சனி, 12 மே, 2018

ஜாதக ஆலோசனை : சுய ஜாதக பலாபலன்கள் துல்லியமாக பெறுவதற்கான வழிமுறை !


சுய ஜாதக பலாபலன்கள்

லக்கினம் : கும்பம்
ராசி : மகரம்
நட்ஷத்திரம் : திருவோணம் 1ம் பாதம்


ஜாதகத்தில் பாவக தொடர்புகள் :

1,4,5,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 1ம் பாவக வழியில் இருந்து மதிப்புக்கு உரிய செயல்களில் ஆர்வம், புகழ் மிக்க பொறுப்புகள், செய்யும் தொழில் வழியிலான லாபங்கள், சுய தொழில் செய்வதன் மூலம் முன்னேற்றம், மிகுந்த மரியாதையுடனான செயல்பாடுகள், அரசு துறை மூலம் ஆதாயம், வெகுமதி கவுரவ பதவிகள், வளரும் சூழ்நிலையில் சிறப்புமிக்க வெற்றி வாய்ப்புகளை பெரும் யோகம், தொழில் துறையில் அபரிவித வளர்ச்சி, நிறைவான பொருளாதார முன்னேற்றம், வியாபாரம் செய்வதன் மூலம் அதீத லாபம், எதையும் எதிர்கொள்ளும் மனப்பக்குவம், விசாலமான மனதினால் அனைத்தையும் கட்டியாலும் தன்மை என சுக போகங்களை வாரி வழங்கும், நீண்ட ஆயுள் உண்டு, நல்ல உடல் நலம் மற்றும் மன நலம் ஜாதகருக்கு வாழ்நாள் முழுவதும் சிறப்பாக அமையும்.

4ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் சிறப்பு மிக்க நல்ல குணங்களை பெற்று இருப்பார், நல்ல தொழில் முன்னேற்றம் உண்டாகும், மனதில் நினைத்ததை சாதிக்கும் யோகம் உண்டாகும், பெயரும் புகழும் தேடி வரும், மண் மனை வண்டி வாகன யோகம் உண்டு, நல்ல வேலையாட்கள் அமைவார்கள், பெரிய சொத்துக்களை நிர்வகிக்கும் யோகம் உண்டு, அரசு சார்ந்த கவுரவம் உண்டு, சமூகத்தில் மதிப்பு மிக்க கவுரவ பதவிகள் தேடி வரும், அரசியல் ரீதியான முன்னேற்றம் மிக சிறப்பாக அமையும், தனது சுய உழைப்பின் மூலம் வீடு வண்டி வாகனம், பொருளாதார முன்னேற்றங்களை தன்னிறைவாக ஜாதகர் பெறுவார் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

5ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் கலைகளில் அதீத ஆர்வத்ததையும், தேர்ச்சியையும் பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் உண்டு, நல்ல அறிவு ஜாதகரின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு பேருதவியாக அமையும், சிரமங்கள் தானாக மறையும், சினிமா துறையில் சிறந்து விளங்கும் யோகம் உண்டு, வாழ்க்கையில் யாரும் எதிர்பாராத மேன்மை நிலையை இறை அருளால் ஜாதகர் பெறுவார், புத்திசாலித்தனம் மிக்க  வியாபாரியாகவும், தொழில் வல்லுநராகவும் ஜாதகர் பிரகாசிக்க வாய்ப்பு உண்டு, சுய அறிவு கொண்டு வாழ்க்கையில் எதிர்பார்த்த அதிர்ஷ்டங்களை ஜாதகர் பரிபூர்ணமாக பெறுவார்.

10ம் பாவக வழியில் இருந்து ஜாதகரின் தொழில் வல்லமை அதிகரிக்கும், சிறு தொழிலாக ஆரம்பித்து பெரிய நிறுவனமாக வளரும் யோகம் உண்டு, ஜீவன ஸ்தானம் பெரும் பகுதி உபய நெருப்பு ராசியில் இயங்குவதால், ஜாதகர் தொழில் நுட்பம் சார்ந்த விஷயங்களில் நல்ல ஞானம் உள்ளவராக திகழ்வார், தெய்வீக ஆசீர்வாதம் ஜாதகருக்கு மிக சிறந்த தொழில் வாய்ப்புகளை வாரி வழங்கும் என்பது கவனிக்கத்தக்கது, மிக சிறந்த கல்வியறிவும், ஆராய்ச்சி மனப்பக்குவமும், ஜாதகருக்கு மேன்மையான சுகபோகங்களை வாரி வழங்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

2,7,8,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 2ம் பாவக வழியில் இருந்து அதிர்ஷ்டம், நண்பர்கள் மூலம் பேருதவிகளை பெரும் யோகம், இனிமையான பேச்சு திறன், கை நிறைவான வருமான வாய்ப்புகள், செல்வ செழிப்பு, பெரிய மனிதர்கள் மற்றும் ஆன்மீக பெரியோர்கள் ஆசிர்வாதம் மூலம் வாழ்க்கையில் இனிமையான குடும்பம் அமையும் யோகம், நல்ல வாழ்க்கை துணை, வாழ்க்கை துணை வழியிலான பொருளாதர உதவிகள் மற்றும் ஆதரவை பெரும் யோகம் என ஜாதகருக்கு குடும்ப ஸ்தான வழியில் இருந்து எதிர்பாராத நன்மைகள் உண்டாகும், திருமணத்திற்கு பிறகான வளர்ச்சி மிக அபரிவிதமானதாக அமையும்.

7ம் பாவக வழியில் இருந்து ஜாதகரின் வாழ்க்கை துணை, மிகுந்த யோகம் மிக்கவராக திகழ்வார், மிகுந்த அதிர்ஷ்டசாலியாகவும், முற்போக்கு சிந்தனையுடன் கூடிய தைரியமிக்கவராக இருப்பார் என்பது கவனிக்க தக்க சிறப்பு அம்சமாகும், பொதுமக்களிடம் இருந்து வரும் ஆதரவு ஜாதகருக்கு எதிர்பாராத அதிர்ஷ்டங்களை வாரி வழங்கும், கூட்டு முயற்சி, நண்பர்கள், கூட்டாளிகள் என ஜாதகருக்கு சகல விதங்களில் இருந்தும் நன்மையான பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், தெய்வீக அனுக்கிரகம் ஜாதகருக்கு பரிபூர்ணமாக அமைந்து இருக்கும், வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஜாதகருக்கு அபரிவிதமான வளர்ச்சி வந்து சேரும், பிரபல்ய யோகம் உண்டு என்பதுடன், ஜாதகர் அரசியலில் பிரகாசிக்கும் வாய்ப்பு உண்டு.

8ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் நினைக்கும் எண்ணங்கள் யாவும் நிறைவேறும், குறுகிய காலத்தில் பெரிய வெற்றிகளை பெரும் யோகம் உண்டு, வாழ்க்கை துணை மற்றும் நண்பர்கள் மூலம் அபரிவித செல்வாக்கு உண்டாகும், போனஸ், லாட்டரியில் யோகம், புதையல் யோகம், கடவுளின் கருணை மூலம் பெரும் செல்வத்திற்கு அதிபதியாகும் வாய்ப்பு உண்டு, நீண்ட ஆயுள்  மற்றும் உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும், தனிப்பட்ட ரகசியங்கள் ஜாதகருக்கு பரிபூர்ண நன்மைகளை வாரி வழங்கும், வெளிநாடுகளில் இருந்து வரும் வருமானம் ஜாதகருக்கு மிக பெரிய பொருளாதார நன்மைகளை தரும்.

11ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் மிகுந்த அதிர்ஷ்டசாலி எனலாம், தன்னம்பிக்கையும் முற்போக்கு சிந்தனையும் ஜாதகருக்கு பரிபூர்ணமாக அமைந்து இருக்கும், எடுக்கும் காரியங்கள் யாவிலும் வெற்றிமேல் வெற்றி உண்டாகும், தைரியமிக்க செயல்பாடுகள் ஜாதகருக்கு பரிபூர்ண யோகங்களை நல்கும் பொதுமக்களின் ஆதரவு மூலம் பெரும் நன்மைகளை ஜாதகர் பெறுவதுடன் அதீத முன்னேற்றங்களை பெறுவார் என்பது கவனிக்கத்தக்கது, நல்ல குணமும் சிறந்த எண்ணங்களும் ஜாதகரின் வாழ்க்கையை சிறப்பு மிக்கதாக மாற்றும் வல்லமை கொண்டது, வீண் மனபயத்தை தவிர்த்தல் ஜாதகருக்கு சிறப்புகளை சேர்க்கும், நம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொள்வது  ஜாதகருக்கு அபரிவித்த வளர்ச்சியை தரும்.

3,6,9,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது  3ம் பாவக வழியில் இருந்து மருந்துகள் மூலம் நல்ல லாபத்தை தரும், அரிய கலைகளில் தேர்ச்சியையும், மருத்துவ உபகரணங்கள் மூலம் நல்ல லாபத்தையும் தரும், விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம் மூலம் லாபத்தை பரிபூர்ணமாக ஜாதகர் பெறுவார் என்பது கவனிக்கத்தக்கது, நீண்ட பயணங்கள் மூலம் எதிர்பார்த்த நன்மைகளை பெறுவார், காதல் வெற்றி, சட்டம் மூலம் லாபம், புதிய கண்டுபிடிப்பு, தர்ம சிந்தனை, சத்தியத்தை மதித்தித்து நடக்கும் குணம் என்ற வகையில் நன்மைகளை தரும், ஜாதகரின் முயற்சிகள் சில நேரங்களில் தோல்வியை தந்த போதிலும், விடாமுயற்சியுடன் போராடுவது பெரிய வெற்றி வாய்ப்பை நல்கும்.

6ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் கடன் கொடுத்தவர்களால் அதீத தொல்லைகள்,  வேலையாட்கள் மூலம் நஷ்டம், வேலை நிறுத்தம் மூலம் கஷ்டம், தேவையற்ற செலவினங்கள், எதிர்பாராத மறுத்து செலவுகள், உடல் நல பாதிப்புகள் என இன்னல்களை தர கூடும், மேலும் கடன் கொடுப்பது வாங்குவது இரண்டும் ஜாதகருக்கு  பேரிழப்புகளை தரும், இருப்பதை  முறையாக கையாண்டு நலம் பெறுவது அவசியமாகிறது, சேமிக்கும் பழக்கம் ஜாதகருக்கு சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும், எவரிடமும் பகைமை பாராட்டுவது நல்லதல்ல.

9ம் பாவக வழியில் இருந்து வெளிநாடுகளில் இருந்து நல்ல யோகங்களை பெறஇயலும், பிறந்த ஊரில் இருந்து வெகு தொலைவு சென்ற பிறகே அபரிவித வளர்ச்சி உண்டாகும், வயதில் பெரியவர்களின் ஆலோசனை ஜாதகருக்கு சுபயோகங்களை நல்கும், முறையான பித்ரு வழிபாடு கல்வி,வேலை,திருமணம்,குழந்தை மற்றும் பொருளாதர முன்னேற்றங்களை வாரி வழங்கும், பலமுறை யோசித்து செயல்படுவது ஜாதகருக்கு மிகுந்த நன்மைகளை தரும்.

12ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் நிம்மதியற்ற மனநிலையை பெற்றிருப்பர், மன உறுதி வெகுவாக குறையும், நிறைய செலிவினங்கள் ஜாதகரின் பொருளாதரா முன்னேற்றத்தை பாதிக்கும், பங்கு சந்தை, லாட்டரி, சூது மூலம் ஜாதகர் பேரிழப்புகளை சந்திக்க நேரும், திருப்தி இல்லாத  மன நிலை ஜாதகரை கடுமையாக பாதிக்கும், அனைவராலும் எதிர்பாராத தொல்லைகளை அனுபவிக்கும் சூழ்நிலைகளை தரும், விபத்தின் மூலம் மருத்துவ செலவினங்கள் கூடும் என்பதால் பாதுகாப்பான பயணம் ஜாதகருக்கு சிறப்புகளை வாரி வழங்கும் .


நடைபெறும் ராகு திசை ஜாதகருக்கு வழங்கும் பலன்கள் : ( 14/10/2003 முதல் 14/10/2021 வரை )

ராகு பகவான் ஜாதகருக்கு தனது திசையில் 4ம் வீடு ஜீவன ஸ்தானமான  10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களை வழங்குவது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும், ஏனெனில் ஜாதகரின் தொழில் சார்ந்த வளர்ச்சியை தற்போழுது நடைபெறும் ராகு திசை சிறப்பாக அமைந்து தரும், தனக்கான தொழில் வாய்ப்புகளையும், நுணுக்கங்களையும் அறிந்துகொள்ளும் நேரமிது, தான் செய்யும் தொழிலில் சிறந்த அறிவு திறனையும், அனுபவத்தையும் ஜாதகர் பரிபூரணமாக பெறுவார் என்பதுடன் எதிர்காலத்திற்க்கான சரியான தொழில் நிர்ணயத்தை பெரும் வல்லமையை தரும். ராகு திசையில் தற்போழுது நடைபெறும் சூரியன் மற்றும் சந்திரன்  புத்திகள்  3ம் பாவக வழியில்  இருந்து இன்னல்களை தந்த போதிலும், அடுத்து வரும் சந்திரன் புத்தி ஜாதகருக்கு 11ம் பாவக வழியில் இருந்து மிகுந்த அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும், அடுத்து வரும் செவ்வாய் புத்தி ஜாதகருக்கு 3,6,9,12ம் பாவக  வழியில் சற்று சிரமங்களை தரக்கூடும்.

எதிர்வரும் குரு திசை தரும் பலாபலன்கள் : ( 14/10/2021 முதல் 14/10/2037 வரை )

அடுத்து வரும் குரு திசை ஜாதகருக்கு பரிபூர்ண சுபயோகங்களை வாரி வழங்குகிறது என்றால் அது மிகையில்லை, குரு திசை ஜாதகருக்கு 1,4,5,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், 2,7,8,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும் ஏக காலத்தில் ஜீவனம் மற்றும் லாப ஸ்தான பலனை வாரி வழங்குவது, ஜாதகரை குரு திசையில் மிக சிறந்த யோகதாரியாக பிரகாசிக்க செய்யும், ஜாதகருக்கு மேலே குறிப்பிட்ட 1,2,4,5,7,8,10,11ம் பாவக வழியிலான சுபயோகங்கள் நடைமுறைக்கு வரும் காலம் குரு திசை என்பதால், ஜாதகரின் வளர்ச்சி மிக அபரிவிதமானதா அமையும் என்பதில் சந்தேகமில்லை வாழ்த்துக்கள் அன்பரே !

பரிகாரம் :

1) ஜாதகர் வளர்ப்பிறை சனிக்கிழமை அன்று திருவக்கரை சென்று  சனி மற்றும் சுக்கிர பகவானுக்கு வக்கிரக  நிவர்த்தி செய்து நலம் பெறுவது அவசியமாகிறது, இது ஜாதகருக்கு திருமண தடையினை நிவர்த்தி செய்து, தொழில் சார்ந்த நன்மைகளை வாரி வழங்கும்.

2) சுய ஜாதகத்தில் ராகு லக்கினத்தில் வலிமை பெற்று இருப்பதால், ராகு கால வழிபாடு அவசியம் செய்யவும், ராகு காலத்தில் செய்யும் காரியங்கள் மிகப்பெரிய  வெற்றிகளை வாரி வழங்கும் என்பதில் கவனம் கொள்க.

3) தினமும் அதிகாலையில் சூரிய நமஸ்காரம் மற்றும் ஆதித்ய ஹிருதயம் படிப்பது  சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும்.

4) " சர்ப்ப சாந்தி "  பரிகாரம் ஜாதகருக்கு லக்கினம் மற்றும் களத்திர பாவக வழியிலான சுபயோகங்களை வாரி வழங்கும்.

5) திருவெண்காடு வளர்பிறை புதன் கிழமை சென்று " முக்குண " நீராடி நலம் பெறுவது அவசியமாகிறது.

6) குல தெய்வ வழிபாடு, பித்ரு வழிபாடு எதிர்வரும் ஆடி அமாவாசை தினத்தில் செய்து நலம் பெறவும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக