஜாதகரை வெகுவாக பாதிக்கும், எந்த காரணத்தை கொண்டும் தனது பெயரில்  தனியாக சொத்துக்களை பராமரிப்பது பேரிழப்புகளை ஏற்படுத்தும் என்பதால் கூட்டு முயற்சியாக சொத்துக்களை வைத்திருப்பது சகல விதங்களில் இருந்தும் நன்மையை தரும்.

10ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு ஜீவனம் அமைவதில் சில இடர்பாடுகளை தரும், வெளியூர் அல்லது பிறந்த இடத்தை விட்டு செல்வதால் மட்டுமே ஜீவனம் சார்ந்த நன்மைகளை தரும், அடிக்கடி தொழில் வழியில் மாற்றங்களை தரும், வரவை விட செலவுகள் அதிகரிக்கும், எதிர்பாராமல் செய்யும் செயல்களால் கவுரவ குறைவை ஏற்படுத்தும், சுய தொழில் செய்வதில் மிகுந்த எச்சரிக்கை தேவை, போதுமான திட்டமிடுதல்களுடன் ஜாதகர் செயல்படுவதே சகல நிலைகளில் இருந்தும் நன்மையை தரும், தொழில் சார்ந்த நன்மைகளை பெற ஜாதகர் கடும் போராட்டங்களை எதிர்கொள்ளவேண்டிவரும், திட்டமிட்டு செயல்படுவது ஜாதகருக்கு வரும் தோல்விகளை தவிர்க்க உதவும்.

5,9,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 5ம் பாவக வழியில் இருந்து குல தெய்வ ஆசியை பெறுவதற்கு தடைகளை ஏற்படுத்தும், தெய்வ நம்பிக்கை இழப்பை தரும், ஜாதகரின் புத்திசாலித்தனமும்  சமயோசித அறிவு திறனும் பூர்வீகத்தில் ஜீவிக்கும் வரை பலன் ஏதும் தாராது, கற்ற கல்வி ஜாதகருக்கு பயன்படாது, கடும் முயற்சிகளை மேற்கொண்டும் வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது மிக சிறிய அளவிலேயே அமையும், நல்ல ஆண் வாரிசு அமைவது என்பது ஜாதகருக்கு சற்று சிரமமே, முறையான குலதெய்வ சாப நிவர்த்தி ஜாதகருக்கு சகல நன்மைகளையும் தரும்.

9ம் பாவக வழியில் இருந்து எடுக்கும் காரியங்கள் யாவும் ஜாதகருக்கு பெரும் பின்னடைவை தரும், முழு வீச்சில் ஜாதகர் மேற்கொள்ளும் விஷயங்களில் பெரும்  தடை தாமதங்கள் உண்டாகும், பெரியமனிதர்கள் ஆதரவை பெறுவது ஜாதகருக்கு சற்று சிரமமாக இருக்கும், அரசியல் மற்றும் பொது வாழ்க்கையில் துன்பத்தை தரும், உறவுகள் சார்ந்த வகையில் சிரமங்கள் அதிக அளவில் ஏற்படுத்தும், பித்ரு சாபம் உள்ளதால், ஜாதகர் முறையான பிரீதி பரிகாரங்களை மேற்கொண்டு நலம் பெறுவது அவசியமாகிறது.

11ம் பாவக வழியில் இருந் ஜாதகரின்  ஆசைகள் மற்றும் லட்சியங்கள் வெகுவாக பாதிக்கும், அதிர்ஷ்டமின்மையால் அதிக அளவிலான போராட்டங்களை மேற்கொள்ளும் நிலையை தரும், தெய்வீக அனுக்கிரகம் ஜாதகர்  பெறுவதில் தடை ஏற்படும், முற்போக்கு சிந்தனை ஜாதகருக்கு பலன் தாராது, எதிர்மறை எண்ணங்களால் ஜாதகரின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படும், எதிலும் மனக்குழப்பம், சந்தேகம், மனப்போராட்டம் என்றவகையில் பெருத்த இன்னல்களை ஏற்படுத்தும், சுய ஜாதகத்தில் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட பாவகங்களில் 5,9,11ம் வீடுகளுக்கே முன்னுரிமை தரலாம், ஜாதகருக்கு 5,9,11ம் பாவக வழியில் இருந்தே 200% விகித இன்னல்கள் நடைமுறைக்கு  வரும் என்பது கவனிக்கத்தக்க விஷயமாகும்.

7ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது வாழ்க்கை துணை  வழியில் இருந்து வரும் சின்ன சின்ன இன்னல்கள், கூட்டாளி வழியில் இருந்துவரும் ஏமாற்ற்றம், இழப்புகளுடன் கூடிய தொல்லைகள், வாழ்க்கை துணை வழியில் இருந்துவரும் வார்த்தை சாடல்கள், கடன் பெறுவதால் வரும் சிரமங்கள், எதிராளிக்கு வாய்ப்பை வழங்குதல், கூட்டு வியாபாரத்தில்  பெருத்த நஷ்டம் என ஜாதகரை கடுமையாக பாதிக்கும், எந்த ஓர் விஷயத்திலும்  கூட்டு என்பது ஜாதகருக்கு ஆகாது, எதிர்பாலின அமைப்பினரிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது நலம் தரும், பொது வாழ்க்கையில் பெரிய தோல்விகளை சந்திக்கும் நிலையை தரு ம், நீண்ட ஆயுள் உண்டு என்ற போதிலும், உடல் நல பாதிப்பை தரும்.

12ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு மனைவியின் சொற்படி நடக்கும் தன்மையை தரும், கூட்டாளிகளுக்கு நிறைவான லாபத்தை தரும், நிம்மதியான உறக்கம் கிட்டுவது அரிதிலும் அரிதாக அமையும், பொதுநல காரியங்களில் ஈடுபடாமல் இருப்பதே ஜாதகருக்கு சகல நிலைகளில் இருந்தும் நன்மையை தரும்.


நடைபெறும் ராகு திசை தரும் பலாபலன்கள் : ( 02/02/2012 முதல் 02/02/2030 வரை )

ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் ராகு திசை 4,10ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று தனது திசை முழுவதும் விரைய ஸ்தான பலனை 4,10ம் பாவக வழியில் இருந்து தருவதால் ஜாதகர், சொத்து, வண்டி வாகனம், வீடு நிலம் சார்ந்த விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது, அதைப்போன்றே செய்யும் தொழில் வழியில் மிகுந்த கவனமுடன் செயல்படுவது சகல விதங்களில் இருந்தும் நன்மையை தரும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக