திங்கள், 14 மே, 2018

ராகு மஹா திசை வழங்கும் ராஜயோக பலன்களும் ! பாத ஸ்தான பாதிப்புகளும் !


சுய ஜாதக பலாபலன்கள்

லக்கினம் : மீனம் 
ராசி : மேஷம் 
நட்ஷத்திரம் : பரணி 3ம் பாதம்


ஜாதகத்தில் பாவக தொடர்புகள் :

1,7,10ம் வீடுகள் சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு லக்கின பாவகத்தில் இருந்து பெரும் புகழ் மிக்க பொறுப்புகளை வாரி வழங்கும், மிதம் மிஞ்சிய ஜீவன மேன்மையையும், தொழில் ரீதியான சிறந்த ஞானத்தையும் வாரி வழங்கும், தெய்வீக அனுக்கிரகம் மூலம் நல்ல வேலை வாய்ப்பில் சிறப்பான பொருளாதார முன்னேற்றங்களை நல்கும், நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், சிறந்த மனவலிமை ஆகியவை ஜாதகருக்கு வாழ்நாள் முழுவதும் சிறப்பாக அமைந்து இருக்கும், ஜாதகருக்கு வரும் எதிர்ப்புகள் அனைத்தையும் களைந்து வெற்றிநடை போடும் யோகம் உண்டாகும், வளரும் சூழ்நிலையில் சிறப்புகளையும், கவுரவம் குறையாத யோக வாழ்க்கையையும் ஜாதகருக்கு லக்கின பாவகம் வாரி வழங்கும், வருமுன் உணர்ந்து செயலாற்றும் யோகம் ஜாதகருக்கு உண்டு.

7ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு நல்ல வாழ்க்கை துணை அமையும், மனைவி வழியிலான யோகங்களை பரிபூர்ணமாக அனுபவிக்கும் வல்லமை கொண்டவர் என்பதில் மாற்று கருத்து இல்லை, நல்ல நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் வழியிலான யோகங்களை ஜாதகர் பரிபூர்ணமாக பெறுவார் என்பதில் மாற்று கருத்து இல்லை, குறிப்பாக ஜாதகருக்கு வெளியூர் அல்லது வெளிநாடுகளில் இருந்துவரும் வருமான வாய்ப்புகள் மிகவும் அபரிவிதமானதா அமைந்து இருக்கும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், ஜாதகரின் உழைப்பிற்கு மேலான வருமானம் தேடிவரும், வேற்று மதத்தினர், வேற்று இனத்தினர் மூலம் ஜாதகர் பெரும் நன்மைகளை அளவிட இயலாது என்பது வரவேற்கத்தக்க சிறப்பு அமசமாகும், ஜாதகர் செய்யும் கூட்டு முயற்சிகள் அல்லது வியாபாரம் பெரும் லாபங்களை வாரி வழங்கும், மனதிற்கு இனிய வாழ்க்கை துணையுடன், எதிர்காலத்தை ஜாதகர் நம்பிக்கையுடன்  எதிர்கொண்டு வெற்றிகரமாக வாழாலாம், திருமணத்திற்கு  பிறகான முன்னேற்றம் என்பது ஜாதகருக்கு பரிபூர்ணமாக அமையும், சிறந்த தொழில் மற்றும் பொருளாதார முன்னேற்றம் பரிபூர்ணமாக அமையும்.

10ம் பாவக வழியில் சிறந்த தொழில் வாய்ப்புகளையும், சிறந்த வேலை வாய்ப்புகளையும் ஜாதகர் தன்னிறைவாக பெறுவார், எதிர்பாராத வருமான உயர்வையும், கவுரவம் மிக்க பதவிகளையும் ஜாதகர் குறுக்கியகாலத்தில்  பெறுவார், வெளிநாடுகளில் பணியாற்றும் யோகமும் அதன் வழியிலான பொருளாதர தன்னிறைவு ஜாதகருக்கு பரிபூர்ணமாக அமையும், ஏற்றுமதி இறக்குமதி  தொழில்களில் சிறந்து விளங்கும் தன்மையை தரும், தனது சுய உழைப்பின் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் நபராக ஜாதகர் விளங்குவார், தடைகளை தகர்த்து வெற்றிநடை போடும் யோகம் உண்டு என்பதுடன், ஜாதகர் முயற்சிக்கும் எந்த ஒரு காரியங்களும் நல்ல  வெற்றிகளை தரும், ஜீவன ஸ்தானம் உபய நெருப்பு ராசி என்பதால், தொழில் நுட்பம் மற்றும் நுண்ணறிவு சார்ந்த விஷயங்களில் அபரிவித முன்னேற்றங்களை நல்கும், பரிபூர்ண தொழில் வெற்றிகளை ஜாதகருக்கு தொடர்ந்து வாரி வழங்கும்  என்பதால் ஜாதகர் ஜீவன ஸ்தான வழியில் இருந்து 100% விகித நன்மைகளை பெறுவார்.


2,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு மேற்கண்ட பாவக வழியில் இருந்து 100% விகித நன்மைகளை வாரி வழங்கும், சுய ஜாதகத்திலே மிகவும் வலிமையுள்ள பாவக தொடர்பாக இதனை கருதலாம், 2ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் அளவுக்கு அதிகமான வருமானம் வந்து சேரும், குறைந்த முதலீடுகளில் அதிக லாபத்தை தரும், இனிமையான  பேச்சு திறன் ஜாதகருக்கு மீதம் மிஞ்சிய நன்மைகளை வாரிவழங்கும், கை நிறைவான வருமானம் ஜாதகருக்கு திடீரென தேடிவரும் வாய்ப்பு அதிகம் உள்ளது, ஜாதகர் முறையான நிதி மேலாண்மை கொண்டவராக திகழ்வது, ஜாதகரின் பொருளாதர தன்னிறைவை பெற குறுகிய காலத்தில்  வழிவகை செய்யும், தனக்கு வரும் எதிர்ப்புகள் அனைத்தையும் தனது பேச்சு திறனால் தனக்கு சாதகமாக மாற்றும் வல்லமையை தரும், வாழ்நாள் முழுவதுமான வருமானம் ஜாதகர் தொடர்ந்து வரும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும் மேலும் ஜாதகருக்கு திருமணத்திற்கு பிறகான வளர்ச்சி மிகவும் அபரிவிதமானதாக அமையும்.

11ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு நல்ல குணமும், ஒழுக்கம் நிறைந்த நடவடிக்கையும் பெரும் அதிர்ஷ்டங்களை வாரி வழங்கும், நல்ல நண்பர்கள் அவர்கள் வழியிலான முன்னேற்றம், தன்னம்பிக்கை மற்றும் மனதைரியம், தெளிவான சிந்தனை, எடுக்கும் முயற்சிகளில் இருந்து வரும் வெற்றி வாய்ப்பு, உண்மையை மதித்தல், தேடிய விஷயங்கள் ஜாதகருக்கு பரிபூர்ணமாக அமையும் தன்மை, லட்சியங்களை அடையும் யோகம், முற்போக்கு சிந்தனை, அதிர்ஷ்டம் நிறைந்த யோக வாழ்க்கை என ஜாதகருக்கு லாப ஸ்தானம் தொடந்து நன்மைகளை வாரி வழங்கி கொண்டே இருக்கும், திட்டமிட்டு செயல்படும் வல்லமை ஜாதகருக்கு அதிகம் உண்டு, எதையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையை ஜாதகருக்கு அடிப்படையிலேயே 11ம் பாவகம் வாரி வழங்கி இருக்கும் என்பது  கவனிக்கத்தக்கது, எதிர்பார்த்த எதிர்பாராத யோகங்களை ஜாதகர் பெறுவார் என்பது கவனிக்கத்தக்கது, தனது வாழ்க்கையை மிக சிறப்பாக திட்டமிட்டு நடத்தி செல்லும் வல்லமை ஜாதகருக்கு நிச்சயம் உண்டு.

3,4ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 3ம் பாவக வழியில் இருந்து மிகுந்த பயத்தையும், முயற்சியின்மையையும் அதிகரிக்கும், ஜாதகரின் உறுதியில்லாத தன்மை வரும் யோக பலன்கள் யாவையும் தடுத்து நிறுத்தும், வீண் மன பயம் ஜாதகரை வெகுவான காரிய வெற்றிகளுக்கு பெரும் தடையாக விளங்கும், மெய் பொருள் காணாது வாழ்க்கையில் மற்றவர்கள் கூறும் கருத்தை கேட்டு பெரும் தோல்விகளை ஜாதகர் சந்திக்க கூடும், தன்னுள்  உள்ள சுய  வலிமையை உணராமல் பல காலம் ஜீவிக்கும் தன்மையை தரும், ஜாதகரை மற்றவர்கள் வெகுவாக பயன்படுத்திக்கொள்ள கூடும் என்பதால், மிகுந்த விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது, விடாமுயற்சியுடன் போராடுவதே ஜாதகருக்கு பரிபூர்ண நன்மைகளை வாரி வழங்கும், கவன சிதறல்களும், ஞாபகம் இன்மையும் ஜாதகரின் தோல்விகளுக்கு காரணமாக அமையும், எனினும் முறையான பயிற்சியும், பரிகாரமும் ஜாதகருக்கு தெளிவான யோக வாழ்க்கையை வாரி வழக்கும், சகோதர வழி ஆதரவு ஜாதகருக்கு அமைவது மிக மிக அரிதானதாக அமையும், சீரிய நல்ல நோக்கங்கள் ஜாதகரின் மனஉறுதி இன்மையால் வெகுவாக பாதிக்கப்படும், வீரியமிக்க செயல்திறன் ஜாதகருக்கு மிக அரிதாகவே அமையும் என்பதால், சரியான தீர்வுகளை ஜாதகர் தேடுவது சகல சௌபாக்கியத்தையும் நல்கும்.

4ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு வரும் நல்ல சுகபோகங்கள் யாவும் மற்றவர்களால் தட்டிப்பறிக்கப்படும், குறிப்பாக ஜாதகர் தனது பெயரில் உள்ள சொத்து சுகம், வண்டி வாகனம் மற்றும் இடம் பொருள்கள் யாவற்றையும் காப்பாற்றிக்கொள்ள வெகுபாடு படவேண்டி இருக்கும் என்பதால், தனது பெயரில் எந்த சொத்துக்களையும் வைத்துக்கொள்ளாமல் இருப்பதே மிகுந்த நன்மைகளை தரும், மற்றவர்களுக்கு கொடுக்கும் பொருட்கள் யாவும் திரும்பி வருவது மிக அரிதானதாக அமையும், வண்டி வாகனங்களில் ஜாதகர் மிகவும் கவனமாகவும், பாதுகாப்பாகவும் பயணம் மேற்கொள்வது சகல நன்மைகளையும் தரும், மற்றவர்கள் விஷயங்களில் ஜாதகர் தலையீடு செய்யாமல் இருப்பதே மிகுந்த நன்மைகளை தரும், குடியிருக்க நல்ல இருப்பிடம் அமையாது என்பதால், சுய ஜாதகத்தில் வலிமை மிக்க பாவக தொடர்பிலான திசை குறிக்கும் வாயிற்படி கொண்ட வீடுகளில் ஜாதகர் ஜீவனம் செய்வது சகல சௌபாக்கியங்களையும் நல்கும்.

5,8ம் வீடுகள் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு  5ம் பாவக வழியில் இருந்து நல்ல அறிவு திறனை வாரி வழங்கும், சமயோசித புத்திசாலித்தனமும், சிறந்த அறிவு திறனும்ஜாதகரின்  வாழ்க்கையில் கணிக்க இயலாத சுகபோகங்களை வாரி வழங்கும், தனது தொழில் வழியிலான முன்னேற்றங்களை ஜாதகர் பரிபூர்ணமாக பெறுவார் என்பதுடன், தனது புத்திகூர்மை கொண்டு செய்யும் தொழிலில் குறுகிய காலத்தில் பெரும் முன்னேற்றத்தை அடைவார், குலா தெய்வத்தின் ஆசியும், இறை அருளின் கருணையும் ஜாதகருக்கு சிறப்பான நன்மைகளை வாரி வழங்கும், ஜாதகருக்கு நல்ல வாரிசுகள் அமையும், என்பதுடன் அவர்கள் வழியிலான முன்னேற்றம் மிகவும் அபரிவிதமானதா அமையும், ஜாதகர் கற்ற கல்வி எப்பொழுதும் ஜாதகருக்கு மிகுந்த உறுதுணையாக அமைவதுடன் ஆராய்ச்சி புதிய கண்டு பிடிப்புகள் மூலம் பெரும் செல்வந்தன் ஆவதற்கான வாய்ப்புகளை வாரி வழங்கும், எந்த சூழ்நிலையையும் ஜாதகர் சமாளித்து முன்னுக்கு  வருவார், சுய ஜாதகத்தில் பூர்வபுண்ணியம் வலிமை பெற்று இருப்பது ஜாதகருக்கு சிறந்த யோக வாழ்க்கையை வாரி வழங்கும்.

8ம் பாவக வழியில் இருந்து குழந்தைகளால் லாபமும் அதிர்ஷ்டமும் உண்டாகும், திடீர் அதிர்ஷ்டம் மூலம் ஜாதகர் பெரும் சொத்து சுக சேர்க்கையை பெறுவார், நீண்ட ஆயுள் உண்டாகும், ஜாதகர் ஆயுள் காப்பீடு, இன்சூரன்ஜ் போனஸ், கிராஜுவிட்டி மூலம் அபரிவிதமான பொருளாதார முன்னேற்றங்கள் உண்டாகும், மருத்துவ உபகரணம் மற்றும் மருந்து பொருட்கள் மூலம் ஜாதகர் நிறைவான வருமான வாய்ப்புகளை பெறுவார், ஏமாற்றங்கள் அனைத்தும் ஜாதகருக்கு பரிபூர்ண நன்மைகளையும் யோகத்தையும் வாரி வழங்கும், தனது வாழ்க்கை துணையின் அறிவும் பொருளாதர உதவிகளும் ஜாதகரின் வாழ்க்கையில் வியக்கத்தக்க மாற்றங்களை வாரி வழங்கும்.

6,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 6ம் பாவக வழியில் இருந்து எதிர்ப்புகள் வழியில் இருந்து நன்மைகளை பெரும் யோகத்தை தரும், எதிரிகளும் நண்பர்கள் ஆவார்கள் தெளிவான செயல்பாடுகள் மூலம் வாழ்க்கையில் அனைவரிடமும் நற்பெயர் எடுக்கும் வல்லமையை தரும் மற்றவர்கள் தனம் ஜாதகருக்கு பயனுள்ளதாக விளங்கும் வருமானம் ஜாதகருக்கு தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும் என்பதுடன் குறுகியகால அதிர்ஷ்டங்கள் ஜாதகருக்கு நிதி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும், அனைவரிடமும் பகைமை பாராட்டாமல் இருப்பது ஜாதகருக்கு பெருத்த நன்மைகளை வாரி வழங்கும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதால் உடல் துன்பங்கள் வெகுவாக குறையும், பெரியோர் ஆசி ஜாதகருக்கு வரும் இன்னல்களை தவிர்க்க உதவும்.

9ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு சமூகத்தில் பெரிய மனிதர்கள் உதவிகளை பெற்று தரும், ஆன்மீக பெரியோர்களின் ஆசி ஜாதகரின்  வளர்ச்சியை வெகுவாக அதிகரிக்கும், நற்பெயரும் பாராட்டுகளும் ஜாதகருக்கு தேடி வரும், பழமை மிக்க புராதான பொருட்கள் அதிக அளவில் தேடிவரும்  வாய்ப்பு உள்ளது, சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் ஜாதகரனுக்கு பேருதவிகளை வாரி வழங்கும், சிறந்த அறிவாளிகவும், ஒழுக்கம் நிறைந்த பண்பாளராகவும் ஜாதகர் வாழ்நாள் முழுவது இயங்குவார், பித்ருக்கள் ஆசி  ஜாதகருக்கு எதிர்பாராத நன்மைகளை வாரி வழங்கும், தெய்வீக அனுகூலம் உண்டாகும், இடமாற்றம் மற்றும் சூழ்நிலை மாற்றத்தில் அதீத ஆர்வம் உண்டாகும், சிறந்த அறிவாளியாக திகழ்வார்.

12ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு எதிரிகளின் சூழ்ச்சியே சாதகமாக மாறும், சூழ்ச்சிகள் அனைத்தும் ஜாதகருக்கு மிகுந்த நன்மைகளையும், சுபயோகங்களையும் வாரி வழங்கும், திடீர் பதவி உயர்வு ஜாதகரின் வாழ்க்கையில் வியக்கத்தக்க நல்ல மாற்றங்களை வாரி வழங்கும், தொழில் துறையில் எதிர்பாராத அதிர்ஷ்டம், செய்த முதலீடுகள் வழியிலான அதீத லாபம், எதிர்ப்புகளை களைந்து மிகப்பெரிய அதிர்ஷ்ட வாய்ப்புகளை ஜாதகர் தன்வசம் சுவீகரிக்க செய்யும், இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும், போதும் என்ற மனம் ஜாதகருக்கு பரிபூர்ணமாக சுபயோகங்களை நல்கும், தெய்வீக அனுபவமும், ஆன்மீக வெற்றியும் ஜாதகருக்கு பரிபூரண நன்மைகளை வாரி வழங்கும், சிறப்பு மிக்க எதிர்காலத்தை ஜாதகர் நிர்ணயம் செய்யும் வல்லமை உண்டாகும்.

நடைபெறும் செவ்வாய் திசை தரும் பலாபலன்கள் : ( 21/06/2012 முதல் 22/06/2019 வரை )

 5,8ம் வீடுகள் பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 5,8ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு பரிபூர்ண நன்மைகளை வழங்குவது வரவேற்கத்தக்க விஷயமாகும், குறிப்பாக ஜாதகரின் கல்வி ஞானம், இறை வழிபாட்டின் மூலம் சுபயோகம் பெரும் அமைப்பு, கற்ற கல்வி வழியிலான தொழில் வாய்ப்புகளை பெறுதல், தெய்வீக அனுக்கிரகம், தன்னம்பிக்கை மற்றும் மனோதைரியம் அதிகரிக்கும் தன்மை, மனதில் உள்ள எண்ணங்கள் யாவும் நிறைவேறும் தன்மை புதிய சிந்தனை, புதிய மாற்றங்களை நோக்கி ஜாதகர் பயணிக்கும் வல்லமை என சிறப்பான நன்மைகளை வாரி வழங்கும், 8ம் பாவக வழியில் இருந்து எதிர்பார்த்த வாய்ப்புகள் ஜாதகருக்கு பரிபூர்ணமாக கிடைக்கும், வெளியூர் அல்லது வெளிநாடுகளில் இருந்து வரும் செல்வாக்கு அதிகரிக்கும், நிறைவான தானசேர்க்கை ஜாதகருக்கு தேடிவரும், தன்னம்பிக்கையும் மனோ தைரியமும் அதிகரிக்க நிறைய வாய்ப்புகள் உண்டு, நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம் ஜாதகருக்கு சீரிய முன்னேற்றங்களை வாரி வழங்கும், கல்வி, வேலை, திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் யாவும்  ஜாதகருக்கு படிப்படியாக அமையவரும் என்பது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும், தற்போழுது செவ்வாய் திசையில் சூரியன் புத்தி ஜாதகருக்கு களத்திர பாவக வழியில் இருந்து வெளிநாடுகளில் யோக வாழ்க்கையும், நண்பர்கள், கூட்டாளிகள் மூலம் அபரிவித வளர்ச்சியும், வாழ்க்கை துணை வழியிலான சுபயோகங்களையும் பெறுவார், எதிர்வரும் சந்திரன் புத்தி ஜாதகருக்கு தொழில் வழியிலான திடீர் அதிர்ஷ்டங்களையும், பெரும் பதவிகளையும் தரக்கூடும், செய்தொழில் வழியிலான முன்னேற்றம் ஜாதகருக்கு அபரிவித யோகங்களை வாரி வழங்கும் என்பது கவனிக்கத்தக்கது.

எதிர் வரும் ராகு திசை தரும் பலாபலன்கள் : ( 22/06/2019 முதல் 22/06/2037 வரை )

 2,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சுபயோக பலாபலன்களை, முழுவீச்சில் வாரி வழங்கும் யோக காலமாக ராகு மஹா திசையை கருதலாம், ராகு தனது திசையில் மிதம்மிஞ்சிய அதிர்ஷ்டத்தையும், அளவில்லா பொருளாதர வளர்ச்சியையும் தரும் என்பதனை " ஜோதிடதீபம் " கட்டியம் கூறுவதுடன், எதிர்கால வாழ்க்கையை சிறப்பாக எதிர்கொள்ள ஆலோசனையும் வழங்குகிறது, ஜாதகரின் லாப ஸ்தானம் என்பது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 10ம் வீடாகவும், சர மண் தத்துவ அமைப்பிலும் இயங்குவதால் ஜாதகருக்கு 100% விகித யோகங்களை வாரி வழங்கும், நிறைவான வருமானம், செல்வ செழிப்பு, இனிமையான குடும்ப வாழ்க்கை, தன்னிறைவான பொருளாதார வசதி வாய்ப்புகள், பொது வாழ்க்கையில் வெற்றி என மிகுந்த நன்மைகளையும், லாப ஸ்தான வழியில் இருந்து நீடித்த அதிர்ஷ்டங்களையும், நல்ல குணம் மூலம் மக்கள் செல்வாக்கினையும், தெளிவான சிந்தனை மூலம் புதிய வாய்ப்புகள் மற்றும் புதுவித கண்டுபிடிப்புகள் மூலம் பெரும் செல்வ சேர்க்கையையும் தொடர்ந்து பெரும் யோகத்தை நல்கும், தோல்விகள் அற்ற வெற்றிகரமான யோக வாழ்க்கையை "ராகு மகா திசை" ஜாதகருக்கு வாரி வழங்க காத்துகொண்டு இருப்பது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

எனவே ஜாதகர் தனது வாழ்க்கையில் ராகு திசை காலத்தில் சுபயோகங்களை அனுபவிக்க தடையேதும் இல்லை என்பதனை ஜோதிடதீபம் வாழ்த்துக்களுடன் உறுதிகூறுகிறது.

பரிகாரம் :

1) சனி மற்றும் சுக்கிர பகவானுக்கு பீரிதி பரிகாரங்களை மேற்கொண்டு நலம் பெறுவது அவசியமாகிறது.
2) தாய் மற்றும் சகோதர வழியிலான பாதிப்புகளை ஜாதகர் சுவீகரித்து, தனது வாழ்க்கையில் தைரியம்,வண்டி வாகன யோகங்களை பெறுவது சிறப்புகளை நல்கும்.
3) திருவெண்காடு சென்று முக்குண நீராடி நலம் பெறுக.
4) பழனி வருடம் ஒருமுறை சென்று " ராஜஅலங்கார " தரிசனம் செய்வது சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும்.
5) சூரிய நமஸ்காரம் மற்றும் தீட்சை பெறுவது ஜாதகரின் வாழ்க்கையில் சகல சுகபோகங்களையும் நல்கும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக